மறக்க முடியாத முத்தம்

Tuesday, May 22, 2007

உண்மையில் பெண்கள் மகா கில்லாடிகள்தான்! கண்ணைக் கட்டிக்கொண்டு வெவ்வேறு நபர்கள் முத்தம் கொடுத்தாலும் இதயப்பூர்வமான முத்தத்தை அடையாளம் கண்டுகொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள்! இந்தத் திறமை நம்மூர் பெண்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக அமெரிக்கப் பெண்களுக்கு உண்டு. பள்ளிப் பருவத்திலிருந்தே இத்தகைய பரவசமான அனுபவம் கிடைக்கப் பெற்றவர்கள் அல்லவா? வீடியோக் காட்சியைப் பார்த்து நீங்களே சொல்லுங்கள்.



மறக்காமல் உங்கள் பின்னூட்ட முத்தங்களை சரமாரியாக வாரி வழங்கலாமே!

Read more...

ராவணன் பாலம்?

Monday, May 21, 2007



சர்ச்சைக்குறிய ராமர் பாலம் பற்றி பலரும் எழுதியுள்ளார்கள். என் பங்குக்கு நானும் எழுதாவிட்டால் தமிழினத் துரோகியாகும் வாய்ப்புள்ளது. இதுபற்றி அத்வானியுடன் நடந்த நேர்காணல்!


அதிரைக்காரன்: வாங்க அத்வானி ஜி. நல்லா இருக்கீங்களா?


அத்வானி: நமஸ்தே அதிரைக்காரன்ஜி. நல்லா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க?



அதிரைக்காரன்: (உங்கள் ஆட்சி போனதிலிருந்து) நல்லா இருக்கிறேன் ஜி.


அத்வானி: பேட்டியை எங்கு வைத்துக் கொள்வோம்? உங்களூர் ராஜாமடம் பாலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷை பேட்டி கண்டிருக்கிறீர்கள் என்று புஷ் பெருமையாகச் சொன்னார். அங்கேயே வைத்துக் கொள்ளலாமா?


அதிரைக்காரன்: இல்லை. உங்களுக்குப் பிடித்த ராமர் பாலத்தில் காலாற நடந்து கொண்டே பேசலாமே.


அத்வானி: (திடுக்கிட்டு) என்ன விளையாடுறீங்களா? ராமர் பாலம் எங்கிருக்கிறது? இருந்தாலும் அதன்மீது எப்படி நடக்க முடியும்?
அதிரைக்காரன்: இராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருப்பதாக ஜெயலலிதா அம்மையார், சுப்ரமணியசுவாமி மற்றும் உங்கள் கட்சிக்காரர்கள் சொல்லி வருகிறார்களே?


அத்வானி: அடப்போங்க அதிரைஜி. அவங்களுக்கு அரசியல் பண்ண வேறு விசயம் எதுவும் கிடைக்கவில்லை.அதனால்தான் ராமர் பாலம் விசயத்தைக் கையிலெடுத்துள்ளார்கள்.


அதிரைக்காரன்: அப்படியா! நான் கூட ஏதோ உண்மையான பாலம்தான் இருக்குதோ என்று நினைத்து விட்டேன். ஆமா! ராமர் பாலம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?


அத்வானி: இதென்ன கேள்வி. அவர்களுக்கு எதிராகக்கருத்துச் சொல்ல எனக்கு என்ன செலக்டிவ் அம்னீஷியா? ராமர் பாலம் 17 இலட்சத்து ஐம்பதாயிரம் வருஷத்துக்கு முன்னாடி கட்டப்பட்டது. இந்தியாவின் பாரம்பரிய சின்னங்கள் காக்கப்பட வேண்டும் என்பதால்தான் நாங்களும் ராமர்பாலத்தை இடிக்கக் கூடாது என்கிறோம்.


அதிரைக்காரன்: "இடிக்கக்கூடாது" என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?


அத்வானி: ஆம்! இந்தியாவின் பாரம்பர்யச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.


அதிரைக்காரன்: உங்களால் இடிக்கப்பட்ட பாபர் மசூதியும் நம்நாட்டின் பாரம்பரிய சின்னம் தானே அதை ஏன் இடித்தீர்கள்?


அத்வானி: பழசை ஏன் கிளருகிறீர்கள்? வேறு ஏதாவது புதுசாகக் கேளுங்கள்.


அதிரைக்காரன்: 400 வருடங்களுக்கு முந்தைய பாபர் மசூதியை 15 வருடங்களுக்கு முன் இடித்தது பழைய விசயமா உங்களுக்கு? 17,50,000 வருடப் பாலம் மட்டும் புதிய விசயமா? நானூறு வருடங்கள் பழையதா 17,50,000 வருடங்கள் பழையதா?


அத்வானி: அதிரைஜி. கடலுக்கடியில் பாலம் இருப்பதை அமெரிக்காவின் நாஸா விண்வெளி மையம் சமீபத்தில் உறுதி படுத்தியுள்ளது. தெரியுமா?


அதிரைக்காரன்: விண்வெளியில் தினமும் புதுசு புதுசா கண்டுபிடிப்பதும், ஏற்கனவே கண்டு பிடித்தவை மறுக்கப்படுவதும் சகஜம். கடலுக்கடியில் இருப்பது ராமர் பாலம்தான் என்று நாஸா சொன்னதாக யார் சொன்னார்?


அத்வானி: பார்த்தீங்களா! நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள். தினமலரில் படங்களுடன் இது பற்றி செய்தி வெளியிட்டிருந்தார்களே.


அதிரைக்காரன்: நாஸாவின் குறிப்பின்படி இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் மணற்திட்டுகள் முன்பு பாலமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்றுதானே சொல்லப் பட்டுள்ளது.


அத்வானி: நாஸாவிற்கு ராமாயணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவேதான் மணல் திட்டு என்று புரியாமல் சொல்லியுள்ளார்கள். நாங்கள் அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால் நாஸாவில் உள்ள விஞ்ஞானிகள் ராமாயணம் படிக்க ஏற்பாடு செய்வோம். பாரதத்தின் நன்மைக்காகச் சொல்லப்படும் எதையும் ஒப்புக் கொள்ளலாம்.


அதிரைக்காரன்: சேது சமுத்திரத் திட்டத்தால் பாரதத்திற்கு பொருளாதார நன்மைகள் உள்ளதை ஒப்புக் கொள்கிறீர்களா?


அத்வானி: தேவையில்லாமல் அடுத்தவர் மதநம்பிக்கைகளுடன் நீங்கள் விளையாடக்கூடாது. ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு இடைப்பட்ட பாலம் அனுமாரால் கட்டப்பட்டது.

அதிரைக்காரன்: மண்டபத்திலிருந்து ராமேஸ்வரத்தை இணைக்கும் பாம்பன் பாலம் ஆங்கிலேயரால் 1911 இல் கட்டப்பட்டது.


கடலில் இயற்கையாக தோன்றி மறையும் மணல் திட்டுகளை பாலம் என்று சொல்வது சரியல்ல. எங்களூர் கடலில்கூட சில வருடங்களுக்கு முன் ராஜாமடம் ஆறு கலக்குமிடத்தில் மணற்திட்டு ஏற்பட்டு சிறிய தீவு போல இருக்கிறது. உலகின் பெரும்பாலான தீவுகள் மணற்திட்டுகளால்தான் ஏற்படுகின்றன.

அத்வானி: அதிரைஜி, கடலியல் பூகோல மாற்றங்களை நீங்கள் அறியாமல் பேசுகிறீர்கள். பல இலட்சம் வருடங்களுக்கு முன் இலங்கை இந்தியாவின் பகுதியாகவே இருந்தது. இடையில் கடல்புகுந்து இலங்கையை தனித்தீவாக மாற்றிவிட்டது.மேலும், பூமித் தட்டுக்கள் நகரும்போது நிலப்பரப்பிலும் கடற்பரப்பிலும் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்பட்ட மாற்றங்களால்தான் நம்நாட்டின் இமயமலை கூட உயர்ந்ததாகச் சொல்கிறார்கள். அப்புறம், உங்களூர் பெயரிலும் "ராம்" என்று என்று உள்ளதால் தேவைப்பட்டால் அதை பிறகு பேசிக்கொள்வோம். :-(

அதிரைக்காரன்: இதே லாஜிக்படி பார்த்தால் நீங்கள் இடித்த பாபர் மசூதி இருந்த பகுதியில் ராமர் பிறந்திருக்க வாய்ப்பில்லைதானே? பூகோல மாற்றங்களால் நில,நீர்ப்பரப்புகள் மாறும் போது, வட இந்தியாவில் சரயு நதியின் ஓட்டமும் ஏன் மாறி இருக்காது? அதன்படி, நீங்கள் சொல்லும் ராமர் பிறந்த இடம் தற்போதைய சரயு நதிக்கரையிலுள்ள அயோத்தி அல்ல என்றுதானே அர்த்தம்.


அத்வானி: நீங்கள் மீண்டும் மீண்டும் பழசைக் கிளறுகிறீர்கள். "ராமர்பாலம் பாதுகாப்பு" இயக்கத்திற்கு வந்துள்ள கரசேவகர்களைச் சந்திக்க வேண்டும். பேட்டியை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.




அதிரைக்காரன்: கரசேவகர்கள் கரத்தில் கடப்பாறையுடன் வந்துள்ளார்களே? வந்திருப்பது இடிக்கவா அல்லது கட்டவா?




அத்வானி: (திடுக்கிட்டு) தவறு நடந்துவிட்டது! "ராமர் பாலம் பாதுகாப்பு இயக்கம்" என்றதும் இவர்கள் பாலத்தை இடிக்க வேண்டுமோ என்று தவறாகப் புரிந்துகொண்டு கடப்பாறையுடன் வந்துள்ளார்கள். பேட்டியை சீக்கிரம் முடியுங்கள், அவசரப்பட்டு இடித்து விடபோகிறார்கள்.

***********************************

தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள மூன்று மாநிலங்கள் நதிநீர் ஆதாரங்களைத் தடுக்கிறார்கள். யாராலும் தடுக்க முடியாத கடல்நீர் ஆதாரங்களை வைத்து மாநிலத்தையும் நாட்டையும் முன்னேற்ற முயலும்போது ராமர் பாலம் என்ற பெயரால் சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.




ராமர் பாலத்தால் நன்மையடைந்தவர்கள் ஜெயலலிதாவும் இலங்கையும் மட்டுமே. ராமர் பாலம் எதற்கும் பயன்படாவிட்டாலும் எதிர்காலத்தில் ஜெயலலிதாவுடன் பி.ஜே.பி உறவுப் பாலம் அமைக்க நிச்சயம் பயன்படலாம். தமிழகம் மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் இப்பாலத்தை ராவணன் பாலம் என்பதே சரி.



ராமர் சார்! ஒரேயொரு வரம் தரவேண்டும். அதுவும் நம்நாட்டின் முன்னேற்றத்திற்காக மறுக்காமல் தர வேண்டும். அதாவது எங்களுக்காக மீண்டும் ஒரேயொரு முறை பதிமூன்று வருடங்கள் மட்டும் உங்கள் பரிவாரங்களுடன் வனவாசம் சென்று வந்தால் போதும்; நீங்கள் திரும்பி வருவதற்குள் நாங்கள் வல்லரசாகி இருப்போம்.



கொஞ்சம் பெரிய மனதுடன் இந்த உதவியைப் பண்ணுங்களேன். ப்ளீஸ்! :-)

Read more...

சற்றுமுன் காப்பியடித்தது?

Tuesday, May 15, 2007


வலைப்பூ நண்பர்கள் நடத்தும் "சற்றுமுன்" தளம் தொடங்கப்பட்ட புதிதில் உலகெங்கும் நடக்கும் செய்திகளை மொழிமாற்றி அல்லது முன்னுரையுடன் உடனுக்குடன் வெளியிட்டார்கள்.
சமீபத்தில் 'சற்றுமுன்" தளத்தில் வெளியாகும் பதிவுகள் பெரும்பாலும் தட்ஸ்தமிழ் டாட்காம் போன்ற தளங்களிலிருந்து காப்பி அடித்த செய்திகளாகவே இருக்கின்றன. (கஷ்டப்பட்டு செய்தி சேகரிக்கும் தட்ஸ்தமிழ்காரர்கள் வருத்தப்பட மாட்டார்களா?:)


பிறதளங்களை விட தட்ஸ்தமிழ் செய்திகளை தரும் வேகம் சிறப்பானது. மேலும் முன்பு தானியங்கு எழுத்துருவில் இருந்த தளத்தை, சமீபத்தில் யூனிகோட் எழுத்துருவுக்கு மாற்றி இருக்கிறார்கள். ஆகவே, அதில் வரும் செய்திகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்வதைப் படிப்பது சற்றுமுன் தளத்தை எந்த விதத்தில் வேறுபடுத்தும்?


வெவ்வேறு நாடுகளில், நகரங்களிலிருந்து பங்கேற்று ஆர்வமாக எழுதும் வலைப்பூ செய்தியாளர்கள் ஆங்காங்கு நடக்கும் அல்லது நாளிதழ்களில் வெளிவராத உள்ளூர் செய்திகளை பதியலாமே. இதன் மூலம் மற்ற செய்திகளை விட அதிக நம்பகத்தனமையைப் பெற முடியும்.


"சற்றுமுன்" நண்பர்கள் கவனிப்பார்கள் என்ற ஆதங்கத்தில் சொல்லி விட்டேன்.


அப்புறம், சற்றுமுன் வெளியான என் இன்னொரு பதிவையும் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கவும். :-)

Read more...

வயது வந்தவர்களுக்கு மட்டும்..

தயவு செய்து 18 வயதுக்கு குறைந்தவர்கள் இத்தளத்தைப் பார்வையிட வேண்டாம். பொறுமையை சோதிக்கும் தளம். தளத்திற்குள் நுழைந்ததும் ஏண்டா வந்தோம் என்று இருக்கும்.
நண்பர்களுக்கு மட்டுமல்ல, எதிரிகளுக்கும் பரிந்துரைக்கும் வசதியுடன் உள்ள இணைய தளம். விரும்பினால் இதுபோன்ற அனுபவத்தை இப்பதிவில் பின்னூட்டலாம் (அல்லது adiraiwala@gmail.com க்கும் மெயிலிடலாம்.)

Read more...

சூட்டிங் ஸ்பாட்டில் பாம்பு கடித்தது

Wednesday, May 09, 2007

பாம்பு படமெடுக்குமென்று தெரியும். சூட்டிங் ஸ்பாட்டிற்கே வந்து படமெடுத்த பாம்பைப் பற்றி தெரியுமா? தட்ஸ்தமிழ் டாட்காமில் SNAKE BITES ACTRESS ASHA IN SHOOTING SPOT என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.



தமிழில் "நடிகை தொடையை கடித்த பாம்பு" என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். தமிழ் தலைப்புக்கும் ஆங்கில தலைப்புக்கும் வித்தியாசம் உண்டா என்று தெரியவில்லை.




எது எப்படியோ தமிழ் சினிமாக்களில் சூட்டிங் ஸ்பாட் எது? என்பதை பாம்பு நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது.

Read more...

மின்மடலில் வந்த மஹாலட்சுமி

Saturday, May 05, 2007

நைஜீரியன் மோசடி (Nigerian Scam) பற்றி தெரிந்திருந்தால் உங்களுக்கு இப்பதிவில் செய்தி ஒன்றுமில்லை. நம் மின்மடலின் இன்பாக்ஸில் கவர்ந்திழுக்கும் தலைப்பில் சில மடல்கள் வந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளின் இராணுவ அதிகாரிகளின் மகள், மகன், வாரிசு என்ற அறிமுகத்துடன் அழகான ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.

சிலசமயம் அப்போதைய செய்தி நாயகர்களை முன்வைத்தும் எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக சதாம் ஹுசேனின் மருத்துவர், பாதுகாவலர் என்ற அறிமுகத்துடன் இருக்கும். மடலின் சாரம்சம் பத்து மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை உங்கள் பெயரில் உள்ளூர் வங்கிக்கு மாற்ற வேண்டும். அதற்காக உங்களைப் பற்றிய விபரங்களைக் கேட்டிருப்பார்கள். மாதிரிக்கு எனக்கு வந்த 1,000,001 ஆவது மின்மடலைப் பாருங்கள் :)

==================================================
TANFIRELD CHAMBERS AND ASSOCIATES LAW FIRM [w1h002@sino.net]

MANAGING PARTNER
TANFIRELD CHAMBERS AND ASSOCIATES LAW FIRM
TEL:+1-206-350-5553 FAX:+1-206-339-6617 w1h002@treffpunkt.cc

FINAL NOTIFICATION OF BEQUEST

Dear beneficiary,

On behalf of the Trustees and Executor of the estate of Late Engr.Jurgen Krugger; I once again try to notify you as my earlier letter was returned undelivered.I hereby attempt to reach you again by this same email address stated on the WILL. I wish to notify you that late Engr. Jurgen Krugger made you a beneficiary to his WILL. He left the sum of Seventeen Million One Hundred Thousand Dollars (USD$17,100.000.00 ) to you in the codicil and last testament to his WILL.

Being a widely travelled man, he must have been in contact with you in the past or simply you were recommended to him by one of his numerous friends abroad who wished you good. Engr. Jrgen Krgger until his death was a member of the Helicopter Society and the Institute of Electronic and Electrical Engineers. He was a very dedicated Christian who loved to be involved in charitable projects. His great philanthropy earned him numerous awards during his life time.

Late Engr. Jurgen Krugger died on the 13th day of December, 2004 at the age of 80 years, and his WILL is now ready for execution.According to him this money is to support your humanitarian activities and to help the poor and the needy in our society.Please if I reach you this time as I am hopeful, endeavour to get back to me with the following information as soon as possible to enable me conclude my job. Full name and Address,telephone and fax numbers as well as age and your identity card/drivers license/international passport.We hope to hear from you in no distant time.

Yours in Service,
BARRISTER WALTER HARDLEY ESQ.
====================================================

தேடிவந்த மஹாலட்சுமியை மறுக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் (பேராசையில்) பதில் கொடுத்தீர்கள் என்றால், நீங்கள் நைஜீரியன் மோசடி வலையில் சிக்கியுள்ளீர்கள் என்று அர்த்தம். உஷார் மக்களே!

நைஜீரியன் மோசடி பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த தளத்தைப் பாருங்கள்

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP