சிறந்த பின்னூட்டத்திற்குப் பரிசு!

Monday, August 25, 2008















அரைக்கிலோ கருவாடு பத்து மில்லியன் டாலர், ஒரு கிலோ காய்கரி ஐந்து மில்லியன் டாலர், ஒரு கிரேட் முட்டைகள் 600 மில்லியன் டாலர் என்றால் ஒரு கறிக்கோழியின் விலை? காலைச் சிற்றுண்டிக்கு கிலோ கணக்கில் பணத்தைக் கையில் சுமக்க வேண்டும். தொண்டை அடைத்து, குளிர்பானம் குடிக்கலாம் என்று விலையைக் கேட்டால் நெஞ்சே அடைக்கும்!

படத்திலுள்ள விசயம் உலகின் ஒரு பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. மில்லியன் கணக்கில் அமெரிக்க டாலர்களாகப் பொருள் குவிக்கும் வல்லானுக்கு ஒரு நீதி, அதே மில்லியன் டாலர் ஜிம்பாப்வே டாலராக இருந்தால் அவனுக்கு ஒரு நீதியா?

இலட்சங்களில் வைத்திருந்தால் லட்சாதிபதி, மில்லியனில் புழங்கினால் மில்லியனர், கோடிகளில் புரண்டால் கோடீஸ்வரன், பில்லியன் கணக்கில் சொத்துக் குவித்தால் பில்லியனர் என்று உலகில் நூற்றுக் கணக்கான ட்ரில்லியனர் (நம்மூர் அம்பானி உட்பட) என்று நீதிவகுத்தவனைக் கண்டால் வகுந்து எடுக்கத்தோன்றுகிறது.

அடப்பாவிகளா! இப்படி கோடீஸ்வரர்கள் ??? வயிற்றில் அடித்து வல்லான் பொருள் குவிக்கும் அநீதியைப் பார்க்கும்போது, அந்நியச்செலவாணியைக் கண்டுபிடித்த அயோக்கிய................... யாரடா என்று கேட்கத் தோன்றுகிறது!

-------------------------------------

பிச்சைக்காரர் : அம்மா தாயே! சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு ஒரு மில்லியன் டாலர் பிச்சை போடுங்கம்மா!

-------------------------------------

அதிகாரி: யோவ்! அறிவிருக்கா? உன்னை யாருய்யா லஞ்சத்தை ஜிம்பாப்வே டாலராகக் கேட்டது?

-------------------------------------

வங்கியில்: யோவ்! செக்கிலுள்ள கட்டத்திற்கு வெளியில் எழுதக்கூடாதுன்னு எத்தனை பேருக்கய்யா சொல்றது?

-------------------------------------

மனைவி: ஏங்க! உங்க நண்பரிடம் பணம் கடன் வாங்கப்போயிட்டு சும்மா வர்ரீங்களே! இல்லேன்னுட்டாரா?

கணவன்: அடிபோடி!அதை வீடுவரை ஆட்டோவில் வைத்து கொண்டு வந்ததால் ஆட்டோ வாடகைக்கே சரியாக இருந்தது!

-------------------------------------

குறிப்பு: உள்ளக்குமுறலை நச்சென்று சொல்லும் சிறந்த பின்னூட்டத்திற்கு மில்லியன் டாலர் பரிசு! (ஹி...ஹி...ஜிம்பாப்வே டாலரில்தான்!)

Read more...

சுதந்திரதின ஸ்பெஷல்

Saturday, August 16, 2008

'மாடாய்' உழைக்கும் தலைவன்
நன்றி மறந்த 'நாயாகி'
கட்சித்தாவும் 'குரங்காகி'
'குதிரை'யாகிப் போனார்
நாடாளுமன்ற
நம்பிக்கை வாக்கெடுப்பில்!
================================================

தலைவர்: ச்சே...நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பின்போது குதிரை வாங்கச் சொன்னது தப்பாப்போச்சு!

தொண்டன்:
என்னாச்சு தலைவரே

தலைவர்
: மூன்று கோடி ரூபாய் கொடுத்து ஒரு குதிரையை வாங்கிட்டு வந்திருக்கார்.

=============================

வக்கீல்:
சார்.! காடுவெட்டி குருமீது எந்த செக்சன்ல கேஸ் போடுறது?

தலைவர்: காட்டை வெட்டினார்னு வனத்துறை சார்பில் கேஸ் போடுங்க!

=============================

தொண்டன் 1
: எதுக்குத் தலைவர் தலைகீழா நின்னு கொடியேத்துறார்?

தொண்டன் 2: யாரோ தேசியக்கொடியை தலைகீழா கட்டிட்டாங்களாம்!

=============================

அத்வானி: இந்திய சுதந்திர தினத்ன்று பாகிஸ்தான் கொடியை மசூதியில் பறக்கவிடுவதைக் கண்டிக்கிறேன்

லாலு: அத்வானி ஜி! பயப்படும்படி ஒன்னுமில்லே! அது ஒரு தர்கா!

=============================

தொண்டன் 1: தானைத் தலைவன் தன்மானக் குதிரைன்னு அழைக்கிறார்னு போஸ்டர்லே அடிச்சிருக்கு! தன்மானச் சிங்கம்னு அல்லவா போடனும்?

தொண்டன் 2: அதெல்லாம் நம்பிக்கை வாக்கெடுக்குப்பு முன்னாடிதான்!

=============================

ரசிகர் : என்னாய்யா ஒலிம்பிக் கோல்ட் மெடலிஸ்ட் அபினவ் கோபமா இருக்கார்?

ரசிகர் : ஆமா! மெடல் MADE IN CHINA ன்னு போட்டிருப்பதால் டூப்ளிகேட்டா இருக்குமுன்னு யாரோ சொன்னாங்களாம்!

=============================

குடிகாரன் : என்னா தலீவா ஒலிம்பிலே நீயி கலந்துக்கலயா?

குடிகாரன் : போதைமருந்து சாப்பிட்டா போட்டியில கலந்துக்க முடியாதாம்!

=============================

ரசிகர் 1 : அந்த விளையாட்டு வீரர் ஏம்பா குடிச்சிட்டு கவலையா இருக்கார்?

ரசிகர் 2: : போதைமருந்து பரிசோதனைல பாசிட்டிவ்னு காட்டிடுச்சாம்! அந்தக் கவலையை மறப்பதற்காகக் குடிக்கிறாராம்!

==============================

அமர்நாத்தை மறந்து அமர்க்கலாமாய்க் சுதந்திரத்தைக்கொண்டாடுவோம்! சுதந்திர தினவாழ்த்துக்கள்!

Read more...

குரங்குகளுக்குப் பாலம் கட்டத் தெரியாது - தினமலர்

Wednesday, August 06, 2008

தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் வளம் சேர்க்கும் சேதுக்கால்வாய் திட்டத்திற்கு சங்பரிவாரங்கள் முட்டுக்கட்டை போட்டு வருவதற்குக் காரணம். ராமர் இலங்கைக்குச் செல்வதற்காக குரங்குகளால் கட்டப்பட்ட பாலம்??? இடிபடும் என்றும், இது கோடிக்கணக்கான இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் என்று சொல்லிவரும் சூழலில், சங்பரிவாரங்களின் ஊதுகுழல் தினமலர்/ம் இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், குரங்குகளுக்காக மனிதர்கள் பாலம் அமைத்துக் கொடுத்ததாகச் சொல்லிப் பரவசப் பட்டுள்ளது!

ராமருக்குப் பாலம் கட்ட உதவிய குரங்குகளுக்கு, தங்கள் சொந்தத்தேவைக்குப் பாலம் கட்டத் தெரியாதா?

அல்லது




கர்னாடகக் குரங்களுக்குப் பாலம் கட்டத் தெரியாதா?

ஒன்றுமே புரியவில்லை. புரிந்தவர்கள் பின்னூட்டலாம்!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP