டி.ராஜேந்தரை என்ன சொல்லித் திட்டியிருப்பார்கள்?

Sunday, April 26, 2009

சி்ன்னசேலம் ரயில் நிலையத்தில் மனைவி உஷாவை ரயிலில் அனுப்புவதற்காக சென்றபோது லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தரை திட்டி மிரட்டிய தேமுதிகவைச் சேர்ந்த 6பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷாவை சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைத்தார்.


இதற்காக சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு அவர் வந்தார்.பிளாட்பாரத்தில் நடந்து போன போது, திடீரென அங்கு வந்த சின்னசேலம் தேமுதிக ஒன்றியச் செயலாளர் சின்னசாமி, குமார், கோபிநாத், சூரியன், தாமோதரன், அறிவழகன் உள்ளிட்டோர் சரமாரியாக ராஜேந்தரைத் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜேந்தர் சின்னசேலம் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தற்போது, குப்புசாமி மகன் சின்னசாமி, சின்னசேலம் பாண்டியன் மகன் குமார், சின்னப்பன் மகன் கோபிநாத், துரைசாமி மகன் சூரியன், அங்கமுத்து மகன் தாமோதரன், கோவிந்தன் மகன் அறிவழகன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
--------------------------------------------------------------------------------
என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தப் பின்னூட்டம்
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: கோப‌க்கார‌ப‌ய‌புள்ள‌பதிவு செய்தது: 26 Apr 2009 3:58 pm

ம‌னித‌ன் குர‌ங்கிலிருந்து பிற‌ந்தான் என்று விஞ்ஞானிக‌ள் நினைத்துக் கொண்டிருந்த‌ போது, இல்லை இல்லை ம‌னித‌ன் க‌ர‌டியிலிருந்தும் பிற‌ந்திருக்க‌லாம் என்ற‌ ச‌ந்தேக‌த்தை ஏற்ப‌டுத்தி ஒரு புதிய‌ ஆராய்ச்சிக்கு வித்திட்ட‌வ‌ர்.
---------------------------------------------------------------------------------
http://thatstamil.oneindia.in/news/2009/04/26/tn-6-persons-arrested-for-threatening-vijaya-tr.html

---------------------------------------------------------------------------------

டி.ராஜேந்தரை என்ன சொல்லித் திட்டியிருப்பார்கள்? அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம் ;-)))

Read more...

ஏழையின் சின்னம் செருப்பு

Sunday, April 19, 2009

தொண்டர் (1): செருப்பு போடாம தலைவர் பிரச்சாரத்துக்குப் போறாரே! அவ்வளவு எளிமையானவரா?

தொண்டர் (2): அதெல்லாமில்லே! பிரச்சாரதுல எப்படியும் செருப்பு வந்து விழும்ங்கற நம்பிக்கைதான்!

****
தொண்டர் : தலைவரே! பொதுக்கூட்டத்துக்குப் போகாம தவிர்ப்பது நல்லது.

தலைவர் : ஏன் என்னாச்சு?

தொண்டர் : தொகுதி மக்கள் எடைக்குஎடை செருப்பு தரத் திட்டமிட்டிருக்கிறார்களாம்!

****

தொண்டர் (1): தேர்தல்ல தோத்துப்போன நம் தலைவர் இப்ப என்ன செய்றார்?

தொண்டர் (2): செருப்புக்கடை வச்சிருக்கிறார்!

****
தொண்டர் (1): காலில் விழுந்து ஓட்டுக் கேட்கும் நம்தலைவர் ஏன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்?

தொண்டர் (2): தலைவர்மேல செருப்புவீச முயற்சி செஞ்சதைப் பார்த்துட்டார்.

****
தொண்டர் (1): தலைவருக்கு டெப்பாசிட் போனாலும் நஷ்டமில்லே!

தொண்டர் (2): எப்படி?

தொண்டர் (1): அவர்மேல விழுந்த செருப்புக்களை விற்று ஈடுகட்டிடார்!
****

தொண்டர் (1): என்னதான் இருந்தாலும் எதிர்க்கட்சியினர் நம்மத் தலைவரை மிஞ்ச முடியாது!

தொண்டர் (2): எதை வச்சு சொல்றே?
தொண்டர் (1): நம்ம தலைவருக்கு அவங்களைவிட ஒரு செருப்பு அதிகமா விழுந்திருக்காம்!
****

இப்பதிவுக்குச் சம்பந்தமில்லாத செய்தி

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP