தேர்தல்களினால் மக்களுக்கு என்ன பயன்?
Sunday, March 19, 2006
தேர்தல் நெருங்கிடுச்சு. வாக்காளர்களும் வேட்பாளர்களும் இன்னும் ஓரிரு மாதங்களுக்கு சொந்தக்காரர்களாக உறவு பாராட்டிக் கொள்வார்கள். ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களை "உங்கள் வீட்டுப் பிள்ளை..............உங்கள் பொற்பாதங்களை நோக்கி வருகிறார்" என்ற ஒலிபெருக்கி அறிவிப்புகள் இனி அடிக்கடி கேட்கும். ஐந்தாண்டுக்கொருமுறை வரும் தேர்தல்களினால் சாமான்ய மக்களுக்கு என்னென்ன பயன்கள் என்று யோசித்ததில் கிடைத்த அரிய கண்டுபிடிப்புகள்.
தோரனம், கொடி & பேனர்:
1) துணி பேனராக இருந்தால் போர்த்திக் கொள்ளலாம்.
2) டிஜிட்டல் பேனராக இருந்தால் கூரை மீது போர்த்தலாம்.
3) தோரனக் கொடியை சலூனில் சேவிங் பண்ணிய பிளேடை சுத்தம் செய்ய உபயோகிக்கலாம்.
4) தெருமுழுக்க தோரணம் கட்டி இருப்பதால் காக்கா-குருவி எச்சங்கள் தலையில் விழ வாய்ப்பு குறைவு
போஸ்டர்:
1) அழுக்கு சுவரை அலங்கரிக்க உதவுகிறது.
2) புது வீட்டில் திருஷ்டி பூசணிக்கு பதில் சில வேட்பாளர்கள் போட்டோ பொருத்தமாக இருக்கும்.
3) புது போஸ்டரை மேய்வதால் மாட்டுத் தீவனச் செலவு தேர்தல் முடியும் வரை மிச்சம்.
4) எதிர்க்கட்சியினர் போஸ்டரில் சாணி அடிக்கப்படுவதால், ரோடு சாணியின்றி சுத்தமாக இருக்கும்!
ஒலிபெருக்கி:
1) கரகர குரலில் பிரச்சாரம் செய்யப்படுவதால் சோடா,விக்ஸ் ஆகியவற்றின் விற்பனை கனிசமாக அதிகரிக்கும்.
2) வேட்பாளர் வருகிறார் என்பதை தூரத்திலிருந்தே அறிந்து கொள்ள முடிவதால் கடந்த வருடம் தொகுதிப்பக்கம் தலை காட்டாமல் இருந்த வேட்பாளர்களை விரட்டியடிக்க துடைப்பக்கட்டை, பழைய செருப்பு ஆகியவற்றை தயார் செய்து கொள்ள ஏதுவாகும்.
3) காக்கா, கழுதை,நாய் ஆகியவை, பிரச்சாரகர்களின் குரலைப்பார்த்து சந்தோசமடையும்.
தற்போதைக்கு இவைதான் யோசிக்க முடிந்தது! வேற எதுவும் இருந்தால் 'சும்மா நச்சுன்னு' பின்னூட்டமிடுங்க(டோய்!/டியோ!!)
0 comments:
Post a Comment