அச்சுருத்தல் இல்லாத குடியரசு தினம்! தினமலர் திருந்தி விட்டதா?

Thursday, January 26, 2012

சுதந்திர தினம்,குடியரசுதினம் மட்டுமின்றி தீபாவளி,கிறிஸ்துமஸ் போன்ற மத பண்டிகை தினங்களிலும் "தீவிரவாத அச்சுருத்தல்", குடியரசு/சுதந்திர தின கொண்டாட்டங்களைச் சீர்குலைக்க பாகிஸ்தான்/லஷ்கர் தீவிரவாதிகள் சதி/ ஊடுறுவல்" என்றெல்லாம் பீதிகிளப்புவதோடு, ஓரிரு மாதங்கள் முன்னதாவே சந்தேகத்தின் பெயரில் அப்பாவிகளை குறிப்பாக முஸ்லிம்களை அதிலும் தாடி வைத்திருந்தால் கூடுதல் அடைமொழியுடன் பரபரப்பு செய்தி வெளியிட்டு கைது செய்து, மேற்கண்ட தேசிய கொண்டாட்ட தினங்களில் முஸ்லிம்களை தனிமைபடுத்தி சுகம்கண்ட ஊடகங்களில் 'தினமலம்' மற்றவர்களைவிட சற்று கூடுதலாகவே சுகம் கண்டது.


நேற்று 26-01-2012 இந்தியாவில் 56 ஆவது குடியரசு தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த செய்தியில் இடம்பெற்றிருந்த தினமலர் செய்தியின் வாசகங்களை வாசகர்கள் விளங்கிக் கொள்வதற்காக அப்படியே பதிகிறோம்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக, தீவிரவாத குழுக்களிடமிருந்து, குடியரசு தின விழாவுக்கு தனிப்பட்ட மிரட்டல் எதுவும் இல்லை என்று பாதுகாப்புத்துறையினரும், மத்திய அரசு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.


இருப்பினும் பொதுவான பாதுகாப்பு எச்சரிக்கையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மேலும், தலைநகர் டெல்லியிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஆண்டுதோறும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்றவற்றின்போது தீவிரவாதிகள் நாச வேலைக்கு திட்டமிடுவதாக உளவுப் பிரிவு தகவல் குறித்து எச்சரிக்கை விடுக்கும். இதையடுத்து அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும்.

நமது கேள்வி என்னவென்றால்,

  • "இந்த திடீர் மாற்றம் எப்படி ஏற்பட்டது? நாட்டில் இதுவரை குழப்பம் செய்த தீவிரவாதிகள் எல்லோரும் திருந்தி விட்டார்களா?
  • நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராடி வருபவர்களின் கோரிக்கைகளை எல்லாம் அரசு ஏற்று நிறைவேற்றி வைத்து விட்டதா?
  • லஷ்கர் தீவிரவாதிகள், எல்லை தாண்டுவதை நிறுத்திக் கொண்டார்களா?
  • இதுவரை இத்தகைய பீதியைக் கிளப்பி,பரபரப்பு ஏற்படுத்தியது நம்நாட்டு உளவுத்துறையிலுள்ள சில மதவெறியர்களா?
  • அல்லது தினமலர் உள்ளிட்ட ஊடகங்கள் திருந்தி விட்டனவா?
ஒரு சேஞ்சுக்கு குடியரசு தினத்தன்று மதக்கலவரம் ஏற்படுத்த தீவிரவாதிகள் சதி என்று கோவை பள்ளிவாசலில் நேற்று நடந்த தாக்குதலைச் செய்தியாக போட்டிருக்கலாம். பரவாயில்லை! சட்டம் தன் கடமையைச்செய்து நாட்டில் குழப்பம் ஏற்படுத்தும் உண்மையான தீவிரவாதிகளை அடையாளம் காட்டும் என்று குடியரசு இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

அமைதியாக நேற்றைய 63 ஆவது குடியரசு கொண்டாட்டங்களில் பங்கேற்க முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை குடியரசு தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

இதேநிலை நாட்டின் அனைத்து கொண்டாட்டங்களிலும் நீடிக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.வாருங்கள் வளமான இந்தியாவை உருவாக்க உறுதி கொள்வோம்!

நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ்

Read more...

'விபரங்கெட்ட' வினவு செய்தியாளர், சவுதியிலிருந்து…..

Wednesday, January 25, 2012


கருத்து சுதந்திரம், கத்தரிக்காய் சுதந்திரம் என்றெல்லாம் உசுப்பேற்றி பதிவிடும் வினவுக்கு, பின்னூட்டவெறி தலைக்கேறினால் இஸ்லாம் அல்லது முஸ்லிம் குறித்து எதையாவது எழுதி இணைய சுகம் காண்பது வினவுக்கு அவ்வப்போதைய பொழுதுபோக்கு.

வினவுக்கு கீழ்கண்ட மடலை அனுப்பி வெளியிடக்கோரி 24 மணிநேரம் கடந்த பிறகும் பதில்லாத காரணத்தால், இதை பதிவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.இனிமேல் தோழர் வினவு உரிமை,சுதந்திரம் என்று பதிவெழுதுவதில் அர்த்தமில்லை. அதற்கான அருகதையை இழந்து விட்டார்கள் என்று தெரிவிக்க வேண்டி வினவுக்கு அனுப்பிய மடலை பதிகிறேன்.

=======================
அன்புள்ள தோழர் வினவுக்கு,

சவூதி ஓஜர் கம்பெனியில் ஊழியர்களுக்கு அநீதியிழைக்கப்படுவது குறித்து வினவு ஓர் பதிவில்,நிறுவனம் நிர்வாகம் ஊழியர்களை வஞ்சிப்பது குறித்து எழுதியிருந்தால் இந்த மடலுக்கு அவசியம் வந்திருக்காது. சம்பந்தமே இல்லாமல் தலைப்பில் "சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்!.."என்று தலைப்பிட்டிருந்ததால் வினவுவின் புத்தியில் உரைக்கும்படி சில விசயங்களைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

பின்னூட்டமாக எழுதினால் அதைப்பிடித்து தொங்க சிலருள்ளதால் மடலாக அனுப்புகிறேன். நேர்மையாக வினவு தளத்தில் இதை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

1) சவூதி அரேபியா என்பது பண்டைய இந்தியாவைப்போல் சிறுசிறு நகரங்களாக சிதறிக் கிடந்த பாலைநில சிற்றரசுகளை 19 ஆம் நூற்றாண்டில் பிறந்த "அப்துல் அஸீஸ் பின் ஸவூத்" என்ற அரேபியர் ஒருங்கிணைத்து உருவாக்கிய தேசம்.அதனால்தான் அவரது பெயரால் "ஸவூதி அரேபியா" என்று அழைக்கப்படுகிறது.

2) ஸவூதி உட்பட அரபு நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தாலும்,இஸ்லாம் பெயரளவிலும், இதன் ஆட்சியாளர்களில் பலர் இஸ்லாத்தின் அடிப்படை மக்களாட்சிக்கு எதிரான மன்னராட்சிமுறையையே பின்பற்றி வருகிறார்கள்.

3) மத்திய கிழக்கு மற்றும் எண்ணெய்வள நாடுகளின் செல்வச் செழிப்பின் பின்னணியில் கோடிக்கணக்கான வெளிநாட்டவர்களின் கடின உழைப்பு காரணமாக உள்ளது.குறிப்பாக இந்நாடுகளிலுள்ள இந்தியர்களின் பங்களிப்பு மற்ற நாட்டினரைவிட கூடுதல் என்பது மறுக்க முடியாது உண்மை.

4) வெளிநாட்டினரை மூலதனமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களில் பல்வேறு வகையான பாகுபாடுகள் உள்ளன. உள்நாட்டு மக்களுக்கு குறைவான உழைப்புக்கு அதிக சம்பளமும் சலுகைகளும் வழங்கப்படுவதாக சொல்லப் பட்டாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவே போதவில்லை என்ற புலம்பல்களும் இருக்கவே செய்கிறது. இதுகுறித்து தேவையெனில் விபரமாக எழுதுவேன்.

5) இந்நாடுகளில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில் உள்நாட்டு குடிமக்களுக்கு நிகராக அல்லது அவர்களை விடவும் கூடுதல் சலுகைகளும் ஊதியமும் பெறும் வெளிநாட்டவர்களும் உள்ளனர். உதாரணமாக, அமெரிக்க குடியுரிமை பெற்ற மேலாளரின் ஊதியம், இந்திய குடியுரிமைபெற்ற மேலாளரின் ஊதியத்தைவிட, உள்நாட்டு குடிமகன் பெறும் ஊதியத்தை விடவும்கூட அதிகம்.அதேபோல், ஒரே மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் இந்திய நர்ஸ் பெறும் சம்பளமும் சலுகைகளும்,பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து நாட்டு நர்ஸுகள் பெறுவதைவிடவும் குறைவு.

6) ஓமான் மற்றும் ஐக்கிய அரபு குடியரசில் அந்நாட்டு குடிமகன்களைவிட வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்திய குடிமக்களின் எண்ணிக்கை அதிகம். ஓமானில் இந்திய முதலாளியிடம் ஊதியத்திற்கு பணியாற்றும் உள்நாட்டு அரபுகளின் எண்ணிக்கை சமீப சிலவருடங்கள்வரை கட்டுக்கடங்காமல் போகவே சிறப்பு சட்டங்களை இயற்றி குடிமக்களுக்கு சலுகை வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்றால் அரபு நாடுகளில் இந்தியர்களின் ஆதிக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை அறியலாம்.

7) ஐக்கிய அரபு குடியரசில் மிகப்பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களான ETA, LULU, EMKAY குரூப் போன்றவற்றின் நிறுவனர்களாகவும், உயர் பதவிகளிலும் இருப்பவர்களில் பலர் உள்நாட்டு அரபுக்கள் அல்லர்! அதாவது இந்தியர்கள்! அதாவது உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் உழைப்பால் உயர்ந்தவர்கள்.

நிற்க,

1970 களில் இந்தியர்களின் கனவுபுரியாக இருந்த துபாய் உள்ளிட்ட அரபுநாடுகள்மீதான மோகம் இந்தியர்களை இன்னும் விட்டபாடில்லை.1990 களில் கணினி மற்றும் இணைய தொழில் நுட்பத்தில் இந்தியர்கள் உலகளவில் தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுக்கும்வரை இந்திய அந்நியச்செலவாணி கையிருப்பை தக்கவைக்க இந்த நாடுகளிலிருந்து பெற்ற இந்தியர்களின் ஊதியங்களே உதவின.

நம்நாட்டில் இடைநிலை ஊழியர்கள் பெறும் மொத்த ஊதியத்தைவிட, வளைகுடா நாடுகளில் கடைநிலை ஊழியரின் ஊதியம் அதிகம் என்பதால், நம்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் ஊதியத்தைவிட அதிகம் என்பதால்தான் 40 ஆண்டுகளாக இந்த அரபுநாட்டு மோகம் இந்தியர்களைப் பிடித்தாட்டுகிறது.

தகுதிக்கேற்ற அல்லது சிலரின் தகுதிக்கு மீறிய ஊதியம் வழங்கும் அரபு நாட்டு நிறுவனங்களும் இல்லாமல் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக அனேக வளைகுடா நாடுகள் உள்நாட்டு குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிற்கான பல சட்டதிட்டங்களை இயற்றியும், வெளிநாட்டவர்களின் சராசரி ஊதியத்தைவிட இந்த நாட்டு குடிமக்களின் ஊதியம் குறைவே. இருந்தபோதிலும் எந்த அரபு குடிமகனும் "இந்தியனே வெளியேறு!" என்று இயக்கம் நடத்திப்போராட வில்லை என்பது வினவு போன்றவர்களுக்குத் தெரியுமா?

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்கூட இல்லாத ஒருசில நிறுவனங்களில் நடக்கும் முதலாளியத்துவ அடக்கு முறையை,அந்த நிறுவனங்கள் சவூதியில் இருப்பதால் மதரீதியில் குறைசொல்லி பதிவிடுவது நேர்மையற்றதும், உள்நோக்கம் கொண்டதும், முஸ்லிம்கள் மீதான வன்மமும் ஆகும்.

பின்னூட்டத்தில் ஒரு அன்பர் சொல்லியிருப்பதுபோல், தீவிரவாதிகளுக்கும் முதலாளிகளுக்கும் மதமில்லை. ஜனநாயக,சோசலிச முதலாளிகளைவிட ஓரளவு நியாயமான முதலாளிகள் சவுதி உள்ளிட்ட அரபு நாடுகளில் அதிகம்.இதற்கு அவர்களில் கடுகளவேணும் அல்லாஹ் நம்மைக் கண்கானிக்கிறான் என்ற எண்ணமே காரணம்.

உண்மையிலேயே வினவுக்கு தொழிலாளிகளின் துயர் தீர்க்கும் சமூக ஆர்வமிருந்தால் அதற்கு வழிசொல்லும் செல்லரித்து வழக்கொழிந்துபோன கம்யூனிச சித்தாங்களைவிட, இஸ்லாத்தில் தீர்வுகள் உண்டு. இதை வினவு நடுநிலையாக அணுகி விமர்சிக்கலாம்.

குறிப்பு: இது சவூதிக்கு வக்காலத்து வாங்குவதற்காக எழுதப்பட்டதல்ல.முஸ்லிம்களால் ஆளப்படும் ஓர் தேசம் என்பதால் அதிலுள்ள நிர்வாக குறைகளை இஸ்லாத்தோடு இணைத்து எழுதியதற்கான எதிர்வினைகூடஅல்ல. சிறுவிளக்கமே.

நன்றி.மாற்றுக் கருத்து இருப்பின் தயக்கமின்றி பதிலிடவும்.
=====================

தொடர்புடைய மரைக்காயர் பதிவு:

சவுதி ஓஜர் தொழிலாளர் பிரச்னை: தீர்வு என்ன?

Read more...

மதம் பிடித்த நாத்திகர்கள்...!

Wednesday, January 18, 2012

தலைப்பு பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் என்பதால் பலகீனமான மூளை/ இதயம் கொண்ட நாத்திகர்கள் இப்பதிவை வாசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்:) முன்னதாக நாத்திகர்கள் என்றால் யாரென்று பார்த்து விடுவது நல்லது.

நாத்திகர்கள் என்பவர்கள் தங்களை கடவுள் மறுப்பாளர்களாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இவர்களுக்கு ஆப்ரஹாமிய மதங்களென்று அறியப்படும் பாரம்பரிய தொடர்புகளுள்ள யூதம்,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதம்/மார்க்கம் மற்றும் தென்னிந்தியாவில் வழக்கிலிருந்த 'நடுகல்' வழிபாட்டைச் சிதைத்து,கட்டமைக்கப்பட்ட வந்தேறிகளான ஆரியர் ஆதிக்கம் கொண்ட இந்து மதம்,அதற்கு முன்னதாக ஆசையை ஒழிப்பதற்கு ஆசைப்பட்ட புத்தருக்குப் பின்வந்த புத்தமதம் போன்ற எந்த மதமும் பிடிக்காது!

ஏன் பிடிக்காது என்றால் இவைகளிலெல்லாம் இவர்களுக்கு ஆர்வமில்லை அல்லது இவைபற்றிய விளக்கங்கள் இவர்களின் 'பகுத்தறிவுக்கு' எட்டவில்லை என்பதே காரணம்.ஒப்பீட்டிற்காகச் சொல்வதென்றால் கணினி குறித்த ஆர்வம்/அறிவில்லாதவர் கணினி மறுப்பாளர் என்று சொல்லிக்கொள்வதற்கு ஒப்பானது. நீங்கள் என்னதான் கணினியின் சிறப்புகளை எடுத்துக்கூறினாலும் இவர்களின் பகுத்தறிவில், அதைப்பயன்படுத்துபவரின் குறைகள் மட்டுமே பூதாகரமாகத் தெரியும்,எனினும், இவர்களுக்கு தங்களை பகுத்தறிவாளிகள் என்று சொல்லிக் கொண்டு பிறரின் நம்பிக்கைகளை எள்ளிநகையாடி சிற்றின்பம் காண்கின்றனர்.

உயிரினங்களின் இயற்கை தகவமைப்புக்கேற்ப அவற்றை வகைப்படுத்திய சமூக மிருகமான மனிதன், தன்னைத் தவிர பிறஉயிரினங்களுக்கெல்லாம் அறிவு குறைவு என்று சொல்லிக்கொள்கின்றனர்.(மிருகங்களும் பறவைகளும் நம்மைப்பற்றியும் நமக்கு எத்தனை அறிவு என்றும் கணக்கிட்டு வைத்துள்ளவோ?:) இவ்வாறு மனிதன் தன்னை ஆறறிவு உயிரினம் என்று எப்படி அவனாகவே சொல்லிக் கொள்கிறானோ,அதேபோன்றே நாத்திகர்கள் தங்களை பகுத்தறிவாளிகள் என்று அவர்களாகவே சொல்லிக்கொள்கின்றனர்.

உண்மையில் பகுத்தறிவு என்பது யாதெனில், தீர்க்கமாக நம்பப்படும் ஒன்றை ஆய்வுக்கு உட்படுத்தி அதிலிருந்து கிடைத்த விடைகளையும் தொடர்ச்சியாக மீளாய்வுக்குட்படுத்தி இறுதியாக பெறப்படும் உறுதியான விசயத்தை தீர்க்கமாக நம்புவதே. இதுவரை உலகில் அப்படி எதுவும் உறுதியாக முடிவுக்கு வந்ததாக நமது "n" அறிவுக்கு எட்டவில்லை.

நாத்திகர்களில் எத்தனைபேர்,எந்தெந்தவிசயங்களைப் எவ்வாறு பகுத்தறிந்து அறிவுப்பூர்வமாக நம்பினார்கள் என்ற தகவல் இல்லை. இவர்களது நம்பிக்கைக்கு அடிப்படை, அமெரிக்காவிலோ,ஐரோப்பாவிலோ அல்லது இவர்கள் அறிவுஜீவிகள் என்று நம்புபவர்கள் சொல்வதே சரியானதென்பது மட்டுமே.இவர்களது தேடல் பயணம் முடிவற்று தடுமாறுவதை பகுத்தறிவு என்று பூசிமெழுகுகின்றனர். எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தும் இவர்களின் நம்பிக்கையை நம்பிக்கையாளர்கள் கேள்வி கேட்டால், எதையாவது சொல்லி திசை திருப்புகின்றனர். இந்தளவில் தான் உள்ளது இவர்களின் பகுத்தறிவு.

நாத்திகர்கள் எல்லோருமே இவ்வகையினர் என்று சொல்லிவிடமுடியாது.நாமறிந்த பிரபல நாத்திகரான பெரியார், தனது முன்னோர்களின் மதமான இந்து மதத்தின் பெயரால் நடந்த அட்டூழியங்களைப் பகுத்தறிந்து,இதற்கு தீர்வு இஸ்லாமே என்று நம்பினார். இவரைப் பின்பற்றியவர்களும் அவர் பகுத்தறிந்த ஆய்வு முடிவுகளைப் பரிசீலித்து பெரியார் தாசன்களாக இருந்தவர்கள் எல்லாம் அப்துல்லாஹ் ஆகி உள்ளனர் என்பதிலிருந்து நாத்திகர்களின் நம்பிகை இறுதியாக முடிவடையும் இடம் இஸ்லாம்!

இத்தகைய இஸ்லாம் தோன்றிய நிலப்பகுதிகளில் ஒன்றான சவூதி அரேபியாவைப்போல் நமது இந்தியாவும், வளம்பெற வேண்டும் என்று சுவனப்பிரியன் ஓர் பதிவிடப்போய், நண்பர் கோவி.கண்ணன் எதிர் பதிவிட்டு, ஒரு மொக்கைப்பதிவு போட்டுள்ளார்.இவரது விருப்பம் என்னவெனில் இந்தியா,இந்தியாவாகவே இருக்கட்டும் என்பதே!
சென்னையை சின்ன சிங்கப்பூராக மாற்றுவேன் என்று மு.க.ஸ்டாலினும்,மயிலாடுதுறையை குட்டி துபாயாக மாற்றுவேன் என்று மணிசங்கர் அய்யரும் சொன்னாலோ அல்லது ஜப்பானைப் பார்,அமெரிக்காவைப் பார் என்று குத்தி காட்டினாலும் யாருடைய பகுத்தறிவுக்கும் கோபம் வருவதில்லை.

ஏனென்றால்,இந்நாடுகள் தங்களது அரசியல் அமைப்பின் அடிப்படையாக குர்ஆனை முன்னிருத்தவில்லை! அப்படி முன்னிறுத்தி இருந்தாலும் ஆப்கானிஸ்தான் மாதிரி ஆக்கிரமிக்கப்பட்டோ அல்லது பாகிஸ்தான் மாதிரி தினம்ஒரு குண்டு வெடிக்கவோ செய்யப்படும் என்பது தனிக்கதை.

தன்னை ஓர் அரை நாத்திகராகச் சொல்லிக் கொள்ளும் கோவி.கண்ணனுக்கு சவூதிமேல் ஏன் இவ்வளவு கொலை வெறி என்று தெரியவில்லை. சுவனப் பிரியன் பதிவுக்கு எதிர்ப்பதிவு போட்டதுபோல்,மு.க.ஸ்டாலின்,மணிசங்கர் அய்யர் மற்றும் யாரெல்லாம் ஜப்பானையும் அமெரிக்காவையும் ஒப்பிட்டு முன்னுதாரணமாகச்சொல்கிறார்களோ, அவர்களுக்கெதிராகவும் ஓர் பதிவு போடாதவரை அவரது கொலைவெறி தீரவில்லை என்பதே உண்மை!

பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் மதப்பாகுபாடின்றி கொண்டாட வேண்டுமென்ற இவரது பதிவில் நானிட்ட பின்னூட்டத்திற்கு இவரது சப்பைக்கட்டுகளையும் முஸ்லிம்கள் மீதான வன்மத்தையும் பார்க்கும்போது, சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதுதான் நினைவுக்கு வருகிறது.இவரது குறிப்பிட்ட பதிவில் பின்னூட்டத்தை தடுத்து வைத்திருப்பதால் அதுகுறித்த என் கருத்துக்களை தனியாக என் பதிவில் பதிவேன்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP