சுதந்திரதின உளரல்கள்

Tuesday, August 14, 2007

  • இன்று 14-08-2007 பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது! நியாயமாகப் பார்க்கப் போனால் பாகிஸ்தானியர்களைவிட இந்தியர்கள்தான் கொண்டாட வேண்டும்!! இல்லாவிட்டால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அனைவரும் நம்நாட்டிலேயே தங்கி இருப்பார்கள்!

  • சர்க்கரை வியாதியஸ்தர்கள் அதிகமாக இருப்பதால் இனிமேல் தேசியக் கொடி ஏற்றும்போது, சாக்லெட் கொடுப்பதற்குப் பதிலாக முறுக்கு, சிப்ஸ் என இனிப்பற்ற பண்டங்களையும் கொடுக்கலாம்.

  • பாகிஸ்தானைச் சார்ந்த L.Kஅத்வானியை, பாகிஸ்தான் சுதந்திரதினப் பரிசாக மீண்டும் பாகிஸ்தானுக்கே கொடுத்து விடலாம். அதேபோல் அவர்களாக முஷராப்பை நமக்குப் பரிசாகத் தந்தால், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி ஏற்றுக் கொள்ளலாம்!

  • எல்லோரும் கடமையச் செய்தால் நாடு முன்னேறும். விடுமுறைகளால் ஒருநாள் உற்பத்தி குறைகிறது.ஆகவே,சுதந்திர தினத்தன்று விடுமுறை கிடையாது என்று அறிவிக்க வேண்டும்.

  • சுதந்திரப் போராட்டத் தியாகங்களை நினைவுகூராமல், பட்டிமன்றம் மற்றும் சினிமாப் படங்கள் மூலம் சுதந்திரதினத்தை போற்றுவோம் என்று விளம்பரம் செய்யும் தொலைக்காட்சி சேனல்களைத் தடைசெய்ய வேண்டும்.

  • மும்தாஜ், திரிஷா போன்ற கவர்ச்சி நடிகைகளை வைத்து சுதந்திரதின நிகழ்சிகள் என்று சுதந்திரத்தைல் கிண்டலடிக்கும் சேனல்களையும் தடை செய்ய வேண்டும்.

வேறு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் பின்னூட்டம் போட்டு வையுங்கள். யாருக்காவது உதவலாம்!

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP