மொபைல் போனில் முட்டை அவிக்கலாம்!

Wednesday, June 21, 2006

விளாதிமிர் லகோஸ்கி மற்றும் மோய்சென்கோ என்ற இரு ரஷ்ய பத்திரிக்கையாளர்கள் மொபைல் போன்களால் ஏற்படும் இடர்பாடுகளைப்பற்றி ஆராய்வதென்று முடிவு செய்தார்கள். அதன்படியே இரண்டு மொபைல் போன்களை எதிரெதிரே வைத்துக் கொண்டு படத்தில் காட்டியபடி நடுவிலுள்ள பாத்திரத்தில் சிறிது தண்ணீரில் முட்டையை வைத்து ஒரு போனிலிருந்து மற்றொரு போனை அழைத்தார்களாம்.



15 நிமிடங்கள் கழித்து முட்டை மிதமாக சூடடைந்தது.
25 நிமிடங்களில் முட்டை இருந்த பாத்திரம் கொதிக்க ஆரம்பித்தது.
40 நிமிடங்களில் முட்டை சூடாகி விட்டது.
65 நிமிடங்களில் முட்டை முழுவது அவிக்கப் பட்டுவிட்டது.

இதற்குக் காரணம் செல்போன்கள் வெளியிடும் அதிர்வலைகள் என்கிறார்கள். உண்மையா?



பின் குறிப்பு:
1) ஒரு முட்டையை அவிக்க (BOIL) கிட்டத்தட்ட ஐந்து அமெரிக்க டாலர் செல்வானதாம். இந்தியாவில் இதைவிட குறைந்த செலவில் முட்டை அவிக்க சாத்தியமுள்ளது. (நன்றி: தயாநிதி மாறன் அவர்கள்).

2) இரண்டு செல்போன்களை இரண்டு காதிலும் வைத்துக் கொண்டு இப்பரிசோதனையைச் செய்தால் உங்களின் மூளைக்கும் முட்டை கதியே!

3) தயவு செய்து யாரும் செல்போன்களை பேண்ட் பாக்கெட்டில் போடாதீர்கள்!



படங்கள்: Anatoly Zhdanov.

ஆங்கில மொழிபெயர்ப்பு: Victoria Boutenko.
தமிழில் : ஹி....ஹி....

மூலம்: Komsomolskaya Pravda, April 23, 2006
தளம்: http://www.kp.ru/daily/23694.4/52233/print

Read more...

ரேட்டு கம்மிங்கறத்துக்காக இப்படியா?

Sunday, June 18, 2006

குறைந்தவிலை விமானக் கட்டணம்! பட்ஜெட் ஏர்லைன்ஸ்!! இப்படி பல பேருல விமான சேவைகள் பற்றிய விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனா உள்ளே எப்படி இருக்கும்னு யாரும் சொல்றதில்லே.



இந்த விமானம் துபாய்-கேரளா மட்டும்தான் போகுமாக்கும்!

சந்திரனில் சாதனைப் படைத்த சந்திரன் நாயர் தெரியும்தானே?

Read more...

உங்கள் கண்களுக்கு ஓர் சவால்!

நம் கண்களுக்குச் சவால் விடும் இப்படங்களும் வாசகங்களும் உங்களின் மேதாவித்தனத்திற்குச் சான்று!" என்ற தலைப்பில் வந்த ஈமெயில் இது! முயற்சித்துப் பாருங்கள் உங்கள் பார்வைத் திறனையும் அறிவையும்!!




More than likely you said, "A bird in the bush," and........
if this IS what YOU said, then you failed to see
that the word THE is repeated twice!
Sorry, look again.




In black you can read the word GOOD, in white the word EVIL (inside each black letter is a white letter). It's all very physiological too, because it visualize the concept that good can't exist without evil (or the absence of good is evil ).

You may not see it at first, but the white spaces read the word optical, the blue landscape reads the word illusion. Look again! Can you see why this painting is called an optical illusion?

The word TEACH reflects as LEARN.



You probably read the word ME in brown, but....... when you look through ME you will see YOU!

ALZHEIMERS' EYE TEST

Count every " F" in the following text:

FINISHED FILES ARE THE RE

SULT OF YEARS OF SCIENTI

FIC STUDY COMBINED WITH

THE EXPERIENCE OF YEARS.

(SEE BELOW) HOW MANY ?

WRONG, THERE ARE 6 -- no joke. READ IT AGAIN ! Really, go Back and Try to find the 6 F's before you scroll down.

The reasoning behind is further down. The brain cannot process "OF".

Incredible or what? Go back and look again!! Anyone who counts all 6 "F's" on the first go is a genius.

பின்குறிப்பு: முயற்சித்துப் பார்த்ததில் முதல்தடவையில் நான் மேதாவி இல்லை என்பது உறுதியாகிவிட்டது! நானே மேதாவி இல்லை என்றாகி விட்டப்பின் நீங்கள் எம்மாத்திரம்?

:-0

Read more...

கட்டணமில்லாக் ‘கழிப்பிடம்’ வேண்டும்!

Sunday, June 11, 2006

ஒருமுறை ஜப்பான் பிரதமர் இந்தியா வந்திருந்த போது சென்னை மின்சார இரயிலில் பயணம் செய்ய விரும்பினாராம். அதன்படியே அதிகாரிகளும் பயண ஏற்பாட்டைச் செய்து விட்டு அருகில் இந்தியப் பிரதமரும் உட்கார்ந்து கொண்டாராம்.

ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஜப்பான் பிரதமர், செல்லும் வழியெங்கும் சிறிது இடைவெளியில் நம் மக்கள் “காலைக் கடன்” கழித்துக் கொண்டிருந்தார்களாம்! (அடப்பாவிகளா! எவன்யா இவர்களிடம் கடன் கேட்டது?) முகம் சுழித்தவாறு அருகிலிருந்த இந்தியப் பிரதமரிடம் “ஏன் உங்கள் நாட்டில் இந்த அவலம் இருந்து கொண்டிருக்கிறது?” என்று கேட்டதற்கு, இந்தியப் பிரதமர் பதில் சொல்ல முடியாமல் தவித்தாராம்.

பிறகு ஒரு சமயம் இந்தியப் பிரதமர் ஜப்பான் சென்றிருந்த போது, ஜப்பானின் கிராமங்களை விமானம் மூலம் தாழ்வாகப் பறந்து பார்க்க விரும்பினாராம். அவ்வாறு விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது சில இடங்களில் நம் சென்னையில் நடந்தது போல், அங்கும் சிலர் “காலைக்கடன்” கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆஹா! நம்மைக் கேவலப்படுத்திய ஜப்பான் பிரதமரை நன்றாக வாரி விடலாம் என்ற எண்ணத்தில் ஜப்பான் பிரதமரிடம், “எங்கள் நாட்டிற்கு நீங்கள் வந்திருந்த போது இது போன்று பொதுவில் காலைக் கடன் கொடுத்துக் கொண்டிருப்பவர்களை கிண்டலடித்தீர்களே! உங்கள் நாட்டில் மட்டும் என்ன வாழுதாம்?” என்று கிண்டலாகக் கேட்டபோது, விமானத்தை தரை இறக்கச் சொல்லி இந்தியப் பிரதமரையும் உடன் அழைத்துச் சென்று அவர்களிடமே விசாரிப்போம் என்று அருகில் சென்ற போது, இந்தியப் பிரதமரைக் கண்ட “கடனாளிகள்” மரியாதையாக எழுந்து “பாரதப் பிரதமர் வாழ்க!” என்று கோஷமிட்டனராம்! (அதாவது ஜப்பானில் கடன் கொடுத்துக் கொண்டிருந்தவர்களும் நம்மவர்களே!)

இது நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்டாலும் நம் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் இந்த அவலத்தை துடைதெறிய (?!!) எந்த அரசியல்வாதியும் கண்டு கொள்வதில்லை. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் (?) பஞ்சாயத்து போர்டுகள் ஆங்காங்கே கழிப்பிடங்களைக் கட்டி இருந்தாலும் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் உள்ளே செல்ல முடியும். இந்த இலட்சனத்தில் கட்டணம் வேறு வசூலிப்பதுதான் கொடுமை!

அடுத்தவர் விசயத்தில் தேவையின்றி மூக்கை நுழைப்பது சட்டப்படி குற்றம். அதேசமயம் அடுத்தவர் மூக்கில் இது போன்ற துர்நாற்றங்களை நுழைப்பதை தடுப்பதற்கும் யாராவது சட்டம் போட்டால் நன்றாக இருக்கும்!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP