அண்ணா பிறந்தநாள் ஜோக்ஸ்!

Saturday, September 20, 2008

வாடிக்கையாளர்: யோவ் ஒரு ரூபா அரிசிய்ல் நிறைய கல் கிடக்கதய்யா!
ரேசன்கடைக்காரர்: அப்படி தப்பு நடந்துடுச்சு! கல்லுக்குத் தனியா ஒருரூபாய் கொடுய்யா!
************
அமைச்சர்: தலைவரே ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி அறிவிச்சீங்க. எப்படி தொடர்ந்து செயல்படுத்துவது?
தலைவர்: அந்தக் கவலை நமக்கெதற்கய்யா? ஸ்டாக் இல்லைன்னு ஒரு போர்டைப் போட்டுவிட்டால் போதுமே!
*************
அமைச்சர்: அண்ணா பிறந்த நாளைக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி அறிவிச்சீங்க. எப்படி தொடர்ந்து செயல்படுத்துவது?
தலைவர்: யோவ்! அது அண்ணா நூற்றாண்டு பிறந்தநாளுக்கு மட்டும்தான்!
*************
பிச்சைக்காரன்: அம்மா தாயே! ஒருகிலோ அரிசி பிச்சைப்போடுங்கம்மா!
*************
நீதிபதி: இருதரப்பு வாதங்களையும் வைத்துப் பார்க்கும்போது, கொலைக் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிக்கு அண்ணா பிறந்தநாள்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்குகிறேன்
*************
இலைக்காரன்: நம்புரட்சித் தலைவி அம்மாவுக்கு ஆயுள் தண்டனை தராமல் மைனாரிட்டி திமுக வஞ்சித்து விட்டது
நல்லதந்தி: என்னாய்யா புரியாமப் பேசுறே?
இலைக்காரன்: புரிஞ்சுதான்யா பேசுறேன். ஆயுள் தண்டனை கொடுத்திருந்தா அம்மா இன்னேரம் விடுதலையாகி இருப்பாங்கய்யா!
*************
அமைச்சர்: தலைவரே காந்தி பிறந்தநாளன்று குற்றவாளிகளை விடுதலை செய்ததில் தவறு நடந்துடுச்சு!
தலைவர்: என்னாச்சு!
அமைச்சர்: கோட்சேயையும் விடுதலை செய்துவிட்டார்கள்
**************

Read more...

தினமலருக்கு முதல் ஆப்பு!

Wednesday, September 10, 2008

சமீபத்தில் தமிழ் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக டென்மார்க் பத்திரிக்கையில் வெளியான முஹம்மது நபி[ஸல்] அவர்களை இழிவு செய்யும் விதமாக வெளியான கேலிப்படத்தை வெளியிட்டது. ரமழான் மாதத்தில் வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்த வேண்டிய முஸ்லிம்கள வீதிக்கு வரவழைத்து காவல்துறையினரின் தடியடியைப் பெற வைத்த தினமலர் ஒப்புக்கு "வருந்துகிறோம்" என்று வெளியிட்டது.

தினமலரின் இந்த விஷமத்தனத்தால் கொதிந்தெழுந்த தமிழக முஸ்லிம்கள் தினமலரை முடக்கும் நடவடிக்கையில் இறங்கினர். முதற்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம் தினமலருக்கு ஆப்படித்துள்ளது.காகித வடிவப் பதிப்புக்கும் ஆப்படிக்கும் முயற்சிகளை பலவேறு அமைப்பினரும் துரிதப்படுத்தி வருவதாக பெயர் சொல்ல விரும்பாத உளவுத்துறை அதிகாரி (தினமலர் பாணி;-) தெரிவித்தார்.

இனி, தினமலர் பெருநாள், ரமலான் மலர் வெளியிட்டு முஸ்லிம்களைச் சமாதானப்படுத்த நினைத்தாலும் தினமலரின் சூழ்ச்சியை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள். தினமலரின் சரிவு தொடங்கி விட்டதால் என் பங்குக்கு தினமலர் ஸ்டைலில் சொல்லிக் கொள்ள விரும்புவது!

வருந்துகிறோம்!

Read more...

ஹாலிவுட்டில் விஜயகாந்த்

Monday, September 08, 2008

தமிழக அரசியலில் மாற்றுச் சக்(க)தியாக வந்துள்ள நடிகர் விஜயகாந்த் படங்களை ஹாலிவுட்டில் டப்பிங் செய்தால் வசனங்கள் இப்படித்தான் இருக்கும். உங்கள் பங்குக்கு டப்பிங் வசனங்கள் பின்னூட்டவும்.




1) U can study and get any certificates. But u cannot get ur death certificate




2) U may have AIRTEL or BSNL connection but when u sneeze u ll say HUTCH







3 ) U can bcome an engineer if u study in engineering college. U cannot bcom a president if u studies in Presidency College






4 ) U can expect a BUS from a BUS stop ... u cannot expect a FULL from FULL stop






5) A mechanical engineer can bcom a mechanic but a software engineer cannot bcom a software




6) U can find tea in teacup. But cannot find world in world cup


7) U can find keys in Keyboard but u cannot find mother in motherboard.

Read more...

மணிப்பூர்:நாத்திகத் தீவிரவாதிகள்?

Tuesday, September 02, 2008

மணிப்பூர் முதல்வர் வீடுமீது ராக்கெட் குண்டு வீசப்பட்டதாம்.வீசியவர்கள் தீவிரவாதிகளாம்!! பெரும்பாலும் தீவிரவாதச்செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்கள் சார்ந்திருக்கும் மதத்துடன் இணைத்து, குறிப்பிடுவர். உதாரணமாக இத்தகையத் தாக்குதலில் ஒரு முஸ்லிம் ஈடுபட்டிருந்தால் 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்றுதான் குறிப்பிடுவார்கள்; இதுவே காலங்காலமாகக் கடை பிடிக்கப்படும் ஊடகத் த்ர்மமாக இருந்து வருகிறது.


மணிப்பூர் முதல்வரைக் கொல்ல முயன்ற சம்பவத்தில் 'தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்' என்று மட்டு போட்டுள்ளார்கள்! என்ன கொடுமை சார் இது! தெரியாமத்தான் கேட்கிறேன்.


1) மணிப்பூர் தீவிரவாதிகள் மதநம்பிக்கையற்ற நாத்திகர்களா? அல்லது

2) பாகிஸ்தான், பங்களாதேஷ் தீவிரவாதிகளுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? அல்லது

3) பத்திரிக்கைக்காரர்களெல்லாம் திருந்தி விட்டார்களா? அல்லது

4) இந்த ராக்கெட் லாஞ்சர்கள் செய்வதற்கு மணிப்பூரில் யாருமே ஆணி, பேட்டரி, ப்ளாஸ்டிக் வயர், உடைந்த குழாய் போன்றவற்றை வீட்டில் பதுக்கி வைத்திருக்கவில்லையா?



விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டமிடலாம்!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP