கொலைமாமணி விருதுகள் அறிவிப்பு
Wednesday, February 25, 2009
கலைச்சேவை புரிந்ததற்காக ஒவ்வொருவருடமும் தமிழக அரசு சிலரைத் தேர்ந்தெடுத்து கலைமாமணி விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது. அவுத்துப் போட்டு ஆடியும் வருமான வரிஏய்ப்பிலும் முதலிடத்தில் வரும் சினிமா நடிகர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் விருது வழங்குவது கடைந்தெடுத்த கயமைத்தனம்.
திரைப்படத்துறையில் இருக்கும் எவரும் தாங்கள் கலைச்சேவை செய்யவே வந்ததாகச்சொல்லாதபோது இத்தகைய விருதுகள் வழங்கப்பட வேண்டுமா? ஆளுங்கட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த திரைப்பட நடிக-நடிகைகளுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதில்லை என்பதிலிருந்து ஆளும்கட்சி அடிவருடிகளுக்கு அரசாங்கம் செய்யும் நன்றிக்கடனாகவே கலைமாமணி விருதுகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
சினிமா பின்னணி கொண்டவர்கள் அரசியலில் இருக்கும்வரை இதுபோன்ற விழாக்களையும் விருதுகளையும் ஒழிக்க முடியாது. அதனால் இதுபோன்ற வெட்டிப்பேச்சுக்களால் பயனில்லை என்பதால் கொலைச்சேவைகளுக்காக கொலைமாமணி விருதுகளுக்கு கீழ்கண்டவர்களைப் பரிந்துரைக்கிறேன்.
ஜார்ஜ் புஷ் (அமெரிக்கா) - நாடுபிடிக்கும் கலை
ஏரியல் ஷரோன் (இஸ்ரேல்) - அகதி முகாம்களைத் தாக்கும்கலை
யஹூத் ஓல்மர்ட் (இஸ்ரேல்) - பாஸ்பரஸ் குண்டுவீசும்கலை
நரேந்திர மோடி (இந்தியா) - இனச்சுத்திகரிப்புக் கலை
L.K.அத்வானி (இந்தியா) - கட்டிட இடிப்புக் கலை
மஹிந்த ராஜபக்சே (இலங்கை) - இனச்சுத்திகரிப்புக் கலை
விடுபட்ட கொலைமாமணிகள் பெயர்களை வலைமாமணிகள் பின்னூட்டம் வாயிலாகவும் பரிந்துரைக்கலாம் ;-)
1 comments:
இது குறித்த எனது பதிவு
http://vurathasindanai.blogspot.com/2009/02/blog-post.html
Post a Comment