நான் ஓர் அப்பாவி! - நரகாசுரன் சிறப்புப் பேட்டி!!

Tuesday, November 06, 2007

ஆன்லைனில் இருந்தபோது மெசஞ்சர் பெட்டி துள்ளியது. narakasuran@hellmail.com என்ற முகவரியிலிருந்து ஒருவர் சாட்டிங் பண்ண விரும்புவதாகக் காட்டியது. உடனடியாக ACCEPT பண்ணினேன்.

நரகாசுரன்: ஹலோ!

அதிரைக்காரன்: ஹலோ! ASL ப்ளீஸ்!

நரகாசுரன் : 50000+/M/NL

அதிரைக்காரன்: அடேங்கொப்பா! அதென்ன லொக்கேசன் NL ?

நரகாசுரன்: NL = நரகலோகம்

அதிரைக்காரன்: ஓஹோ! மோசமான லொக்கேசன்னு படிச்சிருக்கேன். அங்கு எப்படிப் போனீர்கள்?

நரகாசுரன்: நான் எங்கே போனேன். வலுக்கட்டாயமாக தள்ளி விட்டார்கள்.

அதிரைக்காரன்: ஓஹோ! எப்படியென்று சற்று விளக்க முடியுமா?

நரகாசுரன்: நான் கொடுமைப்படுத்துவதாகச் சொல்லி சிலர் கிருஷ்ணாவிடம் முறையிட்டுள்ளார்கள். உண்மை என்னன்னு விசாரிக்காமல் கிருஷ்ணாவும் என்னுடன் சண்டையிட்டு சிறைபிடித்து இங்கே தள்ளிட்டார். உண்மையில் நான் அவ்வளவு மோசமானவன் இல்லீங்க!

அதிரைக்காரன்: ஓஹோ! எப்படிச் சொல்றீங்க?

நரகாசுரன்: நான் கொடுமைக்காரன்னு சொல்லிதானே என்னை நரகத்துக்கு அனுப்புனார். என்னை விட மோசமான கொடுமைக்காரங்க சொகுசா பூமில சுத்திக் கொண்டிருக்கிறார்களென்று கேள்விப்பட்டேன். அவிங்களுக்கு ஒரு நாயம். எனக்கு ஒரு நாயமா?

அதிரைக்காரன்: கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்களேன். எவிங்களைப் பத்திச் சொல்றீங்க?

நரகாசுரன்: நரேந்திர மோடி

அதிரைக்காரன்: ஓ...! குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியா?

நரகாசுரன்: ஆமாங்க! இவர் ஆட்சியில நடந்தக் கொடுமைகளை போனவாரம் இண்டெர்நெட்டுல படிச்சிட்டு கண் கலங்கிடுச்சு!

அதிரைக்காரன்:உங்களுக்கே கண் கலங்கிடுச்சா!மோடியோட ஒப்பிடும்போது நீங்க அப்பாவிதான் Mr.நரகாசுரன்.

நரகாசுரன்: பின்னே என்னாங்க! குஜராத்தில் முஸ்லிம்கள மட்டும் குடும்பம் குடும்பமாகக் கொல்லலே. ராம பக்தர்களையும் ரயில் பெட்டிக்குள் வச்சு எரிச்சுக் கொன்றிருக்கானுங்க இவரோட ஆளுங்க!

அதிரைக்காரன்: பாவிகள்! எதுக்கு இப்படிச் செய்தார்கள்?

நரகாசுரன்:எல்லாம் இந்துத்துவா வெறி! கர்ப்பினிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவையும் கொன்னு நெருப்பில் வீசி எரிந்துள்ளார்களென்றால் பார்த்துக் கொள்ளுங்க!

அதிரைக்காரன்: இந்துத்துவா என்றால் வாழ்க்கை நெறின்னு சுப்ரீம் கோர்ட் நீதிபதி சொன்னாரே.

நரகாசுரன்: ஒருகாலத்தில் இருந்தது. முனிவர்களும் துறவிகளும் இதைப் பின்பற்றி அமைதியான வாழ்க்கை வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அதுவேறு; இவர்கள் பின்பற்றுவது இந்துத்துவா அல்ல! ஜந்துத்துவா!!

அதிரைக்காரன்: சரிசரி டென்சனாகாதீங்க.எப்படியோ உங்க புண்ணியத்துல மக்களெல்லாம் சந்தோஷமா இருக்கார்கள். ஜவுளி, பட்டாசு, இனிப்புக் கடைக்காரர்களும் சந்தோசமா இருக்காங்க. அவங்களுக்கு எதாச்சும் சொல்லனுமா?

நரகாசுரன்: என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு பொதுமன்னிப்புக் கொடுத்து பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் உண்மையான நரகாசுரர்களை இங்கு அனுப்பச் சொல்லி மத்திய அரசாங்கத்திடம் மக்களைப் போராடச் சொல்லுங்க! முதல் கட்டமாக மோடியை ஆட்சியிலிருந்து தூக்கி வீசும் நாள்தான் உண்மையான தீபாவளி!

அதிரைக்காரன்: Mr.நரகாசுரன். உங்களுடன் சாட்டிங்கில் உரையாடியதை அப்படியே என் வலைப்பூவில் போட்டு விடுகிறேன். மக்கள் படித்து விட்டு பின்னூட்டம் போடுவார்கள். முடிஞ்சா நீங்களும் ஒரு பின்னூட்டம் போட்டு மக்களுக்கு இச்செய்தி போய்ச்சேர உதவுங்கள்!

11 comments:

╬அதி. அழகு╬ 11/07/2007 3:35 AM  

சூப்பர் சாட்டிங் பேட்டி!

மோடி மட்டுமா போட்டி?

Unknown 11/07/2007 5:23 AM  

காலத்தின் கட்டாயத்தை கணக்கில் கொள்ளாமல் சற்று விரிவாக எழுதியிருந்தால் தீபாவளி பரிசாக ஒரு நல்ல கருத்தியல் நகைச்சுவை படித்த நிறைவேற்பட்டிருக்கும். நல்ல கற்பனை. :)

Anonymous 11/07/2007 12:55 PM  

நானும் இரு கயமைத் தனம் பண்ணிக்கிறேன்

மணிமகன் 11/08/2007 2:31 AM  

நல்ல கற்பனை.பாராட்டுக்கள்.

ஒரு செய்தி;

அசுரனுக்குப் பொருள் தெரியுமா?
சுரா பானம் அருந்தாதவர்கள் அசுரர்கள்.
சுரா பானம் அருந்தியவர்கள் சுரர்கள்.

சுத்தம்xஅசுத்தம்-இதுபோல

அதிரைக்காரன் 11/08/2007 10:53 AM  

அதி.அழகு,

தற்போதைக்கு மோடி மட்டும்தான். ஏமாற்றுக்காரனைக் குறிப்பிடும் போது 'மோடி மஸ்தான்' என்பார்கள். இதுவர்ரை யாருன்னு தெரியாம இருந்தேன்.மோடி மஸ்தான்னு இனி யாராச்சூம் சொன்னால் நரேந்திர மோடிதான் நினைவில்ல் வருவான்.

அதிரைக்காரன் 11/08/2007 10:55 AM  

இசை,

இன்னும் சாட்டிங்கை நீட்டி இருக்கலாம். கலைஞருக்கே நாக்கை அறுப்பேன்னு பத்வா கொடுத்தானுங்க. அதேமதிரி நமக்கும் கொடுத்துடப் போறானுங்கன்னு சுருக்கிட்டேன்.

அதிரைக்காரன் 11/08/2007 10:58 AM  

//நானும் இரு கயமைத் தனம் பண்ணிக்கிறேன்//

Mr.நரகாசுரன்,

இது கயமைத்தனமல்ல. மோடி மஸ்தானை மாம்மியார் வீட்டுக்கு அனுப்ப இதுமாதிரியான 'கருத்தியல் நகைச்சுவை' (நன்றி: இசை) அவசியம்.

அதிரைக்காரன் 11/08/2007 11:01 AM  

//சுரா பானம் அருந்தாதவர்கள் அசுரர்கள்.சுரா பானம் அருந்தியவர்கள் சுரர்கள். /

மணிமகன்,

எந்த சுரா பாணம்? நம்ம சோ சொன்னாரே திராட்சை சுரா பானாமா? கலைஞர் ஐயா சொன்ன 'அந்த' சுரா பானமா?

தகவலுக்கு நன்றி ஐயா.

அதிரைக்காரன் 11/08/2007 11:01 AM  

//சுரா பானம் அருந்தாதவர்கள் அசுரர்கள்.சுரா பானம் அருந்தியவர்கள் சுரர்கள். /

மணிமகன்,

எந்த சுரா பாணம்? நம்ம சோ சொன்னாரே திராட்சை சுரா பானாமா? கலைஞர் ஐயா சொன்ன 'அந்த' சுரா பானமா?

தகவலுக்கு நன்றி ஐயா.

அதிரைக்காரன் 11/08/2007 11:04 AM  

அனானி,

என்னை திட்டி எழுதியதை நான் ஏற்கவில்லை. (நான் துலுக்கன் தான். இருட்டில் கல்லெறியும் கயமைத் தனத்தை ஒழியுங்கட்டா.)

Anonymous 11/08/2007 2:43 PM  

intha modiyaiththan priminister padhavikku poruththamanavarnnu CHO thannoda Kumudham pettiyila sonnar

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP