வெட்டிப் பேச்சு

(அதுக்காக மற்றதெல்லாம் விவரமான பேச்சு என்று அர்த்தமல்ல.)

வெட்டிப்பொழுது
வந்தவங்க
மினி வெட்டிப்பேச்சு

Free shoutbox @ ShoutMix
ஆதரவு
உருப்படி
td>
அமெரிக்க அதிபருடன்...
செப்டம்பர்-11 அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதற்கு உலகத் தலைவர்கள் அதிபர் புஷ்ஷுக்கு போன் செய்து இரங்கல் தெரிவித்தார்கள்.

சீன பிரதமர்,பாகிஸ்தான் அதிபர் மற்றும் அப்போதைய இந்தியப் பிரதமரின் உரையாடலை மட்டும் வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

சீனப் பிரதமர்: ஜனாதிபதி புஷ்! அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. பெண்டகனையே குறி வைத்திருக்கிறார்களென்றால் எதிரிகள் தைரியசாலிகள்தான்! ஒக்கா மக்கா!

எதற்கும் கவலைப்படாதீர்கள். பெண்டகனில் உள்ள அனைத்தும் எங்களிடம் ஒரு காப்பி உள்ளது. தேவைப்பட்டால் குறைந்த விலையில் அனுப்பி வைக்கிறேன்.

சில நாட்கள் கழித்து அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்த இந்திய பிரதமர் வாஜ்பாய் அவர்களும் அமெரிக்க அதிபரும் இணைந்து நிருபர்களை சந்தித்தனர்.

நிருபர்: இந்த தீவிரவாத தாக்குதல் பற்றி இந்தியாவின் கருத்து என்ன?

வாஜ்பாய்: தீவிரவாதத்தால் இந்தியாவும் பல வருடங்களாக கஷ்டப்படுகிறது. இதற்கு தகுந்த பதிலடியாக 10 மில்லியன் அப்பாவிகளையும் ஒரு சைக்கிள் ரிக்சா ஒட்டுபவரையும் கொல்லப் போகிறோம்.

நிருபர்: என்ன! சைக்கில் ரிக்சா ஒட்டுபவரை ஏன் கொல்ல வேண்டும்?

வாஜ்பாய்: "பார்த்தீங்களா புஷ்! நான் சொன்னேன்ல. மக்கள் 10 மில்லியன் அப்பாவிகளைக் கொல்வதைதப் பற்றி கவலைப் படமாட்டார்கள்" என்று சொன்னது உண்மையாகிவிட்டது!" என்றார்.

உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டவுடன் அவசரமாக புஷ்ஷுக்கு போன் செய்த பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷராப்.

முஷராப்: ஸாரி புஷ்! எவ்வளவு உயர்ந்த அழகான கட்டிடங்கள். அதில் வேலை பார்த்த அப்பாவிகள். ரொம்ப சாரி!

புஷ்: என்ன கட்டிடங்கள? பணியாளர்கள்? ஒன்றுமே புரியவில்லையே?

முஷராப்:(அவசரமாக) என்ன புரியலையா? அங்க மணி என்ன இப்போ?

புஷ்: காலை எட்டு மணி.

முஷராப்: ஓ சாரி. அப்ப இன்னும் ஒரு மணி நேரம் கழித்து போன் பண்ணுகிறேன்.
எழுதியவர்: அதிரைக்காரன் @ 3 மறுமொழிகள்
அமைச்சர் தோற்றது ஏன்?
வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் தங்கி சமூக சேவையில் ஈடுபட்ட ஒரு கிறிஸ்தவப் பாதிரியாருக்கு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து தரப்பினரும் சமய/இன பாகுபாடின்றி வழியனுப்பி வைக்க ஊர் மத்தியில் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சுற்றுவட்டார பதினெட்டு தொகுதி மக்களும் கூடி இருந்தனர்.

(இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பதினெட்டு பட்டின்னு சொல்லி வருவது?)

தொகுதி அமைச்சரைத் தவிர அனைத்து அழைப்பாளர்களும் சரியாக வந்து விட்டனர்.
நிகழ்ச்சி தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் பரபரப்பாக அமைச்சரை எதிர்பார்த்து இருந்தனர்.

மழைக்காலமாதலால் மழை வரும் போல் இருந்தது. நிகழ்ச்சியும் தொடங்கி விட்டது. முக்கியஸ்தர்கள் பாதிரியாரைப் புகழ்ந்தும் நன்றி சொல்லியும் பேசினர். தொகுதி அமைச்சர் மட்டும் இன்னும் வரவில்லை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் செல்போன் ஒலித்தது. மறுமுனையில் அமைச்சர். எதிர்பாராத விதமாக முதல்வர் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திலிருந்து வரும் வழியில் டிராஃபிக் ஜாம் ஆகி விட்டதால் எப்படியும் வழியனுப்பு விழாவில் கலந்து கொள்வேன் என்று சொல்லி விட்டு போனைத் துண்டித்தார்.

அமைச்சர் இல்லாமல் வழியனுப்பு விழா முடிந்தால் அவ்வளவு நன்றாக இருக்காது. இந்த சமயசார்பற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டால்தான் அடுத்த தேர்தலிலும் அமைச்சருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். மிக முக்கியமாக இன்றோடு தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதை மனதில் கொண்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாதிரியாரின் சிறப்புரைக்குப் பின் தொகுதி அமைச்சர் நன்றியுரை வழங்குவார் என்று அறிவிப்புச் செய்து பாதிரியாரை பேச அழைத்தார்.

பாதிரியார் மைக்கப் பிடித்து தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார். தான் பாதிரியாராக வந்தமுதல் நாள் சந்தித்த ஒரு பாவமன்னிப்பு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார். வழக்கம் போல் பிரார்த்தனைக் கூட்டம் முடிந்து பாவமன்னிப்பு வழங்கும் கூண்டில் அமர்ந்திருந்த போது ஒரு நபர் வந்து "ஃபாதர்! நான் கொடும்பாவங்கள் செய்து விட்டேன்! எனக்கு மன்னிப்பு வழங்குங்கள்! என்று கெஞ்சினார்" என்றும் அவர் செய்த பாவங்களைக் கேட்டபோது என்னடா வாழ்க்கை இது இவ்வளவு கொடியவனும் இருக்கிறானே?" என்று வெறுத்து பேசாமல் இந்த பணியையே விட்டு விடலாமா என்று யோசித்ததாகச் சொல்லி, அந்தப் பாவியின் பாவங்களைப் பட்டியலிட்டார்.
  • சுமார் 100 பேரிடம் பிக்பாக்கெட் அடித்தது.
  • பொய் சாட்சி மற்றும் ஆள்மாறாட்டம்.
  • பத்துக்கும் மேற்பட்ட கற்பழிப்புகள்
  • கணக்கற்ற கொலைகள்

பாதிரியாருக்கு மூச்சு வாங்கியது. இப்படிப்பட்ட பாவிகளும் நம் நாட்டில் இருக்கின்றனர். அவர்களையும் கடவுள் விட்டு வைத்திருக்கிறார் என்று தன் நீண்ட அனுபவங்களைச் சொல்லி அமர்ந்தார்.

அமைச்சர் தாமதமாக வந்ததுக்கு அவையோரிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு, தன் பங்குங்குக்கு பாதிரியாரை புழந்து தன் நன்றியுரையைத் தொடங்கினார்.



நம் அன்பிற்குறிய பாதிரியார் நமதூரை விட்டுச் செல்வது நமக்கு பேரிழப்பாகும். யாரும் அறியாத ஒரு ரகசியத்தைச் சொல்ல விரும்புகிறேன். நம் பாதிரியாரிடம் முதல் பாவமன்னிப்பு கோரியது யார் தெரியுமா? இதோ உங்கள் முன் இருக்கும் உங்கள் அன்பிற்குறிய அமைச்சராகிய நானே!!!
என்றார்.

இரண்டு நாள் கழித்து நடந்த வாக்களிப்பில் அமைச்சர் டெப்பாசிட் இழந்தார். அவர் சார்ந்திருந்த கட்சியும் ஆட்சி செய்யும் வாய்ப்பை இழந்தது. செயற்குழு கூடி அமைச்சரை கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பதிவிலிருந்தும் நீக்கப்பட்டார்.

முன்னாள் அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை. உங்களுக்கு புரிந்தால் சரி.
எழுதியவர்: அதிரைக்காரன் @ 3 மறுமொழிகள்
இதையும் நம்பினால் நம்புங்கள்
பிரேஸில் பெட்ரோல் எண்ணைக் குழாயில் அடைப்பு ஏற்பட்டதை சரி செய்ய முயன்றபோது கிடைத்த அதிர்ச்சி!

1) இது ஈராக் பெட்ரோலைக் குடிக்கும் அமெரிக்க முதலையல்ல.



2) பெட்ரோல் பம்பு தெரியும் இவை பெட்ரோல் பாம்பு


3)கொரக்கடைல் பர்ஸ்?


4)எதையும் முழுசா திண்ணக் கூடாது.
எழுதியவர்: அதிரைக்காரன் @ 2 மறுமொழிகள்
பின்னூட்டம்
இப்படத்திற்கான பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.



:-)))
எழுதியவர்: அதிரைக்காரன் @ 4 மறுமொழிகள்
சொல்றதுக்கு ஒன்றுமில்லை!
மெய்யாலுமே சொல்றதுக்கு ஒன்னுமில்லேதான். நம் நாட்டில் மரணக்கிணறு பார்த்திருக்கிறோம். ஜெர்மனியிலுள்ள இந்தக் கிணற்றைப் பாருங்கள்.




பின்குறிப்பு: பிரம்மித்துப் போய் வாயைப் பிளந்து விடாதீர்கள். யாராவது அதுலயும் காரை பார்க்கிங் பண்ணிடப்போறாங்க!


அப்புறம் வழக்கம்போல பின்னூட்டமிட்டு வாழ வையுங்க!
எழுதியவர்: அதிரைக்காரன் @ 1 மறுமொழிகள்
இனி நான் ஸ்கூலுக்கு போகமாட்டேன்...
அதிகாலையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் மகனை பள்ளிக்குச் செல்ல அன்பாக எழுப்பினாள் அந்த தாய். உரையாடல் இதோ:

தாய்: செல்லம்! எழுந்திருப்பா. ஸ்கூல் போக நேரமாயிடுச்சு

மகன்: போம்மா! நான் ஸ்கூல் போகமாட்டேன்!

தாய்: ஓ...அப்படீன்னா ஏன் போகமாட்டாய் என்பதற்கு ரெண்டு காரணங்கள் சொல்லனும்!

மகன்: ஹைய்யா...காரணம் ஒன்னு- குழந்தைகள் என்னை வெறுக்கிறார்கள். காரணம் இரண்டு- டீச்சர்களுன் என்னை வெறுக்கிறார்கள்!

தாய்: ஆஹ்..இவையெல்லாம் சரியானக் காரணங்களல்ல. எழுந்திருப்பா. ஸ்கூல் போக டயம் ஆயிடுச்சு!

மகன்: ம்ஹூம்...அப்படீன்னா ஏன் ஸ்கூல் போக வேண்டும் என்பதற்கு ரெண்டுக் காரணங்கள் சொல்லு!

தாய்: முதல் காரணம் நீ ஸ்சூலுக்கு இன்னும் சில வருடங்கள்தான் போகப்போகிறாய்.ஏன்னா உனக்கு இப்ப 52 வயது! இன்னொரு முக்கியமானக் காரணம் நீதான் அந்த ஸ்கூலுக்கு பிரின்ஸிபால்!



அதிரைக்காரன்: "என்ன வாசகரே! நீங்களும் வெறுத்துட்டீங்களா?" ;-)
எழுதியவர்: அதிரைக்காரன் @ 8 மறுமொழிகள்
எவன்டா இவன்?

Name: அதிரைக்காரன்
முகப்பு: Adirampattinam, Tamil Nadu, India
About Me: கண்டதையும் படித்துவிட்டு அதிகமாக யோசனை செய்து பேனா கிடைத்தால் "கிறுக்கி"த் தள்ளிக் கொண்டிருந்தவனுக்கு ஓசில Blogger கிடைத்தால் சொல்லவா வேண்டும்?
See my complete profile
இதையும் படிங்க
பெட்டகம்
நட்சத்திரமாம்!!!
வள்ளல்

Free Blogger Templates

BLOGGER

© வெட்டிப் பேச்சு .Template by Isnaini Dot Com