Showing posts with label பாதுகாப்பு. Show all posts
Showing posts with label பாதுகாப்பு. Show all posts

ஜெயலலிதா செல்வியா அம்மாவா?

Wednesday, October 17, 2007

தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டுத்தொடரின் ஓரிரு நாட்களுக்கு முன்,ஜெயலலிதாவின் வீட்டிற்குள் அத்துமீறி ஒருவர் நுழைந்ததைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் செல்வி.ஜெயலலிதா அம்மையார் (அதுஎப்படி ஒருவரே செல்வியாகவும் அம்மையாராகவும் இருக்க முடியும்?) சந்திரபாபு நாயுடுவுக்கு சுமார் 65 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு வழங்கப் படுவதுபோல் தனக்கும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகப் போகிறாராம்!

ஒரு முன்னாள் முதல்வரின் வீட்டில் அத்துமீறி ஒருவன் நுழையும் அளவுக்கு பாதுகாப்பில் மெத்தனமாக இருக்கக்கூடாது.ஒரு கன்னிப்பெண் (செல்வி) தனியாக இருக்கும்போது படுக்கையறை வரைக்கும் வந்தது தவறு! ஓ.பன்னீர் செல்வம் அவர்களும் முன்னாள் முதல்வர்தான்! தனக்குப் பாதுகாப்பில்லை என்று ஒருபோதும் சொல்லியதில்லை. (இதைத்தான் சிண்டுமுடிதல் என்பார்கள்)

இன்னொருபக்கம், அத்துமீறி நுழைந்தவன் ஏன் லஷ்கர் ஐ தொய்பா அல்லது அல்காயிதா தீவிரவாதியாக இருக்கக்கூடாது என்ற சந்தேகம் தப்பித் தவறி எந்த பத்திரிக்கைக்கும் வரவில்லை? சுடச்சுட செய்திகளை முந்தித்தரும் தினமலர்கூட இவ்விசயத்தில் கோட்டை விட்டது நியாயமா? என்ற கேள்விகள் எழுகின்றது :-)

டெய்ல்பீஸ்: ஜெயலலிதாவின் மகள் ஊட்டி கான்வெண்டில் படித்துக் கொண்டிந்ததாக பழைய புலணாய்வுப் பத்திரிக்கைகளில் முன்பு வாசித்த நினைவு.இன்னும் அதே கான்வெண்டில்தான் படிக்கிறாரா? என்று யாராச்சும் புலணாய்வு செய்து எழுதினால் நன்றாயிருக்கும்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP