என்னைக் கோடீஸ்வரனாக்கச் சதி!

Wednesday, July 08, 2009

அன்பின் நல்ல நண்பன்,

நலம் நலமறிய ஆவல்.வளைகுடாவில் குப்பைகொட்டி கஷ்டஜீவனம் நடத்திக் கொண்டிருக்கும் எனக்கு உமது மின்மடல் வாயிலாக நற்செய்தியைக் கொண்டு வந்துள்ளதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். இந்திய ரூபாய் மதிப்பில் 5.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு சுமார் 278 கோடி ரூபாய்கள் வருகிறது. 60:40 என்ற வகையில் உனக்கு 167,040,000.00 ரூபாயும் எனக்கு 111,360,000.00 ரூபாய்களும் வரும். 111 ஐ நாமம் போடுவதற்கும் சொல்வார்கள்!


எனக்காக கோடிக்கணக்கில் உதவ விரும்பும் நல்ல நண்பனை நிச்சயம் ஏமாற்ற மாட்டேன். மேற்கொண்டு ஆகவேண்டியச் சடங்குகளை தயவு செய்து உடனடியாக அனுப்பி வைக்கவும். இம்மின்மடலை தந்தியாகப் பாவித்து உடனடி பதில் போடவும்.

இப்படிக்கு,
ங்கொய்யால


----- Original Message -----
From: good friend
Sent: Wednesday, July 08, 2009 1:58 மாலை
Subject: Hi


I will like you to help me, in the transfer of fund worth ($5.8Million) into your account, we have to share it 60%to 40% and i believe that you can not cheat me after the transfer, i will send you more detail about this transfer as soon as i hear from you. pls reply to:friend4good@voila.fr


பின்குறிப்பு: நாமும் கோடீஸ்வரனாகலாமே என்ற நப்பாசையில் பின்னூட்டம் கூடப் போடாமல் நல்லநண்பணுக்கு மின்மடல் அனுப்ப முயற்சிப்பதற்குமுன் இந்தப் பதிவையும் வாசித்து விடுங்க.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP