இன்ஷியல் பிராப்ளம் (Initial Problem)

Wednesday, August 31, 2005


இது சாதாரண மேட்டர்தான். பெரும்பாலும் இதுக்கு நாம் காரணம் இல்லை. பெற்றோர்களும் அவர்களின் பெற்றோர்களும் செய்தது நமக்கு சில நேரங்களில் தலைவலியாகிவிடும்.

இந்தியர் தவிர மற்றவர்கள் பெரும்பாலும் தந்தை பெயரையும் குடும்ப பெயரையும் பெயருக்குப் பின்னாள் இணைப்பார்கள். உதாரணமாக George W. Bush, சதாம் உசேன் அல் திக்ரிதி etc. மலையாளிகள் தங்கள் பெயருடன் வீட்டின் பெயரை அல்லது ஊரின் பெயரை சேர்த்துச் சொல்வார்கள். உ.ம். திருக்கோட்டியூர் மாதவன்.

தந்தையின் பெயரின் முதல் எழுத்தை இனிசியலாக வைப்பதில் உள்ள சங்கடம். பெயருடன் Initial (தந்தை பெயர்) ஐ இணைக்கும் போது, நம்மில் பெரும்பாலோர் தந்தை பெயரின் முதல் எழுத்தை பயன்படுத்துவோம். இது சிலருக்கு தர்ம சங்கடமாகி விடும். சில பெயர்களை குறிப்பிடுகிறேன்.

க.பால முருகன் - "கபால" முருகன்
C.காளிமுத்து - "சீக்காளி" முத்து.
E.ரசாக் - "ஈர" சாக்கு.
சோ.மாரிமுத்து - 'சோமாரி' முத்து. சோமாரி என்றால் மெட்ராஸ்காரர்களுக்கு கெட்ட கோபம் வரும்.

சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கலாம் அல்லது தந்தையின் முழு பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் முடிஞ்சா சிரிக்கலாம்.

பி.கு. : குரங்கு சிரித்தால் பயப்படுகிறது என்று அர்த்தமாம். யாருக்காவது மேலதிக தகவல் தெரிந்தால் எழுதிப் போடுங்க. மறக்காம இனிஷியலோடு பின்னூட்டமிடுங்க :-)))

Read more...

ராணுவமும் எயிட்சும்

Sunday, August 28, 2005

இந்த செய்தியைப் படித்ததும் வேதனை கலந்த சிரிப்பு வருகிறது. நம் நாட்டின் எல்லையை பாதுகாக்க அனுப்பப்பட்ட வீரர்கள் எல்லை தவறியுள்ளனர். ஆனால் இது வேறு மாதிரியான எல்லை தாண்டல். மேற்கொண்டு படிச்சுட்டு உங்க கமெண்டையும் ஒரு எல்லையோடு வச்சுட்டுப் போங்க.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் (பி.எஸ்.எப்) இடையே எய்ட்ஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீரர்கள் இடையே நாடு முழுவதும் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் 70 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து கவலையடைந்துள்ள அந்தப் படையின் டைரக்டர் ஜெனரல், ஐக்கிய நாடுகள் சபையில் எய்ட்ஸ் தடுப்புப் பிரிவின் உதவியை நாடியுள்ளார்.

இது குறித்து பிஎஸ்எப் படையின் டைரக்டர் ஜெனரல் மூஸாஹரி கூறுகையில்,
படையினர் இடையே எச்ஐவி பரவலைத் தடுக்கவும், எய்ட்ஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் ஐநா எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவுடனான மருத்துவ ஒப்பந்தம்.

முதல் கட்டமாக வீரர்கள் இடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நோயைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்படும்.
மேலும் பிஎஸ்ப்பின் முக்கிய பயிற்சி மையங்களில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

மற்ற பாதுகாப்புப் படையினரோடு ஒப்பிட்டால் பிஎஸ்ப் வீரர்கள் இடையே எய்ட்ஸ் பரவல் மிகவும் குறைவு தான். இருந்தாலும் முன்னெச்சரிக்கையாகவே இந்த நடவடிக்கையை எடுக்கிறோம் என்றார்.

ஆயுதத்தை பயன் படுத்துங்க என்று சொன்னதை 'தவறாக' புரிந்து கொண்டார்களோ?

Read more...

NRI இந்தியர்கள்

Wednesday, August 24, 2005

ஈமெயிலில் வந்த விசயம். கேவலமாத்தான் இருக்கு. அதில் சில எனக்கும் பொருந்துகின்றன. அனுப்பியது ஒரு NRI நண்பன் (ஹும்...Hotmail சபீர் பாட்டியா மாதிரி இருப்பான்னு நம்பி அமெரிக்க சாப்ட்வேர் கம்பெனி ஸ்பான்சர் பண்ணியது. மூனு வருசம் ஓப்பி அடிச்சுட்டு, இப்போ பெட்ரோல் பங்குல 'பார்மேனா' இருக்கிறான் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும் என்பது வேறு விசயம்.)


இந்தியர்களை எளிதில் அடையாளம் காண்பது எப்படி?

  • சாப்பாட்டில் பெரும்பாலும் பூண்டு, வெங்காயம், மிளகாய் வாசனை தூக்கலாக இருக்கும்.
  • பரிசு பொருட்கள் வந்த Wrapper, Gift Box, Aluminium Foil போன்றவற்றை பத்திரமாக எடுத்து வைத்து திருபவும் பயன் படுத்துவார்கள்.
  • இரண்டு பெரிய சூட்கேசுடன் ஏர்ப்போட்டில் நின்று கொண்டிருப்பார்கள்.
  • விருந்துகளுக்கும் பார்ட்டிகளுக்கும் 2-3 மணி நேரம் தாமதமாக வருவார்கள்.
  • தபால் துறை முத்திரையிட மரந்த ஸ்டாம்பை இலாவகமாக உரித்து எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
  • டாய்லெட்டில் ஒழுகும் தண்ணீரை பிளாஸ்டிக் வாளியில் பிடித்து வைத்திருப்பார்கள்.
  • குழந்தைகளுக்கு செல்லப் பெயர் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களுடைய பெயரோடு சம்பந்தமில்லாமல் இருக்கும்.
  • ஒருவரிடமிருந்து விடை பெறும் முன் குறைந்தது ஒரு மணி நேரமாவது வாசல் அருகே நின்று பேசிக் கொண்டிருப்பார்கள்.
  • குடும்பத்தினருடன் காரில் வெளியில் சென்றால், அதிகபட்சம் ஏற்ற முடிந்தவரை ஆட்களை ஏற்றிக் கொள்வார்கள். சிலர் மடிமேலும் உட்கார்ந்திருப்பார்கள்.
  • ரிமோட் கண்ட்ரோல், VCR, கார்பெட், பீரோ இவற்றை பிளாஸ்டிக் உரையால் மூடி வைத்திருப்பார்கள்.
  • நாற்பது வயதைத் தாண்டி விட்டபோதும் பெற்றோருடன் தங்கி இருப்பார்கள். இருந்தாலும் இதை பெருமையாக நினைப்பார்கள்.
  • தங்கள் மகளாக இல்லாதவரை, மற்றவரின் மகள் யாருடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறாள் என்று கண்ணும் கருத்துமாக கவனிப்பார்கள். முடிந்தால் வேறு யாரிடமாவது இவ்விசயத்தைச் சொல்லி 'பத்த' வைப்பதை தங்கள் கடமையாக நினைப்பார்கள்.
  • இரவு 11:00 மணிக்கு மேல்தான் Long Distance Calls பண்ணுவார்கள்.
  • வீட்டிற்கு வர தாமதமாகி விட்டால், மொபைளில் அழைத்து சாப்பிட்டாச்சா என்று கேட்பார்கள். அது இரவு 12:00 மணியானாலும் சரியே.
  • பெற்றோர்கள் யாராவது இந்தியர்களை வெளியிடங்களில் முதல்முறையாக சந்தித்து ஓரிரு நிமிடங்கள் பேசி விட்டு விலகி விடுவார்கள். வீட்டிற்கு வந்ததும் அவர்கள் உங்கள் உறவினர்கள் என்று சொல்வார்கள்.
  • வரவேற்பறையிலுள்ள ஷோபாவின் மேல் பெட்சீட்டைப் போட்டு மூடி வைப்பார்கள். புளுதியிலிருந்து அழுக்காகி விடாமல் இருப்பதற்காக!
  • உங்கள் திருமணத்திற்கு 600 பேருக்கு குறையாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வார்கள்.
  • தங்கள் மகளின் கல்யாணவரன் விளம்பரம் கொடுக்கும் போது "Fair & Slim" என்று கொடுப்பார்கள். உண்மையில் அவர் எப்படி இருப்பார் என்பது வேறு விசயம்.
  • மற்றவர்களின் சொந்த விசயங்களை அரிந்து கொள்வதிலும், தேவையில்லாமல் தலையிட்டு மூக்கை நுளைப்பதிலும் ஆர்வம் காட்டுவார்கள்.

மேலே சொல்லப்பட்டதை படிக்கும் போது சந்தோசம் அடைந்திருப்பீர்கள். ஏனென்றால் உங்களுக்கே தெரிந்திருக்கும் அவற்றில் சில அல்லது பல உங்களுக்கும் பொருந்துகிறதால்!!!

:-) (-:

Be Indian Bye Indian!

I love India!!

ஜெய் ஹிந்த்!!!

Read more...

இந்தியாவின் கடனைத்தீர்க்க ஒரு எளிய வழி.

Thursday, August 18, 2005

சில வருடங்கள் வரை நம் நாட்டின் தனிநபர் வெளிநாட்டுக்கடன்? சுமார் 4,470 ரூபாயாக இருந்து வந்தது. இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கத்தால் அது கொஞ்சம் குறைந்துள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு செய்தியின் மூலம் இதனை அறியலாம்.

சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இந்தியாவின் கடனைத் தீர்ப்பதற்காக தன் பங்குக்கு ரூ. 3000க்கான காசோலையை அனுப்பினார். இந்த காசோலையை தமிழக அரசுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பி வைத்தது.

இதையடுத்து மாநில அரசு அதிகாரிகள், அந்த இளைஞரை வரவழைத்து காசோலையை அவரிடமே திருப்பிக் கொடுத்தனர். சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் (பெயர் குறிப்பிடப்படவில்லை) இந்தியாவின் கடன் தொகையை அறிந்து மலைத்துப் போனார்.

ஒவ்வொரு இந்தியரும் தலா ரூ. 3,000 செலுத்தினால் இந்தியாவின் கடன் தொகையை மொத்தமாக அடைத்து விடலாம் என்பதை அறிந்த அவர் உடனடியாக ரூ. 3,000க்கு வங்கியில் காசோலையை (டிமாண்ட் டிராப்ட்) எடுத்தார்.

இந்த காசோலையை குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அனுப்பி வைத்தார். அத்துடன் ஒரு கடிதத்தையும் இணைத்தார். அதில், இந்தியாவின் கடன் சுமைக்கு எனது பங்கை அனுப்பி வைத்துள்ளேன். இதை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுமாறும் கோரியிருந்தார்.

இந்தக் காசோலை கிடைக்கப் பெற்ற குடியரசுத் தலைவர் மாளிகை உடனடியாக அதை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. காசோலையை சம்பந்தப்பட்ட நபரிடம் திருப்பிக் கொடுத்து விடுமாறு குடியரசுத் தலைவர் மாளிகை கேட்டுக்கொண்டது.

இதையடுத்து தமிழக அரசு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இளைஞரை வரவழைத்து அவரிடம் காசோலையை திருப்பிக் கொடுத்தனர். காசோலை திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டது என்பதற்கான ஒரு அறிக்கையையும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.

இந்தியாவின் கடனைத் தீர்க்க ரூ. 3,000 அனுப்பிய இளைஞரின் மாத சம்பளம் ரூ. 8,000 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்தியாவின் கடனைத் தீர்க்க வேண்டும் என்ற ஆவலால் தனது சக்தியையும் மீறி பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக்கடன்:


$98,232,000,000

Source: CIA World Factbook

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை:
1,065,070,607
Source: CIA World Factbook

நீதி: அதிக குழந்தை பெற்றால் இந்தியாவின் கடன் சுமை குறையும்?

Read more...

பெயர்க்காரணம்

Sunday, August 07, 2005

பெயர்-ஒரு அடையாளம். Nameology என்ற புது துறையே கூட தற்போது பிரபலம். வாஸ்து சாஸ்திரத்தில் கட்டிட அமைப்பை மாற்றி அமைப்பது போல், பெயரிலும் சில எழுத்துக்களை மாற்றி அமைக்கிறார்கள். பெயரை வைத்து இன்னும் என்னென்னமோ செய்றாங்க. அந்த அளவுக்கு பெயர் முக்கியமான ஒன்று.

பெயரில்லாமல் யாரும் இருக்க முடியாது (பெயரிலி?). பெயர் வைத்து அடையாளப் படுத்துவதை யார் கண்டு பிடித்தார்கள் என்று தெரியவில்லை. எல்லா மொழியிலும் நாட்டிலும் பெயரிடும் வழக்கம் இருக்கிறது. சிலருக்கு தன் பெயரை இன்னொருவருக்கு புரிய வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.

சிலரின் பெயரை வைத்து அவர் பிறந்த ஊர் பேசப்படும். சிலர் ஊர்ப்பெயரை தங்கள் பெயருடன் சேர்ந்த்து மகிழ்வர் (உதாரனம்: அதிரைக்காரன்..ஹி.ஹி..) இப்பழக்கம் எல்லா நாட்டிலும் உண்டு. எனக்குத் தெரிந்த சில பெயர்களையும் சம்பந்தப்பட்ட ஸ்தலங்கலையும் பட்டியலிடுகிறேன்.

இந்தியா:

  • சிதம்பரம் - தமிழ்நாடு
  • திருப்பதி - ஆந்திரா
  • காசி - உத்திரப் பிரதேசம்

உலகம்:

  • மக்கம் - சவூதி
  • மதீனா - சவூதி
  • வாஷிங்டன் - அமெரிக்கா

இவையன்றி சில பெயர்கள் எண்களைக் குறிக்கின்றன. (தமிழில் மட்டும்)

  • அஞ்சம்மா, அஞ்சப்பர் (5)
  • ஆறுமுகம் (6)
  • ஏழுமலை (7)
  • எட்டப்பன் (8)
  • நூறு முஹம்மது (100)
  • கண்ணாயிரம் (1000)
  • கோடீஸ்வரன் (10,000,000)

இது போல வேறு ஏதாவது வித்தியாசமான பெயர்கள் இருக்கிறதா?

* சம்பந்தப்பட்ட பெயருடையவர்கள் மன்னிக்க! (குறிப்பாக 'தமிழ்மணம்' காசி!)

** பெயரியல் (Nameology) போன்ற மூடநம்பிக்கைகளில் எனக்கு உடன் பாடில்லை.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP