இனி நாய்களை நம்பக்கூடாது!
Friday, May 12, 2006
இண்டர்நெட்டின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை மனிதர்களே அதிகம் பயன்படுத்தி வந்த இண்டர்நெட்டின் சேவை தற்போது எல்லை மீறி விட்டது. ஆம்! தாய்லாந்தில் நாய்களுக்கு எனப் பிரத்யேகமான 24 மணிநேரமும் இயங்கும் மியூசிக் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
http://www.dogradiothailand.com/ என்ற முகவரியில் இந்த இணையதளம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இதில் நாய்களுக்குப் பிடித்தமான இசை வாத்தியங்களின் இசை ஒலிக்கப்படும் என்று பாங்காக் நகரில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு "பாங்காக் போஸ்ட்' தெரிவித்துள்ளது.
ரேடியோ நிகழ்ச்சித் தொகுப்பாளர் அனுபன் பூன்சியோன் என்பவரை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. "இசையைக் கேட்டால் சில நாய்கள் வாலை ஆட்டும்; சில நாய்கள் தரையில் படுத்துக் கொண்டு தலையை உயர்த்தி ஆட்டி இசையை ரசிக்கும்' என்று அனுபன் தெரிவித்தார். (அடப்பாவிகளா! இப்படிக் கூட மார்க்கெட்டிங் பண்ணுவீங்களா?)
தனது வளர்ப்பு நாய்க்கு தாய்லாந்து நாட்டின் கிராமிய இசைதான் அதிகம் பிடிக்கும் எனக் கூறிய அனுபன், பெரும்பாலும் நாய்களுக்கு அதன் எஜமானர்களுக்குப் பிடித்தமான இசைதான் அதிக அளவில் பிடிக்கும் என்றும் கூறினார். (லொள்ளுதானே?)
முன்பெல்லாம் வீட்டுக் காவலுக்கு நாய் வளர்ப்பதாகச் சொல்வார்கள். இது போன்ற இணையவானொலிகள் இருபத்து நான்கு மணி நேரமும் இயங்குவதால் இனி நாய்களால் வீட்டை காவல் காக்க முடியுமா? என்று தெரியவில்லை. ஆகவே இனி காவலுக்கு நாய்களை நம்பக் கூடாது!
''This is a trial period. We're still checking the system and waiting for feedback from listeners'' said Anupan Boonchuen, programme. அதாவது இது பரிச்சார்த்த நிலையே. நாங்கள் இச்சேவையை இன்னும் ஆராய்ந்து வருகிறோம். இத்தளம் பற்றி நேயர்களின் கருத்தை எதிர்ப்பார்க்கிறோம்" என்றார் அதன் தொகுப்பாளர் அனுபன் பூன்சியோன்.
ஆகவே இதைப் படிப்பவர்கள் முடிந்தால் இண்டர்நெட் அறிந்த நாய்களிடம் சொல்லி, தொகுப்பாளருக்கு FEEDBACK (பின்னால் கடி?) கொடுக்கச் சொல்லவும்.
2 comments:
//இத்தளம் பற்றி நேயர்களின் கருத்தை எதிர்ப்பார்க்கிறோம்//
:-)))))))))
:)- "இனி நாய்களை நம்பக்கூடாது!"
இனி அதுவும் இன்டர்நெட் கேட்டு சாட் பண்ண அழைக்கும்
Post a Comment