வெட்டிப் பேச்சு

(அதுக்காக மற்றதெல்லாம் விவரமான பேச்சு என்று அர்த்தமல்ல.)

வெட்டிப்பொழுது
வந்தவங்க
மினி வெட்டிப்பேச்சு

Free shoutbox @ ShoutMix
ஆதரவு
உருப்படி
td>
புரட்சித் தலைவிக்குச் சில ஆலோசனைகள்
"தமிழக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், சித்ரா பவுர்ணமி அன்று அ.தி.மு.க., உறுப்பினர்கள் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும்' என ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கை விபரம்: சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின்சார தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மறைமுக பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்ற பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் தமிழக அரசு ஸ்தம்பித்து நிற்கிறது. இனி தமிழகத்தில் ஒளி பிறக்காதா, இந்த நிலை மாறாதா என்ற கவலை மக்களை கவ்விக் கொண்டுள்ளது.

இருள் அகன்று ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும், அந்த ஒளியை உருவாக்க அ.தி.மு.க., இருக்கிறது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.



இதற்கு அடையாளமாக வரும், 19ம்தேதி சித்ரா பவுர்ணமி அன்று மாலை 6.30 மணிக்கு அவரவர் வீடுகளிலும், தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களிலும், கோவில்களிலும் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் குடும்பத்தோடு விளக்கேற்றி வைக்க வேண்டும்.

தீபம் ஏற்றி வைக்கும் நேரத்தில், "இருண்ட தமிழகத்தில் ஒளியேற்ற வாருங்கள் அம்மா' என்று கோஷமிட வேண்டும். இந்த முழக்கம் தமிழகம் முழுவதும் எழுப்பப்பட வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/2008apr12/political_tn1.asp

சித்ரா பவுர்ணமி அன்று மாலை 6:30 மணிக்குத்தான் விளக்கேற்றனும்னு சொல்லப்பட்டிருப்பதிலிருந்து அம்மாவின் ஆஸ்தான ஜோதிட சிகாமனி எவனாச்சும் சொல்லி இருப்பான்னு தெரியுது. இருந்தாலும் அதிரைக்காரன் சார்பில் அம்மாவுக்குச் சில ஆலோசனைகளைச் சொல்லிக் கொள்கிறேன். மொட்டைத்தலையுடன் ஆலோசனை சொன்னால்தான் எடுபடும் என்றால் அம்மாவுக்காக (ரத்தத்தின் ரத்தங்கள் சார்பில்) மொட்டை போடவும் தயார்!)

ஆலோசனை # 1: தமிழக மக்களுக்கு ஒருகிராம் தங்கக்காசு கொடுத்து அம்மாவின் பொற்கால ஆட்சி மீண்டும் வர சபதமெடுக்கச் சொல்லலாம்!

ஆலோசனை # 2: மின்சாரத் தட்டுப்பாட்டைச் சுட்டிக்காட்ட விளக்கேற்றுவது போல், பஸ்கட்டண உயர்வைச் சுட்டிக்காட்ட ஒருநாள் ஆட்டோ கட்டணம் கொடுக்கலாம்.

ஆலோசனை # 3: விலைவாசி உயர்வுக்கு எதிராக இலவச அரிசி,சர்க்கரை மளிகைப் பொருட்களை ஒருநாளைக்கு மட்டும் வழங்கலாம்.

ஆலோசனை # 4: பால்விலை உயர்வுக்கு எதிராக வீட்டுக்கு ஒரு கோமாதா கொடுக்கலாம்.


அம்மாவின் (மூட)நம்பிக்கையொளி ஏற்றும் கோரிக்கையை ஏற்று, ஏழை ரத்தத்தின் ரத்தங்களின் குடிசைகள் தீப ஒளியில் எரிந்துவிடாமலிருக்க உடன் பிறப்புக்கள் இலவசத் தண்ணீர் பந்தல்களை தமிழகமெங்கும் வைக்க வேண்டுகிறேன்.

Labels:

எழுதியவர்: அதிரைக்காரன் @ 9 மறுமொழிகள்
வெற்றியின் ரகசியம்
வெற்றிகரமான மணவாழ்விற்கான வழிகள் குறித்து அலசும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றிற்கு முன்னேறிய ஒரு கணவனுடன் நடந்த உரையாடல்.

கேள்வி: ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சியின் எல்லா சுற்றுகளிலும் வென்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னணியிலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லப் படுவதுண்டு. உங்கள் வெற்றிக்குப் பின்னணியில் யார் இருந்தார்?

பதில்: நிச்சயமாக எனது எல்லா வெற்றிகளின் பின்னணியிலும் என் மனைவியின் பங்களிப்பு குறைத்து மதிப்படப்பட முடியாதது.

கேள்வி:
உங்கள் மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கையின் ரகசியம் என்னவென்று நேயர்களுக்குச் சொல்லுங்களேன்.

பதில்: முடிவெடுக்க வேண்டிய விசயங்களில் ஒருவருக்கொருவர் பொறுப்புகளை பகிர்ந்து கொண்டும் விட்டுக்கொடுப்பதுமே மகிழ்ச்சியான மனவாழ்வுக்குக் காரணம்.

கேள்வி: கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா?

பதில்: தாராளமாக! எங்கள் வீட்டில், பெரியபெரிய விசயங்களில் முடிவெடுக்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிட்டு, சின்னச் சின்ன விசயங்களை என் மனைவியே பார்த்துக் கொள்வாள். ஒருவர் எடுக்கும் முடிவில் பிறர் தலையிடுவதில்லை.

கேள்வி: கொஞ்சம் உதாரணத்துடன் விளக்க முடியுமா?

பதில்: உதாரணமாக, எந்தக் கார் வாங்குவது, எந்தக் கலர் பட்டுப்புடவை எடுப்பது, பழைய நகையை விற்றுவிட்டு புதிய நகை வாங்குவதா அல்லது விற்காமலேயே புதிய நகையை வாங்குவதா, எனது வங்கி சேமிப்பிலிருந்து எவ்வளவு செலவு செய்வது, ஷோபா, குளிர்சாதனப் பெட்டி, வேலைக்காரி தேவையா வேண்டாமா போன்ற விசயங்களைத் தீர்மானிப்பது என் மனைவியே! (மனைவி கணவனைப் பார்த்து புன்முறுவல் செய்கிறார்)

கேள்வி: உங்களின் பங்களிப்புப் பற்றி உதாரணத்துடன் சொல்லுங்களேன்.

பதில்: மேற்சொன்ன சின்னசின்ன விசயங்களில் என் மனைவி எடுத்த முடிவை அப்படியே ஒப்புக் கொள்வேன். என்னுடைய முடிவுகள் பெரிய பெரிய விசயங்களில் மட்டுமே இருக்கும். உதாரணமாக, அமெரிக்கா ஈராக்கை தாக்க வேண்டுமா வேண்டாமா,ஜிம்பாப்வேக்கு எதிரான தடையை விலக்கிக் கொள்ள வேண்டுமா வேண்டாமா,ஆப்பிரிக்க பொருளாதாரத்தை விரிவாக்க வேண்டுமா வேண்டாமா, சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டுமா வேண்டாமா போன்றவற்றைச் சொல்லலாம்! (மனைவிக்கு ஆனந்தக் கண்ணிர் அரும்புகிறது. பெருமிததுடன் கைக்குட்டையின் நுனியால் துடைக்கிறார்)

ஒன்று தெரியுமா சார் உங்களுக்கு! என் இந்த முடிவுகளை ஒருபோதும் என் மனைவி ஒருபோதும் மறுத்ததே இல்லை. இதுவே எங்கள் மகிழ்ச்சியான, வெற்றிகரமான மனவாழ்க்கைக்குக் காரணம்!

கேள்வி கேட்டவருக்கும் கண்ணீர் வருகிறது. ஆனந்தக் கண்ணீரல்ல கணவனின் நிலையை எண்ணி பரிதாபத்துடன் கண் கலங்குகிறார்.

குறிப்பு: இப்பதிவுக்கு போலிப்பெயரில் பின்னூட்டம் வந்தால் அது நிச்சயம் ஏதாவது பெண் பதிவராகத்தான் இருக்கும். :-))

Labels: ,

எழுதியவர்: அதிரைக்காரன் @ 0 மறுமொழிகள்
பாவம் மகளிர்!!

மார்ச்-8 ஆம் தேதியை உலக மகளிர் தினமாக அறிவித்து நாடெங்கும் கொண்டாடப்பட்டது. ஆளும் கட்சியைச் சார்ந்தப் பெண் அமைச்சர்கள் தலைமையில் சில பெண்கள் முதல்வர் கலைஞரைச் சந்தித்து ஆசி பெற்றதையும் வேறுசில ஆண் அமைச்சர்கள் ஒளவையார் சிலைக்கு மாலை அணிவித்ததையும் திரும்பத் திரும்பக் காட்டினார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு தினத்தை அந்த தினம்-இந்த தினம் எனப் பெயரிட்டு அவை சம்பந்தப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்தி காசு பார்ப்பது முதலாளியத்துவ யுக்திகளில் ஒன்று.எனக்குத் தெரிந்து மகளிர் தினம்,அன்னையர் தினம் ஆகிய இரு தினங்கள் மட்டுமே பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.மீதமுள்ள அனைத்து நாட்களும் ஆண்களுக்கானதோ? மகளிர் அமைப்புகள் இதைக் கண்டு கொள்ளாமலும் உரிமைகோராமலும் இருப்பது ஆச்சரியம்!

நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதாவுக்கு கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிப் பெண்மணிகளும் ஓரணியில் இருப்பர். நியாயமாக மகளிர் தினத்தில் ஆசிபெறுவதற்கு கலைஞரை விட புரட்சித் தலைவி ஜெயலலிதாவையே சந்தித்திருக்க வேண்டும். பெண்ணுக்கு பெண்ணே எதிரி! அல்லது ஜெயலலிதாவை மகளிராகக் கருதவில்லையோ என்னவோ? வாழ்த்து மற்றும் அருளாசி கொடுக்க பெண்ணைவிட ஒரு ஆணே தகுதியானவர் என்றும் பழக்க தோசத்தில் கருதி இருக்கக்கூடும்!

ஆண் அமைச்சர்கள் ஒளவையார் சிலைக்கு மாலை அணிவித்து மகளிர் தினத்தைப் போற்றினார்கள். ஒளவையாரைப் பொருத்தவரை ஆண் மேளாண்மைக்கு ஆதரவாளராகவே அறிய முடிகிறது. உதாரணமாக,

" நாடாகொன்றொ காடாகொன்றொ
அவலாகொன்றொ மிசையாகொன்றொ
எவ்வழி நல்லை ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"

என்றும்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
அதனினும் அரிது ஆணாய்ப் பிறத்தல்"

ரொம்ப நாளாக இருக்கும் சந்தேகம்! லைஃப்பாய் விளம்பரத்தை தவிர வேறெந்தச் சோப்பு விளம்பரத்திலும் ஆண் மாடல்களைக் காட்டுவதில்லை. அழகு காக்கும் சோப்புக்களுக்கு பெண்களாம்;ஆரோக்கியம் காக்கும் லைஃபாய் சோப்புக்கு மட்டும் ஆண் மாடல்களாம்!ஏன் பெண்கள் ஆரோக்கியமாகவும் ஆண்கள் அழகாகவும் இருக்கக் கூடாதா?

ஏதோ மகளிர் தினத்திற்கு நம்மால் முடிந்தது இதுதான்! அர்ச்சனைகள் வரவேற்கப்படுகின்றன.

Labels:

எழுதியவர்: அதிரைக்காரன் @ 0 மறுமொழிகள்
கல்லானாலும் காதலன் புல்லானாலும் புருஷன்

தலைப்பைக் பார்த்ததும் ஆஹா! உருப்படியான ஒரு பலான பதிவு என்று நாக்கைச் சப்புக் கொட்டி சபலத்துடன் இங்கு வந்திருந்தால் ஏமாறுவீர்கள். ஏறத்தாழ இது ஒரு சபலப் பதிவா இல்லையா என்று முழுதும் படித்து விட்டு நீங்களே சொல்லுங்களேன்.

பதிவுக்குச் செல்லும் முன் சில முன்குறிப்புகள்:
சார்லஸ் = மறைந்த இளவரசி டயானாவின் கணவர்;
காமில்லா= சார்லஸின் தற்போதைய மனைவி;
பார்க்கர்=காமில்லாவின் முன்னாள் கணவன்;
ரோஸ்மேரி=பார்க்கரின் தற்போதைய மனைவி.

காமில்லாவுக்கும் பார்க்கருக்கும் என்ன சம்பந்தம்? சார்லஸுக்கு வெட்கம்-மானம்-சூடு-சொரனை உள்ளதா? இவர்களிடம் காணப்படுவது நட்பா? காதலா? காமமா? அல்லது அதையும் தாண்டி புனிதமான வேறு ஏதாவது கருமாந்திரமா என்பதை அறிந்து கொள்ளவே இப்பதிவு.

சில வருடங்களுக்கு முன் பிரிட்டிஸ் இளவரசர் சார்லஸும் காமில்லாவும் திருமணம் செய்து கொண்டார்கள். அந்தக் காமில்லா தனது முன்னாள் கணவருடன் ஒருவாரம் இன்பச் சுற்றுலா சென்றுவர சார்லஸ் தனது மனைவியை அனுப்பி வைக்கப்போகிறாராம்.

இதைப் படித்து விட்டு கற்பனையாக மனதில் எழுந்தது. உண்மையாகவும் இருக்க வாய்ப்புள்ளதால் உருப்படதா விசயங்களின் ஒப்பற்ற ஆவணமான வெட்டிப்பக்கங்களில் ஏற்றி வைப்போமே.

காட்சி # 1:
காமில்லா: அத்தான்!

சார்லஸ்: எஸ் டியர்!

காமில்லா: கணவனுடன் சந்தோசமாக ஒருவாரம் இன்பச்சுற்றுலா செல்லாலாம் என்று இருக்கிறேன்.

சார்லஸ்: அதற்கென்ன காரியதரிசியிடம் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டால் போச்சு! ஒரே ஒரு வருத்தம் என்னால் உடனடியாக சுற்றுளா வர முடியாது.

காமில்லா: நான் உங்களை என்னுடன் வரும்படி கேட்கவே இல்லையே!

சார்லஸ் : நீந்தானே டியர், "கணவனுடன் சந்தோசமாக ஒருவாரம் இன்பச் சுற்றுளா செல்லாலாம் என்று இருக்கிறேன்" என்று சொன்னாய்!

காமில்லா: உண்மைதான்! நான் சொன்னது என்னுடைய Ex.கணவனுடன் மிஸ்டர் சார்லஸ்!

சார்லஸ்: ஓஹோ! வெரிகுட். அதுக்கும் ஏற்பாடு செய்து விட்டால் போச்சு!

காமில்லா: யு ஆர் மை ஸ்வீட்டி சார்லஸ்!

சார்லஸ்: (எனக்கு சர்க்கரைவியாதி இருப்பதைக் குத்திக் காட்டுகிறாளோ?)

காட்சி # 2:
பார்க்கர்: ரோஸ்மேரி. நீ கேன்சரிலிருந்து குணமடைந்த சந்தோசத்தை நான் வித்தியாசமாகக் கொண்டாடப்போகிறேன்!

ரோஸ்மேரி: எனக்கு அறுபத்தாறு வயதானாலும் என் மீதான உன் அன்பு இன்னும் இளமையுடனே இருப்பதை எண்ணி மகிழ்கிறேன் பார்க்கர். எப்படிக் கொண்டாடலாம்?

பார்க்கர்: என் மனைவிமீது நான் வைத்திருக்கும் மறக்க முடியாதக் காதலை மீண்டும் நிரூபிக்க ஒருவாரம் இன்பச் சுற்றுளா செல்லப் போகிறேன்.

ரோஸ்மேரி: காதலுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் பார்க்கர். தற்போது மருந்து சாப்பிட்டு வருவதால் என்னால் தற்போது உடன்வர முடியாதே!

பார்க்கர்: அது தெரிந்துதான் காமில்லாவை அழைத்துச் செல்லப்போகிறேன்.
ரோஸ்மேரி: (அடப்பாவி மனுஷா! இதுக்கு கேன்சரே பரவாயில்லையே!)

காட்சி # 3:

பார்க்கர்: Welcome Back காமில்லா ! இன்னும் என்னை மறக்காமல் தொடர்ந்து அன்பு வைத்திருக்கிறாயே!

காமில்லா: நம்மிருவரின் காதல் வாழ்க்கை அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியதா?

பார்க்கர்:(அடிக்கள்ளி! பின்னே ஏண்டி என்னை விட்டுட்டு சார்லஸுடன் ஓடினே?)

நிற்க,

"உன் குழந்தையும் என் குழந்தையும் நம் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்" என்பது போன்ற உரையாடல்கள் மேலை நாடுகளில் சகஜமான ஒன்று. தற்போது சார்ல்ஸ் புண்ணியத்தால் "என் மனைவி அவள் கணவனுடன் விளையாடச் செல்கிறாள்" என்ற கலாச்சாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளது.

மில்லியனராக ஆசைப்பட்டு அன்பான மனைவியை பில்லியனருடன் ஓரிரவு படுக்கையைப் பகிர்ந்துகொள்ள அனுப்பி வைக்கும் கணவன் பற்றி Indecent Proposal என்ற ஆங்கிலப்படத்தில் காட்டுவார்கள்.சினிமாக்களில் எந்தச் சனியனையும் கலைக்கண்ணோட்டத்தில் படமெடுத்துக் விற்பார்கள். நாமும் அதைக்காசு கொடுத்து பார்த்துத்தொலைப்போம்.ஆனால், நிஜத்திலும் இப்படி நடக்கிறது. அதைக் கண்டு கொள்ளாமல் செல்லலாமா?

கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன் என்பதை ஆணாதிக்கச் சிந்தனை என்று சில மேதாவிகள் சொல்வார்கள்; கல்லானாலும் காதலன் புல்லானாலும் புருஷன் என்று தொடரும் கேடுகெட்ட இவ்வுறவை, என்ன சிந்தனை என்று சொல்லப்போகிறார்களோ!

— Evening Standard—http://www.pressdisplay.com/pressdisplay/viewer.aspx

Labels:

எழுதியவர்: அதிரைக்காரன் @ 0 மறுமொழிகள்
கலாம் சொன்ன சலாம் - அதிர்ச்சித் தகவல்!!!
பாரத ரத்னா, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்தியாவுக்கே கிடைத்த மணிமகுடம். நாட்டுப்பற்று மிக்க இலட்சியவாதி, சாதி மதங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு
இந்தியா, இந்தியர் என்பதே தன் முகவரியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்.இதுதான் அவருக்கு நாடும் உலகமும் வைத்திருக்கும் அளவுகோல்.

ஆனால் அவருடைய சமீபத்திய நடவடிக்கை மேற்சொன்ன பெருமைகளை எல்லாம் கொஞ்சம்
கேள்விக்குரியாக்கியிருக்கிறது. அந்தச் சம்பவம் வருமாறு: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதாக் பொறியியல் கல்லூரியின் புதிய ஷிப்-இன்-ப்ளாக் கட்டிடத்தைத் திறந்து வைக்க வருகை தந்திருந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் சிறப்புரையாற்றத் தொடங்கியதுமே அவர் மத அடையாளத்துடன் "அஸ்லாமு அலைக்கும்" என ஆரம்பித்தார்.

இவருடைய சிறப்புரையைக் கேட்க கூடியிருந்த கூட்டம் கொஞ்சம்
அதிர்ச்சிக்குள்ளாகியது. விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த கல்லூரி நிர்வாகம் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். ஆனால் அங்கு படிக்கும் மாணவர்களும்,சிறப்புரையைக் கேட்கக் கூடியிருந்த பொதுமக்களும் வெறும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்களில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பல்வேறு சமூகத்தினரும் கூடியிருந்த விழாவில் இந்தியாவே தரிசிக்கும் ஏ.பி.ஜே-யின் பேச்சு அனைவரையும் கொஞ்சம் உறையச்செய்ததை யாரும் மறுக்க முடியாது.அவருக்குள்ளும் மதத்தின் வேர்கள் துளிர் விட்டிருக்கிறதா? என கவலையுடன் கூட்டம் கலையத்தொடங்கியது.


அந்தச் சர்ச்சைக்குரிய உரை இதோ ஒளி வடிவில்.... http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=blogsection&id=10&Itemid=154

மனுநீதி (மநுநீதி?) என்ற வலைப்பூவில் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு நெற்றிக் கண் திறந்திருந்தார் ஒருவர்! (எனக்கென்னமோ அது நெற்றிக்கண் மாதிரி தெரியவில்லை. காவிக்கண்ணாடி அணிந்து எழுதியது போலுள்ளன அவரின் கேள்விகள்!!!)


முன்னாள் ஜனாதிபதி "உண்மையான"பாரத ரத்னா அப்துல்கலாம் பிறப்பால் ஒரு முஸ்லிம் என்பதும், இதுவரையிலும் ஒரு முஸ்லிமாகவே இருந்து வருவதும் நாடறிந்த செய்தி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த விழாவில் "அஸ்ஸலாமு அலைக்கும்" உங்கள்மீது (சாந்தி உண்டாகுக) என்று வாழ்த்தி உரையைத் தொடங்கினார்.இதற்கு ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்?

மதசார்பற்ற நாட்டில் உயர்பதவியில் இருந்து கொண்டு சங்கராச்சாரியின் காலடியில் விழுந்து கிடந்த பிரதமர்களையும் ஜனாதிபதிகளையும் கொண்ட நாட்டில், சலாம் சொன்னதால் அப்துல் கலாம் மீது மத அடையாளம் விழுந்து விட்டதா? அப்துல் கலாம் என்ற பெயர்கூட அவரின் மத அடையாளம்தான் என்பது மநுநீதிக்காவலர்களுக்குத் தெரியாதா?

கும்பாபிசேகங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அரசு செலவில் அனுப்பி வைக்கப்படும் காவல்துறையினரும்கூட அருள்வந்து தேர் இழுபத்தும்,பக்திவயப்பட்டு அரோகரா கோஷம்போட்டு நிற்பதும் மநுவின் கண்களுக்கு தெரியவே இல்லையா?

அனைவருக்கும் பொதுவான தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஒளிபரப்பு அருள் வாக்குடந்தானே நிகழ்ச்சிகளைத் துவங்குகிறது.தீபாவளிக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தூர்தர்ஷன் என்றைக்காவது பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி என்று நாள் ஒதுக்கி இருக்கிறார்களா? அட! குறைந்தபட்சம் நாகூர் ஹனீபாவின் இஸ்லாமிய கீதங்களையாவது ஒலி/ஒளிபரப்பி மதசார்ப்பற்ற நிலையை நிரூபித்திருக்கலாமே!

மாண்புமிகு பாரத ரத்னா அப்துல்கலாம் அவர்களாவது தனது ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த பின்னரும் பல்கலைக்கழகங்களில் பாடம் நடத்தி நாட்டிற்குச் சேவையாற்றுகிறார்.ஏனைய இந்திய முன்னாள் ஜனாதிபதிகள் மடங்களுக்கு அல்லவா சேவையாற்றினார்கள். காஞ்சி மடத்திற்கு அலையாய் அலைந்த எங்களூர்காரர் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் பற்றி மநுவுக்குத் எதுவுமே தெரியாதா?

தயவு செய்து காவிக்கண்ணாடியை அணிந்து நெற்றிக்கண்ணால் பார்த்து எதையும் அவசரப்பட்டு விமர்சிக்க வேண்டாமே!

Labels: ,

எழுதியவர்: அதிரைக்காரன் @ 4 மறுமொழிகள்
இதைப் புந்ரிது கொள்ள முகிடிறதா?
உகங்களால் கீகழ்ண்ட ஆகிங்ல வாத்ர்தைகளைப் புந்ரிது கொண்டு வாக்சிக முகிடிறதென்றால் அதாசரன மூயுளைடைவர்ளிகள் நீகங்ளும் ஒருவர்! எத்ழுதுக்களின் வரிசை எபப்டி இந்ருதாலும் சொகற்ளைப் புந்ரிது கொளுள்ம் ஆறற்லை மதனிமூளை பெறிற்ருப்பதாக Cmabrigde Uinervtisy ஆய்வு சொகில்றது.

முகிக்யமாக முதல் மறுற்ம் கடைசி எத்ழுதுக்கள் மடுட்ம் ஒங்ழுகாக இந்ருதாலே போதும்! நமது மூளையால் அக்தைகிரகித்துக் கொண்டு புந்ரிது கொளள் முயுடிமாம்! ஏன்னெறால் மதனிமூளை,சொகற்ளின் ஒவொவ்ரு எத்ழுத்தாகப் பப்டிபதில்லையாம்! இவாவ்ய்வு எல்லா மொகழிகளுக்கும் பொந்ருதுமா என்று தெயரிவில்லை.

I cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it dseno't mtaetr in waht oerdr the ltteres in a wrod are, the olny iproamtnt tihng is taht the frsit and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it whotuit a pboerlm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Azanmig huh? Yaeh, and I awlyas tghuhot slpeling was ipmorantt! If you can raed this forwrad it.

தழிமில் நுப்னிபுல் மேதய்ல் எபான்ர்களே! அற்தகும் இற்தகும் சபம்ந்தம் உண்டா என்று தெயரிவில்லை. தெந்ரிதவர்கள் விக்ளக்கினால் நல்லது

Labels: ,

எழுதியவர்: அதிரைக்காரன் @ 4 மறுமொழிகள்
விஜய T.ராஜேந்தர் சிறப்புப் பேட்டி!

நேற்று நெல்லை மாவட்டத்தில் கட்சிக் கொடியேற்றி முடித்துவிட்டு தாடியைத் தடவிக் கொண்டிருந்த விஜய T.ராஜேந்தர் 'வெட்டிப் பேச்சு'க்கு அளித்த சிறப்புப் பேட்டி!


அதிரைக்காரன்: என்னா சார்! தாடி வெளுக்காமல் அப்படியே 'கரு.கரு'ன்னு வளர்ந்திருக்கு.


விஜய.T.R: நான் 'கரு'ணாநிதியே கதி என்று இருப்பதால் என் முடியும் 'கரு-கரு' என்று இருக்கின்றன போலும்!


அதிரைக்காரன் : உங்கள் கட்சி நிலவரம் எப்படி இருக்கிறது?


விஜய.T.R: பெரும் நஷ்டத்தில் இருக்கிறது. இந்தக் கொடியைக்கூட என் சொந்த செலவில்தான் வாங்கி வந்தேன் என்றால் நிலமை எப்படி இருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். கண்டவன் பின்னாடியும் அலையுறதாலதன் தமிழ்நாடு வல்லரசாக முடியலே! நாங்க ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை வல்லரசாக மாற்றுவோம்

அதிரைக்காரன்: சிலம்பரசாகவோ குறளரசாகவோ மாற்றாமல் விட்டால் சரி! அப்புறம் விஜயகாந்த் உங்களுக்குப் போட்டியா?


விஜய.T.R: எனது ஆஸ்தான குடும்ப சோதிடர் சொன்னபடி என் பெயருடன் 'விஜய' என்று சேர்த்துக் கொண்டுள்ளேன். சொல்லப் போனால் நான்தான் விஜயகாந்துக்குப் போட்டி!


அதிரைக்காரன்: உங்கள் கட்சியின் இலட்சியம் என்ன?


விஜய.T.R: ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவரை முதல்வராக்குவதே எங்கள் கட்சி முக்கியஸ்தர்களின் இலட்சியம்.என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. இனி வரும் தேர்தல்களில் எங்கள் கட்சி ஆதரவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்பதை பொறுத்திருந்து பாருங்க! இதைச் சொல்றது விஜய. டி.ஆருங்க!

அதிரைக்காரன்: உங்கள் கட்சி முக்கியஸ்தர்கள் யார் யார்?


விஜய.T.R: உ.வி.டி.ஆர்,ரா.சி.,ரா.கு.மற்றும் பலர்.!


அதிரைக்காரன்: என்னா சார் புதுப்புது பேரா இருக்கு? இவங்கல்லாம் யாருன்னு கொஞ்சம் விளக்க முடியுமா?


விஜய.T.R: இதுக்குத்தான்யா அரசியல் அரிச்சுவடி தெரியாத தத்தக்கா பித்தக்கா நிருபர்களுக்குப் பேட்டி கொடுக்கக் கூடாது. உ.வி.டி.ஆர்=உஷா விஜய டி.ராஜேந்தர், ரா.சி= சிலம்பரசன், ரா.கு= குறளரசன்!


அதிரைக்காரன்: உங்கள் மகள் இலக்கியா பெயரைக் காணோமே! அவங்களுக்கு அரசியல் பிடிக்காதா?


விஜய.T.R: அவங்களுக்கு அரிசியல்தான் பிடிக்கும். காலத்தின் கட்டாயத்தால் மத்திய அரசில் காபினட் அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே நிச்சயமாக கட்சித் தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு வருவார் என்று நம்புகிறோம்!


அதிரைக்காரன்: நீங்கள் தீவிர அரசியலில் இறங்கி சினிமாவுக்கு முழுக்குப் போடுவீர்களா?


விஜய.T.R: அரசியல்வாதிகளிடம் போய், நீங்கள் தீவிர சினிமாவில் இறங்கி அரசியலுக்கு முழுக்கு போடுவீர்களா?என்று கேட்பீரா? அவரவருக்கு எதில் லாபமோ அந்தத் தொழிலைச் செய்துவிட்டுப் போகட்டுமே.


அதிரைக்காரன்: அப்படீன்னா அரசியல் கட்சி நடத்துவது தொழில் என்கிறீர்களா?


விஜய.T.R: என் அனுபவத்தில் நான் அப்படித்தான் கருதுகிறேன். கலைச் 'சேவை' செய்வதாகச் சொல்லி சினிமாக்காரர்கள் சம்பாதிக்க வில்லையா? அதுமாதிரிதான் அரசியலும். நானெல்லாம் ஒரு கொள்கையோடு அரசியலுக்கு வந்தவன்.


அதிரைக்காரன்: ஓஹோ! உங்கள் கட்சியின் கொள்கைதான் என்ன?


விஜய.T.R:எக்காரணம் கொண்டும் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது.எங்கள் கொள்கையைச் சொல்லி விட்டால் "ப்பூ" இதானா என்று மற்றவர்கள் இளக்காரமாக நினைந்து விடக்கூடும் என்பதால் அதை தற்போதைக்குச் சொல்ல முடியாது.நேரம் வரும்போது நிச்சயம் சொல்வேன்!


அதிரைக்காரன்: மோடி, ஜெயலலிதா வீட்டில் பொங்கல் சாப்பிட வருகிறாரே! அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


விஜய.T.R: தமிழனின் முக்கிய டிஃபன் பொங்கல்.மற்றவர்களும் பொங்கலை விரும்பபினால் தமிழனுக்குப் பெருமைதானே! அதே போல், நரேந்திர மோடி ஜெயலலிதாவை குஜராத்துக்கு அழைத்து பாணிபூரி கொடுக்க வேண்டும்.


அதிரைக்காரன்: பொங்கலும் பாணிபூரியும் சேர்ந்தால் உருப்படுமா? வழக்கமா ஜெயலலிதா வடநாட்டு அரசியல்வாதிகளுக்கு அல்வா தான் கொடுப்பார். சமீபத்தில் மூன்றாவது அணி என்று சொல்லி நிறைய பேருக்கு அல்வா கொடுத்தார்.சென்ற சட்டமன்றத் தேர்தலில் உங்களுக்கும் கூட அல்வா கொடுத்தார்!


விஜய.T.R: ஜெயலலிதா மட்டுமா எனக்கு அல்வா கொடுத்தார். அதென்னமோ தெரியவில்லை என்னை பார்த்தாலே எல்லோருக்கும் அல்வா கொடுக்கத் தோன்றுகிறது.(கண்கலங்குகிறார்!) பிறகு ஆவேசமாக,


என் பேரு VTR
என் உண்மையான தலைவன் பேரு MGR
நானும் ஒருநாள் ஆவேன் முதல்வர்
எனக்குப் பின்னாடி என்னிரு புதல்வர்
நீ ஒரு வெட்டி! - ஒனக்கெல்லாம்
இனி கிடையாது பேட்டி!!
ஏய் டண்டனக்கா! ஏய் டண்டனக்கா!
எடத்தக் காலிபண்ணு மக்கா!
எக்கா!

பின்குறிப்பு: விரைவில் விஜய டி.ராஜேந்தர் இளைஞர்களைத் திரட்டி மாநாடு நடத்த இருக்கிறார். கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் பின்னூட்டத்தில் முன்பதிவு செய்யலாம்!

Labels:

எழுதியவர்: அதிரைக்காரன் @ 0 மறுமொழிகள்
எவன்டா இவன்?

Name: அதிரைக்காரன்
முகப்பு: Adirampattinam, Tamil Nadu, India
About Me: கண்டதையும் படித்துவிட்டு அதிகமாக யோசனை செய்து பேனா கிடைத்தால் "கிறுக்கி"த் தள்ளிக் கொண்டிருந்தவனுக்கு ஓசில Blogger கிடைத்தால் சொல்லவா வேண்டும்?
See my complete profile
இதையும் படிங்க
பெட்டகம்
நட்சத்திரமாம்!!!
வள்ளல்

Free Blogger Templates

BLOGGER

© வெட்டிப் பேச்சு .Template by Isnaini Dot Com