தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்கள் - தினமலரின் இருட்டடிப்பு

Wednesday, June 23, 2010

தினமலர்.காமில் செம்மொழி மாநாட்டுக்காக பிரத்யேக இணையபக்கம் திறந்து, அதில் கோவை-உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்த செய்திகளையும், சிறப்புக் கட்டுரைகளையும் தொகுத்து வழங்குகிறார்கள். நேற்று வெளியான "கம்யூட்டரும் தமிழும்" என்ற கட்டுரையில் தமிழை கணிமைப்படுத்துவதற்குப் பாடுபட்டத் தமிழர்கள் குறித்த தகவல்களில் அதிரை உமர் தம்பி பற்றிய ஒரு குறிப்புகூட இல்லை!

இதுகுறித்து தினமலர் ஆசிரியருக்கு coordinator@dinamalar.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தும் இதுவரை வெளியிடவில்லை. கட்டுரையாக வெளியிடாவிட்டாலும் சம்பந்தப்பட்ட கட்டுரையில் பின்னூட்டமாக அல்லது ஆசிரியர் பின்குறிப்பாக உமர்தம்பி குறித்த தகவலை இணைத்திருக்கலாம். தினமலரிடம் ஊடக தர்மத்தை எதிர்பார்க்க முடியாது. அதுவும் முஸ்லிம்கள் குறித்த விசயத்தில் தினமலரின் நேர்மை உலகறிந்தது என்பதால் இனியும் எதிர்பார்க்க முடியாது.

ஆங்கிலம் அறிந்தவர்கள் மட்டுமே கணினியைப் பயன்படுத்தலாம் என்ற நிலைமாறி கணிப்பொறி,கணினி என தமிழாக்கப்பட்டு உலகத் தமிழர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்து, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் இணையத் தமிழ் மாநாட்டு அரங்கிற்கு "உமர்தம்பி" அரங்கு என்று பெயரிட்டுள்ளனர். தமிழ் கணிமைக்குப் பங்களித்தவர்களுக்கு செம்மொழி மாநாட்டில் உமர்தம்பி அவர்கள் பெயரால் விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமாதங்களாக வலைப்பூ முதல் இணையம், சஞ்சிகை, வானொலி என அனைத்து தரப்பிலும் உலகத் தமிழர்களின் கோரிக்கைக்குரல் ஒலிப்பது தினமலரு மட்டும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

உமர்தம்பி அவர்களின் தமிழ்சேவையை இருட்டடிப்பு செய்ததோடு மட்டுமின்றி, தமிழ்கணிமை வளர்ச்சியில் தினமலர் நிறுனரையும் சந்தடிச்சாக்கில் குறிப்பிட்டு உள்ளது நகைப்பிற்குறியது. தினமலர் ஒருங்குறிக்குமாறி ஓரிரு வருடங்களே ஆகின்றன. மேலும், அது பயன் படுத்திவரும் "லதா" ஒருங்குறி எழுத்துரு சிலவருடங்களுக்கு முன்புதான் செம்மை படுத்தப்பட்டது. ஆனால் உமர்தம்பி அவர்களின் தேனீ வகை இயங்கு எழுத்துருக்கள் 2003 முதலே இணையத்தில் உலா வருகின்றன!

தமிழுக்கு தானமளித்த உமர்தம்பிக்கு தினமலரின் அங்கீகாரம் தேவையில்லை என்றாலும் உண்மையிலேயே தமிழர்கள்மீதும் தமிழ்மீதும் பற்று இருந்தால், தமிழை கணினியில் புகுத்துவதில் முன்னோட்டியாயிருந்த தமிழ் முஸ்லிம்கள் குறித்த தகவலையும் வெளியிட்டிருக்கலாம்.

தினமலர் வகையறாக்களுக்கு ஈராயிரம் ஆண்டுகளாக நீசமொழியாக இருந்துவந்த தமிழை வைத்து பிழைப்பு நடக்கும் என்றால் மட்டுமே 'தமிழ்பற்று' தலைதூக்கும். தமிழ் கணிமை வரலாற்றைச் சொல்லும் கட்டுரையின் தலைப்புக்கு "கம்யூட்டரும் தமிழும்"! என்று பெயரிட்டிருப்பதிலிருந்தே தினமலரின் செம்மொழித் தமிழ்பற்று பல்லிளிக்கிறது!

(பி.கு:தினமலருக்கு அனுப்பிய மடல் இன்று மாலைக்குள் வெளியிடப்படாத பட்சத்தில் எமது வலைப்பூவில் வெளியிடப்படும்)

அன்புடன்,
அதிரைக்காரன்

Read more...

குரங்குகளின் டார்வின் தியரி

Sunday, June 20, 2010

மூன்றாம் வகுப்பில் அல்லது அதற்கு முன்பு இந்தக் கதை பாடபுத்தகங்களில் படித்திருப்பீர்கள். அதே கதேதான் கிளைமாக்ஸ் மட்டும் மாற்றப்பட்டு, மடலில் வந்தது.

1) ஒரு ஊரில் வளவன் எனும் வணிகன் இருந்தான். அவன் ஊர் ஊராகச் சென்று தொப்பி விற்று வந்தான். கோடைக்காலத்தில் தொப்பிகளுக்கு அதிகத்தேவை இருக்கும் என்பதால் வகைவகையான தொப்பிகளை தன் சைக்கிளில் அடுக்கிக் கொண்டு ஊர் ஊராகச் சென்றான்.

2) உச்சிவெயில் தாண்டிய பிறகு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, அருகிலிருந்த மரத்தடியில் சற்று இளைப்பாரலாம் என்று உட்கார்ந்தான். இதமான காற்று மற்றும் வயிறு நிறைய சாப்பிட்டதாலும் ஊர் ஊராகச் சென்ற களைப்பில் கண்ணயந்து விட்டான். சுமார் இரண்டு மணிநேரம் ஆழ்ந்து தூங்கிவிட்டு, விழித்துப் பார்த்தால் அவன் கொண்டு வந்திருந்த தொப்பிகளை மரத்திலிருந்த குரங்குகள் எடுத்துக் கொண்டு சென்றிருந்தன. நூற்றுக்கணக்கான தொப்பிகளும் குரங்குகளிடம் இருப்பதால், எப்படி அவற்றைத் திரும்பப் பெறுவது என்று தெரியாமல் விழித்தான்.

3) "ச்...சே..கொஞ்சம் உஷாராக இருந்திருக்கலாமே என்று தன்னை நொந்து கொண்டு தலையில் கை வைத்து உட்கார்ந்தான். அவனின் பரிதாப நிலையை சிரித்துக் கொண்டே பார்த்த குரங்குகளும் தங்கள் தலையில் கைவைத்தன. எப்படியாவது குரங்குகளிடமிருந்து தொப்பிகளைத் திரும்பப் பெற்றால்தான் மறுநாளைக்கு விற்க முடியும்.

4) எல்லாமே கலை நுணுக்கத்துடன் செய்த தொப்பிகள். தலையிலிருந்து கையை எடுத்து தன் தொப்பியைக் கழற்றி உச்சந்தலையை சொரிந்து கொண்டே இந்த சிந்தனையை மனதில் ஓடவிட்டான். குரங்குகளும் தொப்பியைக் கழற்றி தங்கள் தலையைச் சொரிந்தன.

5) தான் செய்வதையே குரங்குகளும் செய்வதைப் பார்த்த வளவனுக்கு ஓர் ஐடியா தோன்றியது. தன் தொப்பியைக் கழற்றி குரங்குகளை நோக்கி வீசினான்.

6) உடனே குரங்குகளும் சற்றும் யோசிக்காமல் தங்கள் தொப்பியைக் கழற்றி வளவனை நோக்கி வீசின. தனது ஐடியா ஒர்க் அவுட் ஆகியதை நினைத்து மகிழ்ந்தவனாக கீழே கிடந்த தொப்பிகளைச் சேகரித்துக்கொண்டு அடுத்த ஊரை நோக்கிச் சென்றான்.
========================================================
ஐம்பது வருடம் கழித்து வளவனின் பேரனும் மாறனும் பரம்பரைத் தொழிலான தொப்பி வியாபாரத்தில் ஈடுபட்டான். வளவனுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் மாறனுக்கும் ஏற்பட்டது.

மீண்டும் ஒருமுறை...

2)
3)
4)
5)

ஆகிய பத்திகளைப் வாசித்து விட்டு அடுத்த பத்திக்குச் செல்லவும்.

7) பாய்ந்து வந்த ஒரு குரங்கு அந்தத்தொப்பியை எடுத்துக் கொண்டு மரத்தில் ஏறியது. குழப்பத்தில் தலையைச் சொரிந்து கொண்டு நின்றான். மாறனின் நிலையைப் பார்த்த ஒரு குரங்கு ஏன் தலையைச் சொரிந்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது.

8) பரயாயில்லையே! குரங்குகளிலும் மனிதாபிமானமுள்ளவை உள்ளன என்று மகிழ்ந்து தன் உதவியற்ற நிலையை விளக்கினான். தன் தாத்தாவுக்கும் இது போன்ற இக்கட்டான நிலை ஏற்பட்டபோது இப்படித்தான் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு தொப்பிகளை மீட்டதாகச் சொல்லியதை குரங்கிடம் விளக்கினான்.

9) மாறனின் சோகக்கதையைக் கேட்டுக்கொண்டிருந்த குரங்கு, மாறனைப்பார்த்து ஏதோ சொல்லிவிட்டு மரத்திற்குத் தாவியது. மீண்டும் மாறன் தலையில் கை வைத்து உட்கார்ந்தான். அந்தக் குரங்கு மாறனிடம் அப்படி என்னதான் சொல்லி இருக்கும்?
.
.
.
.
.
.
.
.

.
.
.இன்னும் கீழே செல்லுங்கள்
.
.
.
.
.
.
.
.
.
.
.இன்னும் கீழே செல்லுங்கள்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.இன்னும் கீழே
.
.
.
.
.
.
.
.
..இன்னும்
.
.
.
.
.
.
.
.
..கீழே
.
.
.
.
.
.
.
.
.
.
.
"ஏம்லே! மனுசங்களுக்கு மட்டும்தான் தாத்தா இருப்பாராலே?"

Read more...

கஸ்டமர் சர்வீஸா கஷ்டமர் சர்வீஸா?

Friday, June 11, 2010

ஏர்டெல் செல்பேசி பயனருக்கு உள்வரும் அழைப்புகளில் பிரச்சினையாம்! வாடிக்கையாளர் சேவைக்கு அழைத்து தன் பிரச்சினையை முறையிடுகிறார். கஸ்டமர் சேவைப்பிரில் வேலை பார்ப்பவர்களுக்கு எப்படியெல்லாம் "கஷ்டம்" வருதுன்னு பாருங்க! (கேளுங்க:)

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP