ஆணுறைகள் எரிப்பு - சங் பரிவாரங்களின் சதியா?
Saturday, November 24, 2007
நேற்று கண்ட செய்தியைப் படித்து விட்டு மனதுக்குள் நினைத்தை அடைப்புக் குறிக்குள் எழுதியுள்ளேன். பச்சையாக எழுதி இருப்பதால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
தேனியில் ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்ததால் சலசலப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில் நாமக்கல்லுக்கு அடுத்த படியாக எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டம் தேனி மாவட்டம். இந்த மாவட்டத்தில் எய்ட்ஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு அலுவலகங்கள், தொண்டு நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், ரேஷன் கடை போன்றவற்றில் ஆணுறைகள் இலவசமாக தரப்படுகின்றன. இந்த நிலையில் தேனி கொட்டக்குடி ஆற்று தடுப்பணை அருகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆணுறைகள் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. (அதிர்ஷ்டவசமாக எரிக்கப்பட்ட உறைக்குள் எதுவும் காணப்படவில்லை!)
இதில் பல ஆணுறைகள் பாதி எரிந்தும், மீதி எரியாத நிலையிலும் இருந்துள்ளன. இவற்றின் உண்மையை உணராத சிறுவர்கள் ஆணுறையை எடுத்து பலூன்களாக ஊதி விளையாடி உள்ளனர்.(சில வருடங்களுக்கு முன்பே இவற்றை இலவசமாகக் கொடுத்திருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது!)
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் என்ன என்று பார்த்தபோதுதான் ஆணுறைகள் எரிக்கப்பட்டது தெரிய வந்தது.இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த அதிகாரிகள் ஆணுறைகள் அங்கு எப்படி வந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
(ஒரிஸ்ஸாவில் பாதிரியாரையும் குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களையும் எரித்துக் கொன்றதை ஆதாரத்துடன் சொன்னதையே கண்டு கொள்ளாத அரசு நிர்வாகம், சாதாரண ஆணுறைகள் எரிக்கப் பட்டதை விசாரித்து என்ன செய்வார்கள்?)