தமிழ் விக்கிபீடியாவில் 'யுனிகோட்' உமர்தம்பி

Thursday, July 20, 2006



தமிழ் விக்கிபீடியாவில் 'யுனிகோட்' உமர்தம்பி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.உமர் அவர்களின் தன்னலமற்ற தமிழ் கணிமைச் சேவையையும் அவர்தம் ஆக்கங்களின் பயன் பாடுகளையும் பகிர்ந்து கொண்ட சகவலைப்பதிவு நண்பர்களுக்கும் இணையதள பிரமுகர்களுக்கும், அன்னாரின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன தமிழ் நெஞ்சங்களுக்கும் அதிரை மக்களின் சார்பில் 'அதிரைக்காரன்' நன்றி தெரிவித்துக் கொள்கிறான்.

வாழ்க்கைக் குறிப்பு

தோற்றம்:15.06.1953
மறைவு : 12.07.2006
பிறப்பிடம் - தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணம்
பெற்றோர் - அ..அப்துல் அமீது - ரொக்கையா

உமர் தம்பி அவர்கள் தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கிய ஆளுமைகளுள் ஒருவராவார்.இவர் கணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு உதவக்கூடிய பல செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும் ஆக்கியளித்துள்ளார்.

தனது துவக்கக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியையும் அதிராம்பட்டிணத்திலும், தனது Bsc (விலங்கியல்) பட்ட படிப்பினை அதிராம்பட்டிணத்தில் உள்ள காதர் மொஹைதீன் கல்லூரியில் படித்தார்கள். அதன் பின் இலத்திரனியலில் டிப்ளோமா படிப்பினையும் முடித்த உமர் தனது ஊரிலேயே 1983 ஆம் ஆண்டு வானொலி, தொலைக்காட்சி பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்துள்ளார்.

மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார். அந்த ஆர்வத்தால், மாணவப் பருவக் குறும்பாக, ஒருமுறை தான் பயின்ற காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி அதிராம்பட்டினத்திலிருப்போர்கள் கேட்கும்படியாக உரையாடல்களை ஒலிபரப்பியிருக்கிறார்.

இப்படியான ஆர்வத்தால் அவரது தொழிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் பணியாகவே அமைந்து, 1984 ஆம் ஆண்டு துபாயில் உள்ள Alfuttaim Group of Companies ல் இலத்திரனியல் உபகரணங்களுக்கான National Panasonic பழுது நீக்கும் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.

கல்வி பயிலும் காலகட்டத்திலேயே 1977 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடைபெற்றது அவரது மனைவியின் பெயர் பெளஷியா (Fouzia). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

முறையாக எந்த கல்லூரியிலும் கணினி தொழில் நுட்பத்தை பயிலாத உமர் அவர்கள், துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார்.

துபாயில் தான் பணிபுரிந்துவந்த நிறுவனத்தில் சில நாட்களிலேயே கணினி நுட்பவல்லுனரானார். Network administrator, SAP implementation team Head, Kiosk programmer எனக் கணினித் துறையில் திறம்பட பணியாற்றியிருக்கிறார்.

ஒரு குழுவை முன்னின்று நடத்துவது வரையில் அவரது பதவி உயர்வு நிகழ்ந்திருக்கிறது. பதினேழு ஆண்டுகளாக துபாயில் இந்தப் பணியைச் செய்த அவர், அவர் 2001 மாவது ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று தாயகம் திரும்பினார்.

தாயகம் திரும்பிய அவர் தனது ஊரிலிருந்து கொண்டே தனது மூத்த மகன் மொய்னுதீனுடன் (ஈமெயில்: moinudeen@rediffmail.com ) இணைந்து சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கிவரும் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்கும் (மாருதி கார்) நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும் விற்பனைக்கான மென்பொருட்களை வடிவமைத்து கொடுத்து பராமரித்து வந்துள்ளார்கள்.

தமிழ் கணிமைக்கு செய்த பங்களிப்புகள்:

தேனீ இயங்கு எழுத்துரு : மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தயாரிப்பு உலாவிகளில் மட்டும் தொழிற்படக்கூடிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி, தமிழ் எழுத்துரு கணினியில் நிறுவப்படாத நிலையிலும் கூட தமிழ் ஒருங்குறி எழுத்துக்களாலமைந்த இணையத்தளங்களை மைக்ரோசொஃப்ட் உலாவிகளில் படிக்கும் வசதியை இவ்வெழுத்துரு வழங்குகிறது. தேனீ எனப்படும் இவரது தயாரிப்பான எழுத்துருவை இவ்வாறு இயங்கு எழுத்துருவாக மாற்றி வெளியிட்டார். இன்று தமிழ் வலைப்பதிவு உலகில் பெரும்பாலானவர்கள் இந்த வசதியை தமது வலைப்பதிவுகளில் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் இணைய அகராதி : கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து வழங்க முடிவெடுத்த சகோதரர் உமர் அவர்கள் தமிழ் இணைய அகராதியைக் கொண்டுவந்தார். இந்த அகராதியை தமிழ் உலக உறுப்பினரும் www.talktamil.4t.com என்ற இணையத் தள நிர்வாகியான மஞ்சு அவர்களும் இணைந்துஉருவாக்கினார்கள்

பங்குபற்றிய இணையத்தளங்கள்/சேவைகள்:
தமிழ் மணம்
தமிழ் உலகம் குழுமம்
ஈ உதவி குழுமம்
ஒருங்குறி குழுமம்

சமூக சேவை:
சமூக சிந்தனையும், சமூக அக்கறையும் கொண்ட சகோதரர் உமர் அவர்கள் அதிரை பைத்துல்மால் (Adirai Baithulmal) எனும் சமுதாய சேவை செய்யும் அறக்கட்டளையில முக்கிய நிர்வாகியாக இருந்து சேவை செய்து வந்துள்ளார்கள்.

வெளி இணைப்புக்கள்

உமர் தம்பி அவர்களுடன் தொடர்புடைய வலைத்தளங்கள்

தமிழ் இணைய அகராதி
உமர் தம்பியின் ஆக்கங்கள்
எழுதப்பழகுவோம் எச்.ரி.எம்.எல்
யுனிகோடும் இயங்கு எழுத்துருவும்
யுனிகோடும் தமிழ் இணையமும்
யுனிகோடின் பன்முகங்கள்
RSS ஓடை-ஒரு அறிமுகம்

உமர் தம்பி பற்றிய பிறரது எழுத்துக்கள்


உமர்தம்பி பற்றிய வலைப்பதிவு
யுனிகோடு உமர் அவர்களின் மறைவு - அதிரைக்காரன்
வாசனின் வலைப்பதிவு
யுனிகோடு உமர் அவர்களின் மறைவு -முஃப்தி
உமர் தம்பி - தமிழ்க் கணிமைக் கொடையாளர் -காசி
தேனி உமருக்கு அஞ்சலி -மதிகந்தசாமி
உமர் தம்பி -வாசன்
'THEENE.eot' உமர் மறைவு -தேசிகன்
திரு. உமர் மரணம் -க்ருபா
யுனிகோட் உமர் தம்பி மரணம் -அபூ முஹை
நண்பர் உமர் மறைவு -வெங்கட்
அஞ்சலி தேனி உமர் -பரி
அஞ்சலி தேனி உமர் -டுபுக்கு
உமர் தம்பி மறைவு -முகுந்த்
Deep Condolences -பிரகாஷ்
'தேனீ' உமர் மறைவு - கேட்டவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.-ஆசாத்
உமர் -சுரேஷ்
e-வீதியில்: யுனிகோடு உமர் அவர்களின் மறைவு -மா.சிவகுமார்
உமருக்கு அஞ்சலி -மணியன்
தமிழ் வலையுலகின் இழப்பு 'தேனீ உமர் தம்பி' -இறை நேசன்
Tiru. Umarthambi - sad news -ஒருங்குறி வலைக்குழுமம்
Tiru. Umarthambi - sad news -தமிழ்மணம் வலைக்குழுமம்
'யூனிகோட்' உமர்தம்பி மரணமடைந்தார்கள் -அதிரை இணையம்
தமிழ்விக்கிபீடியா: "http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF" இலிருந்து மீள்விக்கப்பட்டது.

Read more...

ஆண்களின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது யார்?

Tuesday, July 18, 2006

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்!

Image and video hosting by TinyPic

இந்த இராணுவ வீரனின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் பெண்ணைக் கண்டுபிடிக்க மவுஸால் (Mouse) முயற்சி செய்யுங்கள்!

Read more...

யுனிகோடு உமர் அவர்களின் மறைவு

Thursday, July 13, 2006

தமிழ் இணைய தளங்களிலும் வலைப்பூக்கள் மற்றும் தமிழர் மின்மடல் குழுமங்களிலும் பரவலாக அறியப்பட்ட எங்களூரைச் சார்ந்த 'யூனிகோட்' உமர் அவர்கள் நேற்று (12-07-2006) மாலை 5:30 மணியளவில் மரணமடைந்தார்கள். அன்னாரின் நல்லடக்கம் இன்று (13-07-2006) காலை 9:00 மணியளவில் அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.

'உமர்' என்கிற உமர்தம்பி அவர்கள், தமிழ் இணையங்களின் பிரபலத்திற்கு முன்னரே எங்களூர் மின்மடற்குழுமங்களிலும் பல பொதுச்சேவை அமைப்புகளிலும் பரவலாக அறியப்பட்டவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகுந்த புலமை பெற்றிருந்ததோடு தமிழ்வழி இணையப் பயன்பாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் பல மின்மடல் குழுக்களில் இணையவழி தமிழ் பயன்பாடு பற்றிய கட்டுரைகளை பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய தமிழில் வழங்கியவர்.

தனது தமிழார்வத்தால் தமிழிணைய மென்பொருளாக்கத்திலும் பயன்பட்டிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் பல முயற்சிகளைச் செய்துவந்ததை நான் அறிவேன். உமர் அவர்கள் முதன் முதலாக இணைய தமிழ் அகராதி, தானியிங்கி யூனிகோட் எழுத்துரு மாற்றி, தேனிவகை எழுத்துருக்கள் ஆகிவற்றோடு யூனிகோட் தமிழில் மின்மடல் அனுப்பும் இணைய கருவிகளை உருவாக்கியிருந்தார்.

தமிழ் இணைய நாளிதழ்களை நகலெடுத்து மறுபதிப்பு (COPY & PASTE) செய்வதிலுள்ள சிரமத்தைக் குறைத்து, வலைப்பூக்களிலும் இணைய தளங்களிலும் சுலபமாக தமிழில் உள்ளீடு செய்யவும் பின்னூட்டமிடவும் யூனிகோட் உருமாற்றியை உருவாக்கினார். யூனிகோட் பற்றிய இவரின் கட்டுரைகள் நேரில் பேசிக் கொண்டிருப்பது போல் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய தமிழில் இருக்கும். எங்களூர் தளத்தில் உமர் தம்பி அவர்களின் கட்டுரைகளில் ;தகர்ந்து வரும் டார்வின் கோட்பாடு, குழப்பத்தில் குமுகாயங்கள் என சமூகக் கண்ண்டோட்டத்தில் எழுதிவந்தார்.

உமர் தம்பி அவர்களுடன் எனக்கு மின்மடல்கள் மூலமே தொடர்பு இருந்து வந்தது. எங்களூர் இணைய தளத்தை தமிழில் கொண்டு வருவதற்கு மேலான ஆலோசனைகளை வழங்கியதோடு, இணைய வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்கவும் தவறவில்லை. 'வெட்டிப் பேச்சு' என்ற எனது தமிழ்வலைப்பூ பற்றிய அவர்களின் கருத்தைக் கேட்ட போது, பிறர் மனதைப் புண்படுத்தாமல் எழுதும் பதிவுகள் வெட்டிப்பேச்சல்ல; வெற்றிப்பேச்சே! என்று பாராட்டி தொடர்ந்து எழுத ஊக்குவித்ததை இந்நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்.

நல்லடியார் அவர்கள், தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட முஸ்லிம் தமிழர்களைப் பற்றிய பதிவிற்கு உமர் அவர்களைப் பற்றிய விபரங்களைக் பெற்றுத் தர முடியுமா என்று மடலில் கேட்டிருந்தார். இது விசயமாக கடந்தவாரம் உமர் தம்பி அவர்களுக்கு மெயிலிட்டிருந்தேன். புகழ்சியையோ அல்லது தன்னை முன்னிலைப் படுத்துவதையோ விரும்பாத பண்பாளர் உமர் தம்பி அவர்களிடமிருந்து பதில் கடிதம் வர தாமதமாகிய போதே சற்று சந்தேகம் வந்தது. கடைசிவரை எனது மின்மடலுக்கு அவர்களிடமிருந்து பதில் வரவே இல்லை.

இதற்கிடையில் அதிரை மின்மடல் குழுமத்திலிருந்து உமர் தம்பி அவர்கள் மஞ்சல் காமாலையால் அவதிப்படுவதாகவும் அவருக்காக பிரார்த்திக்கும் படியும் ஒரு ஈமெயில் வந்தது. உடனே அதிரையிலிருக்கும் உமர்தம்பி அவர்களின் மகனுக்கு தொலை பேசினேன். மாலை மூன்று மணிவரை சுயநினைவின்றி இருப்பதாக கவலையுடன் சொன்னார்.

உமர்தம்பி அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு கேன்சர் பாதிப்பு இருந்ததாகவும் அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த மாதம் மஞ்சல் காமாலையால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை செய்து ஊர்வந்ததாகச் சொன்னான். ஒரே ஊர்க்காரராக இருந்தாலும் இதுவரையிலும் உமர் தம்பி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த சில மணி நேரங்களில் அன்னாரது இன்னுயிர் பிரிந்ததையும் அறிந்து சொல்லொன்னா துயருற்றேன்.

அதிரை போன்ற பிற்படுத்தப்பட்ட கிராமப் பகுதியிலிருந்து அயல்நாடுகளில் பணி செய்யும் வாய்ப்புகளை உதறி விட்டு எஞ்சிய காலத்தில் தமிழுக்கும் தான் சார்ந்த சமுதாயத்திற்கும் சேவை செய்ய தாயகம் புறப்பட்ட எங்கள் ஆரூயிர் கணினி குருநாதர் அன்பிற்குறிய உமர் தம்பி அவர்கள் போன்ற பண்பாளரை இழந்தது அதிரைக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் இழப்பே.

உமர்தம்பி அவர்களின் தமிழ்ச் சேவைகளையும் சாதனைகளையும் நினைவு கூர்ந்த, வலைப்பதிவிட்ட தமிழ் வலைப்பூ நண்பர்களுக்கும், பின்னூட்டங்கள் மூலம் துக்கத்தை பகிர்ந்து கொண்ட பிற வலைப்பூ நண்பர்களுக்கும் உமர்தம்பி அவர்களின் குடும்பதினர் சார்பிலும் அதிராம்பட்டினம் மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more...

என் அரேபிய அனுபவங்கள்

Saturday, July 08, 2006

வளைகுடா நாடுகளில் விடுமுறைகளுக்குப் பஞ்சமில்லை. நார்மலான விடுமுறைகள் போக மெடிக்கல் வீவு, எமர்ஜென்சி லீவு, லொட்டு-லொசுக்கு, அது-இதுன்னு நிறைய லீவு எடுக்கலாம்.சில சுவையான கடித அனுபவங்கள்.

1) சொந்தக் கிராமத்தில் இருக்கும் நிலத்தை விற்க மனைவியுடன் ஊர் செல்ல வேண்டி:

Since I have to go to my village in India to sell my land along with my wife, please sanction me one-week emergency leave.

2) பத்து வயது மகனுக்கு மொட்டையடிக்கும் நிகழ்சியில் கலந்து கொள்ள:

From an employee who was performing the "mundan" ceremony of his 10 year old son: "As I want to shave my son's head, please leave me for two days.."
3) மகளின் கல்யாணத்தை நடத்தி வைக்கச் செல்ல வேண்டி:

Leave-letter from an employee who was performing his daughter's wedding: "As I am marrying my daughter, please grant a week's leave.."

4) மாமியாரின் ஈமக்கிரியையில் கலந்து கொள்ள வேண்டி:

"As my mother-in-law has expired and I am only one responsible for it, please grant me 10 days leave."

5) சவ அடக்கத்தில் கலந்து கொள்ள வேண்டி:

"Since I've to go to the cremation ground at 10 o-clock and I may not return, please grant me half day casual leave"

6) காய்ச்சலால் அவதிப்படும் போது:

"I am suffering from fever, please declare one day holiday."
7) பள்ளி தலைமை ஆசிரியருக்கு:

"As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today"
8) இன்னொரு தலைமையாசிரியருக்கு:

"As my headache is paining, please grant me leave for the day."9)

9)கவரிங் லட்டர்:

Covering note: "I am enclosed herewith..."

10) வேலைக்கு அப்ளை செய்யும்போது:

"This has reference to your advertisement calling for a 'Typist and an Accountant - Male or Female'...As I am both (!!) for the past several years and I can handle both with good experience, I am applying for the post.
11) மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத போது:

"My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave".
12) ஊருக்குச் சென்றிருக்கும் சகபணியாளருக்கு எழுதும்போது:

"I am in well here and hope you are also in the same well."

13) கஸ்டமருக்கு பதில் எழுதும் போது:

"Dear Sir: with reference to the above, please refer to my below..."
14) போலீஸ் ஸ்டேசனுக்கு எழுதிய கடிதம்:

To

Police Station Manager,

SUB: DYING OR KILLING OR SELF KILLING

Dear Sir,

Mr.XXXXXXXXXX B.Sc.,D.C.A., not come to duty today morning. While our inventory controller inspecting the body of so and so, found that the owner of the body is already dead. We are not sure that so and so dead staff is died because of death or killing or self killing. Please advise!

15) வேலைக்கு அப்ளிகேசனைப் பூர்த்தி செய்யும் போது, SEX என்ற இடத்தில் என்ன எழுதுவது என்று தெரியாமல் சந்தேகத்துடன், "WEEKLY 2-4 TIMES" என்று எழுதினார். அப்ளிகேசனைப் பரிசோதித்தவர் கடுப்புடன். "ஹலோ! MALE ஆ FEMALE ஆ என்று குறிப்பிடுங்கள்" என்றார். அவசரமாக அப்ளிகேசனை திரும்ப வாங்கி "IF MALE 2-4 TIMES, IF FEMALE MORE" என்று எழுதிக் கொடுத்தார்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP