Showing posts with label ஜனாதிபதி. Show all posts
Showing posts with label ஜனாதிபதி. Show all posts

முக்காடு போடும் நிலையில் பிரதீபா மேடம்

Thursday, June 28, 2007

பிரதீபா படீல் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் அவரைப் பற்றி வெளியாகும் செய்திகள் சர்ச்சைக்குள்ளாகின்றன. (ராஷ்டிரபதி ஆணாபெண்ணா? என்ற சர்ச்சைகூட எழுந்தது:-). தன் பதவியைப் பயன்படுத்தி கொலையாளிகள் தப்பிக்க உதவினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது கூட்டுறவு வங்கி ஊழலில் முக்கிய பங்கு இருப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மும்பை: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரதீபா பாட்டீல் தொடங்கிய வங்கி நிதியை அவரது தம்பியும், உறவினர்களும் சேர்ந்து சூறையாடியதால் வங்கி திவால் ஆகி விட்டதாக அந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இந்த வங்கி மீது ஏராளமான ஊழல் மற்றும் மோசடிப் புகார்களும் எழுந்துள்ளன. ஆனால் இவற்றுக்கும், பிரதீபாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று காங்கிரஸ் கூறுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல் மீது சரமாரியாக புகார்கள், சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.

முதலில் அவரது தம்பியை, கொலைக்குற்றத்திலிருந்து காப்பாற்ற முயற்சித்தார் பிரதீபா என்ற புகார் எழுந்தது. ஆனால் இந்ததப் புகார் பொய்யானது, பாஜக மோசமாக செயல்படுகிறது என்று காங்கிரஸ் கூறியது.

இந்த நிலையில் இன்னொரு மெகா புகார் பிரதீபா மீது எழுந்துள்ளது. கடந்த 1973ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோவனில் பிரதீபா பாட்டீல் ஒரு கூட்டுறவு வங்கியை நிறுவினார். பெண்கள் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டுறவு வங்கிக்கு பிரதீபா மகிளா சஹகாரி வங்கி என்று பெயர்.

இந்த வங்கியின் நிர்வாகத்தில் தற்போது பிரதீபா பாட்டீல் இல்லை. கடந்த 1994ம் ஆண்டு வரை இந்த வங்கி நிர்வாகத்தில் பிரதீபா பாட்டீல் இருந்தார். அதன் பிறகு விலகி விட்டதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது.

கடந்த 2003ம் ஆண்டு இந்த வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. பெண்கள் நலனுக்கான வங்கி என்ற பெயரில், பிரதீபா பாட்டீலின் உறவினர்களுக்கு மட்டும் கடன் கொடுக்கப்பட்டு வந்ததாலும், பின்னர் அவர்கள் வாங்கிய கடன் தொகையை தள்ளுபடி செய்ததாலும் இந்த அதிரடி நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்தது.

மேலும் வங்கி மீது கூறப்பட்ட ஊழல் மற்றும் மோசடிப் புகார்கள் குறித்து விசாரித்த அரசு சார்பிலான பிரதிநிதியான அமோல் கைர்னார், இதுதொடர்பாக வங்கி மேலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பினார்.

அந்த நோட்டீஸில், வங்கியின் இருப்புத் தொகைய விட கூடுதலான தொகைக்கு பிரதீபாவின் உறவினர்களுக்கு கடன் தொகை கொடுத்தது ஏன், உறவினர்கள் கட்டாத கடன் தொகையை தள்ளுபடி செய்தது எந்த அடிப்படையில், பிரதீபா பாட்டீலுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைக்கு வழங்கப்பட்ட கடன் தொகைய ரத்து செய்தது ஏன் என்று பல கேள்விகளை அதில் கைர்னார் கேட்டிருந்தார்.

மேலும், வங்கி போர்டு இயக்குநர்களாக அரசு விதிப்பி, எஸ்.சி, எஸ்.டி சமுதாயத்தினரைத் தேர்ந்தெடுக்காமல், உறவினர்களை மட்டுமே தேர்ந்தெடுத்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதுதான் தற்போது பிரச்சினையைக் கிளப்பியுள்ளது. பிரதீபா பாட்டீலின் தம்பி திலீப் சிங் பாட்டீல் மற்றும் உறவினர்கள்தான் பெருமளவில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் வங்கிப் பணத்தை இஷ்டத்திற்கு எடுத்து செலவழித்ததால் தான் வங்கி சீர்குலைந்து போனதாக வங்கி ஊழியர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இவர்களின் செயலால் வங்கிக்கு ரூ. 2.24 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாம். திலீப் சிங் பாட்டீலும் அவரது உறவினர்களும் வங்கி தொலைபேசியிலிருந்து சரமாரியாக பேசுவார்களாம். இதனால் தொலைபேசிக் கட்டணம் மட்டும் ஒருமுறை ரூ. 12 லட்சத்திற்கு வந்ததாம்.

இதேபோல, கார்கில் போர் வீரர் நல நிதிக்காக ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்துள்ளனர். ஆனால் அந்தத் தொகையை உரியவர்களிடம் சேர்க்காமல் அவர்களே பங்கிட்டுக் கொண்டார்களாம்.

ஆனால் இந்தப் புகார்களை காங்கிரஸ் கட்சி மறுக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், இவை எல்லாம் பொய்யான புகார்கள். 1994ம் ஆண்டு முதல் இந்த வங்கிக்கும், பிரதீபா பாட்டீலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார் சிங்வி.

ஆனால் வங்கி திவாலனாதாக கூறி ரிசர்வ் வங்கி உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை எடுத்தது வரை பிரதீபா பாட்டீல் இந்த வங்கியின் இயக்குநர் பொறுப்பில் இருந்துள்ளார் என்ற தகவல் ஆதாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

2003ம் ஆண்டு வங்கி திவாலனாதாக அறிவிக்கப்பட்டபோது பிரதீபா முன்னிலையில்தான் அதுதொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவாம்.

பிரதீபா மீது எழுந்துள்ள அழுத்தமான புகார்களுக்கு, காங்கிரஸ் தரப்பிலிருந்து இதுவரை உறுதியான மறுப்பு வெளியாகவில்லை. இந்தப் பிரச்சினையை பெரிதுபடுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தீர்மானித்துள்ளது.
பர்தா அணிவது பிற்போக்குத்தனமானது; முஹலாயர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே பர்தா அவசியமாக இருந்தது; தற்போது தேவை இல்லை" என்று எந்த நேரம் திருவாய் மலர்ந்தாரோ,அம்மனியின் பின்புலம் ஒவ்வொன்றாக வெளி வரத்தொடங்கி உள்ளன.

இவரைப் பற்றிய செய்திகளைப் பார்த்தால், பிரதீபா படீல் கூடிய சீக்கிரம் முக்காடு போடும்படியான நிலமை ஏற்பட்டால்,அதற்கு நிச்சயமாக எந்த முஹலாயர்கள் காரணமல்ல!

பதிவுக்குத் தொடர்பில்லாத சந்தேகம்: சாராயக் கடைக்குச் செல்லும்போதும், திவால் ஆகும்போது ஏன் ஆண்கள் முக்காடு போடுகிறார்கள்? என்ற சந்தேகத்தை தீர்த்து வைப்பவர் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்படுவார்!

Read more...

ராஷ்டிரபதி - ஆணா? பெண்ணா? புதிய குழப்பம்!

Saturday, June 16, 2007

முதன் முதலில் ஜெயலலிதா முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது எனக்கு எழுந்த சந்தேகம் போன்றே, ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் ஹிந்திக்காரர்களுக்கும் வந்துள்ளது.

ஜனாதிபதியை இந்தியில் `ராஷ்டிரபதி' என்று அழைக்கிறார்கள். இதுவரை ஆண்கள் மட்டுமே ஜனாதிபதியாக இருந்துள்ளனர். இதனால் அவர்களை `ராஷ்டிரபதி' என்றே அழைத்தனர்.

இப்போது, ராஷ்டிரபதி ஆண்பாலா? அல்லது பெண்பாலா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி-இடதுசாரி கட்சிகள் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரான பிரதீபா பட்டீல் வெற்றி பெற்று ஜனாதிபதியானால் அவரை `ராஷ்டிரபதி' என்று அழைக்க முடியுமா? என்ற கேள்விக்குறி எழுந்து உள்ளது.

இதுபற்றி அரசியல் சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப் கருத்து தெரிவிக்கையில்; ராஷ்டிரபதி என்ற பெயர் ஆண்-பெண் ஆகிய இரு பாலாருக்கும் பொருந்தும் என்றும், எனவே பிரதீபா பட்டீல் ஜனாதிபதி ஆகும் பட்சத்தில் `ராஷ்டிரபதி' என்ற பெயரை மாற்ற வேண்டிய தேவை இல்லை என்றும் கூறினார்.

அதெல்லாம் இருக்கட்டும். நம்நாட்டு ஜனாதிபதியை பெரும்பாலும் 'ரப்பர் ஸ்டாம்ப்' என்றே சொல்வார்கள். (ஜனாதிபதி அப்துல் கலாம் விதிவிலக்கு). ரப்பர் ஸ்டாம்ப் ஆணா? பெண்ணா? என்ற சந்தேகம் யாருக்கும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ;-)

குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு பெண் வரவிருப்பது பற்றி கலாமிடம் கேட்டபோது மிகவும் அற்புதம் என்றார். இதுகுறித்து மேலும் கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

இதனிடையே மக்கள் தம்மை தொடர்பு கொள்ள வசதியாக தனிப்பட்ட இணைய தளம் ஒன்றை தொடங்க கலாம் திட்டமிட்டுள்ளார். யவத்மாலில் மாணவர்களுடன் உரையாடிய அவர், தம்மை www.abdulkalam.com என்ற இணைய தளத்தில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும், இந்த இணைய தளம் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இணைய முகவரிகளுக்கு .com என்று முடிவடைந்தால் அவை Commercial சார்ந்த தளமுகவரி என்று புரிந்து கொள்ளப்படும். ஆகவே, .net என்றோ அல்லது .org என்றோ முடியும்படி பார்த்துக் கொள்ளலாமே!

Read more...

கோவ்ன் பனேகா அடுத்த ஜனாதிபதி?

Wednesday, February 14, 2007

இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு. அப்துல்கலாம் அவர்களின் பதவிக்காலம் முடியும் தருவாயில் உள்ளது. இதுவரை ரப்பர் ஸ்டாம்பாகச் செயல்பட்ட முந்தைய ஜனாதிபதிகளை விட அப்துல் கலாம் அவர்களின் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது. .

தற்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் மீண்டும் ஒருமுறை இந்திய ஜனாதிபதியாக இருப்பதை மாணவர்களும் இளைஞர்களும் விரும்புவதாகத் தெரிகிறது. வழக்கம் போல் அரசியல் கட்சிகளும் அடுத்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க தகுதியான 'பெரிசு'களை பரிசீலித்து வருகிறார்கள். முதல் கட்ட பரிசீலனையில் காங்கிரஸ் சார்பில் கரண் சிங்கும், கம்யூனிஸ்டுகள் சார்பில் ஜோதிபாசுவும் இருக்கிறார்கள்.

அதிமுக,தெலுங்குதேசம்,சமாஜ்வாடி ஆகிய கட்சிகளின் சார்பில் இந்திப்பட நடிகர் அமிதாப் பச்சனை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் திட்டம் உள்ளதாக சன் செய்தியில் நேற்று முன்தினம் சொன்னார்கள்.

அமிதாப்ப, சில மாதங்களுக்கு முன் வயிற்றுப் போக்கால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டதை தலைப்புச் செய்தியாக இருந்தது போக, பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகளோடு நடிகர்களுக்குக் கிடைக்கும் பெரும்பாலான விருதுகள் அமிதாப் பச்சனுக்குக் கிடைத்து உள்ளன. மேலும், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயின் மாமனார் என்ற விருதும் (?) கிடைத்திருக்கிறது.

Image and video hosting by TinyPic

2020க்குள் வல்லரசாகப் போகும் நம்நாட்டின் ஜனாதிபதியாக இருக்க நடிகர் அமிதாப் பச்சன் பொருத்தமான கேரக்டரா என்று தெரியாது. அதற்குமுன் ஜனாதிபதி கேரக்டரில் எப்படி இருப்பார் என்று கொஞ்சம் வெட்டல்-ஒட்டல் செய்து அரசியல்வாதிகளின் சிரமத்தைக் குறைத்துள்ளேன்.

பி.கு: இப்பதிவில் கண்டிப்பாக :-) மாதிரியான Smily Only பின்னூட்டங்கள் அனுமதிக்கப் படாது என்பதால் அடுத்த ஜனாதிபதிக்குத் தோதான ஆட்களைப்பற்றி பின்னூட்டமாகவோ அல்லது சொந்த ஒட்டல்-வெட்டல் மூலமோ சொல்லலாம். :-)

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP