கதவைத் திறக்காதே போலீஸ் வரும்

Monday, March 29, 2010

மலையடிவார கிராமத்தின் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஓர் ஆசிரமத்தில் பூட்டிய அறைக்குள் பிரேமானந்தா,சங்கராச்சாரியார், தேவநாதன் குருக்கள் மற்றும் ஸ்ரீநித்தியானந்தா ஆகியோர் அதிமுக்கிய ஆலோசனைக்காகக் கூடியிருந்தனர். சாம்பிராணி புகையினால் கண் எரிச்சல் ஏற்பட்டு பிரேமானந்தா இருமியபோது வாயிலிருந்து லிங்கம் விழுகிறது.

சங்கரச்சாரியார்: "பிரேம்ஸுஜிக்கு புகையால் தோஷம்! கதவைத் திற காற்று வரும்!

நித்தியானந்தா: என்ன பெரியவாழ் கூப்பிட்டீர்களா?

சங்கராச்சாரியார்: "நீ ஒண்ணு! அடைத்த அறைக்குள் சாம்பிராணியை புகைய விட்டதால் பிரேம்ஸுஜிக்கு தொண்டையில் தோஷம். அறைக்கதவைத் திறந்தால் ரஞ்சிதமான காற்று உள்ளே வரும்னு சொன்னேன்!

நித்தியானந்தா: குத்திக்காட்டாதீங்கோ பெரியவாழ்! கேவலமாக இருக்கு!

தேவநாதன்: தற்போதைய சூழலில் கதவைத் திறந்தால் ரஞ்சிதமான காற்று வருதோ இல்லையோ போலீஸ் நிச்சயம் வரும்!பிரேம்ஸுக்கு ஜெயில்ல இருந்து பழக்கம் இருப்பதால் இது ஒரு பிரச்சினையில்லை.

பிரேமானந்தா: தம்பி தேவநாதா! ஏன் ராசா தேவையில்லாமல் என்னைய இழுக்கிறே? மூடிய அறைக்குள் இருப்பது கர்ப்பக்கிரஹம் மாதிரி இல்லே!

தேவநாதன்: பிரேம்ஸ்ஜி கோச்சுக்காதீங்க. உண்மையத்தானே சொன்னேன்.

சங்கராச்சாரியார்: வழவழன்னு பேசி நேரத்தை வீணடிக்காதீங்கோ. சட்டுபுட்டுன்னு முடிவுக்கு வாங்க. நம்மளமாதிரி தெய்வச்சேவை செய்பவர்களுக்கு சட்டரீதியில் வரும் சோதனைகளை எப்படி முறியடிப்பதுன்னு ஒவ்வொருத்தரா கருத்துச் சொல்லுங்கோ!

பிரேமானந்தா : சண்டைக்காரன் காலில் விழுவதைவிட சாட்சிக்காரன் காலில் விழலாம். பெரியவாழ் செய்தமாதிரி சாட்சிகளை பல்டியடிக்கச்செய்து வழக்குகளை புஸ்வானமாக்கலாம்.

தேவநாதன்: இது எல்லா சாமிகளுக்கும் சரியா வருமா? எங்களமாதிரி வருமானமில்லாத சாமிகள் கர்ப்பக் கிரகத்துக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறோம். பக்த அடியாட்கள் செல்வாக்கு இருந்தால்தான் இது சாத்தியப்படும்.

நித்தியானந்தா: மொதல்ல என்னை எப்படிக் காப்பாத்துவது என்று ஐடியா சொல்லுங்கய்யா!

தேவநாதன் : மெமரி கார்டுல பக்காவா பதிவு செய்திருப்பதால் அழித்தாலும் மீட்டெடுக்கும் சாஃப்ட்வேர் ஓசிலய கிடைக்குது. அதனால READ ONLY கோப்புகள் மாதிரி DELETE ONLY கோப்புகளை உருவாக்கச்சொல்லி பக்தர்களை ஊக்குவிக்க வேண்டும்.

பிரேமானந்தா: உருப்படியான ஆலோசனை சொல்லுங்க ராசா!

சங்கராச்சாரியார்: சன் டீவில காட்டுன வீடியோவ யாராச்சும் இப்ப வச்சிருக்கீங்களா?

தேவநாதன்: என்கிட்ட இருக்கு. நியூஸ்ல போட்டதும் மொபைல் போனில் ரெக்கார்ட் பண்ணி வச்சிட்டேன். எத்தனைதடவை போட்டுப்பார்த்தாலும் கிக் இல்லே பெரியவாழ்!

பிரேமானந்தா : இன்னும் திருந்தலையா ராசா? மொபைல் கேமராவுல ரெக்கார்ட்பண்ணுவது உமக்கு வியாதியோ என்னவோ?

சங்கராச்சாரியார்: பிரேம்ஸ்! அம்பியை வையாதீங்கோ. இப்போதைக்கு மொதல்ல அதைப் போட்டுப் பார்க்கலாம். அப்பதான் ஐடியா கிடைக்கும்.

(தேவநாதன் மொபைலில் படம் காட்டுகிறார்)

பிரேமானந்தா: பெரியவாழ்! வீடியோவுல தம்பி நித்தியானந்தன் சைடுல குத்தம் ஏதுமிருப்பது மாதிரி தெரியலையே!

(நித்தியானந்தன் ஆர்வமாக பிரேம்ஸை கவனிக்கிறார்)

தேவநாதன்: என்ன ஓய் பிரேம்ஸ்! பத்திரிக்கைக்காரன்களிலிருந்து ப்ளாக்கர்காரனுங்கவரை அக்குவேறா பிரிச்சி மேய்ஞ்சிட்டானுங்க. நீரு புதுசா குத்தமில்லைன்றீர்?

சங்கராச்சாரி: தம்பி பிரேம்ஸ் கொஞ்சம் புரியும்படி சொன்னா சுந்தரேச ஐயர்கிட்டச்சொல்லி நல்ல வழக்கறிஞரை ஏற்பாடு செய்யலாம். தெளிவா சொல்லுங்கோ.

பிரேமானந்தா: தம்பி நித்தியானந்தா டீவி பார்த்துக் கொண்டிருக்கும்போது நடிகை ரஞ்சிதா அறைக்குள் நுழைந்து காலை அமுக்கிவிட்டு,மாத்திரை எடுத்துக் கொடுக்குது.தம்பி சாப்பிட்டு விட்டு கட்டிப்பிடிச்சு ஆசிர்வதிக்குது. இதிலே எங்கே தப்பு தண்டா இருக்கு?

தேவநாதன்: தம்பி என்ன யாரையும் ஆள் வச்சு கொலையா செய்தார்? சூப்பர் பாயிண்ட் பிரேம்ஸ்ஜி.

சங்கராச்சாரி: ஓய் தேவநாதா உன் கொள்ளிக்கட்டை வாயை மூடிக்கிட்டு சும்மாக்கிட.

நித்தியானந்தன்: பிரேம்ஸ்ஜி இது மட்டும்தானா இல்லே வேறு ஏதாச்சும் சட்ட நுணுக்கமான பாயிண்ட்ஸ் உண்டா?

பிரேமானந்தா:அப்புறம்! நித்தியானந்தா ராசா ஒண்ணும் ரஞ்சிதாவிடம் சில்மிஷம் செய்யலே! நல்லா பாருங்க ரஞ்சிதாதான் தம்பிமேல ஏறிப்படுத்துச்சு! இந்த பாயிண்ட் படியும் தம்பிமேல குத்தமில்லை. அதனால இதையே காரணமாகச் சொல்லி தம்பிதப்பிச்சிடலாம். வேணுமின்னா ரஞ்சிதா நித்தியானந்தாவைக் கற்பழித்தாரென்று கேஸை திசை திருப்புங்கோ!

நித்தியானந்தாவுக்கு ஆனந்தக் கண்ணீர் வடிகிறது. பிரேம்ஸின் காலில் விழுகிறார். குனிந்து நித்தியானந்தாவைத் தூக்கி வாயிலிருந்து லிங்கம் எடுத்துக் கொடுக்கிறார். தேவநாதன் பக்தி பரவசத்துடன் பிரேம்ஸைப் பார்க்கிறார்.

சங்கராச்சாரியார்: எல்லாம் பகவான் செயல்! நம்ம கேஸ் எல்லாம் முடிஞ்சபின்னாடி தம்பி பிரேமானந்தாவை சின்னவாழாகப் பட்டாபிசேகம் செய்திட வேண்டியதுதான்!

அடுத்த சில நாட்களில் காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கில் சாட்சிகள் எல்லோருமே பல்டி அடித்துவிட்டதால் அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யாததால் அனைத்து வழக்கிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார். மறுநாள் நித்தியானந்தாவும் விடுவிக்கப்படுகிறார். அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பிரேமானந்தாவிற்கு நன்னடத்தை விதியின்கீழ் ஆயுள் தண்டனை 15நாள்சிறைத்தண்டனையாகக் குறைக்கப்பட்டு அதையும் ஏற்கனவே சிறையில் கழித்துவிட்டதால் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.

வாயை வெச்சிக்கிட்டு சும்மா இருக்காமல் பிரேம்ஸை சீண்டியதால் தேவநாதனுக்கு பிரேம்ஸ் ஐடியா கொடுக்கவில்லை.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP