இனி நான் ஸ்கூலுக்கு போகமாட்டேன்...
Friday, December 02, 2005
அதிகாலையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் மகனை பள்ளிக்குச் செல்ல அன்பாக எழுப்பினாள் அந்த தாய். உரையாடல் இதோ:
தாய்: செல்லம்! எழுந்திருப்பா. ஸ்கூல் போக நேரமாயிடுச்சு
மகன்: போம்மா! நான் ஸ்கூல் போகமாட்டேன்!
தாய்: ஓ...அப்படீன்னா ஏன் போகமாட்டாய் என்பதற்கு ரெண்டு காரணங்கள் சொல்லனும்!
மகன்: ஹைய்யா...காரணம் ஒன்னு- குழந்தைகள் என்னை வெறுக்கிறார்கள். காரணம் இரண்டு- டீச்சர்களுன் என்னை வெறுக்கிறார்கள்!
தாய்: ஆஹ்..இவையெல்லாம் சரியானக் காரணங்களல்ல. எழுந்திருப்பா. ஸ்கூல் போக டயம் ஆயிடுச்சு!
மகன்: ம்ஹூம்...அப்படீன்னா ஏன் ஸ்கூல் போக வேண்டும் என்பதற்கு ரெண்டுக் காரணங்கள் சொல்லு!
தாய்: முதல் காரணம் நீ ஸ்சூலுக்கு இன்னும் சில வருடங்கள்தான் போகப்போகிறாய்.ஏன்னா உனக்கு இப்ப 52 வயது! இன்னொரு முக்கியமானக் காரணம் நீதான் அந்த ஸ்கூலுக்கு பிரின்ஸிபால்!
அதிரைக்காரன்: "என்ன வாசகரே! நீங்களும் வெறுத்துட்டீங்களா?" ;-)
8 comments:
ஹா ஹா ஹா
எதிர்பாகவேயில்லை நீங்கள் இதை இப்படி முடிப்பீர்க் என்று!!!
வாழ்த்துக்குள்!!!
+
மூன்று ஹாக்களுக்கு நன்றி ஜேகே - jk
என்ன அனானிமஸ் அண்ணா!
+ குறியை இங்கு குத்திட்டு போயிட்டீங்க. இதை நானும் எதிர்பார்க்கவே இல்லே.
காசி அண்ணே, இந்த + ஐ எனக்கான பரிந்துரையில் சேர்த்துவிடுங்க!
இதேமாதிரி ஒரு பக்க கதை படிச்ச ஞாபகம். நல்லா இருக்கு.
தேன்துளி,
அப்படியெல்லாம் சொல்லி ஒரு வளரும் எழுத்தாளனை கேவலப்படுத்தாதீர்கள்;-)
எனக்கு வந்த ஆங்கில ஈமெயிலை கஷ்டப்பட்டு மொழி பெயர்த்து பதிவு செய்துள்ளேன்.
ஹீ.ஹி...
//எனக்கு வந்த ஆங்கில ஈமெயிலை கஷ்டப்பட்டு மொழி பெயர்த்து பதிவு செய்துள்ளேன்.//
:-)))))))))))))))))))
"இந்த தம்பி இவ்வளவு அழகா எழுதியிருக்கே" கொஞ்சம் ஓவரா இல்லே :-) (வரவங்க எல்லாம் ஒரு மார்க்கமாத்தா வரங்கப்பூ)
இந்த வரியைப் படிச்சே சிரிச்சிக்கிட்டு இருக்கேன். பதிவும் நல்லா இருக்கு.
/இந்த வரியைப் படிச்சே சிரிச்சிக்கிட்டு இருக்கேன்./
உஷா ஆண்டி,
முதலை வாயில தலையக் கொடுத்துக் கொண்டே சிரிக்கிறீங்க. உங்களை நினைச்சா எனக்கு முதலைக் கண்ணீர் ஸாரி ஆனந்தக் கண்ணீர்தான் வருது.
Post a Comment