Showing posts with label கூட்டணி. Show all posts
Showing posts with label கூட்டணி. Show all posts

தேர்தல் ஜுரமும் கூட்டணி நலன் விசாரிப்புகளும்

Sunday, February 13, 2011


தமிழக சட்டசபை இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடருக்கு எதிர்க்கட்சித் தலைவி செல்வி ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட சுகக்குறைவு காரணமாக மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் முழு ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால் கூட்டத்தொடர் முழுவதும் அவையில் கலந்து கொள்ளாமலிருக்க அனுமதி வேண்டி சிறப்புத் தீர்மானம் நிறைவேறியது.

இந்நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து குழம்பியுள்ள அரசியல்வாதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நலம் விசாரித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை. (வழக்கம்போல் இப்பதிவும் யாரையும் புண்படுத்த அல்ல:)

வைகோ: மேடம்! உங்கள் உடல்நிலைதான் தற்போதைக்கு முக்கியம். பூரண சுகமடையும்வரை ஓய்வெடுங்கள். உங்கள் உடல்நிலை குறித்து அறிந்ததும் போயஸ்கார்டனுக்கு ஐந்து தொகுதிகளைக் கடந்து நடைப் பயணமாகவே வந்தேன்.

ராமதாஸ்: அன்பு சகோதரி அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விபட்டதும் அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்துளோம். முப்பது தொகுதியிலும் தலைவர் கோ.க.மணி அவர்களின் தலைமையில் சிறப்புப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

விஜயகாந்த்: அம்மையாருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் எனக்கு மனசுக்குச் சரியில்லை. தேவைப்பட்டால் புதிய ஆட்சியில் நமது கூட்டணி சட்டசபைக்கும்கூட வராமல் ஓய்வெடுக்கலாம்.சுகக்குறைவுக்குப் பின்னணி பாகிஸ்தான் தீவிரவாதிகளா என்று விசாரிக்கக்கோரி போராட்டம் அறிவிக்க இருக்கிறேன்.

கிருஷ்ணசாமி:அம்மா! உடல்நிலைதான் நமக்குமுக்கியம்.நம் கூட்டணியில் டாக்டர்களுக்குப் பஞ்சமில்லை. நீங்கள் பூரண குணமடைந்து புதிய அரசின் சட்டசபைக்குவர டாகடர்களாகிய நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.

ஜவாஹிருல்லா: கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் ஏழைகள் மட்டுமின்றி எதிர்கட்சியினருக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆம்புலன்ஸ் எதுவும் தேவைப் பட்டால் தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள் மேடம்.

நல்லகண்ணு:கொடநாடு எஸ்டேட்டில் நிம்மதியாக ஓய்வெடுக்கவேண்டிய அம்மையார் போயஸ் கார்டனில் சிரமப்படுவது கஷ்டமாகத்தான் உள்ளது. எல்லாம் அடுத்து நீங்கள் ஆட்சி அமைத்ததும் சரியாகிவிடும்.

சுப்ரமணியசாமி: ஜெயா மேடம் உட்ம்பு சரியில்லாமப் ஆனத்கு 2G அலைவரிசையே காரணம். மேடம் உடல்நிலை சர்யில்லாத் காரண்த்தால் தேர்தலில் போட்டியிடாமல் முத்லம்சராக சட்டதிர்த்தம்கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் பெடிசன் போடுவேன்.

ஜெயேந்திரர்: பொய் சாட்சிகளை நம்பி இறையாடியார்கள் கொலைகேஸில் சிக்கவைக்கப்பட்டதால் தமிழகத்தைப் பிடித்துள்ள பீடை அம்மையாரையும் விடவில்லை. இதற்காக கலவையில் சங்கரா ஹோமம் செய்தால் தீர்க்க சுகத்துடன் அம்மா அரியணை ஏற பகவான் நிச்சயம் அருள் பாலிப்பார்.

நடிகர் விஜய்: அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் தேர்தல் முடியும்வரை புதுப்படங்களில் நடிக்க வேண்டாம் என்று அப்பா அன்புக் கட்டளையிட்டுள்ளார். அம்மா நீங்க கவலைப்படாதீங்க. உங்களுக்கு ஒன்னு என்றால் எனக்கு ரெண்டு.நான் பிரச்சாரம் பண்ணனும்னு ஒருமுறை முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP