2012 இல் ஒபாமாவை எதிர்த்து சரத்குமார் போட்டி?
Sunday, February 15, 2009
உலகிலேயே வெட்கமில்லாத அரசியல்வாதி அனேகமாக சரத்குமார் என்றுதான் நினைக்கிறேன். கடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் எழுநூற்று சொச்சம் ஓட்டு வாங்கிய கட்சியை வைத்துக் கொண்டு கொஞ்சம்கூட வெட்கமின்றி "தேசிய கட்சியுடன் மட்டுமே கூட்டணி" என்று அறிவித்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் (பிப்ரவரி 13) தென்காசியில் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு சரத்குமார் அளித்த பேட்டி. அவர் சொல்ல வெட்கப்பட்டவை (அடைப்புக் குறிக்குள்):

"40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுயிட வேண்டும் என்பதுதான் என் முடிவு.(பிரதமர் பதவியை எங்களுக்கு விட்டுக்கொடுக்க முன்வரும் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி அமைக்கத் தயார். அவர்கள் தயாரா? என்பது எனக்குத் தெரியாது.) ஆனால் கட்சி நிர்வாகிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று சொல்லி வருகிறார்கள். (அப்போதான் போஸ்டர் ஒட்டும் செலவுக்காவது பணம் கிடைக்கும்)
இதனால் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது (இறுதி முடிவு எடுக்கும் முழுஅதிகாரத்தை கட்சித் தலைவருக்கு பொதுக்குழு ஏகமனதாக வழங்கி உள்ளது. ராதிகாவின் ஒப்புதலின்றி தலைவர் எந்த முடிவும் எடுக்க மாட்டார். கட்சித் தலைவர் நானேதான் என்பதால்இதில் பிரச்சினை இருக்காது)
மார்ச் 15-ந்தேதி கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிடும். பெரும்பாலும் தேசியக் கட்சியுடன்தான் கூட்டணி இருக்கும்" (அதுவரை எங்கள் கட்சி இருக்குமா என்று தெரியவில்லை) என்றார் சரத்குமார்.
(பொதுவான செயல்திட்டம் அமைத்தே கூட்டணி வைப்போம். எங்கள் செயல் திட்டங்கள் இன்னும் முடிவாகவில்லை. தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெளியாகிய அடுத்த 24 மணி நேரத்திற்குள் எங்கள் தேர்தல் அறிக்கை வெளியாகி விடும்.
திருமங்கலம் இடைத்தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர் இழந்த டெப்பாஸிட்டை விடக்கூடுதலாக 100-ரூபாய் சேர்த்து வேட்பாளருக்குத் திருப்பிக் கொடுத்து விடுவோம். ராதிகா மற்றும் எனக்கான தேர்தல் பிரச்சாரச் செலவை வேட்பாளரிடம் பிறகு வசூலித்துக் கொள்வோம்.
எங்களின் தற்போதைய கவனம் மத்தியில் மட்டுமே இருப்பதால் தமிழக அரசியலில் 2030 க்குப் பிறகே கவனம் செலுத்துவோம். 2012 இல் ஒபாமை எதிர்த்து எங்கள் கட்சி வேட்பாளரை நிறுத்தும். அது நானாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை)
Read more...
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் (பிப்ரவரி 13) தென்காசியில் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு சரத்குமார் அளித்த பேட்டி. அவர் சொல்ல வெட்கப்பட்டவை (அடைப்புக் குறிக்குள்):

"40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுயிட வேண்டும் என்பதுதான் என் முடிவு.(பிரதமர் பதவியை எங்களுக்கு விட்டுக்கொடுக்க முன்வரும் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி அமைக்கத் தயார். அவர்கள் தயாரா? என்பது எனக்குத் தெரியாது.) ஆனால் கட்சி நிர்வாகிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று சொல்லி வருகிறார்கள். (அப்போதான் போஸ்டர் ஒட்டும் செலவுக்காவது பணம் கிடைக்கும்)
இதனால் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது (இறுதி முடிவு எடுக்கும் முழுஅதிகாரத்தை கட்சித் தலைவருக்கு பொதுக்குழு ஏகமனதாக வழங்கி உள்ளது. ராதிகாவின் ஒப்புதலின்றி தலைவர் எந்த முடிவும் எடுக்க மாட்டார். கட்சித் தலைவர் நானேதான் என்பதால்இதில் பிரச்சினை இருக்காது)
மார்ச் 15-ந்தேதி கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிடும். பெரும்பாலும் தேசியக் கட்சியுடன்தான் கூட்டணி இருக்கும்" (அதுவரை எங்கள் கட்சி இருக்குமா என்று தெரியவில்லை) என்றார் சரத்குமார்.
(பொதுவான செயல்திட்டம் அமைத்தே கூட்டணி வைப்போம். எங்கள் செயல் திட்டங்கள் இன்னும் முடிவாகவில்லை. தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெளியாகிய அடுத்த 24 மணி நேரத்திற்குள் எங்கள் தேர்தல் அறிக்கை வெளியாகி விடும்.
திருமங்கலம் இடைத்தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர் இழந்த டெப்பாஸிட்டை விடக்கூடுதலாக 100-ரூபாய் சேர்த்து வேட்பாளருக்குத் திருப்பிக் கொடுத்து விடுவோம். ராதிகா மற்றும் எனக்கான தேர்தல் பிரச்சாரச் செலவை வேட்பாளரிடம் பிறகு வசூலித்துக் கொள்வோம்.
எங்களின் தற்போதைய கவனம் மத்தியில் மட்டுமே இருப்பதால் தமிழக அரசியலில் 2030 க்குப் பிறகே கவனம் செலுத்துவோம். 2012 இல் ஒபாமை எதிர்த்து எங்கள் கட்சி வேட்பாளரை நிறுத்தும். அது நானாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை)