Showing posts with label வினவு. Show all posts
Showing posts with label வினவு. Show all posts

'விபரங்கெட்ட' வினவு செய்தியாளர், சவுதியிலிருந்து…..

Wednesday, January 25, 2012


கருத்து சுதந்திரம், கத்தரிக்காய் சுதந்திரம் என்றெல்லாம் உசுப்பேற்றி பதிவிடும் வினவுக்கு, பின்னூட்டவெறி தலைக்கேறினால் இஸ்லாம் அல்லது முஸ்லிம் குறித்து எதையாவது எழுதி இணைய சுகம் காண்பது வினவுக்கு அவ்வப்போதைய பொழுதுபோக்கு.

வினவுக்கு கீழ்கண்ட மடலை அனுப்பி வெளியிடக்கோரி 24 மணிநேரம் கடந்த பிறகும் பதில்லாத காரணத்தால், இதை பதிவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.இனிமேல் தோழர் வினவு உரிமை,சுதந்திரம் என்று பதிவெழுதுவதில் அர்த்தமில்லை. அதற்கான அருகதையை இழந்து விட்டார்கள் என்று தெரிவிக்க வேண்டி வினவுக்கு அனுப்பிய மடலை பதிகிறேன்.

=======================
அன்புள்ள தோழர் வினவுக்கு,

சவூதி ஓஜர் கம்பெனியில் ஊழியர்களுக்கு அநீதியிழைக்கப்படுவது குறித்து வினவு ஓர் பதிவில்,நிறுவனம் நிர்வாகம் ஊழியர்களை வஞ்சிப்பது குறித்து எழுதியிருந்தால் இந்த மடலுக்கு அவசியம் வந்திருக்காது. சம்பந்தமே இல்லாமல் தலைப்பில் "சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்!.."என்று தலைப்பிட்டிருந்ததால் வினவுவின் புத்தியில் உரைக்கும்படி சில விசயங்களைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

பின்னூட்டமாக எழுதினால் அதைப்பிடித்து தொங்க சிலருள்ளதால் மடலாக அனுப்புகிறேன். நேர்மையாக வினவு தளத்தில் இதை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

1) சவூதி அரேபியா என்பது பண்டைய இந்தியாவைப்போல் சிறுசிறு நகரங்களாக சிதறிக் கிடந்த பாலைநில சிற்றரசுகளை 19 ஆம் நூற்றாண்டில் பிறந்த "அப்துல் அஸீஸ் பின் ஸவூத்" என்ற அரேபியர் ஒருங்கிணைத்து உருவாக்கிய தேசம்.அதனால்தான் அவரது பெயரால் "ஸவூதி அரேபியா" என்று அழைக்கப்படுகிறது.

2) ஸவூதி உட்பட அரபு நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தாலும்,இஸ்லாம் பெயரளவிலும், இதன் ஆட்சியாளர்களில் பலர் இஸ்லாத்தின் அடிப்படை மக்களாட்சிக்கு எதிரான மன்னராட்சிமுறையையே பின்பற்றி வருகிறார்கள்.

3) மத்திய கிழக்கு மற்றும் எண்ணெய்வள நாடுகளின் செல்வச் செழிப்பின் பின்னணியில் கோடிக்கணக்கான வெளிநாட்டவர்களின் கடின உழைப்பு காரணமாக உள்ளது.குறிப்பாக இந்நாடுகளிலுள்ள இந்தியர்களின் பங்களிப்பு மற்ற நாட்டினரைவிட கூடுதல் என்பது மறுக்க முடியாது உண்மை.

4) வெளிநாட்டினரை மூலதனமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களில் பல்வேறு வகையான பாகுபாடுகள் உள்ளன. உள்நாட்டு மக்களுக்கு குறைவான உழைப்புக்கு அதிக சம்பளமும் சலுகைகளும் வழங்கப்படுவதாக சொல்லப் பட்டாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவே போதவில்லை என்ற புலம்பல்களும் இருக்கவே செய்கிறது. இதுகுறித்து தேவையெனில் விபரமாக எழுதுவேன்.

5) இந்நாடுகளில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில் உள்நாட்டு குடிமக்களுக்கு நிகராக அல்லது அவர்களை விடவும் கூடுதல் சலுகைகளும் ஊதியமும் பெறும் வெளிநாட்டவர்களும் உள்ளனர். உதாரணமாக, அமெரிக்க குடியுரிமை பெற்ற மேலாளரின் ஊதியம், இந்திய குடியுரிமைபெற்ற மேலாளரின் ஊதியத்தைவிட, உள்நாட்டு குடிமகன் பெறும் ஊதியத்தை விடவும்கூட அதிகம்.அதேபோல், ஒரே மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் இந்திய நர்ஸ் பெறும் சம்பளமும் சலுகைகளும்,பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து நாட்டு நர்ஸுகள் பெறுவதைவிடவும் குறைவு.

6) ஓமான் மற்றும் ஐக்கிய அரபு குடியரசில் அந்நாட்டு குடிமகன்களைவிட வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்திய குடிமக்களின் எண்ணிக்கை அதிகம். ஓமானில் இந்திய முதலாளியிடம் ஊதியத்திற்கு பணியாற்றும் உள்நாட்டு அரபுகளின் எண்ணிக்கை சமீப சிலவருடங்கள்வரை கட்டுக்கடங்காமல் போகவே சிறப்பு சட்டங்களை இயற்றி குடிமக்களுக்கு சலுகை வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்றால் அரபு நாடுகளில் இந்தியர்களின் ஆதிக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை அறியலாம்.

7) ஐக்கிய அரபு குடியரசில் மிகப்பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களான ETA, LULU, EMKAY குரூப் போன்றவற்றின் நிறுவனர்களாகவும், உயர் பதவிகளிலும் இருப்பவர்களில் பலர் உள்நாட்டு அரபுக்கள் அல்லர்! அதாவது இந்தியர்கள்! அதாவது உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் உழைப்பால் உயர்ந்தவர்கள்.

நிற்க,

1970 களில் இந்தியர்களின் கனவுபுரியாக இருந்த துபாய் உள்ளிட்ட அரபுநாடுகள்மீதான மோகம் இந்தியர்களை இன்னும் விட்டபாடில்லை.1990 களில் கணினி மற்றும் இணைய தொழில் நுட்பத்தில் இந்தியர்கள் உலகளவில் தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுக்கும்வரை இந்திய அந்நியச்செலவாணி கையிருப்பை தக்கவைக்க இந்த நாடுகளிலிருந்து பெற்ற இந்தியர்களின் ஊதியங்களே உதவின.

நம்நாட்டில் இடைநிலை ஊழியர்கள் பெறும் மொத்த ஊதியத்தைவிட, வளைகுடா நாடுகளில் கடைநிலை ஊழியரின் ஊதியம் அதிகம் என்பதால், நம்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் ஊதியத்தைவிட அதிகம் என்பதால்தான் 40 ஆண்டுகளாக இந்த அரபுநாட்டு மோகம் இந்தியர்களைப் பிடித்தாட்டுகிறது.

தகுதிக்கேற்ற அல்லது சிலரின் தகுதிக்கு மீறிய ஊதியம் வழங்கும் அரபு நாட்டு நிறுவனங்களும் இல்லாமல் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக அனேக வளைகுடா நாடுகள் உள்நாட்டு குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிற்கான பல சட்டதிட்டங்களை இயற்றியும், வெளிநாட்டவர்களின் சராசரி ஊதியத்தைவிட இந்த நாட்டு குடிமக்களின் ஊதியம் குறைவே. இருந்தபோதிலும் எந்த அரபு குடிமகனும் "இந்தியனே வெளியேறு!" என்று இயக்கம் நடத்திப்போராட வில்லை என்பது வினவு போன்றவர்களுக்குத் தெரியுமா?

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்கூட இல்லாத ஒருசில நிறுவனங்களில் நடக்கும் முதலாளியத்துவ அடக்கு முறையை,அந்த நிறுவனங்கள் சவூதியில் இருப்பதால் மதரீதியில் குறைசொல்லி பதிவிடுவது நேர்மையற்றதும், உள்நோக்கம் கொண்டதும், முஸ்லிம்கள் மீதான வன்மமும் ஆகும்.

பின்னூட்டத்தில் ஒரு அன்பர் சொல்லியிருப்பதுபோல், தீவிரவாதிகளுக்கும் முதலாளிகளுக்கும் மதமில்லை. ஜனநாயக,சோசலிச முதலாளிகளைவிட ஓரளவு நியாயமான முதலாளிகள் சவுதி உள்ளிட்ட அரபு நாடுகளில் அதிகம்.இதற்கு அவர்களில் கடுகளவேணும் அல்லாஹ் நம்மைக் கண்கானிக்கிறான் என்ற எண்ணமே காரணம்.

உண்மையிலேயே வினவுக்கு தொழிலாளிகளின் துயர் தீர்க்கும் சமூக ஆர்வமிருந்தால் அதற்கு வழிசொல்லும் செல்லரித்து வழக்கொழிந்துபோன கம்யூனிச சித்தாங்களைவிட, இஸ்லாத்தில் தீர்வுகள் உண்டு. இதை வினவு நடுநிலையாக அணுகி விமர்சிக்கலாம்.

குறிப்பு: இது சவூதிக்கு வக்காலத்து வாங்குவதற்காக எழுதப்பட்டதல்ல.முஸ்லிம்களால் ஆளப்படும் ஓர் தேசம் என்பதால் அதிலுள்ள நிர்வாக குறைகளை இஸ்லாத்தோடு இணைத்து எழுதியதற்கான எதிர்வினைகூடஅல்ல. சிறுவிளக்கமே.

நன்றி.மாற்றுக் கருத்து இருப்பின் தயக்கமின்றி பதிலிடவும்.
=====================

தொடர்புடைய மரைக்காயர் பதிவு:

சவுதி ஓஜர் தொழிலாளர் பிரச்னை: தீர்வு என்ன?

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP