யார் அந்தக் குழந்தை?
Thursday, May 25, 2006
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தபோது நம் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் உரையாடிக் கொண்டிருந்தார். ஜனாதிபதிகளை மக்கள் நேசிப்பதற்கான தலைத்துவத்துவ தத்துவத்தை சொல்லும் படி அப்துல் கலாமிடம் ஆலோசனைக் கேட்டார்.
அதற்கு அப்துல் கலாம் ஜார்ஜ் புஷ்ஷிடம், "தன்னைச் சுற்றி இருப்பவர்கள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும்" என்றார். அவர்கள் புத்திசாலிகளா என்று எப்படி அறிந்து கொள்வது? என்றார். இப்போது அதை உங்களுக்கு செய்து காட்டுகிறேன் என்றவாறு பிரதமர் மன்மோகன் சிங்கை போனில் அழைத்தார் நம் ஜனாதிபதி.
கலாம்: பிரதமர் மன்மோகன் ஜி! தயவு செய்து இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்! "உங்கள் தாயாருக்கும் தந்தைக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை உங்களுக்கு சகோதரியோ அல்லது சகோதரனோ அல்ல! எனில் யார் அது?" என்று கேட்டு தனது போனின் ஸ்பீக்கரை ஆன் செய்தார்.
மன்மோகன்: (உடனடியாக) அதுதான் நான்! என்றார்.
கலாம்: மிகச்சரியாகச் சொன்னீர்கள் பிரதமரே! மிக்க நன்றி! என்றவாறு ஸ்பீக்கரை ஆஃப் செய்துவிட்டு புஷ்ஷைப் பார்த்து புன்னகைத்தார்.
புஷ்: சூப்பர் ஐடியாவாக இருக்கிறது. இதே முறையை நானும் செய்து பார்க்கிறேன்!
அமெரிக்கா திரும்பியதும் வெள்ளை மாளிகையில் தன் சகாக்களிடம் இதே கேள்வியைக் கேட்டார். முதலில் காண்டலிசாவிடம் கேட்டார். லிசா தன் தலையைச் சொரிந்து கொண்டே, யோசித்துச் சொல்கிறேன்! கொஞ்சம் டயம் வேண்டும் என்றார். புஷ்ஷும் OK சொல்லி விட்டார்.
உடனடியாக வெள்ளை மாளிகையின் சீனியர் செனட்டர்களை அழைத்த காண்டலிசா, இதே கேள்வியை அவர்களிடம் கேட்டார். யாருக்குமே பதில் தெரியவில்லை. ஏமாற்றத்துடன் காலின் பவலை அழைத்து அதே கேள்வியைச் சொன்னார்.
காண்டலிசா: "உங்கள் தாயாருக்கும் தந்தைகும் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை உங்களுக்கு சகோதரியோ அல்லது சகோதரனோ அல்ல! எனில் யார் அது?"
காலின்பவல்: ஹஹ்ஹா! அதுதான் நான்! என்றார்
மிகுந்த சந்தோசத்துடன் வெள்ளை மாளிகையில் புஷ்ஷின் அறைக்குள் நுழைந்த காண்டலிசா "எனக்கு விடை தெரியும்! அது நமது காலின் பவல்!" என்றார்.
இதனைக் கேட்ட புஷ் ஏளனமாக,"தவறு! அது மன்மோகன் சிங்! சந்தேகம் இருந்தால் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் கேட்டுக் கொள்! என்றார்.
மேலும் புஷ் சமாச்சாரங்களுக்கு,
அமெரிக்க அதிபருடன் ஒரு நேர்காணல்!
அமெரிக்க அதிபருடன்...
புஷ் விளையாட்டு