ஜார்ஜ் புஷ் கொடுத்த பத்வா!!!

Tuesday, August 14, 2007

தஸ்லீமா நஸ்ரின் என்ற பங்களாதேஷி பெண்மணியின் (ஒரு பெண் தனது கருப்பையில் யாருடைய கருவைச் சுமப்பது என்ற சுதந்திரம் உள்ளிட்ட) பல்வேறு சுதந்திரங்களுக்கு எதிராகச் சில முல்லாக்கள் பயங்கர பத்வா (Fatwa) கொடுத்துதைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றைப் படிக்கும் போது எனக்கு எழுந்த சந்தேகங்களை யாராச்சும் தெளிவு படுத்தவும்.

1) 'தஸ்லீமாவைக் கொன்றால் கணக்கற்ற பணம் வழங்கப்படும்' என்று ஹிந்துஸ்டான் டைம்ஸ் செய்தி சொல்கிறது. அப்படி வழங்கப்படும் பணத்தை ரொக்கமாகக் கொடுப்பார்களா? அல்லது காசோலையாகக் கொடுப்பார்களா? மிகமிக முக்கியமாக, அதற்கு வரிவிலக்கு உண்டா?

2) பின்லாடனை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடித்துக் கொடுத்தால் ஜார்ஜ் புஷ் அரசினால் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்று ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு பத்வா கொடுத்தார். அதற்கும் தற்போது தஸ்லீமாவுக்கு எதிராகச் சொல்லப்பட்ட பத்வாவிற்கும் என்ன வித்தியாசம்? ஜார்ஜ் புஷ்ஷின் பத்வாவைக் பெரிது படுத்தாத ஊடகங்கள், தஸ்லீமாவுக்கு எதிரான பத்வாவை மட்டும் ஊதிப் பெரிதாகுவது ஏன்?

3) எத்தனையோ இலக்கியங்களிலும் புராணங்களிலும் முனிவர்கள் பத்வா கொடுத்திருப்பதைப் படித்திருக்கிறோம்.சாதாரன விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு மனிதர்களை தவளை, பாம்பு, பல்லியாகவெல்லாம் உருமாற்றி பத்வா கொடுத்துள்ளார்கள். முனிவர்களின் பத்வாவுக்கு எதிராக யாருக் குரல் கொடுத்ததாகத் தெரியவில்லையே, ஏன்?

4) இந்தியப் பெண்களில் பலர், திருமணத்திற்கு முன்பு தவறான முறையில் உடலுறவு கொண்டவர்கள் என்று தன் அனுபவத்தைச் சொன்ன குஷ்புவுக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினார்கள்.அதேபோன்றக் கருத்தைச் சொன்ன தஸ்லீமாவுக்கு எதிராக எந்த மகளிர் அமைப்பும் போராடவில்லை. ஏன்?

5) மதநம்பிக்கைகளைப் புண்படுத்துவது தண்டனைக்குறிய குற்றம் என்று நமது நாட்டுச் சட்டங்கள் சொல்கின்றன. இஸ்லாமிய நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதமாக புத்தகம் எழுதியதை மேடைபோட்டு விளம்பரப் படுத்தி விழா எடுப்பதை சட்டம் அனுமதிக்கிறதா?

Read more...

சுதந்திரதின உளரல்கள்

  • இன்று 14-08-2007 பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது! நியாயமாகப் பார்க்கப் போனால் பாகிஸ்தானியர்களைவிட இந்தியர்கள்தான் கொண்டாட வேண்டும்!! இல்லாவிட்டால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அனைவரும் நம்நாட்டிலேயே தங்கி இருப்பார்கள்!

  • சர்க்கரை வியாதியஸ்தர்கள் அதிகமாக இருப்பதால் இனிமேல் தேசியக் கொடி ஏற்றும்போது, சாக்லெட் கொடுப்பதற்குப் பதிலாக முறுக்கு, சிப்ஸ் என இனிப்பற்ற பண்டங்களையும் கொடுக்கலாம்.

  • பாகிஸ்தானைச் சார்ந்த L.Kஅத்வானியை, பாகிஸ்தான் சுதந்திரதினப் பரிசாக மீண்டும் பாகிஸ்தானுக்கே கொடுத்து விடலாம். அதேபோல் அவர்களாக முஷராப்பை நமக்குப் பரிசாகத் தந்தால், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி ஏற்றுக் கொள்ளலாம்!

  • எல்லோரும் கடமையச் செய்தால் நாடு முன்னேறும். விடுமுறைகளால் ஒருநாள் உற்பத்தி குறைகிறது.ஆகவே,சுதந்திர தினத்தன்று விடுமுறை கிடையாது என்று அறிவிக்க வேண்டும்.

  • சுதந்திரப் போராட்டத் தியாகங்களை நினைவுகூராமல், பட்டிமன்றம் மற்றும் சினிமாப் படங்கள் மூலம் சுதந்திரதினத்தை போற்றுவோம் என்று விளம்பரம் செய்யும் தொலைக்காட்சி சேனல்களைத் தடைசெய்ய வேண்டும்.

  • மும்தாஜ், திரிஷா போன்ற கவர்ச்சி நடிகைகளை வைத்து சுதந்திரதின நிகழ்சிகள் என்று சுதந்திரத்தைல் கிண்டலடிக்கும் சேனல்களையும் தடை செய்ய வேண்டும்.

வேறு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் பின்னூட்டம் போட்டு வையுங்கள். யாருக்காவது உதவலாம்!

Read more...

சுவரில்லாமல் சித்திரம்

Monday, August 06, 2007

சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா? என்று சிலர் மேதாவிகள்போல் கேட்பார்கள். படத்திலிருக்கும் இரண்டு வயதுச் சிறுவன் 'முடியும்' என்று நிரூபித்திருக்கிறான். கொடுமை என்னவென்றால் இச்சாதனையை அவனின் பெற்றோர்கள் பாராட்டவில்லையாம்! நீங்களாவது பாராட்டி ஊக்குவிக்கலாமே! :-)

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP