இந்தியாவில் ஒட்டகங்கள் இல்லையா தருமி சார்?
Saturday, February 28, 2009
அதிரை பாருக்கின் எல்லைதாண்டிய இஸ்லாமிய ஈமெயில் படையெடுப்பு குறித்து தருமி பதிவிட்டிருந்தார். நம்ம அதிரைக்காரர்களுக்கு வேறுவேலையே இல்லை. ஆட்டைக்கழுதையாக்கிய பழியிலிருந்தே மீளாதபோது, தருமியை வலுக்கட்டாயமாக சொர்க்கத்துக்கு அனுப்ப முயற்சித்துள்ளார்.
பாவம் பாய், தருமிக்குப் பொதுமன்னிப்பு வழங்கி அவரை உங்கள் மெயிலிங் லிஸ்டிலிருந்து நீக்கிடுங்க அல்லது அற்புத சுகமளிக்கும் மின்மடல் குழுமம் தொடங்கி அதில் UNSUBSCRIBE வசதி கொடுத்துவிட்டால் வேண்டாதவர்கள் UNSUBSCRIBE செய்து கொள்வார்கள்.
தருமிபாவம்! இந்தியாவில் ஒட்டகங்கள் இருப்பதுகூடத் தெரியாத அப்பாவி மனுசர் அவர். பெரிய மனசு பண்ணி விட்டுடுங்க ;-)
//இப்படி சிறப்பு மிக்க ஒட்டகத்தைப் படைத்த இறைவன் அதை அரேபிய நாட்டினருக்கு கொடுத்துவிட்டு நமக்கெல்லாம் வெறும் எருமையையும், பசுமாட்டையும் கொடுத்து ஏமாற்றிவிட்டானே... ச்சே!//
வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்புற நம்ம தருமிசாருக்கு தயவுசெய்து யாராச்சும் எருமையும் பசுவும் பால் கொடுக்கும் என்பதற்கான ஆதாரத்தை அனுப்பி வையுங்க. ஏனென்றால் அரபு நாட்டு ஒட்டகம் மட்டும்தான் பால் கறக்கும் நம்ம பசுவும் எருமையும் 'கோ'கோலா (கவ்ஜல்?)தான் கறக்கும்னு நம்பிக்கிட்டு இருக்கார்.
கைதேர்ந்தப் படைப்பாளன் ஏகஇறைவன் மிக நேர்த்தியாக ஒட்டகத்தை வடிவமைத்தான்// அதன் பால் எத்தகைய உயர்வானது, அதனை உண்டு // அந்தக் காலத்தில் அரேபியர்கள் மிகவும் திடகாத்திரமான உடலமைப்புடன் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் //....
மதமும் வேண்டாம் கடவுளும் வேண்டாமென கரையொதுங்கிய தருமியை 'அடக்கடவுளே" என்று சொல்ல வைத்தது ஆட்டைக் கழுதையாக்கியதைவிட கொடுமை பாய்!எல்லோருமே சொர்க்கத்துக்குப் போயிட்டால் நரகத்துக்கும் ஆள் வேண்டாமா? என்று கேட்ட கழுதைகளும் அதிரையில் உண்டுதானே!
அதனால................. ;-)