திருவள்ளுவர் - ஆண்டாள் அழகர் காலேஜில் படிக்கவில்லை!

Saturday, September 22, 2007

ஆங்கிலேயர்களால் ஆதாம் பாலம் எனறு அறியப்பட்ட மணற்திட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு இன்று ராமர் பாலமாம்! பிற்காலத்தில் அனுமன் பாலம் என்று சொல்லப் பட்ட மணல் திட்டுகளை, தற்போது ராமர் பாலம் என்று சொல்வதன் நோக்கம், அனுமன் பெயரைச் சொல்லி அரசியல் நடத்துவதை விட ராமன் பெயரைச் சொல்லி மீண்டும் ரத்தஆறு ஓடவைக்கலாம் என்ற சூழ்ச்சி என்றே தமிழர்களாகிய நாங்கள் நினைக்கிறோம்.

இராமாயணமே கற்பனைக் கதை என்பதால் அதன் கதாநாயகன் ராமனும் கற்பனையே என்றும்; பாலம் கட்டுவதற்கு ராமர் எந்தக் கல்லூரியில் படித்தார் என்று தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வுடன் முதல்வர் கருணாநிதி கேட்டதற்கு, முடிந்தால் ராமரை வைத்து அரசியல் பண்ணும் மதவெறியர்கள் அறிவுப்பூர்வமாகப் பதில் சொல்லட்டும். அத்வானியோ அல்லது சோ ராமசாமியோ கலைஞருடன் நேருக்கு நேர் விவாதிக்கலாம்.

பா.ஜ.கவுடன் ஜெயலலிதா அமைக்கவுள்ள கூட்டனியில் விஜயகாந்துக்கும் சேர்ந்து கொள்ள ஆசை இருந்தால் அதைப்பற்றிச் சொல்வதற்கில்லை. ஆனால், கலைஞரை எதிர்க்கும் கூட்டனி பஜனையில் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சம்பந்தமே இல்லாமல் விஜயகாந்த் 'நாயுடு' திருவள்ளுவரையும் கண்ணகியையும் கிண்டலடித்துள்ளார்.

இராமாயணம் காலம் தொட்டு தமிழர்கள் என்றாலே இளக்காரம்தான் போலும்! ஒருவேளை இராமாயணம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு எழுதப்பட்டிருந்தால் ராவணனன் பாகிஸ்தானி என்றோ லஷ்கரே தோய்பா இயக்கத்தைச் சார்ந்தவன் என்றோ சித்தரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அமெரிக்கா உதவியுடன் அல்காயிதாவைச் சார்ந்தவன் என்றும் கூடச் சொல்லப்பட்டிருக்கலாம்!

ராமர் பாலம் இருப்பது உண்மையே என்று நம்பினால் விஜயகாந்து தனது அடுத்த படத்தில் வில்லன்களை ராமர் பாலத்தில் விரட்டி விரட்டி அடிப்பது போல் சண்டைக்காட்சி எடுக்கட்டும். தமிழர்களின் ஓட்டுக்களை நம்பி அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால் தமிழர்களை இழிவு படுத்துவது ஆண்டாள்-அழகர் மைந்தனுக்கு அழகல்ல!

ராமர் எந்தக்கல்லூரியில் படித்து இஞ்சினியர் ஆனார்? என்று முதல்வர் கருணாநிதி கேட்டதற்கு விஜயகாந்துக்கு ஏன் கோபம் வரவேண்டும்? வேண்டுமானால் ராமர் இஞ்சினியர் பட்டம் பெற்றது ஆண்டாள்-அழகர் கல்லூரியில் என்று சொல்லி விட்டுப் போகட்டுமே!

(டொனேசன் எவ்வளவு கொடுத்தார் என்ற உபகேள்வி எழுந்தால் நான் பொறுப்பல்ல!:)

Read more...

கலைகள் வளர்த்த விரல்மாமணி சிலம்பரசன்

Sunday, September 02, 2007

நடிகர் விஜய்க்கும் இயக்குனர் ஷங்கருக்கும் டாக்டர் பட்டம் வழங்கிய சூடு அடங்கும் முன்னர் நேற்று கலைமாMoney பட்டங்களை தமிழ் சினிமா நடிகர்/நடிகைகளுக்கு வழங்கியுள்ளார் நமது 'கலைஞர் மாமணி'. சினிமாத் துறையின் மூலமே கலைகள் வளர்க்கின்றன என்ற ஆரிய மாயையில் இருந்து இன்னும் கலைஞர் அவர்கள் விடுபடவில்லை போலும்!

இந்த ஆண்டின் கலைமாMoneyகளில் விரல் மன்னன் 'சிம்பு' வளர்த்த ஆயகலைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

மொபைல் காவியம்:
நயந்தாரா என்ற சேரநாட்டு இளவரசியை விரட்டி விரட்டிக் காதலித்து, பின்னர் இளவரசி நயந்தாரா தெலுங்கு தேசத்திற்குச் சென்று சிற்றரசன் நாகார்ஜுனருடன் கலைச்சேவை செய்தார்.

இதனால் விரல்மன்னனுடன் ஊடல் எழுந்தது. இதன் உச்சக்கட்டமாக விரல்மன்னன் சிம்பு தனது கைப்பேசியில் பதிவு செய்திருந்த சேரநாட்டு இளவரசி நயந்தாராவுடன் நடத்திய அந்தப்புற கலைச்சேவையை மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதழ்கடி வித்தை:
இதே சேரநாட்டு இளவரசியின் இதழ்களைக் கடித்தபடி சென்னை சென்ரல் இரயில் ஸ்டேசனில் கட்-அவுட்டாக நின்று இந்தியா முழுவதும் தமிழகப் பண்பாட்டைப் பரப்பினார்.

கெட்டதமிழ்:
தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று அறிவித்தாலும் அறிவித்தார்கள் விரல் மன்னன் சிம்புவின் லேட்டஸ்ட் படத்திற்கு அழகான தமிழில் 'கெட்டவன்' என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.

இப்படியாக பல்வேறு வழிகளில் தமிழ், பண்பாடு, கலைகளை வளர்த்துவரும் விரல்மன்னன் சிம்புவுக்கு கலைமாMoney பட்டம் கொடுத்தது சரியா? உண்மையான கலைச்சேவை செய்த தகுதியுள்ள கலைமாமணிகளை அவமதிப்பதாகவே இருக்கிறது இந்த ஆண்டின் கலைமாMoney களின் தேர்வு!

எது எப்படியோ இம்மாதம் ஒளிபரப்பாகவிருக்கும் கலைஞர் டிவிக்கு சில மணி நேரங்களுக்கு ஒரு புரோகிராம் கிடைத்து விட்டது ;-)

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP