சில்லரை வணிகம் Vs. சில்லரை அரசியல்

Tuesday, October 16, 2012

"பணமென்ன மரத்திலா காய்க்கும்?" -  என, பேசாமடந்தை என்று பரிகசிக்கப்பட்ட நமது பிரதமரே வெகுண்டெழும் அளவு "சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி" என்ற மத்திய அரசின் முடிவு குறித்த  விவாதங்கள் தேசிய அளவில்  எழுந்துள்ளன. இதன் பின்னணியில் சமூக,பொருளாதார காரணங்கள், புள்ளிவிபர ஒப்பீடுகளை எல்லாம் தாண்டி அரசியல் லாபநட்டக் கணக்கீடுகளே பிரதான காரணமாக இருக்கின்றன

அடுத்தடுத்த ஊழல் குற்றச்சாட்டுகளால் எதிர்கட்சிகளின் வசவுக்கு ஆளாகி நெருக்கடியில் தவிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, வரும் 2012 குளிர்கால கூட்டத்தொடரில் பெருத்த எதிர்ப்பைச் சந்திக்குமென்று எதிர் பார்க்கப்படுகிறது.இந்நிலையில் குஜராத் சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு வசதியாக, காங்கிரஸைப் பலவீனப்படுத்த வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு என்றால்,காங்கிரஸுடன் கூட்டணிவைப்பதுதவிர வேறு வழியில்லாத கம்யூனிஸ்டுகளுக்கும் காங்கிரஸின் பலவீனம் எதிர்கால பேரங்களுக்கு வசதியாக இருக்கும். இவையன்றி திமுக, சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுக்கும் காங்கிரஸுக்கு மூக்கணாங்கயிறு போட்டு வைத்துக் கடந்த முறை ஒதுக்கிய இடங்களையேனும் பெறமுடியும் என்ற கணக்கீடு.

இவற்றையெல்லாம் மறைத்து வைத்து,மக்கள் நலன் என்ற பெயரால் இருதரப்பினராலும் வைக்கப்படும் வெவ்வேறான வாதங்களால் பாமரர்கள் மட்டுமின்றி நன்குபடித்தவர்களும் குழம்பியுள்ளனர். ஆள்பவர்களால் சொல்லப்படும் ஆசை வார்த்தைகளும்,எதிர்ப்பாளர்களால் விதைக்கப்படும் அதீதஅச்சமும் நியாயமானவையா,   நாட்டு நலனுக்கு உகந்ததா என்று தெளிவுபெறும் நோக்கில் இருதரப்பு வாதங்களையும் அலசுவோம்.

உலகமயப் பொருளாதார முன்னெடுப்புகளைக் கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்படுத்தி 2020 ஆம் ஆண்டிற்குள் வல்லரசு நாடுகளில் ஒன்றாகிவிட வேண்டும் என, பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டி, நமது அண்டை நாடான சீனாவைப் போன்று 'சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை' அனுமதிப்பது என்ற முடிவு கடந்த செப்டம்பரில் மத்திய அரசால் உறுதியாக அறிவிக்கப்பட்டது.மின்சாரம், போக்குவரத்து மற்றும் சில்லரை வணிகத்திலும் நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது என்ற முடிவில், சில்லரை வணிகத்திற்கு 51% அனுமதி வழங்கியது மட்டுமே எதிர்கட்சிகளில் எதிர்ப்புக்கு இலக்காகியுள்ளது.

'சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடை அனுமதிப்பது' என்ற மத்திய அரசின் முடிவு 2002 ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான அரசில் தொழில்துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறனால் பரிந்துரைக்கப்பட்டது. அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதால் ரியல் எஸ்டேட்,குளிர்பதன சேமிப்பு (Refrigiration And Storage)  மற்றும் போக்குவரத்து  போன்ற துறைகள் வளர்ச்சியடைந்து,உள்நாட்டுச் சிறுதொழில் உற்பத்திகளுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகளும் பெருகும். மேலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்து,சர்வதேசச் சந்தைப் போட்டிகளால் விலை குறைந்து நுகர்வோர் பெரிதும் பயன்பெறுவர்" என்பதால் சில்லரை வணிகத்தில் 100% நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது! (சுட்டி-1)

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை சீனா 1992  ஆம் ஆண்டிலும்,  பிரேஸில், மெக்ஸிகோ, அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் 1994 ஆம் ஆண்டிலும்,கொரியா 1996 ஆம் ஆண்டிலும்,தாய்லாந்து 1997 ஆம் ஆண்டிலும் இந்தோனேசியா 1998 ஆம் ஆண்டிலும் அனுமதித்துள்ளன.இவற்றில் ஓரிரு நாடுகளைத்தவிர ஏனைய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது. நமது அண்டை நாடான சீனா,ராணுவ/ஆயுத தளவாடங்கள் ரீதியாக உலகவல்லாதிக்க அரசாக விளங்கும் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளிப் பொருளாதார வல்லரசாக விளங்குவதற்கு 30 வருடங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்ட வளர்ச்சியே காரணம் என்பதும், சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடை அனுமதித்ததும் முக்கிய காரணம் என்பது பொருளாதார வல்லுனர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

உலகின் பல நாடுகளைவிட இந்திய ஏற்றுமதி விகிதம் அதிகமாக இருந்தபோதும்,கனிசமான உள்நாட்டு வரிகளால் அரசுக்கு நிதி வந்தபோதும் ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட்டையே எந்தக்கட்சி ஆட்சியிலிருந்தாலும் நிதியமசைச்சர் சமர்பிக்கிறார்.அரசுக்கு வரும் வருவாய்க்கும் செலவுகளுக்குமுள்ள இடைவெளியே பற்றாக்குறை பட்ஜெட்டுக்குக் காரணம். அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் இலவசங்களால் பெருமளவு அரசுச் செலவினங்கள் அதிகரிக்கின்றன. நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன்மூலம் இந்த இலவசங்களும் மானியங்களும் நிறுத்தப் பட்டு அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

அரசின் அனேக சலுகைகளும்,இலவசங்களும்,மானியங்களும் விவசாயிகள்,மொத்த/சில்லரை வணிகர்கள் போன்ற குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே கிடைக்கின்றன. நாட்டின் உற்பத்தியையும் நுகர்வோரின் நலனையும் பேணும் வகையில் அரசு வழங்கும் சலுகைகளின் பலன் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே செல்வதால் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் தொடர்கின்றன. இதைச் சரிசெய்ய அரசு எடுக்கும் சில கசப்பான முடிவுகளில் சிலர் பாதிக்கப்பட்டாலும் பெரும்பாலோர் பயனடைவர் எனும்போது இத்தகைய முடிவுகள் தவிர்க்க முடியாதவை

நமது சில்லரை வணிக அமைப்பு இலாப நோக்கம் மட்டுமின்றி,சமூக உறவு,கலாச்சாரம் ஆகிய காரணிகளோடும் தொடர்புள்ளதாகவும்,வெளிநாட்டு நேரடிமுதலீடுகளால் அத்தகைய பாரம்பர்ய வணிக தொடர்புகள் சிதைவடையும் என்றும் எதிர்ப்பாளர்கள் காரணம் சொல்கிறார்கள்.அந்நிய நிறுவனங்களின் வருகையால் ஏற்கனவே அத்தகைய தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்படுவார்கள் என்பதும், வாங்குவோர்- விற்போரிடையேயான சுமூக பிணைப்பு அறுபடும் என்றும், உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டு முதலாளிகள் நிர்யணிக்கும் விலைக்கேவாங்கவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் சொல்லப்படுபவை ஓரளவு உண்மை என்ற போதிலும்,அந்நிய முதலீடுகளால்மட்டுமே இவை சிதையும் என்பது சரியன்று.

நெல், கோதுமை, கரும்பு, வாழை, பருத்தி ஆகிய விவசாய உற்பத்திகளுக்கும்,பால்,மீன் போன்றவற்றுக்கும் விலை நிர்ணயிக்கும் உரிமை உழைப்பவனுக்கில்லை. வாங்குவோருக்கும் விற்போருக்கும் இடையில் இடைத்தரகர் என்ற மூன்றாம் நபர்கள் பலனடைகிறார்கள்.அரசு வழங்கும் விவசாயக் கடன்களுக்கு இயற்கை பொய்க்கும்போதும், சீறும்போதும் இழப்பீடுகளும், கடன்/வட்டியில் தள்ளுபடி போன்ற சலுகைகளும் உண்டு. இடைத்தரகர்களிடம் வாங்கும் கடன்களுக்கு விளைச்சலுக்கு முன்பே கந்துவட்டி பிடித்தம்போக அறுவடைக்குப் பின்பும் உழவனைக் கடனாளியாக்கி உழைத்தவனின் வயிற்றிலடிக்கும் கொடுமைக்காரர்களும் வட்டிகட்ட முடியாமல் தற்கொலைக்குத் துணியும் விவசாயிகளும் 51% அந்நிய முதலீடுகளுக்கு அனுமதிக்கப்பட்டிராத இந்தியாவில்தான் இலட்சக்கணக்கில் உள்ளனர்.

கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரால் இந்தியாவுக்கு வந்தவர்களே நம்மை அடக்கி, அடிமையாக்கி ஆண்டார்கள் என்பதால் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது அந்நியர்களுக்கு நாமே வழிவகுத்துக் கொடுப்பதாகி விடுமென்ற அதீத அச்சம், வரலாறு அறியாதாரின் வாதம் மட்டுமின்றி நமது ராணுவ, நீதிமுறைகளைக் குறைத்து மதிப்பிடும் செயலுமாகும்.அன்றைய அரசியல் சூழல்களுக்கும்,ஆட்சிமுறைக்கும் தற்போதைய நிலைக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. பெண்ணையும் பொன்னையும் மன்னருக்குப் பரிசாக வழங்கிவிட்டால் அரசின் எந்தப்பகுதியையும் தாரை வார்க்கலாம். ஆனால்,தற்காலத்தில் பிரதமருக்குத் தரப்படும் பரிசும்கூட அரசின் சொத்தாகக் கருதப்படும் என்பதால் மீண்டும் அந்நியரிடம் அடிமைப்படுவோம் என்பது அறிவார்ந்த வாதமில்லை.

எதிர்ப்பவர்களின் காரணங்களில் ஒன்றில்கூடவா நியாயமில்லை என்ற ஐயம் எழலாம்;அவற்றை மறுக்கவில்லை. ஆனால், முறையான சட்டங்களியற்றி, சொல்லப்படும் காரணங்கள் அனைத்தையும் களைய முடியும் என்பதையும் மறந்து விடுகிறோம். மக்கள் நலனுக்காகவே எதிர்க்கிறார்கள் என்பதும் சரியில்லை. ஏனெனில், கூடங்குளம் அணு உலையை தீவிரமாக எதிர்க்கும் அப்பகுதி மக்களின் நலனை பொருட்படுத்தாதவர்கள்தாம் தற்போது மக்கள் நலன் குறித்துக் கவலைப்படுகிறார்கள்!

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளால் 4 -7% இருக்கும் சில்லரை வணிகர்களைவிட அல்லது இதனால் நேரடியாகப்  பயனடைந்து கொண்டிருக்கும் 4 கோடி வணிகர்களைவிட அதிக எண்ணிக்கையுள்ள பொதுமக்கள் பயனடைவர் என்பதே அண்டை நாடுகள் சொல்லும் உண்மை. அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்பட்டதால் சீனா எந்த நாட்டுக்கும் அடிமையாகி விடவில்லை என்பதோடு 51% அந்நிய முதலீட்டுக்கும் எஞ்சியுள்ள 49% உள்நாட்டு முதலீட்டுக்கும் இடையேயான வித்தியாசம் 2% மட்டுமே. கடின உழைப்பாலும், அதிகமான ஏற்றுமதியாலும் அந்நிய நிறுவங்களைப் பின்னுக்குத்தள்ள முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.சீனா இதை செயலளவில் நிரூபித்துள்ளது.

உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்ட போதிலும் உலகின் ஒருபகுதியிலுள்ளவர்கள் உணவின்றி இறக்கின்றனர்.  இன்னொரு பகுதியிலோ உண்டது சீரணமாகுமுன்பே மறுவேளை உண்டுகொழுக்கிறார்கள். இவ்விடைவெளியைக் களைய பொருளாதாரச் சமநிலை வேண்டும். விளைச்சலில் பகிர்வு வேண்டும். உழுதவன் வியர்வை நிலத்தில் சொட்டும் முன்பே ஊதியம் வழங்கப்பட வேண்டும். உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் இடைத்தரகர்களும், கந்து வட்டிக் கயவர்களும் ஒழிந்து,நாடு வளம்பெற வேண்டும். 51% அந்நிய முதலீடுகளை அனுமதிக்கும் அரசின் முடிவு எதிர்க்கக்கூடிய ஒன்றன்று என்பதே இப்பதிவின்மூலம் சொல்ல விரும்பும் கருத்து.

ஜெய் அல் ஹிந்த்!

அன்புடன்,
அதிரைக்காரன்

சுட்டிகள்:
1) http://indiatoday.intoday.in/story/fdi-in-retail-sector-nda-bjp-murasoli-maran/1/162218.html
2) http://adirainirubar.blogspot.com/2012/02/blog-post_24.html
3) http://adirainirubar.blogspot.com/2012/10/blog-post_9.html
4) இனிய திசைகள்( அக்டோபர்-2012) - முனைவர் சேமுமு கட்டுரை
5) Wikipedia

Read more...

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்?

Saturday, February 18, 2012

மனிதன் தன்னை ஆறறிவு கொண்டவன் என்று மேம்படுத்திச் சொல்லிக்கொண்ட போதிலும் சிலரின் சிந்தனை குறைபாடுகளால் சிலசமயம் ஐந்தறிவுக்கும் கீழான உயிரினங்களின் குணாதிசயங்களுடன் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறான்.

ஓரினச்சேர்க்கை குறித்த வழக்கொன்றில், "மாறி வரும் சமூக சூழலைக் கருத்தில் கொண்டு ஓரினச்சேர்க்கை விவகாரத்தைப் பார்க்க வேண்டும்" என்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்து ஒழுக்கம் பேணும் சமூகத்தவரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே பாலினத்தை சேர்ந்த இருவர் பரஸ்பரம் சம்மதித்து பாலியல் உறவு கொள்வது சட்டப்படி குற்றமல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றம் 2009ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து, ஒழுக்க நெறிமுறைகளுக்கும் கலாசாரத்துக்கும் ஓரினச் சேர்க்கை எதிரானது என்றும், சட்ட விரோதமானது என்றும் பா.ஜ.க மூத்த தலைவர் பி.பி.சிங்கால், யோகாகுரு பாபா ராம்தேவ் மற்றும் பல பொதுநல அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யாயா ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஓரினச் சேர்க்கைக்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் அம்ரேந்திர சரண் வாதாடினார். அப்போது நீதிபதிகள் கூறுகையில், “1860ம் ஆண்டுக்கு முன்பே ஓரின சேர்க்கை குற்றமாக கருதப்படவில்லை. கஜுராஹோவில் உள்ள ஓவியங்களும் சிற்பங்களும் இதை காட்டுகின்றன” என்றனர்.

அதற்கு பதிலளித்த சரண், “சிற்பங்களை வைத்து சமூக பிரச்னைகளை முடிவு செய்யக் கூடாது” என்று வாதிட்டார் .இதற்கு பதிலளித்து நீதிபதிகள் கூறியதாவது:

"சிற்பங்களும் ஓவியங்களும் அந்தக் காலகட்டத்தை வெளிப்படுத்துகின்றன. ஓரினச் சேர்க்கையை வெறும் பாலியல் ரீதியான உறவாக மட்டுமே பார்க்கக் கூடாது. 20 ஆண்டுகளுக்கு முன் ஒழுக்கமற்றதாக கருதப்பட்டவைகளை சமூகம் இப்போது ஏற்றுக் கொள்கிறது!

திருமணம் செய்து கொள்ளாமலே இருவர் சேர்ந்து வாழ்வது, செயற்கை முறையில் கருத்தரிப்பு, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது போன்றவை 30 ஆண்டுகளுக்குமுன் இயற்கைக்கு முரணாக கருதப்பட்டது. இப்போது, செயற்கை முறையில் கருத்தரித்தல் வெற்றிகரமான 'வியாபாரமாக' நடந்து வருகிறது. சமூகம் மாறிக் கொண்டு வருகிறது. மாறிவரும் சமூக சூழலை கருத்தில் கொண்டு ஓரினச் சேர்க்கை விவகாரத்தை பார்க்க வேண்டும்" என்று மாண்புமிகு??? நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதேபோல், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிப்ரவரி-12,2012 அன்று MODERNISM (நவீனத்துவம்) என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் தற்காலத்தில் எவையெல்லாம் நவீனம் (MODERN) என்று விவாதிக்கப்பட்டன. தனிநபர் நடை, உடை, பாவனைகள் முதல் நட்பு, இல்லறம் ஆகியவற்றோடு நவீன சீரழிவுகளான ஓரினச்சேர்க்கை (HOMOSEX&LESBIAN) குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்றும் கேட்கப்பட்டபோது, கலந்து கொண்ட சிலர் அதை நியாயப்படுத்தி பேசியது வியப்பாக இருந்தது என்றால் அவர்களில் பெண்களும் நியாயப்படுத்திப் பேசியது அதிர்ச்சியாக இருந்தது!



ஆண்கள் சார்பில் பேசியவர், பிறருக்கு தொந்தரவு இல்லாதவரை "அது" தவறல்ல என்று திருவாய் மலர்ந்தார்! ஆண்கள் பகுதியிலிருந்த பெரும்பாலான "ஆண்கள்" பிற நவீனங்களை கருத்தளவில் ஏற்றுக்கொண்டாலும் இத்தகைய ஒழுக்கமீறலை நவீனம் என்று கருதவில்லை என்று சொன்னது சற்று ஆறுதலான விசயம். அதேபோல், பெண்கள் பகுதியில் "அதை" நியாயப்படுத்திய பெண்மணிகள், இத்தகைய ஒழுக்க மீறல் இயற்கைக்கு முரனாணது என்றவர்களை ஒரு பிடிபிடித்தனர்! இவ்வாறு ஒழுக்கம் மீறுவதும் இயற்கையான நிகழ்வே என்றதுதான் இவர்சொன்ன அபத்தம் என்றால், இறுதியில் இவருக்கு பரிசளித்து கவுரவித்தது அதைவிடக் கொடுமை!



பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் போதிக்கப்பட்ட நெறிகளில் "ஒழுக்கம்" முக்கிய பங்கு வகிக்கிறது. உயிரினங்களில் மனிதப்படைப்பு மட்டுமே ஒழுக்கம் பேணுவதாக நம்பப்படுவதால் வகுப்பறைக்கு மட்டுமின்றி தனிமனித, சமூக வாழ்க்கையிலும் ஒழுக்கம் அவசியம் என்று வலியுறுத்திக் கூறப்படுகிறது. தனிமனித ஒழுக்கமே, ஒழுக்கமுள்ள குடும்பத்தை உருவாக்கும். ஒழுக்கமுள்ள குடும்பமே ஒழுக்கமுள்ள சமூகம் என்று ஒழுக்கம்- தனிமனிதர்கள் மட்டுமின்றி தலைமுறை தாண்டியும் பேசப்படும்.

இன்றைய தலைமுறையினர், நவீனம் என்ற பெயரில் ஒழுக்கம் பிறழ்ந்து பல ஆண்டுகளாகி விட்டாலும், விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டுள்ள ஒழுக்கம் காரணமாக சமூக அமைப்பு ஓரளவு அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அங்கொன்றும்-இங்கொன்றுமாக இலைமறைகாயாக ஒளிவுமறைவாக, குற்ற உணர்ச்சியுடன் நடந்து கொண்டிருந்த ஓரினச்சேர்க்கை எனும் ஒழுக்க மீறல், நவீனம் என்ற பெயரில் பொதுவான நியதியாக திட்டமிட்டு முன்னிறுத்தப்படுகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் முதல் பொழுதுபோக்கு சாதனங்கள்வரை இந்த விஷக்கருத்தை நியாயப்படுத்தும் மேட்டிமை போக்கு எதிர்கால சந்தியினர் மீதான அச்சத்தை ஏற்படுத்துகிறது. பாலியல் அரக்கனான எயிட்ஸின் பிடியிலிலிருந்து மீளமுடியாமல் உலகமும், வல்லரசு கனவில் சஞ்சரித்துள்ள இந்தியாவும் விழிபிதுங்கி நிற்கும்போது, ஓரினச்சேர்க்கையை நியாயப்படுத்தும் போக்கு தீவிரவாதத்தை விடவும் சீரியசான விசயம் என்பதை ஆட்சியாளர்களும் அதிகார மட்டமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இயற்கையின் படைப்பில் ஆண்-பெண் என்ற எதிரெதிர் பாலினத்தின் ஈர்ப்பு காரணமாகவே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானதும் தலையாயதுமான தேவையாக உடலுறவு உள்ளது. மனநிலை பிறழ்ந்தவர்கூட உடலுறவு கொண்டால் அதன் இன்பத்தை உணரமுடியும். ஆணுக்குப்பெண்ணும், பெண்ணுக்கு ஆணுமே உடலுறவை தீர்த்துக்கொள்ளும் வழிமுறை என்பதால்தான் அனைத்து உறுப்புக்களும் ஒத்திருந்தபோதிலும் உடலுறவுக்கான பாலுறுப்புகள் மட்டுமே இயற்கை விதியுடன் பொருந்தும் வகையில் (+/-) வெவ்வேறாக படைக்கப் பட்டுள்ளது. ஒரே உடலமைப்பைக் கொண்டுள்ள புழு, பூச்சி, பறவையினங்களிலும்கூட ஆண்-பெண் பாகுபாட்டை இயற்கை வகுத்து உள்ளதை இந்த அறிவு ஜீவிகள் ஏனோ கவனிக்கவில்லை!

இயற்கைக்கு எதிரான முறையற்ற ஓரினச் சேர்க்கையை இயற்கையான உணர்வு என்பது மடமைத்தனம்! ஆண்-பெண் உறவுகளிலும் முறையான உறவு (திருமணம்) முறையற்ற உறவு (விபச்சாரம்) என்று பகுத்துள்ளபோது, முறையற்ற உறவை விடவும் கேவலமான ஓரினச் சேர்க்கையை இயற்கை உணர்வு என்பவர்கள் நிச்சயம் மனச்சிதைவு கொண்டவர்களாகவே இருக்க வேண்டும்.

பிறருக்கு தொந்தரவு இல்லாமல் செய்வதால் "அது" தவறல்லையாம்! பிறருக்கு தொந்தரவின்றி கொலை, கொள்ளை, ஊழல் இவற்றைக்கூட நியாயப்படுத்தலாம் என்பதை இத்தகைய இயற்கை விரும்பிகளுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் புண்ணியமாகப் போகும்.

பரிதோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிதோம்பித்
தேரினும் அஃதே துணை

விளக்கம்: ஒழுக்கத்தை எவ்வகையிலும் கெடாதவாறு பேணிக்காக்க வேண்டும். பலவகை அறங்களையும் ஆராய்ந்து, எவ்வளவு கவனமாக தேர்ந்தாலும் அவ்வொழுக்கமே துணையாக அமையும்.


நன்றி : இந்நேரம்.காம்

Read more...

காமுகர்கள் தினம்

Monday, February 13, 2012

ஏன் சார், ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வதுகூடத் தவறா? என்று அப்பாவியாகக் கேட்பவர்களும் உள்ளனர். ஐயா! பெற்றோர்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டு பிப்ரவரி-14 மட்டுமல்ல, வருடம் முழுவதும் அன்பை பரிமாறினால் யாரும் கலாச்சார கூக்குரலிடப் போவதில்லையே! அன்பு என்பது ஓர் உணர்வு. அனைத்து ஜீவராசிகளும் தமது துணையுடன் அன்பு கொள்வதும் வெளிப்படுத்துவதும் இயற்கை நியதி.

அன்பு மிகைத்தால் அது கலவியில் முடியும்! தாய்-மகன், தந்தை-மகள்,சகோதரன்-சகோதரி என்பதாக எத்தனையோ உறவுகளை நாம் உருவாக்கிக் கொண்டபோதிலும் அவர்களின் அன்புப் பரிமாற்றம் இவற்றிலிருந்து விதிவிலக்கு. சமவயது இளைஞனும் - இளைஞியும் பரிமாறிக்கொள்ளும் அன்பு அவ்வாறல்ல;
ஊசலாட்டத்திற்கான வழிகள் மலிந்துள்ள சூழலை உருவாக்கிவிட்டு அறநெறி தவறாது இவர்களால் அன்பைப் பரிமாறுவது அரிதினும் அரிதே!

முழு கட்டுரையையும் வாசிக்க

Read more...

எச்சில் இலை வைத்தியம்! - மத நம்பிக்கையின் பெயரால் நடக்கும் கொடுமை!

Tuesday, February 07, 2012

12.02.12 மற்றவை

'மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்...!'

கவியரசு கண்ணதாசனின் அற்புதமான இந்தப் பாடலின் கடைசி இரண்டு சொற்களை மட்டும் 'மதத்தில் இருந்துவிட்டான்' என்று மாற்றினால் போதும்...

தற்போது கர்நாடகத்தில் புகைந்துகொண்டிருக்கும் ஜா'தீ' பிரச்னையோடு இதைத் தொடர்புபடுத்தி நிர்தாட்சண்யமாக சொல்லிவிடலாம்!

''காரணம் என்ன?'' என்று பெங்களூருவில் இருக்கும் நமது நண்பர்களிடம் கேட்டபோதுதான் குக்கீ சுப்ரமண்யா கோயில் குறித்துச் சொன்னார்கள்.

''மங்களூருக்கு அருகில் இருக்கிறது குக்கீ சுப்ரமண்யா கோயில். அங்கு ஒவ்வொரு வருடமும் மூன்று நாள் பெரும் திருவிழா நடக்கும். பிராமணர்களும் மற்ற ஜாதியைச் சேர்ந்தவர்களும் இங்கு குவிவார்கள். அதைவிட, இந்த விழாவுக்கு அதிக அளவில் வருவது தலித்துகள்தான். இந்த விழாவில், கல்யாண சாப்பாடுபோல் உயர் ஜாதி பக்தர்களுக்குப் பந்தி போட்டு சாப்பாடு நடக்கும். அவர்கள் மனதாலும் வயிறாலும் செமையாக சாப்பிட்டுவிட்டு எச்சில் வாழை இலைகளை அப்படியே போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். பிறகு, தாழ்த்தப்பட்ட மனிதர்கள் தங்கள் பிள்ளைகளோடு கைகளைக் கூப்பியபடி சிரத்தையோடு உயர் ஜாதி மக்களின் எச்சில் இலைகளின் மீது படுத்து உருளுவார்கள். அதாவது, நமது மாநில கோயில்களில் 'அங்கப்பிரதட்சணம்' என நடக்குமே அதுதான் இங்கே கர்நாடகத்தில் சொல்லப்படும் 'உருளி சேவா!'

''போன ஜென்மத்தில் செய்த பாவங்களைத் தீர்த்துக்கொள்ளவே தாழ்த்தப்பட்டவர்கள் இப்படிச் செய்கிறார்கள். தலித் மக்களின் இந்த அங்கப்பிரதட்சணம், அவர்கள் மீது தொற்றியிருக்கும் எல்லா தோல் வியாதிகளையும், குணப்படுத்திவிடுமாம். இதை தீண்டாமை என்று அவர்களே சொல்வதில்லை. 'குக்கீ தெய்வமான சுப்ரமணியத்தின் காலடியில் தங்கள் பிரச்னைகளைப் போட்டுவிட்டால் எ ல்லாம் சரியாகிவிடும்' என்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள். உலகின் பிரபல முகங்களான சச்சின் டெண்டுல்கர், ஐஸ்வர்யாராய் போன்ற வி.ஐ.பி.க்களும் இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். இன்றைய விஞ்ஞான உலகில்கூட எவ்வளவு மூடநம்பிக்கைகளில் மூழ்கி இருக்கிறார்கள் பாருங்கள்..'' என்றனர்.

அதைக் கேட்டதுமே பெங்களூருவிலிருந்து 300 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் அந்தக் கோயிலுக்கு பயணித்தோம். மங்களூருவிலிருந்து 104 கிலோமீட்டர் தொலைவில் இருந்த குக்கீ கோயிலுக்குச் சென்றோம். அங்கு கிடைத்த காட்சிகள் நம்மை அதிரவைத்தது.

பாரம்பரியமாக இங்கு நடக்கும் இந்த சம்பிரதாயம் சமீபத்தில்தான் வெளியுலகுக்குத் தெரிந்திருக்கிறது. இதையடுத்து, காட்டுமிராண்டித்தனமான இந்த சடங்கை எதிர்த்து போர்க்குரல் கொடுக்கின்றனர், கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள பகுத்தறிவு அமைப்பினர். உத்தரப்பிரதேச முதல்வரான மாயாவதியும் இந்த சடங்கை கடுமையாகச் சாடியிருக்கிறார். இதனால் வெளியுலகின் வெளிச்சத்தில் இந்தக் கொடுமை பரவிவிட்டதால், கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றமான விதான் சவுதாவும் இந்தப் போராட்டத்தால் ஆடிப்போய் இருக்கிறது. மாநிலத்தின் பொது சேவைத் துறையைச் சேர்ந்த ஏ. நாராயணசாமி, ''இந்தப் பிரச்னை குறித்து ஆராய அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தரும் அறிக்கையின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சொல்லியிருக்கிறார்.
சுப்ரமணியாவில் வசிக்கும் ஹரிஜன சங்கச் செயலாளர் புட்டா, "இ தேவஸ்தானக்கி ஹரிஜனரு, கவுடரு எல்லாவரும் பர்தாதே, மத்த ஏனு? 1925-ல் எங்கள் மக்களை கோயிலுக்குள் அனுமதித்தார்கள். அதற்குப் பிறகு இந்தச் சடங்கு தொடர்ந்து நடக்கிறது. மகாபாரதத்தில்கூட இதுபற்றி கூறப்பட்டுள்ளது. குஷ்டரோகம் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். அதை நாம் மாற்ற முயற்சி செய்யக்கூடாது! எங்கள் மக்கள் இதை வித்தியாசமாகப் பார்க்கவில்லை. யாரோ வேண்டுமென்றே தூண்டி விடுகிறார்கள்'' என்றார்.

கொடுமையான இந்த சடங்கை நேரில் கண்டு கொந்தளித்திருக்கிறார், கர்நாடக பிற்படுத்தப் பட்டோர் அமைப்பின் தலைவர் கே.எஸ்.சிவராம். அவரைச் சந்திக்க முயற்சி த்தோம். அவர் டெல்லிக்குப் போயிருப்பதாகத் தெரிந்ததும் போனில் தொடர்புகொண்டோம்.

''நானு டில்லி பந்ததோதே... நம் ஜனக தேவரு தரிசனமாடக்கே பர்தாரே.. இல்லி நடக்கிதே நோடிதே ஹார்டே வெடிச்சிஹோகங்கே'' என கன்னடத்தில் பேசியவர், ('மக்கள் கடவுளை தரிசிக்கவே இங்கு வருகிறார்கள். ஆனால், இங்கே நடந்த கொடுமைகளைப் பார்த்த பிறகு என் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது..' என்றபடி தமிழிலேயே தொடர்ந்தார்.

''பல ஆண்டுகளாக இந்தக் கொடுமை நடக்கிறது. யாருக்குமே தெரியாமல் இருந்தது. ஊர்க்காரரே என்னிடம் சொன்ன பிறகுதான் நேரில் வந்தேன். காலையில் கோயில் பூஜைகள் முடிந்ததும் உட்பிராகாரத்திற்கு வெளியே நான்கு புறமும் வரிசையாக பந்தி போட்டனர். உயர் ஜாதிக்காரர்கள்தான் உட்கார்ந்து சாப்பிட்டனர். அதன் பிறகு தாழ்த்தப்பட்ட எங்கள் மக்கள் எச்சில் இலை மீது உருண்டார்கள். இதைப் பார்த்ததும் கண்கலங்கிவிட்டேன். உடனே அப்போதே எதிர்த்தேன். ஆனால், கோயில் ஊழியர்கள் என்னைத் தாக்கி வெளியே தள்ளிவிட்டனர். தெருவில் வைத்து உதைத்தார்கள். இதுபற்றி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருக்கிறேன். வழக்கும் போடப்போகிறேன். 'இழிவான சமுதாய மக்கள்' என இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படிச் சொல்லப் போகிறார்கள்? அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். இருந்தும் வேறு சில அமைச்சர்கள், 'இதெல்லாம் மதம் சார்ந்த நம்பிக்கை' என்று சொல்கிறார்கள். எது மத நம்பிக்கை? இது உண்மையானால், தாழ்த்தப்பட்ட மக்கள் இதுபோல் சாப்பிடட்டும். உயர் ஜாதிக்காரர்கள் இப்படி உருளட்டும்.. நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்... எவ்வளவு கேவலமாகச் சொல்கிறார்கள்? உங்கள் ஊரில் ஒரு பெரியார் இருந்தார்.. கேரளாவில் ஒரு கோவூர் இருந்தார்.. தயவுசெய்து அவர்களை எங்கள் மண்ணில் மீண்டும் பிறக்கச் சொல்லுங்கள்.. அப்படியாவது எம் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கட்டும்..'' என்று விரக்தி மற்றும் கோபத்துடன் சொன்னார்.

உருளி சேவாவின் முகமூடிக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப் பித்தை எண்ணிக்கொண்டு நாம் கிளம்பியபோது டாக்டர் ஜி.பி. நாயக் என்பவர், ''கர்நாடகாவில்தான் இ துபோன்ற மூடநம்பிக்கைகள் அதிகம். இதற்கு முன்பு இதைவிடக் கொடுமை நடந்தது. சாப்பிட்டுவிட்டு எழும் உயர் ஜாதிக்காரர்கள் தங்கள் நகங்களை வெட்டி அவற்றை எச்சில் இலையில் போட்டுவிட்டுப் போவார்கள். அதை தாழ்த்தப்பட்ட மக்கள் சாப்பிட வேண்டும். அப்படிச் செய்தால், அவர்களது வம்சத்தையே பேய், பிசாசு அண் டாதாம். தடைப்பட்ட பெண்களின் திருமணங்கள் நடக்குமாம். ஆகவே, இளம் பெண்களும் முதியவர்களும் இப்படி நகங்களை உண்பதற்கு போட்டி போடுவார்கள். பின் னர்தான் இது தடை செய்யப்பட்டது. இதில் கொடுமை என்ன என்றால், நாங்கள் இந்த மூடநம்பிக்கையை எதிர்த்துப் போராடியபோது ஆதிவாசி மக்களே எங்களைத் தாக்க வந்தார்கள். 'எங்களுக்கு நல்லது செய்யும் இவர்கள் எல்லாம் தீய சக்தி' என்று கத்தினார்கள். இப்போதும் அப்படித்தான் சிவராமை அடித்திருக்கிறார்கள். நிச்சயம் அந்த 'சுப்ரமணியமே' இந்த மூடநம்பிக்கைக்கு மூடுவிழா நடத்திவிடுவார்'' என்று நம்பிக்கையோடு சொன்னார்.
கர்நாடக மாநிலத்தில் அதிகமாக படித்தவர்கள் தென் கர்நாடகா மக்கள்தான். குறிப்பாக, மங்களூர் மக்கள். இப்படிப்பட்ட மண்ணில் இப்படியொரு சடங்கு நடப்பது என்றால் அது நிச்சயம் கர்நாடகம் முழுவதும் அவமானம்தான்!

பாம்புக்கு திதி!

தமிழகத்தில் உள்ள பழநிமலை முருகன் கோயிலைப் போல கர்நாடக மாநிலத்தில் பிரபலமாக உள்ள முருகர் கோயில்தான் குக்கீ சுப்ரமண்யா கோயில். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குமாரதாரா நதிக்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் தாரகாசுரனை அழித்த பிறகு தனது வேலில் உள்ள ரத்தத்தைக் கழுவ இங்குள்ள நதிக்கரைக்கு வந்தார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவத்தை நீக்க இந்த நதியில் நீராடினார் என்கிறது புராணம். ஆதிசங்கரர், மத்வர் இங்கு வழிபட்டார்களாம். சேவல்கொடி வைத்துள்ள இத்தல முருகன் 'குக்குட த்வஜ கந்தஸ்வாமி' என்று அழைக்கப்படுகிறார்.

நாகங்களின் தலைவியான வாசுகிக்கு முருகப்பெருமான் இங்கு அபயம் கொடுத்துள்ளதால் ராகு, கேது தோஜத்தால் சிரமப்படுபவர்கள் இங்குள்ள தீர்த்தத் தில் நீராடி முருகனை வழிபாடு செய்கிறார்கள். முன்ஷென்ம பாவங்கள், பித்ரு கடனை நிவர்த்தி செய்யும் தலமாகவும் இது கருதப்படுகிறது. வயிற்று வலி, தோல் நோய் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே வழிபட்டால் நோய்கள் குணமாகும் என்ற ஐதீகமும் உண்டு. இதனால் கர்நாடகா மற்றும் வட இந்தியா முழுவதும் பக்தர்கள் அலை மோதுகிறார்கள்.

இந்தக் கோயிலின் இன்னொரு விசேஜம்.. பாம்புக்கு திதி கொடுப்பது. இந்தக் கோயிலில் பல விழாக்கள் நடக்கின்றன. 'சம்பு சஷ்டி' அன்று நடக்கும் விழாவில் ரத ஊர்வலம் நடக்கும். அன்றுதான் 'உருளி சேவா' நடக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் (மின்மடலில் வந்த கட்டுரை)

தொடர்புடைய வெளிச்சுட்டி

Read more...

மூடநம்பிக்கை வளர்க்கும் முன்ஜென்ம மோசடி!

Wednesday, February 01, 2012

உலகில் இன்று தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாகத் தகவல் தொடர்புகள் சுருங்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது. முன்பெல்லாம் அதிகபட்ச துரிதச் செய்தித் தொடர்பாகத் 'தந்தி' எனப்படும் TELEGRAM இருந்து வந்தது. பின்னர் தொலைத் தொடர்பு நுட்பம் வளர்ந்து, தொலைநகல் TELEX,FACSIMILE (இதுவும் FAX என்று சுருங்கி விட்டது!) என்று விரிவடைந்து சில தசாப்தங்கள் கோலோச்சியது.

இந்நிலையில் eMail,Internet என அடுத்த பத்தாண்டுகளில் பரவலடைந்து இன்று குறுஞ்செய்தி (SMS),பல்லூடகச் செய்தி(MMS),WiFi என்று தற்போது நமது உள்ளங்கைகளில் உலகமே அடங்கிவிட்டது. அதாவது அண்டார்டிகாவில் நடப்பதைக் கன்னியாகுமரியிலிருப்பவர் செல்பேசியில் நேரலையாகக் காணமுடியும் என்ற அளவுக்குத் தகவல் தொடர்புகள் சுருங்கி விட்டன!

இந்த அபரிமித தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றிப் பிடித்துக்கொண்டு வானொலி, தொலைக்காட்சிகளும் வளர்ந்து இன்று முப்பரிமாணத்தில் (3D) காட்சிகளைக் காணும் நிலைக்கும் வந்துள்ளன.

எனினும்,இந்தத்தொழில் நுட்ப வளர்ச்சியை சாமானியர் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ,சாமானியர்களை ஏமாற்றிப் பிழைப்பு நடந்தி வரும் சிலர் மிகத் தந்திரமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "முன்ஜென்மம்" நிகழ்ச்சி ஏதோ மூக்கு சிந்தவைக்கும் சீரியலாக இருக்குமோ என்று கவனிக்காமலிருந்தேன். நடிகை அபிதாவின் முன்ஜென்மம் குறித்த நிகழ்ச்சியை யதார்த்தமாக நேரிட்டது. அதில்,முன்ஜென்மம் குறித்து பரிசோதிப்பவர் டாக்டர் வேதமாலிகா PAST LIFE THERAPIST?! என்று அறிமுகப்படுத்துகிறார்கள்.

கையில் மந்திரக்கோல் இல்லாத குறைதான்! கிட்டத்தட்ட நவீன சூனியக்காரி ரேஞ்சில் முன்ஜென்மம் குறித்து கதையளக்கிறார்.சுருக்கமாக, இதில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் முந்தைய பிறவியில் (?) என்னவாக இருந்தார்கள் என்று ஸ்டுடியோ அறைக்குள் அவர்களை ஆழ்நிலை உறக்கத்தில் ஆழ்த்தி, ஸ்க்ரிப்டில் உள்ள உளரலின் அடிப்படையில் அவர்களது முன்ஜென்ம பிறவி குறித்து கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு மனம்போன போக்கில் எந்தத் தடுமாற்றமுமின்றி நிகழ்ச்சியை நடத்துகிறார்!

மைக் கிடைத்தாலே வார்த்தை ஜாலம்காட்டி ஓட்டுவாங்கும் அரசியல்வாதிகளை எல்லாம் மிஞ்சும் வகையில் இந்நிகழ்ச்சியில் மானாவாரியாகக் கதையளக்கிறார்கள். நான் பார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரை சலூன் கடையில் சவரம் செய்யும் நாற்காலியில் படுக்க வைத்து கண்களை மூடச்செய்து, சில கேள்விகளைக் கேட்கிறார். நாற்காலியில் அமர்ந்துள்ளவர் அரைமயக்க நிலையில்? ஏதேதோ சொல்கிறார். அவர் சொல்லும் பதில்களையும் டாக்டர் வேதமாலிகாவின் கேள்விகளையும் தனித்தனியே கேட்டால் 100% இருவரும் உளறல் பேர்வழிகள் என்று சொல்லலாம். உதாரணமாக,

கேள்வி:நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? (நாற்காலியில் கண்ணை மூடிபடுத்து இருக்கிறார்)

பதில்:ஒரு காட்டில் இருக்கிறேன்.என்னைச்சுற்றி மரங்கள் உள்ளன.அருகில் அருவி உள்ளது (குளிர்சாதனம் பொருத்தப்பட்ட ஒளிப்பதிவு அறையில் இருக்கிறார்)

கேள்வி: வெரிகுட்! என்ன மரம் உள்ளது? (அடிப்பாவி!)

பதில் : (கொஞ்சம் இடைவெளி விட்டு) மாமரம்! (விஜய் ஸ்டூடியோவில் மாமரமே கிடையாது :)

கேள்வி: நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்? (இந்த லொள்ளுதானே வாணாங்கறது!)

பதில் : கிளியாக இருக்கிறேன்! (சாதாரணமாக பொண்ணு கிளிமாதிரி என்று சொல்வது வேறுவிசயம்!)

கேள்வி: ஒகே! உங்கள் (கிளியின்) உருவம் எந்த அளவில் உள்ளது?
பதில் : ம்..ம்...புறா அளவுக்கு உள்ளது! (அடேங்கொப்பா!)

இடையில் தொடரும் போட்டுவிட்டு ஓரிரு விளம்பரத்தைக் காட்டிவிட்டு நிகழ்ச்சி மீண்டும் தொடங்குகிறது.இதை பில்டப் செய்து இயக்கிக் கொண்டிருக்கும் நடிகர் அஜய் ரத்னம்,அபிதாவுக்கு பரிசு கொடுக்கிறார். அதைப் பிரித்துப் பார்த்தால் "கொஞ்சும் கிளிகள்" பொம்மை உள்ளது!

இப்படியாக ஒருவழியாக நிகழ்ச்சியை ஒப்பேற்றுகிறார்கள்.
மொத்த நிகழ்ச்சியையும் பார்த்தால் கெளரவம் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி சொல்வதுபோல் கிளிக்கு ரெக்க முளைச்சிடுச்சுல்ல! அதான் பறந்துபோச்சு!என்று சொல்லக்கூடும் என்பதால் நிகழ்ச்சி குறித்த வர்ணனைகளை இத்தோடு விட்டுவிடுவோம்.

மனிதர்களில் உயர்ந்தவர்-தாழ்ந்தவர் பேதம் வளர்க்கும் மனுதர்ம கோட்பாட்டை சிலர் பற்றிப் பிடித்துக் கொண்டுள்ளனர்.அதாவது மனிதர்கள் (காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான இந்தியர்கள்!) நான்கு வகைப்படுவர் என்றும், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் சொல்லப்பட்டு முறையே பிராமனர், க்ஷத்திரியர், வைசியர் என்று தரம்பிரிக்கப்பட்டுக் கடைநிலை இழிபிறப்பாக சூத்திரர் என்று பெரும்பான்மையினர் மக்கள்மீதான நச்சுக் கருத்துருவாக்கம், பெரியார், அம்பேத்கர் முதல் பல தலைவர்களின் எழுச்சியுரைகளுக்குப் பிறகு ஓரளவு ஓய்ந்துள்ளது.

தற்போது, விஜய் டீவி நடத்தும் இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் இந்த நச்சுக்கருத்து புதிய வடிவங்களில் விதைக்கப்படுகிறதோ என்று கவலை எழுகிறது.இந்நிகழ்ச்சியை வேறுகோணத்தில் அணுகினால், நால்வருணக் கோட்பாட்டை விடவும் மோசமான கருத்தை விதைக்கிறது என்பது விளங்கும். அதாவது மனுதர்ம வருணாசிரமம், மனிதர்களை மனிதர்களாகவே சொல்கிறது; ஆனால், முன்ஜென்மம் நிகழ்ச்சியில் மனிதர்களைக் கிளி, எலி என்று மனம்போன போக்கில் எவ்விதச் சான்றுகளும் இல்லாமல் யூகத்தின் அடிப்படையிலான வாதங்கள்மூலம் இழிவு படுத்துகிறார்கள்.

யூதம்.கிறிஸ்தவம் மற்று இந்து மதபுராணங்களிலும் இவ்வாறாகச் சொல்லப்பட்டுள்ளதாக முன்னுரையை நிகழ்ச்சி நடத்தும் அஜய் ரத்தினம் சொன்னதோடு குர்ஆனிலும் சொல்லப்பட்டுள்ளதாகச் சொல்லி குர்ஆன் வசனத்தையும் பின்னணியில் காட்டுகிறார்கள். உண்மையில் மனிதர்கள் அனைவருமே இவ்வுலகில் மரித்தபிறகு மறுமை எனும் மறுஜென்மம் எடுப்பார்கள் என்றும், இவ்வுலகில் என்னவாக இருந்தார்களோ அவ்வாறே மறுமையிலும் எழுப்பப்பட்டு, நியாயத் தீர்ப்பு வழங்கப்படும் என்றே குர்ஆன் சொல்கிறது.

இவ்வுலகில் செய்த நன்மை-தீமைகளுக்கான கூலிமறுமையில் வழங்கப்படும் என்று சொல்லும் குர்ஆனில், முன்ஜென்மம் என்பதாக சொல்லப்படவே இல்லை. நன்மை தீமைகள் எடை போடப்பட்டு கணக்குத் தீர்க்கப்படும் மறுமை வாழ்க்கையை நிகழ்ச்சியின் டைட்டிலுக்காக, மறுஜென்மத்தோடு ஒப்பிட்டு கல்லா கட்ட நினைக்கும் விஜய் டிவியின் அறியாமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது.


இந்த நிகழ்ச்சியில் பேசப்படுபவை மருத்துவ ரீதியில் சாத்தியமற்றது. சாதாரணமாக இயற்கை மருத்துவத்தை துணை மருத்துவம் (ALTERNATIVE MEDICINE) என்று பெயரளவுக்கே ஒப்புக் கொண்டுள்ளபோது, இதுபோன்ற நிகழ்ச்சிகள்மூலம் இவ்வுலகில் வாழும் மனிதர்கள் முன்ஜென்மங்களில் பறவைகள், விலங்குகளாக இருந்ததாகச் சொல்வது,தற்போதுள்ள குடும்ப உறவுகளுக்கு எதிரானது. அதாவது தற்போது அப்பாவாக இருப்பவர் முந்தைய ஜென்மத்தில் வேறுஉறவாக இருந்தார் என்று சொல்லி இயற்கையான சமூக கட்டமைப்பை சிதைக்கும் வகையில்தான் நிகழ்ச்சி உள்ளது.

மொத்தத்தில் மூடநம்பிக்கையை வளர்க்கும் நிகழ்ச்சியாகவே விஜய் டீவியின் முன்ஜென்மம் நிகழ்ச்சி உள்ளது. ஒரு கிளியையோ எலியையோ பிடித்துவந்து நாற்காலியில் வைத்து, அது முன்ஜென்மத்தில் என்னவாக இருந்தது என்ற கேள்விக்கு சரியான பதில் சொல்லிவிட்டால் இந்தப் பதிவை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் :)



Read more...

அச்சுருத்தல் இல்லாத குடியரசு தினம்! தினமலர் திருந்தி விட்டதா?

Thursday, January 26, 2012

சுதந்திர தினம்,குடியரசுதினம் மட்டுமின்றி தீபாவளி,கிறிஸ்துமஸ் போன்ற மத பண்டிகை தினங்களிலும் "தீவிரவாத அச்சுருத்தல்", குடியரசு/சுதந்திர தின கொண்டாட்டங்களைச் சீர்குலைக்க பாகிஸ்தான்/லஷ்கர் தீவிரவாதிகள் சதி/ ஊடுறுவல்" என்றெல்லாம் பீதிகிளப்புவதோடு, ஓரிரு மாதங்கள் முன்னதாவே சந்தேகத்தின் பெயரில் அப்பாவிகளை குறிப்பாக முஸ்லிம்களை அதிலும் தாடி வைத்திருந்தால் கூடுதல் அடைமொழியுடன் பரபரப்பு செய்தி வெளியிட்டு கைது செய்து, மேற்கண்ட தேசிய கொண்டாட்ட தினங்களில் முஸ்லிம்களை தனிமைபடுத்தி சுகம்கண்ட ஊடகங்களில் 'தினமலம்' மற்றவர்களைவிட சற்று கூடுதலாகவே சுகம் கண்டது.


நேற்று 26-01-2012 இந்தியாவில் 56 ஆவது குடியரசு தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த செய்தியில் இடம்பெற்றிருந்த தினமலர் செய்தியின் வாசகங்களை வாசகர்கள் விளங்கிக் கொள்வதற்காக அப்படியே பதிகிறோம்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக, தீவிரவாத குழுக்களிடமிருந்து, குடியரசு தின விழாவுக்கு தனிப்பட்ட மிரட்டல் எதுவும் இல்லை என்று பாதுகாப்புத்துறையினரும், மத்திய அரசு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.


இருப்பினும் பொதுவான பாதுகாப்பு எச்சரிக்கையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மேலும், தலைநகர் டெல்லியிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஆண்டுதோறும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்றவற்றின்போது தீவிரவாதிகள் நாச வேலைக்கு திட்டமிடுவதாக உளவுப் பிரிவு தகவல் குறித்து எச்சரிக்கை விடுக்கும். இதையடுத்து அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும்.

நமது கேள்வி என்னவென்றால்,

  • "இந்த திடீர் மாற்றம் எப்படி ஏற்பட்டது? நாட்டில் இதுவரை குழப்பம் செய்த தீவிரவாதிகள் எல்லோரும் திருந்தி விட்டார்களா?
  • நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராடி வருபவர்களின் கோரிக்கைகளை எல்லாம் அரசு ஏற்று நிறைவேற்றி வைத்து விட்டதா?
  • லஷ்கர் தீவிரவாதிகள், எல்லை தாண்டுவதை நிறுத்திக் கொண்டார்களா?
  • இதுவரை இத்தகைய பீதியைக் கிளப்பி,பரபரப்பு ஏற்படுத்தியது நம்நாட்டு உளவுத்துறையிலுள்ள சில மதவெறியர்களா?
  • அல்லது தினமலர் உள்ளிட்ட ஊடகங்கள் திருந்தி விட்டனவா?
ஒரு சேஞ்சுக்கு குடியரசு தினத்தன்று மதக்கலவரம் ஏற்படுத்த தீவிரவாதிகள் சதி என்று கோவை பள்ளிவாசலில் நேற்று நடந்த தாக்குதலைச் செய்தியாக போட்டிருக்கலாம். பரவாயில்லை! சட்டம் தன் கடமையைச்செய்து நாட்டில் குழப்பம் ஏற்படுத்தும் உண்மையான தீவிரவாதிகளை அடையாளம் காட்டும் என்று குடியரசு இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

அமைதியாக நேற்றைய 63 ஆவது குடியரசு கொண்டாட்டங்களில் பங்கேற்க முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை குடியரசு தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

இதேநிலை நாட்டின் அனைத்து கொண்டாட்டங்களிலும் நீடிக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.வாருங்கள் வளமான இந்தியாவை உருவாக்க உறுதி கொள்வோம்!

நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ்

Read more...

'விபரங்கெட்ட' வினவு செய்தியாளர், சவுதியிலிருந்து…..

Wednesday, January 25, 2012


கருத்து சுதந்திரம், கத்தரிக்காய் சுதந்திரம் என்றெல்லாம் உசுப்பேற்றி பதிவிடும் வினவுக்கு, பின்னூட்டவெறி தலைக்கேறினால் இஸ்லாம் அல்லது முஸ்லிம் குறித்து எதையாவது எழுதி இணைய சுகம் காண்பது வினவுக்கு அவ்வப்போதைய பொழுதுபோக்கு.

வினவுக்கு கீழ்கண்ட மடலை அனுப்பி வெளியிடக்கோரி 24 மணிநேரம் கடந்த பிறகும் பதில்லாத காரணத்தால், இதை பதிவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.இனிமேல் தோழர் வினவு உரிமை,சுதந்திரம் என்று பதிவெழுதுவதில் அர்த்தமில்லை. அதற்கான அருகதையை இழந்து விட்டார்கள் என்று தெரிவிக்க வேண்டி வினவுக்கு அனுப்பிய மடலை பதிகிறேன்.

=======================
அன்புள்ள தோழர் வினவுக்கு,

சவூதி ஓஜர் கம்பெனியில் ஊழியர்களுக்கு அநீதியிழைக்கப்படுவது குறித்து வினவு ஓர் பதிவில்,நிறுவனம் நிர்வாகம் ஊழியர்களை வஞ்சிப்பது குறித்து எழுதியிருந்தால் இந்த மடலுக்கு அவசியம் வந்திருக்காது. சம்பந்தமே இல்லாமல் தலைப்பில் "சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்!.."என்று தலைப்பிட்டிருந்ததால் வினவுவின் புத்தியில் உரைக்கும்படி சில விசயங்களைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

பின்னூட்டமாக எழுதினால் அதைப்பிடித்து தொங்க சிலருள்ளதால் மடலாக அனுப்புகிறேன். நேர்மையாக வினவு தளத்தில் இதை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

1) சவூதி அரேபியா என்பது பண்டைய இந்தியாவைப்போல் சிறுசிறு நகரங்களாக சிதறிக் கிடந்த பாலைநில சிற்றரசுகளை 19 ஆம் நூற்றாண்டில் பிறந்த "அப்துல் அஸீஸ் பின் ஸவூத்" என்ற அரேபியர் ஒருங்கிணைத்து உருவாக்கிய தேசம்.அதனால்தான் அவரது பெயரால் "ஸவூதி அரேபியா" என்று அழைக்கப்படுகிறது.

2) ஸவூதி உட்பட அரபு நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தாலும்,இஸ்லாம் பெயரளவிலும், இதன் ஆட்சியாளர்களில் பலர் இஸ்லாத்தின் அடிப்படை மக்களாட்சிக்கு எதிரான மன்னராட்சிமுறையையே பின்பற்றி வருகிறார்கள்.

3) மத்திய கிழக்கு மற்றும் எண்ணெய்வள நாடுகளின் செல்வச் செழிப்பின் பின்னணியில் கோடிக்கணக்கான வெளிநாட்டவர்களின் கடின உழைப்பு காரணமாக உள்ளது.குறிப்பாக இந்நாடுகளிலுள்ள இந்தியர்களின் பங்களிப்பு மற்ற நாட்டினரைவிட கூடுதல் என்பது மறுக்க முடியாது உண்மை.

4) வெளிநாட்டினரை மூலதனமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களில் பல்வேறு வகையான பாகுபாடுகள் உள்ளன. உள்நாட்டு மக்களுக்கு குறைவான உழைப்புக்கு அதிக சம்பளமும் சலுகைகளும் வழங்கப்படுவதாக சொல்லப் பட்டாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவே போதவில்லை என்ற புலம்பல்களும் இருக்கவே செய்கிறது. இதுகுறித்து தேவையெனில் விபரமாக எழுதுவேன்.

5) இந்நாடுகளில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில் உள்நாட்டு குடிமக்களுக்கு நிகராக அல்லது அவர்களை விடவும் கூடுதல் சலுகைகளும் ஊதியமும் பெறும் வெளிநாட்டவர்களும் உள்ளனர். உதாரணமாக, அமெரிக்க குடியுரிமை பெற்ற மேலாளரின் ஊதியம், இந்திய குடியுரிமைபெற்ற மேலாளரின் ஊதியத்தைவிட, உள்நாட்டு குடிமகன் பெறும் ஊதியத்தை விடவும்கூட அதிகம்.அதேபோல், ஒரே மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் இந்திய நர்ஸ் பெறும் சம்பளமும் சலுகைகளும்,பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து நாட்டு நர்ஸுகள் பெறுவதைவிடவும் குறைவு.

6) ஓமான் மற்றும் ஐக்கிய அரபு குடியரசில் அந்நாட்டு குடிமகன்களைவிட வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்திய குடிமக்களின் எண்ணிக்கை அதிகம். ஓமானில் இந்திய முதலாளியிடம் ஊதியத்திற்கு பணியாற்றும் உள்நாட்டு அரபுகளின் எண்ணிக்கை சமீப சிலவருடங்கள்வரை கட்டுக்கடங்காமல் போகவே சிறப்பு சட்டங்களை இயற்றி குடிமக்களுக்கு சலுகை வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்றால் அரபு நாடுகளில் இந்தியர்களின் ஆதிக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை அறியலாம்.

7) ஐக்கிய அரபு குடியரசில் மிகப்பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களான ETA, LULU, EMKAY குரூப் போன்றவற்றின் நிறுவனர்களாகவும், உயர் பதவிகளிலும் இருப்பவர்களில் பலர் உள்நாட்டு அரபுக்கள் அல்லர்! அதாவது இந்தியர்கள்! அதாவது உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் உழைப்பால் உயர்ந்தவர்கள்.

நிற்க,

1970 களில் இந்தியர்களின் கனவுபுரியாக இருந்த துபாய் உள்ளிட்ட அரபுநாடுகள்மீதான மோகம் இந்தியர்களை இன்னும் விட்டபாடில்லை.1990 களில் கணினி மற்றும் இணைய தொழில் நுட்பத்தில் இந்தியர்கள் உலகளவில் தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுக்கும்வரை இந்திய அந்நியச்செலவாணி கையிருப்பை தக்கவைக்க இந்த நாடுகளிலிருந்து பெற்ற இந்தியர்களின் ஊதியங்களே உதவின.

நம்நாட்டில் இடைநிலை ஊழியர்கள் பெறும் மொத்த ஊதியத்தைவிட, வளைகுடா நாடுகளில் கடைநிலை ஊழியரின் ஊதியம் அதிகம் என்பதால், நம்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் ஊதியத்தைவிட அதிகம் என்பதால்தான் 40 ஆண்டுகளாக இந்த அரபுநாட்டு மோகம் இந்தியர்களைப் பிடித்தாட்டுகிறது.

தகுதிக்கேற்ற அல்லது சிலரின் தகுதிக்கு மீறிய ஊதியம் வழங்கும் அரபு நாட்டு நிறுவனங்களும் இல்லாமல் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக அனேக வளைகுடா நாடுகள் உள்நாட்டு குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிற்கான பல சட்டதிட்டங்களை இயற்றியும், வெளிநாட்டவர்களின் சராசரி ஊதியத்தைவிட இந்த நாட்டு குடிமக்களின் ஊதியம் குறைவே. இருந்தபோதிலும் எந்த அரபு குடிமகனும் "இந்தியனே வெளியேறு!" என்று இயக்கம் நடத்திப்போராட வில்லை என்பது வினவு போன்றவர்களுக்குத் தெரியுமா?

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்கூட இல்லாத ஒருசில நிறுவனங்களில் நடக்கும் முதலாளியத்துவ அடக்கு முறையை,அந்த நிறுவனங்கள் சவூதியில் இருப்பதால் மதரீதியில் குறைசொல்லி பதிவிடுவது நேர்மையற்றதும், உள்நோக்கம் கொண்டதும், முஸ்லிம்கள் மீதான வன்மமும் ஆகும்.

பின்னூட்டத்தில் ஒரு அன்பர் சொல்லியிருப்பதுபோல், தீவிரவாதிகளுக்கும் முதலாளிகளுக்கும் மதமில்லை. ஜனநாயக,சோசலிச முதலாளிகளைவிட ஓரளவு நியாயமான முதலாளிகள் சவுதி உள்ளிட்ட அரபு நாடுகளில் அதிகம்.இதற்கு அவர்களில் கடுகளவேணும் அல்லாஹ் நம்மைக் கண்கானிக்கிறான் என்ற எண்ணமே காரணம்.

உண்மையிலேயே வினவுக்கு தொழிலாளிகளின் துயர் தீர்க்கும் சமூக ஆர்வமிருந்தால் அதற்கு வழிசொல்லும் செல்லரித்து வழக்கொழிந்துபோன கம்யூனிச சித்தாங்களைவிட, இஸ்லாத்தில் தீர்வுகள் உண்டு. இதை வினவு நடுநிலையாக அணுகி விமர்சிக்கலாம்.

குறிப்பு: இது சவூதிக்கு வக்காலத்து வாங்குவதற்காக எழுதப்பட்டதல்ல.முஸ்லிம்களால் ஆளப்படும் ஓர் தேசம் என்பதால் அதிலுள்ள நிர்வாக குறைகளை இஸ்லாத்தோடு இணைத்து எழுதியதற்கான எதிர்வினைகூடஅல்ல. சிறுவிளக்கமே.

நன்றி.மாற்றுக் கருத்து இருப்பின் தயக்கமின்றி பதிலிடவும்.
=====================

தொடர்புடைய மரைக்காயர் பதிவு:

சவுதி ஓஜர் தொழிலாளர் பிரச்னை: தீர்வு என்ன?

Read more...

மதம் பிடித்த நாத்திகர்கள்...!

Wednesday, January 18, 2012

தலைப்பு பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் என்பதால் பலகீனமான மூளை/ இதயம் கொண்ட நாத்திகர்கள் இப்பதிவை வாசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்:) முன்னதாக நாத்திகர்கள் என்றால் யாரென்று பார்த்து விடுவது நல்லது.

நாத்திகர்கள் என்பவர்கள் தங்களை கடவுள் மறுப்பாளர்களாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இவர்களுக்கு ஆப்ரஹாமிய மதங்களென்று அறியப்படும் பாரம்பரிய தொடர்புகளுள்ள யூதம்,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதம்/மார்க்கம் மற்றும் தென்னிந்தியாவில் வழக்கிலிருந்த 'நடுகல்' வழிபாட்டைச் சிதைத்து,கட்டமைக்கப்பட்ட வந்தேறிகளான ஆரியர் ஆதிக்கம் கொண்ட இந்து மதம்,அதற்கு முன்னதாக ஆசையை ஒழிப்பதற்கு ஆசைப்பட்ட புத்தருக்குப் பின்வந்த புத்தமதம் போன்ற எந்த மதமும் பிடிக்காது!

ஏன் பிடிக்காது என்றால் இவைகளிலெல்லாம் இவர்களுக்கு ஆர்வமில்லை அல்லது இவைபற்றிய விளக்கங்கள் இவர்களின் 'பகுத்தறிவுக்கு' எட்டவில்லை என்பதே காரணம்.ஒப்பீட்டிற்காகச் சொல்வதென்றால் கணினி குறித்த ஆர்வம்/அறிவில்லாதவர் கணினி மறுப்பாளர் என்று சொல்லிக்கொள்வதற்கு ஒப்பானது. நீங்கள் என்னதான் கணினியின் சிறப்புகளை எடுத்துக்கூறினாலும் இவர்களின் பகுத்தறிவில், அதைப்பயன்படுத்துபவரின் குறைகள் மட்டுமே பூதாகரமாகத் தெரியும்,எனினும், இவர்களுக்கு தங்களை பகுத்தறிவாளிகள் என்று சொல்லிக் கொண்டு பிறரின் நம்பிக்கைகளை எள்ளிநகையாடி சிற்றின்பம் காண்கின்றனர்.

உயிரினங்களின் இயற்கை தகவமைப்புக்கேற்ப அவற்றை வகைப்படுத்திய சமூக மிருகமான மனிதன், தன்னைத் தவிர பிறஉயிரினங்களுக்கெல்லாம் அறிவு குறைவு என்று சொல்லிக்கொள்கின்றனர்.(மிருகங்களும் பறவைகளும் நம்மைப்பற்றியும் நமக்கு எத்தனை அறிவு என்றும் கணக்கிட்டு வைத்துள்ளவோ?:) இவ்வாறு மனிதன் தன்னை ஆறறிவு உயிரினம் என்று எப்படி அவனாகவே சொல்லிக் கொள்கிறானோ,அதேபோன்றே நாத்திகர்கள் தங்களை பகுத்தறிவாளிகள் என்று அவர்களாகவே சொல்லிக்கொள்கின்றனர்.

உண்மையில் பகுத்தறிவு என்பது யாதெனில், தீர்க்கமாக நம்பப்படும் ஒன்றை ஆய்வுக்கு உட்படுத்தி அதிலிருந்து கிடைத்த விடைகளையும் தொடர்ச்சியாக மீளாய்வுக்குட்படுத்தி இறுதியாக பெறப்படும் உறுதியான விசயத்தை தீர்க்கமாக நம்புவதே. இதுவரை உலகில் அப்படி எதுவும் உறுதியாக முடிவுக்கு வந்ததாக நமது "n" அறிவுக்கு எட்டவில்லை.

நாத்திகர்களில் எத்தனைபேர்,எந்தெந்தவிசயங்களைப் எவ்வாறு பகுத்தறிந்து அறிவுப்பூர்வமாக நம்பினார்கள் என்ற தகவல் இல்லை. இவர்களது நம்பிக்கைக்கு அடிப்படை, அமெரிக்காவிலோ,ஐரோப்பாவிலோ அல்லது இவர்கள் அறிவுஜீவிகள் என்று நம்புபவர்கள் சொல்வதே சரியானதென்பது மட்டுமே.இவர்களது தேடல் பயணம் முடிவற்று தடுமாறுவதை பகுத்தறிவு என்று பூசிமெழுகுகின்றனர். எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தும் இவர்களின் நம்பிக்கையை நம்பிக்கையாளர்கள் கேள்வி கேட்டால், எதையாவது சொல்லி திசை திருப்புகின்றனர். இந்தளவில் தான் உள்ளது இவர்களின் பகுத்தறிவு.

நாத்திகர்கள் எல்லோருமே இவ்வகையினர் என்று சொல்லிவிடமுடியாது.நாமறிந்த பிரபல நாத்திகரான பெரியார், தனது முன்னோர்களின் மதமான இந்து மதத்தின் பெயரால் நடந்த அட்டூழியங்களைப் பகுத்தறிந்து,இதற்கு தீர்வு இஸ்லாமே என்று நம்பினார். இவரைப் பின்பற்றியவர்களும் அவர் பகுத்தறிந்த ஆய்வு முடிவுகளைப் பரிசீலித்து பெரியார் தாசன்களாக இருந்தவர்கள் எல்லாம் அப்துல்லாஹ் ஆகி உள்ளனர் என்பதிலிருந்து நாத்திகர்களின் நம்பிகை இறுதியாக முடிவடையும் இடம் இஸ்லாம்!

இத்தகைய இஸ்லாம் தோன்றிய நிலப்பகுதிகளில் ஒன்றான சவூதி அரேபியாவைப்போல் நமது இந்தியாவும், வளம்பெற வேண்டும் என்று சுவனப்பிரியன் ஓர் பதிவிடப்போய், நண்பர் கோவி.கண்ணன் எதிர் பதிவிட்டு, ஒரு மொக்கைப்பதிவு போட்டுள்ளார்.இவரது விருப்பம் என்னவெனில் இந்தியா,இந்தியாவாகவே இருக்கட்டும் என்பதே!
சென்னையை சின்ன சிங்கப்பூராக மாற்றுவேன் என்று மு.க.ஸ்டாலினும்,மயிலாடுதுறையை குட்டி துபாயாக மாற்றுவேன் என்று மணிசங்கர் அய்யரும் சொன்னாலோ அல்லது ஜப்பானைப் பார்,அமெரிக்காவைப் பார் என்று குத்தி காட்டினாலும் யாருடைய பகுத்தறிவுக்கும் கோபம் வருவதில்லை.

ஏனென்றால்,இந்நாடுகள் தங்களது அரசியல் அமைப்பின் அடிப்படையாக குர்ஆனை முன்னிருத்தவில்லை! அப்படி முன்னிறுத்தி இருந்தாலும் ஆப்கானிஸ்தான் மாதிரி ஆக்கிரமிக்கப்பட்டோ அல்லது பாகிஸ்தான் மாதிரி தினம்ஒரு குண்டு வெடிக்கவோ செய்யப்படும் என்பது தனிக்கதை.

தன்னை ஓர் அரை நாத்திகராகச் சொல்லிக் கொள்ளும் கோவி.கண்ணனுக்கு சவூதிமேல் ஏன் இவ்வளவு கொலை வெறி என்று தெரியவில்லை. சுவனப் பிரியன் பதிவுக்கு எதிர்ப்பதிவு போட்டதுபோல்,மு.க.ஸ்டாலின்,மணிசங்கர் அய்யர் மற்றும் யாரெல்லாம் ஜப்பானையும் அமெரிக்காவையும் ஒப்பிட்டு முன்னுதாரணமாகச்சொல்கிறார்களோ, அவர்களுக்கெதிராகவும் ஓர் பதிவு போடாதவரை அவரது கொலைவெறி தீரவில்லை என்பதே உண்மை!

பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் மதப்பாகுபாடின்றி கொண்டாட வேண்டுமென்ற இவரது பதிவில் நானிட்ட பின்னூட்டத்திற்கு இவரது சப்பைக்கட்டுகளையும் முஸ்லிம்கள் மீதான வன்மத்தையும் பார்க்கும்போது, சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதுதான் நினைவுக்கு வருகிறது.இவரது குறிப்பிட்ட பதிவில் பின்னூட்டத்தை தடுத்து வைத்திருப்பதால் அதுகுறித்த என் கருத்துக்களை தனியாக என் பதிவில் பதிவேன்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP