குரங்குகளுக்குப் பாலம் கட்டத் தெரியாது - தினமலர்
Wednesday, August 06, 2008
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் வளம் சேர்க்கும் சேதுக்கால்வாய் திட்டத்திற்கு சங்பரிவாரங்கள் முட்டுக்கட்டை போட்டு வருவதற்குக் காரணம். ராமர் இலங்கைக்குச் செல்வதற்காக குரங்குகளால் கட்டப்பட்ட பாலம்??? இடிபடும் என்றும், இது கோடிக்கணக்கான இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் என்று சொல்லிவரும் சூழலில், சங்பரிவாரங்களின் ஊதுகுழல் தினமலர்/ம் இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், குரங்குகளுக்காக மனிதர்கள் பாலம் அமைத்துக் கொடுத்ததாகச் சொல்லிப் பரவசப் பட்டுள்ளது!
ராமருக்குப் பாலம் கட்ட உதவிய குரங்குகளுக்கு, தங்கள் சொந்தத்தேவைக்குப் பாலம் கட்டத் தெரியாதா?
அல்லது
கர்னாடகக் குரங்களுக்குப் பாலம் கட்டத் தெரியாதா?
ஒன்றுமே புரியவில்லை. புரிந்தவர்கள் பின்னூட்டலாம்!