சுதந்திரதின ஸ்பெஷல்
Saturday, August 16, 2008
'மாடாய்' உழைக்கும் தலைவன்
நன்றி மறந்த 'நாயாகி'
கட்சித்தாவும் 'குரங்காகி'
'குதிரை'யாகிப் போனார்
நாடாளுமன்ற
நம்பிக்கை வாக்கெடுப்பில்!
================================================
தலைவர்: ச்சே...நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பின்போது குதிரை வாங்கச் சொன்னது தப்பாப்போச்சு!
தொண்டன்: என்னாச்சு தலைவரே
தலைவர் : மூன்று கோடி ரூபாய் கொடுத்து ஒரு குதிரையை வாங்கிட்டு வந்திருக்கார்.
=============================
வக்கீல்: சார்.! காடுவெட்டி குருமீது எந்த செக்சன்ல கேஸ் போடுறது?
தலைவர்: காட்டை வெட்டினார்னு வனத்துறை சார்பில் கேஸ் போடுங்க!
=============================
தொண்டன் 1: எதுக்குத் தலைவர் தலைகீழா நின்னு கொடியேத்துறார்?
தொண்டன் 2: யாரோ தேசியக்கொடியை தலைகீழா கட்டிட்டாங்களாம்!
=============================
அத்வானி: இந்திய சுதந்திர தினத்ன்று பாகிஸ்தான் கொடியை மசூதியில் பறக்கவிடுவதைக் கண்டிக்கிறேன்
லாலு: அத்வானி ஜி! பயப்படும்படி ஒன்னுமில்லே! அது ஒரு தர்கா!
=============================
தொண்டன் 1: தானைத் தலைவன் தன்மானக் குதிரைன்னு அழைக்கிறார்னு போஸ்டர்லே அடிச்சிருக்கு! தன்மானச் சிங்கம்னு அல்லவா போடனும்?
தொண்டன் 2: அதெல்லாம் நம்பிக்கை வாக்கெடுக்குப்பு முன்னாடிதான்!
=============================
ரசிகர் : என்னாய்யா ஒலிம்பிக் கோல்ட் மெடலிஸ்ட் அபினவ் கோபமா இருக்கார்?
ரசிகர் : ஆமா! மெடல் MADE IN CHINA ன்னு போட்டிருப்பதால் டூப்ளிகேட்டா இருக்குமுன்னு யாரோ சொன்னாங்களாம்!
=============================
குடிகாரன் : என்னா தலீவா ஒலிம்பிலே நீயி கலந்துக்கலயா?
குடிகாரன் : போதைமருந்து சாப்பிட்டா போட்டியில கலந்துக்க முடியாதாம்!
=============================
ரசிகர் 1 : அந்த விளையாட்டு வீரர் ஏம்பா குடிச்சிட்டு கவலையா இருக்கார்?
ரசிகர் 2: : போதைமருந்து பரிசோதனைல பாசிட்டிவ்னு காட்டிடுச்சாம்! அந்தக் கவலையை மறப்பதற்காகக் குடிக்கிறாராம்!
==============================
அமர்நாத்தை மறந்து அமர்க்கலாமாய்க் சுதந்திரத்தைக்கொண்டாடுவோம்! சுதந்திர தினவாழ்த்துக்கள்!
0 comments:
Post a Comment