யார் அந்தக் குழந்தை?

Thursday, May 25, 2006

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தபோது நம் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் உரையாடிக் கொண்டிருந்தார். ஜனாதிபதிகளை மக்கள் நேசிப்பதற்கான தலைத்துவத்துவ தத்துவத்தை சொல்லும் படி அப்துல் கலாமிடம் ஆலோசனைக் கேட்டார்.

அதற்கு அப்துல் கலாம் ஜார்ஜ் புஷ்ஷிடம், "தன்னைச் சுற்றி இருப்பவர்கள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும்" என்றார். அவர்கள் புத்திசாலிகளா என்று எப்படி அறிந்து கொள்வது? என்றார். இப்போது அதை உங்களுக்கு செய்து காட்டுகிறேன் என்றவாறு பிரதமர் மன்மோகன் சிங்கை போனில் அழைத்தார் நம் ஜனாதிபதி.

கலாம்: பிரதமர் மன்மோகன் ஜி! தயவு செய்து இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்! "உங்கள் தாயாருக்கும் தந்தைக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை உங்களுக்கு சகோதரியோ அல்லது சகோதரனோ அல்ல! எனில் யார் அது?" என்று கேட்டு தனது போனின் ஸ்பீக்கரை ஆன் செய்தார்.

மன்மோகன்: (உடனடியாக) அதுதான் நான்! என்றார்.

கலாம்: மிகச்சரியாகச் சொன்னீர்கள் பிரதமரே! மிக்க நன்றி! என்றவாறு ஸ்பீக்கரை ஆஃப் செய்துவிட்டு புஷ்ஷைப் பார்த்து புன்னகைத்தார்.

புஷ்: சூப்பர் ஐடியாவாக இருக்கிறது. இதே முறையை நானும் செய்து பார்க்கிறேன்!

அமெரிக்கா திரும்பியதும் வெள்ளை மாளிகையில் தன் சகாக்களிடம் இதே கேள்வியைக் கேட்டார். முதலில் காண்டலிசாவிடம் கேட்டார். லிசா தன் தலையைச் சொரிந்து கொண்டே, யோசித்துச் சொல்கிறேன்! கொஞ்சம் டயம் வேண்டும் என்றார். புஷ்ஷும் OK சொல்லி விட்டார்.

உடனடியாக வெள்ளை மாளிகையின் சீனியர் செனட்டர்களை அழைத்த காண்டலிசா, இதே கேள்வியை அவர்களிடம் கேட்டார். யாருக்குமே பதில் தெரியவில்லை. ஏமாற்றத்துடன் காலின் பவலை அழைத்து அதே கேள்வியைச் சொன்னார்.

காண்டலிசா: "உங்கள் தாயாருக்கும் தந்தைகும் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை உங்களுக்கு சகோதரியோ அல்லது சகோதரனோ அல்ல! எனில் யார் அது?"

காலின்பவல்: ஹஹ்ஹா! அதுதான் நான்! என்றார்


மிகுந்த சந்தோசத்துடன் வெள்ளை மாளிகையில் புஷ்ஷின் அறைக்குள் நுழைந்த காண்டலிசா "எனக்கு விடை தெரியும்! அது நமது காலின் பவல்!" என்றார்.

இதனைக் கேட்ட புஷ் ஏளனமாக,"தவறு! அது மன்மோகன் சிங்! சந்தேகம் இருந்தால் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் கேட்டுக் கொள்! என்றார்.

மேலும் புஷ் சமாச்சாரங்களுக்கு,

அமெரிக்க அதிபருடன் ஒரு நேர்காணல்!

அமெரிக்க அதிபருடன்...

புஷ் விளையாட்டு

Read more...

யார் அந்தக் குழந்தை?

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தபோது நம் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் உரையாடிக் கொண்டிருந்தார். ஜனாதிபதிகளை மக்கள் நேசிப்பதற்கான தலைமைத்துவத்துவ ஐடியா சொல்லும் படி அப்துல் கலாமிடம் கேட்டார்.

அதற்கு அப்துல் கலாம் ஜார்ஜ் புஷ்ஷிடம், "தன்னைச் சுற்றி இருப்பவர்கள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும்" என்றார். அவர்கள் புத்திசாலிகளா என்று எப்படி அறிந்து கொள்வது? என்றார். இப்போது அதை உங்களுக்கு செய்து காட்டுகிறேன் என்றவாறு பிரதமர் மன்மோகன் சிங்கை போனில் அழைத்தார் நம் ஜனாதிபதி.

கலாம்: பிரதமர் மன்மோகன் ஜி! தயவு செய்து இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்! "உங்கள் தாயாருக்கும் தந்தைக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை உங்களுக்கு சகோதரியோ அல்லது சகோதரனோ அல்ல! எனில் யார் அது?" என்று கேட்டு தனது போனின் ஸ்பீக்கரை ஆன் செய்தார்.

மன்மோகன்: (உடனடியாக) அதுதான் நான்! என்றார்.

கலாம்: மிகச்சரியாகச் சொன்னீர்கள் பிரதமரே! மிக்க நன்றி! என்றவாறு ஸ்பீக்கரை ஆஃப் செய்துவிட்டு புஷ்ஷைப் பார்த்து புன்னகைத்தார்.

புஷ்: சூப்பர் ஐடியாவாக இருக்கிறது. இதே முறையை நானும் செய்து பார்க்கிறேன்!

அமெரிக்கா திரும்பியதும் வெள்ளை மாளிகையில் தன் சகாக்களிடம் இதே கேள்வியைக் கேட்டார். முதலில் காண்டலிசாவிடம் கேட்டார். லிசா தன் தலையைச் சொரிந்து கொண்டே, யோசித்துச் சொல்கிறேன்! கொஞ்சம் டயம் வேண்டும் என்றார். புஷ்ஷும் OK சொல்லி விட்டார்.

உடனடியாக வெள்ளை மாளிகையின் சீனியர் செனட்டர்களை அழைத்த காண்டலிசா, இதே கேள்வியை அவர்களிடம் கேட்டார். யாருக்குமே பதில் தெரியவில்லை. ஏமாற்றத்துடன் காலின் பவலை அழைத்து அதே கேள்வியைச் சொன்னார்.

காண்டலிசா: "உங்கள் தாயாருக்கும் தந்தைகும் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை உங்களுக்கு சகோதரியோ அல்லது சகோதரனோ அல்ல! எனில் யார் அது?"

காலின்பவல்: ஹஹ்ஹா! அதுதான் நான்! என்றார்


மிகுந்த சந்தோசத்துடன் வெள்ளை மாளிகையில் புஷ்ஷின் அறைக்குள் நுழைந்த காண்டலிசா "எனக்கு விடை தெரியும்! அது நமது காலின் பவல்!" என்றார்.

இதனைக் கேட்ட புஷ் ஏளனமாக,"தவறு! அது மன்மோகன் சிங்! சந்தேகம் இருந்தால் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் கேட்டுக் கொள்! என்றார்.

Read more...

இனி நாய்களை நம்பக்கூடாது!

Friday, May 12, 2006

இண்டர்நெட்டின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை மனிதர்களே அதிகம் பயன்படுத்தி வந்த இண்டர்நெட்டின் சேவை தற்போது எல்லை மீறி விட்டது. ஆம்! தாய்லாந்தில் நாய்களுக்கு எனப் பிரத்யேகமான 24 மணிநேரமும் இயங்கும் மியூசிக் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.



http://www.dogradiothailand.com/ என்ற முகவரியில் இந்த இணையதளம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இதில் நாய்களுக்குப் பிடித்தமான இசை வாத்தியங்களின் இசை ஒலிக்கப்படும் என்று பாங்காக் நகரில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு "பாங்காக் போஸ்ட்' தெரிவித்துள்ளது.

ரேடியோ நிகழ்ச்சித் தொகுப்பாளர் அனுபன் பூன்சியோன் என்பவரை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. "இசையைக் கேட்டால் சில நாய்கள் வாலை ஆட்டும்; சில நாய்கள் தரையில் படுத்துக் கொண்டு தலையை உயர்த்தி ஆட்டி இசையை ரசிக்கும்' என்று அனுபன் தெரிவித்தார். (அடப்பாவிகளா! இப்படிக் கூட மார்க்கெட்டிங் பண்ணுவீங்களா?)

தனது வளர்ப்பு நாய்க்கு தாய்லாந்து நாட்டின் கிராமிய இசைதான் அதிகம் பிடிக்கும் எனக் கூறிய அனுபன், பெரும்பாலும் நாய்களுக்கு அதன் எஜமானர்களுக்குப் பிடித்தமான இசைதான் அதிக அளவில் பிடிக்கும் என்றும் கூறினார். (லொள்ளுதானே?)

முன்பெல்லாம் வீட்டுக் காவலுக்கு நாய் வளர்ப்பதாகச் சொல்வார்கள். இது போன்ற இணையவானொலிகள் இருபத்து நான்கு மணி நேரமும் இயங்குவதால் இனி நாய்களால் வீட்டை காவல் காக்க முடியுமா? என்று தெரியவில்லை. ஆகவே இனி காவலுக்கு நாய்களை நம்பக் கூடாது!

''This is a trial period. We're still checking the system and waiting for feedback from listeners'' said Anupan Boonchuen, programme. அதாவது இது பரிச்சார்த்த நிலையே. நாங்கள் இச்சேவையை இன்னும் ஆராய்ந்து வருகிறோம். இத்தளம் பற்றி நேயர்களின் கருத்தை எதிர்ப்பார்க்கிறோம்" என்றார் அதன் தொகுப்பாளர் அனுபன் பூன்சியோன்.

ஆகவே இதைப் படிப்பவர்கள் முடிந்தால் இண்டர்நெட் அறிந்த நாய்களிடம் சொல்லி, தொகுப்பாளருக்கு FEEDBACK (பின்னால் கடி?) கொடுக்கச் சொல்லவும்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP