நாம ஜென்மபூமி (நகைச்சுவை)

Tuesday, October 05, 2010

பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் மனமுடைந்து போய் இருப்பவர்கள் ரிலாக்ஸ் ஆகும் நோக்கில் வெட்டியின் சிறப்பு 'கடி'கள்!. பின்னூட்டத்திலும் கடிக்கலாம்!



வக்கீல்: இந்த கேஸில் ஹைகோர்டுல மேல்முறையீடு செய்யலாமா?

பாதிக்கப்பட்டவர்: வேணாம் சார் ரொம்ப செலவாகும்! நம்ம ராயபுரம் கபாலி அண்ணாத்தேகிட்டேயே போயிடுறேன்.

***********
போலீஸ் : கபாலி! கட்டப்பஞ்சாயத்து செய்யிறத நிறுத்தலேன்னா உன்னை உள்ளே தள்ளிடுவேன்.

கபாலி : அப்படி சொல்லாதீங்க சார்! இப்பவெல்லாம் கபாலி பஞ்சாயத்தும் நீதிமன்றமும் ஒன்னுதான்!

***********

ராமு: ஆட்டோ திருட்டுப்போன வழக்கில் என்ன தீர்ப்பு கிடைத்தது?

சோமு: எனக்கு ஒரு வீலும் திருடனுக்கு ரெண்டு வீலும் என்று தீர்ப்பு வழங்கி பிரிச்சுக் கொடுத்தாங்க!

***********
குப்பன் : அண்ணே! நம்ம கபாலி அண்ணனுக்கு குசும்பு ஜாஸ்தி!

சுப்பன் : எதை வச்சுப்பா சொல்றே?

குப்பன் : அரிவாளுக்குப் பதிலாகக் கையில் சுத்தியல வச்சிருக்கார்!

***********

வக்கீல் (1): கபாலியும் நீதிபதியும் என்ன சீரியஸா பேசிக்கிறாங்க?

வக்கீல் (2): முக்கியமான தீர்ப்பு விசயமா கபாலிகிட்ட டிஸ்கஸ் பண்றாராம்!

************

குமாஸ்தா: எதுக்குசார் நீதிபதி உங்க மேல கடுப்பாயிருக்கார்?

வக்கீல் : ஏதோ ஞாபகத்தில் "கனம் கபாலி அவர்களே" என்று சொல்லிட்டேன்

Read more...

தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்கள் - தினமலரின் இருட்டடிப்பு

Wednesday, June 23, 2010

தினமலர்.காமில் செம்மொழி மாநாட்டுக்காக பிரத்யேக இணையபக்கம் திறந்து, அதில் கோவை-உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்த செய்திகளையும், சிறப்புக் கட்டுரைகளையும் தொகுத்து வழங்குகிறார்கள். நேற்று வெளியான "கம்யூட்டரும் தமிழும்" என்ற கட்டுரையில் தமிழை கணிமைப்படுத்துவதற்குப் பாடுபட்டத் தமிழர்கள் குறித்த தகவல்களில் அதிரை உமர் தம்பி பற்றிய ஒரு குறிப்புகூட இல்லை!

இதுகுறித்து தினமலர் ஆசிரியருக்கு coordinator@dinamalar.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தும் இதுவரை வெளியிடவில்லை. கட்டுரையாக வெளியிடாவிட்டாலும் சம்பந்தப்பட்ட கட்டுரையில் பின்னூட்டமாக அல்லது ஆசிரியர் பின்குறிப்பாக உமர்தம்பி குறித்த தகவலை இணைத்திருக்கலாம். தினமலரிடம் ஊடக தர்மத்தை எதிர்பார்க்க முடியாது. அதுவும் முஸ்லிம்கள் குறித்த விசயத்தில் தினமலரின் நேர்மை உலகறிந்தது என்பதால் இனியும் எதிர்பார்க்க முடியாது.

ஆங்கிலம் அறிந்தவர்கள் மட்டுமே கணினியைப் பயன்படுத்தலாம் என்ற நிலைமாறி கணிப்பொறி,கணினி என தமிழாக்கப்பட்டு உலகத் தமிழர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்து, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் இணையத் தமிழ் மாநாட்டு அரங்கிற்கு "உமர்தம்பி" அரங்கு என்று பெயரிட்டுள்ளனர். தமிழ் கணிமைக்குப் பங்களித்தவர்களுக்கு செம்மொழி மாநாட்டில் உமர்தம்பி அவர்கள் பெயரால் விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமாதங்களாக வலைப்பூ முதல் இணையம், சஞ்சிகை, வானொலி என அனைத்து தரப்பிலும் உலகத் தமிழர்களின் கோரிக்கைக்குரல் ஒலிப்பது தினமலரு மட்டும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

உமர்தம்பி அவர்களின் தமிழ்சேவையை இருட்டடிப்பு செய்ததோடு மட்டுமின்றி, தமிழ்கணிமை வளர்ச்சியில் தினமலர் நிறுனரையும் சந்தடிச்சாக்கில் குறிப்பிட்டு உள்ளது நகைப்பிற்குறியது. தினமலர் ஒருங்குறிக்குமாறி ஓரிரு வருடங்களே ஆகின்றன. மேலும், அது பயன் படுத்திவரும் "லதா" ஒருங்குறி எழுத்துரு சிலவருடங்களுக்கு முன்புதான் செம்மை படுத்தப்பட்டது. ஆனால் உமர்தம்பி அவர்களின் தேனீ வகை இயங்கு எழுத்துருக்கள் 2003 முதலே இணையத்தில் உலா வருகின்றன!

தமிழுக்கு தானமளித்த உமர்தம்பிக்கு தினமலரின் அங்கீகாரம் தேவையில்லை என்றாலும் உண்மையிலேயே தமிழர்கள்மீதும் தமிழ்மீதும் பற்று இருந்தால், தமிழை கணினியில் புகுத்துவதில் முன்னோட்டியாயிருந்த தமிழ் முஸ்லிம்கள் குறித்த தகவலையும் வெளியிட்டிருக்கலாம்.

தினமலர் வகையறாக்களுக்கு ஈராயிரம் ஆண்டுகளாக நீசமொழியாக இருந்துவந்த தமிழை வைத்து பிழைப்பு நடக்கும் என்றால் மட்டுமே 'தமிழ்பற்று' தலைதூக்கும். தமிழ் கணிமை வரலாற்றைச் சொல்லும் கட்டுரையின் தலைப்புக்கு "கம்யூட்டரும் தமிழும்"! என்று பெயரிட்டிருப்பதிலிருந்தே தினமலரின் செம்மொழித் தமிழ்பற்று பல்லிளிக்கிறது!

(பி.கு:தினமலருக்கு அனுப்பிய மடல் இன்று மாலைக்குள் வெளியிடப்படாத பட்சத்தில் எமது வலைப்பூவில் வெளியிடப்படும்)

அன்புடன்,
அதிரைக்காரன்

Read more...

குரங்குகளின் டார்வின் தியரி

Sunday, June 20, 2010

மூன்றாம் வகுப்பில் அல்லது அதற்கு முன்பு இந்தக் கதை பாடபுத்தகங்களில் படித்திருப்பீர்கள். அதே கதேதான் கிளைமாக்ஸ் மட்டும் மாற்றப்பட்டு, மடலில் வந்தது.

1) ஒரு ஊரில் வளவன் எனும் வணிகன் இருந்தான். அவன் ஊர் ஊராகச் சென்று தொப்பி விற்று வந்தான். கோடைக்காலத்தில் தொப்பிகளுக்கு அதிகத்தேவை இருக்கும் என்பதால் வகைவகையான தொப்பிகளை தன் சைக்கிளில் அடுக்கிக் கொண்டு ஊர் ஊராகச் சென்றான்.

2) உச்சிவெயில் தாண்டிய பிறகு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, அருகிலிருந்த மரத்தடியில் சற்று இளைப்பாரலாம் என்று உட்கார்ந்தான். இதமான காற்று மற்றும் வயிறு நிறைய சாப்பிட்டதாலும் ஊர் ஊராகச் சென்ற களைப்பில் கண்ணயந்து விட்டான். சுமார் இரண்டு மணிநேரம் ஆழ்ந்து தூங்கிவிட்டு, விழித்துப் பார்த்தால் அவன் கொண்டு வந்திருந்த தொப்பிகளை மரத்திலிருந்த குரங்குகள் எடுத்துக் கொண்டு சென்றிருந்தன. நூற்றுக்கணக்கான தொப்பிகளும் குரங்குகளிடம் இருப்பதால், எப்படி அவற்றைத் திரும்பப் பெறுவது என்று தெரியாமல் விழித்தான்.

3) "ச்...சே..கொஞ்சம் உஷாராக இருந்திருக்கலாமே என்று தன்னை நொந்து கொண்டு தலையில் கை வைத்து உட்கார்ந்தான். அவனின் பரிதாப நிலையை சிரித்துக் கொண்டே பார்த்த குரங்குகளும் தங்கள் தலையில் கைவைத்தன. எப்படியாவது குரங்குகளிடமிருந்து தொப்பிகளைத் திரும்பப் பெற்றால்தான் மறுநாளைக்கு விற்க முடியும்.

4) எல்லாமே கலை நுணுக்கத்துடன் செய்த தொப்பிகள். தலையிலிருந்து கையை எடுத்து தன் தொப்பியைக் கழற்றி உச்சந்தலையை சொரிந்து கொண்டே இந்த சிந்தனையை மனதில் ஓடவிட்டான். குரங்குகளும் தொப்பியைக் கழற்றி தங்கள் தலையைச் சொரிந்தன.

5) தான் செய்வதையே குரங்குகளும் செய்வதைப் பார்த்த வளவனுக்கு ஓர் ஐடியா தோன்றியது. தன் தொப்பியைக் கழற்றி குரங்குகளை நோக்கி வீசினான்.

6) உடனே குரங்குகளும் சற்றும் யோசிக்காமல் தங்கள் தொப்பியைக் கழற்றி வளவனை நோக்கி வீசின. தனது ஐடியா ஒர்க் அவுட் ஆகியதை நினைத்து மகிழ்ந்தவனாக கீழே கிடந்த தொப்பிகளைச் சேகரித்துக்கொண்டு அடுத்த ஊரை நோக்கிச் சென்றான்.
========================================================
ஐம்பது வருடம் கழித்து வளவனின் பேரனும் மாறனும் பரம்பரைத் தொழிலான தொப்பி வியாபாரத்தில் ஈடுபட்டான். வளவனுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் மாறனுக்கும் ஏற்பட்டது.

மீண்டும் ஒருமுறை...

2)
3)
4)
5)

ஆகிய பத்திகளைப் வாசித்து விட்டு அடுத்த பத்திக்குச் செல்லவும்.

7) பாய்ந்து வந்த ஒரு குரங்கு அந்தத்தொப்பியை எடுத்துக் கொண்டு மரத்தில் ஏறியது. குழப்பத்தில் தலையைச் சொரிந்து கொண்டு நின்றான். மாறனின் நிலையைப் பார்த்த ஒரு குரங்கு ஏன் தலையைச் சொரிந்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது.

8) பரயாயில்லையே! குரங்குகளிலும் மனிதாபிமானமுள்ளவை உள்ளன என்று மகிழ்ந்து தன் உதவியற்ற நிலையை விளக்கினான். தன் தாத்தாவுக்கும் இது போன்ற இக்கட்டான நிலை ஏற்பட்டபோது இப்படித்தான் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு தொப்பிகளை மீட்டதாகச் சொல்லியதை குரங்கிடம் விளக்கினான்.

9) மாறனின் சோகக்கதையைக் கேட்டுக்கொண்டிருந்த குரங்கு, மாறனைப்பார்த்து ஏதோ சொல்லிவிட்டு மரத்திற்குத் தாவியது. மீண்டும் மாறன் தலையில் கை வைத்து உட்கார்ந்தான். அந்தக் குரங்கு மாறனிடம் அப்படி என்னதான் சொல்லி இருக்கும்?
.
.
.
.
.
.
.
.

.
.
.இன்னும் கீழே செல்லுங்கள்
.
.
.
.
.
.
.
.
.
.
.இன்னும் கீழே செல்லுங்கள்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.இன்னும் கீழே
.
.
.
.
.
.
.
.
..இன்னும்
.
.
.
.
.
.
.
.
..கீழே
.
.
.
.
.
.
.
.
.
.
.
"ஏம்லே! மனுசங்களுக்கு மட்டும்தான் தாத்தா இருப்பாராலே?"

Read more...

கஸ்டமர் சர்வீஸா கஷ்டமர் சர்வீஸா?

Friday, June 11, 2010

ஏர்டெல் செல்பேசி பயனருக்கு உள்வரும் அழைப்புகளில் பிரச்சினையாம்! வாடிக்கையாளர் சேவைக்கு அழைத்து தன் பிரச்சினையை முறையிடுகிறார். கஸ்டமர் சேவைப்பிரில் வேலை பார்ப்பவர்களுக்கு எப்படியெல்லாம் "கஷ்டம்" வருதுன்னு பாருங்க! (கேளுங்க:)

Read more...

சானியா மிர்சாவின் தேசப்பற்று!

Monday, April 19, 2010

டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சுஹைப் மாலிக்கைத் திருமணம் செய்து தனது இந்தியாவின் மீதான தேசப்பற்றை நிரூபித்துள்ளார்! இதை உணராமல் சங்பரிவார சில்லறைகள் சானியாவை நாடுகடத்த வேண்டும், அவருக்கு வழங்கப்பட்ட அர்ஜுனா விருதைத் திரும்பப் பெறவேண்டும் என்றெல்லாம் கூக்குரலிலிட்டார்கள். இந்து மாக்கள் கட்சியினர் கோவையில் சானியாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள்.

சென்ற மாதம்வரை சானியா மிர்சாவை இந்தியப் பெண்களுக்கு முன்மாதிரி, பின்மாதிரி என்றெல்லாம் ஒப்பிட்டும், அவரை முஸ்லிமாகப் பார்க்கவில்லை இந்தியராகவே பார்க்கிறோம் என்றெல்லாம் பேசியவர்கள்தான் தற்போது அவரின் திருமணத்தை எல்லை தாண்டிய தீவிரவாதமாகப் பிரச்சாரம் செய்து கல்யாணவீட்டில் ஒப்பாரி வைத்தனர்.

அதெல்லாஞ்சரி! தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று தலையைச் சொரிபவர்களுக்காக சட்டுபுட்டுன்னு விசயத்துக்கு வந்துடுறேன்.

India is my country and all Indians are my brothers and sisters. I love my country and I am proud of its rich and varied heritage. I shall always strive to be worthy of it. I shall give my parents, teachers and all elders respect and treat everyone with courtesy. To my country and my people, I pledge my devotion. In their well being and prosperity alone, lies my happiness.

இந்தியர்கள் அனைவரும் உடன்பிறந்தோர்" என்பது நம்நாட்டு குடிமக்கள் மனதார உறுதிமொழி ஏற்க வேண்டும். பள்ளிக்கூடம் முதல் பாராளுமன்றம் வரை இதையே முழங்குகின்றோம். ஒரு பாகிஸ்தானியரை திருமணம் செய்து இந்தியர்கள் அனைவரும் அவருக்குச் சகோதரர்கள் என்பதை நிரூபித்துள்ளார். இதை தேசபக்திக்கு சம்பந்தமில்லாத சங்பரிவாரங்களுக்கு யாராச்சும் எடுத்துச் சொன்னால் நல்லது!

Read more...

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?

Monday, April 05, 2010

தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.

விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.

கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.

தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!

தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?

உமர்தம்பி அவர்களை நினைவுகூறும் தமிழிணைய தளங்கள்,குழுமங்கள் மற்றும் தனிநபர் வலைப்பூக்களின் தொகுப்பை கீழ்கண்ட சுட்டிகளில் வாசிக்கலாம்.

இணைய தளங்கள்:
www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி
http://www.tamilmanam.net/m_thiratti_author.php?value=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&pageno=17
http://www.pudhucherry.com/pages/umar.html
http://www.satyamargam.com/index2.php?option=com_content&task=emailform&id=166&itemid=300131
www.geotamil.com/pathivukal/notice_unicode_umar.html
http://www.islamkalvi.com/portal/?p=77
http://ezilnila.com/archives/803
http://ezilnila.com/2009/07/umarthambi/
http://tamilnirubar.org/?p=9958
http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/unicode_dynamic_website.htm
http://www.pudhucherry.com/
http://umarthambi.sulekha.com/blog/post/2006/07/.htm
http://www.tmpolitics.net/reader/
http://www.desikan.com/blogcms/?item=theene-eot
குழுமங்கள்
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845&mode=threaded&pid=71005
http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=1213.0
http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/4633
http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/579
http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/93c7eeb38bede818/814be493e9c363f6?hl=en&ie=UTF-8&q=csd_one
http://groups.google.com/group/Thamizmanam/browse_thread/thread/a510f4d1e236527c/deffa100a949050e#deffa100a949050e
வலைப்பூக்கள்:
http://valai.blogspirit.com/archive/2006/07/14/கணித்தமிழர்-உமர்தம்பி.html
http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html
http://akaravalai.blogspot.com/2006/07/blog-post.html
http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html

நிரழிகள்/மென்பொருள் தரவிறக்கம்
http://www.geocities.com/csd_one/UniConMagz.zip
http://www.geocities.com/csd_one/UWriterSetup.zip
http://www.geocities.com/csd_one/fonts/TheneeUni.zip

ஓரளவு மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.மேலதிக தகவலறிந்தவர்கள் தயவு செய்து கருத்துக்களை பின்னூட்டமிடவும். மேலே குறிப்பிடத் தவறிய சுட்டிகளையும் பின்னூட்டத்தில் தந்துதவினால் உமர்தம்பி அவர்கள் குறித்த தேட்ல்களுக்கு உதவியாக இருக்கும்.

Read more...

கதவைத் திறக்காதே போலீஸ் வரும்

Monday, March 29, 2010

மலையடிவார கிராமத்தின் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஓர் ஆசிரமத்தில் பூட்டிய அறைக்குள் பிரேமானந்தா,சங்கராச்சாரியார், தேவநாதன் குருக்கள் மற்றும் ஸ்ரீநித்தியானந்தா ஆகியோர் அதிமுக்கிய ஆலோசனைக்காகக் கூடியிருந்தனர். சாம்பிராணி புகையினால் கண் எரிச்சல் ஏற்பட்டு பிரேமானந்தா இருமியபோது வாயிலிருந்து லிங்கம் விழுகிறது.

சங்கரச்சாரியார்: "பிரேம்ஸுஜிக்கு புகையால் தோஷம்! கதவைத் திற காற்று வரும்!

நித்தியானந்தா: என்ன பெரியவாழ் கூப்பிட்டீர்களா?

சங்கராச்சாரியார்: "நீ ஒண்ணு! அடைத்த அறைக்குள் சாம்பிராணியை புகைய விட்டதால் பிரேம்ஸுஜிக்கு தொண்டையில் தோஷம். அறைக்கதவைத் திறந்தால் ரஞ்சிதமான காற்று உள்ளே வரும்னு சொன்னேன்!

நித்தியானந்தா: குத்திக்காட்டாதீங்கோ பெரியவாழ்! கேவலமாக இருக்கு!

தேவநாதன்: தற்போதைய சூழலில் கதவைத் திறந்தால் ரஞ்சிதமான காற்று வருதோ இல்லையோ போலீஸ் நிச்சயம் வரும்!பிரேம்ஸுக்கு ஜெயில்ல இருந்து பழக்கம் இருப்பதால் இது ஒரு பிரச்சினையில்லை.

பிரேமானந்தா: தம்பி தேவநாதா! ஏன் ராசா தேவையில்லாமல் என்னைய இழுக்கிறே? மூடிய அறைக்குள் இருப்பது கர்ப்பக்கிரஹம் மாதிரி இல்லே!

தேவநாதன்: பிரேம்ஸ்ஜி கோச்சுக்காதீங்க. உண்மையத்தானே சொன்னேன்.

சங்கராச்சாரியார்: வழவழன்னு பேசி நேரத்தை வீணடிக்காதீங்கோ. சட்டுபுட்டுன்னு முடிவுக்கு வாங்க. நம்மளமாதிரி தெய்வச்சேவை செய்பவர்களுக்கு சட்டரீதியில் வரும் சோதனைகளை எப்படி முறியடிப்பதுன்னு ஒவ்வொருத்தரா கருத்துச் சொல்லுங்கோ!

பிரேமானந்தா : சண்டைக்காரன் காலில் விழுவதைவிட சாட்சிக்காரன் காலில் விழலாம். பெரியவாழ் செய்தமாதிரி சாட்சிகளை பல்டியடிக்கச்செய்து வழக்குகளை புஸ்வானமாக்கலாம்.

தேவநாதன்: இது எல்லா சாமிகளுக்கும் சரியா வருமா? எங்களமாதிரி வருமானமில்லாத சாமிகள் கர்ப்பக் கிரகத்துக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறோம். பக்த அடியாட்கள் செல்வாக்கு இருந்தால்தான் இது சாத்தியப்படும்.

நித்தியானந்தா: மொதல்ல என்னை எப்படிக் காப்பாத்துவது என்று ஐடியா சொல்லுங்கய்யா!

தேவநாதன் : மெமரி கார்டுல பக்காவா பதிவு செய்திருப்பதால் அழித்தாலும் மீட்டெடுக்கும் சாஃப்ட்வேர் ஓசிலய கிடைக்குது. அதனால READ ONLY கோப்புகள் மாதிரி DELETE ONLY கோப்புகளை உருவாக்கச்சொல்லி பக்தர்களை ஊக்குவிக்க வேண்டும்.

பிரேமானந்தா: உருப்படியான ஆலோசனை சொல்லுங்க ராசா!

சங்கராச்சாரியார்: சன் டீவில காட்டுன வீடியோவ யாராச்சும் இப்ப வச்சிருக்கீங்களா?

தேவநாதன்: என்கிட்ட இருக்கு. நியூஸ்ல போட்டதும் மொபைல் போனில் ரெக்கார்ட் பண்ணி வச்சிட்டேன். எத்தனைதடவை போட்டுப்பார்த்தாலும் கிக் இல்லே பெரியவாழ்!

பிரேமானந்தா : இன்னும் திருந்தலையா ராசா? மொபைல் கேமராவுல ரெக்கார்ட்பண்ணுவது உமக்கு வியாதியோ என்னவோ?

சங்கராச்சாரியார்: பிரேம்ஸ்! அம்பியை வையாதீங்கோ. இப்போதைக்கு மொதல்ல அதைப் போட்டுப் பார்க்கலாம். அப்பதான் ஐடியா கிடைக்கும்.

(தேவநாதன் மொபைலில் படம் காட்டுகிறார்)

பிரேமானந்தா: பெரியவாழ்! வீடியோவுல தம்பி நித்தியானந்தன் சைடுல குத்தம் ஏதுமிருப்பது மாதிரி தெரியலையே!

(நித்தியானந்தன் ஆர்வமாக பிரேம்ஸை கவனிக்கிறார்)

தேவநாதன்: என்ன ஓய் பிரேம்ஸ்! பத்திரிக்கைக்காரன்களிலிருந்து ப்ளாக்கர்காரனுங்கவரை அக்குவேறா பிரிச்சி மேய்ஞ்சிட்டானுங்க. நீரு புதுசா குத்தமில்லைன்றீர்?

சங்கராச்சாரி: தம்பி பிரேம்ஸ் கொஞ்சம் புரியும்படி சொன்னா சுந்தரேச ஐயர்கிட்டச்சொல்லி நல்ல வழக்கறிஞரை ஏற்பாடு செய்யலாம். தெளிவா சொல்லுங்கோ.

பிரேமானந்தா: தம்பி நித்தியானந்தா டீவி பார்த்துக் கொண்டிருக்கும்போது நடிகை ரஞ்சிதா அறைக்குள் நுழைந்து காலை அமுக்கிவிட்டு,மாத்திரை எடுத்துக் கொடுக்குது.தம்பி சாப்பிட்டு விட்டு கட்டிப்பிடிச்சு ஆசிர்வதிக்குது. இதிலே எங்கே தப்பு தண்டா இருக்கு?

தேவநாதன்: தம்பி என்ன யாரையும் ஆள் வச்சு கொலையா செய்தார்? சூப்பர் பாயிண்ட் பிரேம்ஸ்ஜி.

சங்கராச்சாரி: ஓய் தேவநாதா உன் கொள்ளிக்கட்டை வாயை மூடிக்கிட்டு சும்மாக்கிட.

நித்தியானந்தன்: பிரேம்ஸ்ஜி இது மட்டும்தானா இல்லே வேறு ஏதாச்சும் சட்ட நுணுக்கமான பாயிண்ட்ஸ் உண்டா?

பிரேமானந்தா:அப்புறம்! நித்தியானந்தா ராசா ஒண்ணும் ரஞ்சிதாவிடம் சில்மிஷம் செய்யலே! நல்லா பாருங்க ரஞ்சிதாதான் தம்பிமேல ஏறிப்படுத்துச்சு! இந்த பாயிண்ட் படியும் தம்பிமேல குத்தமில்லை. அதனால இதையே காரணமாகச் சொல்லி தம்பிதப்பிச்சிடலாம். வேணுமின்னா ரஞ்சிதா நித்தியானந்தாவைக் கற்பழித்தாரென்று கேஸை திசை திருப்புங்கோ!

நித்தியானந்தாவுக்கு ஆனந்தக் கண்ணீர் வடிகிறது. பிரேம்ஸின் காலில் விழுகிறார். குனிந்து நித்தியானந்தாவைத் தூக்கி வாயிலிருந்து லிங்கம் எடுத்துக் கொடுக்கிறார். தேவநாதன் பக்தி பரவசத்துடன் பிரேம்ஸைப் பார்க்கிறார்.

சங்கராச்சாரியார்: எல்லாம் பகவான் செயல்! நம்ம கேஸ் எல்லாம் முடிஞ்சபின்னாடி தம்பி பிரேமானந்தாவை சின்னவாழாகப் பட்டாபிசேகம் செய்திட வேண்டியதுதான்!

அடுத்த சில நாட்களில் காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கில் சாட்சிகள் எல்லோருமே பல்டி அடித்துவிட்டதால் அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யாததால் அனைத்து வழக்கிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார். மறுநாள் நித்தியானந்தாவும் விடுவிக்கப்படுகிறார். அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பிரேமானந்தாவிற்கு நன்னடத்தை விதியின்கீழ் ஆயுள் தண்டனை 15நாள்சிறைத்தண்டனையாகக் குறைக்கப்பட்டு அதையும் ஏற்கனவே சிறையில் கழித்துவிட்டதால் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.

வாயை வெச்சிக்கிட்டு சும்மா இருக்காமல் பிரேம்ஸை சீண்டியதால் தேவநாதனுக்கு பிரேம்ஸ் ஐடியா கொடுக்கவில்லை.

Read more...

கத்தரிக்காய் தினம்

Saturday, February 13, 2010

"காதலுமில்லை கத்தரிக்காயுமில்லை"என்று காதலையும் கத்தரிக்காயையும் சேர்த்து சொல்வது ஏனென்று பலருக்கும் தெரியாது.எனக்கும்கூட தெரியாது என்பதுதான் ஹைலைட்!

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-14 ஐ காதலர் தினம் என்று கொண்டாடுகின்றனர். காதலர் தினம் என்ற போர்வையில் ஆண்-பெண் சிலர் எல்லை மீறுவதும், அவ்வாறு எல்லை மீறுபவர்கள்மீது சிலர் அத்துமீறுவதும் சமீப வருடங்களாக நடந்து வருகிறது.

காதல் மனசு சார்ந்த விசயம் என்று காதலுக்கு மரியாதை செலுத்துபவர்கள் மனசை எதற்கு ஐந்து நட்சத்திர விடுதியில் குடித்துவிட்டு ஆட்டம் போட வேண்டும்? வாய் நாற்றத்தைப் பொருட்படுத்தாமல் ஒரே ஸ்ட்ராபோட்டு எப்படித்தான் கூல்ட்ரிங்ஸ் சாப்பிடுகிறார்களோ! (அதான் சார் காதல் என்று எவனோ முனுமுனுப்பது கேட்கிறது)

தலைப்பை விட்டு எங்கோ போய்விட்டேன்! காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தம்? கத்தரிக்காய்க்கு ஒரு நியாயம் காதலுக்கு ஒரு நியாயமா? மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் உடல்நலத்துக்கும் நிலத்துக்கும் எப்படி நல்லதல்லவோ அதேபோல் மரபு மீறிய காதலும் நல்லதல்ல.

ஆகவே, பிப்ரவரி-14 ஐ கத்தரிக்காய் தினமாக அனுஷ்டிப்போம்! ஒருவழியா தலைப்புக்கு வந்துவிட்டேன். (எவண்டா அழுகிய கத்தரிக்காயை வீசினவன்?)

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP