Showing posts with label தீவிரவாதி. Show all posts
Showing posts with label தீவிரவாதி. Show all posts

டீவிரவாதி தெரியுமா?

Tuesday, July 26, 2011

தினமலர் தீவிரவாதிகள் விசயத்தில் எப்போதுமே கொஞ்சம் பாரபட்சம் காட்டும் என்பதற்கு இன்றைய செய்தி இன்னொரு சாம்பிள்! தினமலர் செய்தியை அப்படியே படித்துவிட்டு தலைப்பை மீண்டும் ஒருமுறை சத்தம்போட்டு சொல்லுங்க.

திருச்சி: திருச்சியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்திருந்த, டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். அவரின் பின்னணியில் விடுதலைப்புலிகள் அல்லது தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

திருச்சி உடையான்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்கிற படையப்பா (44). இவர், கே.கே.,நகரில் உள்ள டீக்கடையில், டீமாஸ்டராக வேலை பார்கிறார். இவரது வீட்டில் ரகசியமாக வெடி குண்டுகள் தயாரித்து வருவதாக, கே.கே.,நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கே.கே.,நகர் இன்ஸ்பெக்டர் நிக்ஷன், எஸ்.ஐ.,க்கள் பால்ராஜ், ஷீலா மற்றும் போலீசார் நேற்று இரவு ஏழு மணிக்கு உடையான்பட்டியில் உள்ள ராமகிருஷ்ணன் வீட்டை சோதனையிட்டனர்.அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இரண்டு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதை கண்டு போலீஸர் அதிர்ச்சியடைந்தனர். வெடிகுண்டு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.





வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராமு சம்பவ இடத்துககு வந்து வெடிகுண்டுகளை கைப்பற்றி பாதுகாப்பான முறையில் செயலிழக்க செய்தார். தொடர்ந்து வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பால்ரஸ் குண்டுகள், வயர் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றம் ஒன்னரை கிலோ வெடி மருந்தை கைப்பற்றினர்.இதுகுறித்து கே.கே.,நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த துணைகமிஷனர் ஜெயபாண்டியன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். ராமகிருஷ்ணனுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். கைப்பற்றிப்பட்ட வெடிகுண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், அந்த குண்டு வெடித்தால் பெரிய பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. கே.கே.,நகர் பகுதியில் பெரும்பாலும் இலங்கை மற்றும் மலேசிய தமிழர்கள் வசிக்கின்றனர். எனவே, இச்செயலில் விடுதலைப்புலிகள் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.தினமலர்

எனக்கு என்ன வருத்தம் என்றால் பெரும் பொருட்சேதமும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்திருந்த ராமகிருஷ்ணனை ஒரு இடத்தில்கூட தீவிரவாதி என்றோ அல்லது அவரது மதத்தையும் சேர்த்து __ தீவிரவாதி என்றோ செய்தி வெளியிடவில்லை.

தீவிரவாதம், தீவிரவாதி என்பதற்கெல்லாம் தினமலர் போன்ற பத்திரிக்கைகள் என்ன அளவீடு வைத்துள்ளன? டீவிரவாதி என்றாவது குறிப்பிட்டிருக்கலாமே!

Read more...

மணிப்பூர்:நாத்திகத் தீவிரவாதிகள்?

Tuesday, September 02, 2008

மணிப்பூர் முதல்வர் வீடுமீது ராக்கெட் குண்டு வீசப்பட்டதாம்.வீசியவர்கள் தீவிரவாதிகளாம்!! பெரும்பாலும் தீவிரவாதச்செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்கள் சார்ந்திருக்கும் மதத்துடன் இணைத்து, குறிப்பிடுவர். உதாரணமாக இத்தகையத் தாக்குதலில் ஒரு முஸ்லிம் ஈடுபட்டிருந்தால் 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்றுதான் குறிப்பிடுவார்கள்; இதுவே காலங்காலமாகக் கடை பிடிக்கப்படும் ஊடகத் த்ர்மமாக இருந்து வருகிறது.


மணிப்பூர் முதல்வரைக் கொல்ல முயன்ற சம்பவத்தில் 'தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்' என்று மட்டு போட்டுள்ளார்கள்! என்ன கொடுமை சார் இது! தெரியாமத்தான் கேட்கிறேன்.


1) மணிப்பூர் தீவிரவாதிகள் மதநம்பிக்கையற்ற நாத்திகர்களா? அல்லது

2) பாகிஸ்தான், பங்களாதேஷ் தீவிரவாதிகளுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? அல்லது

3) பத்திரிக்கைக்காரர்களெல்லாம் திருந்தி விட்டார்களா? அல்லது

4) இந்த ராக்கெட் லாஞ்சர்கள் செய்வதற்கு மணிப்பூரில் யாருமே ஆணி, பேட்டரி, ப்ளாஸ்டிக் வயர், உடைந்த குழாய் போன்றவற்றை வீட்டில் பதுக்கி வைத்திருக்கவில்லையா?



விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டமிடலாம்!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP