இலவசம்

Friday, September 30, 2005

இணைய தளங்களில் இலவச இரத்தப் பரிசோதனை செய்வது பற்றி ஒரு வலைப்பதிவர் சமீபத்தில் எழுதி இருந்தார். அதே போல் வேறு ஏதாவது உருப்படியா கிடைக்கிறதா என்று தேடியதில் "இலவச டிஜிட்டல் போட்டோ" பற்றிய தளம் கண்ணில் பட்டது.

உலகிலேயே நம்பர்.1 பணக்காரராக இருந்தாலும் இலவசமாக கிடைப்பதை வெருப்பதில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் இலவசமாக எது கிடைத்தாலும் அதை அடைய முயற்சிப்பார். உதாரணமாக ஒருநாள் சென்னை பீச் ரோட்டில் வேகமாக பைக்கில் வந்து கொண்டிருந்தவர், FREE LEFT TURN என்ற போர்டைப் பார்த்தவுடன் நேராக செல்லவேண்டிய அவர் இடதுபக்கம் திரும்பி விட்டார் என்றால் பாருங்களேன். (சும்மா ஜோக்குதான்).

இந்த தளத்தில் உள்ள கேமரா சாதாரண கேமராதான். இரண்டு ஸ்டெப்களைக் கடந்தால் நல்ல தரமான போட்டோ உடனடியாக எடுக்கப்படுகிறது. ஆச்சரியம் என்னவென்றால் உங்கள் கணினியில் கேமரா இணைக்கப்படாமலேயே போட்டோ எடுப்பதுதான். நீங்களும் முயற்சி செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பின்னூட்டமிடலாமே?

இலவச போட்டோ எடுக்க கிளிக் பண்ணவும்.

Read more...

குறைந்த முதலீட்டில் கட்சி ஆரம்பிப்பது எப்படி?

Friday, September 23, 2005

முன்பெல்லாம் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவது எப்படி என்றுதான் கையேடுகள் கிடைத்தன. காலமாற்றத்திற்கேற்ப டாபிக்கை மாற்ற வேண்டியுள்ளது. எனக்குத் தெரிந்த சில சுலபமான வழிகளைச் சொல்கிறேன்.

1) மார்க்கெட் இழந்த நடிகராக இருந்தால் நல்லது. (பப்ளிசிட்டி செலவு மிச்சம்.)

2) காவிரியில் தண்ணீர் விடச்சொல்லி மழைக்காலத்தில் அறிக்கை விடலாம். (பின்னாளில் காவிரித்தந்தை என்ற பட்டத்திற்கு உதவும்).

3) பெற்றோரிடம் தமிழில் பேசச் சொல்லி மாணவர்கள்,NRI க்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கலாம்.

4) திருட்டு VCD,DVD ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுப்பதோடு திருட்டு சாப்ட்வேருக்கு எதிராகவும் குரல் கொடுக்கலாம்.

5) பிரபலமானவர்களுக்கு எதிராக அடிக்கடி அறிக்கை விட்டால், அவர்களிடம் நிருபர்கள் உங்களைப்பற்றி கேட்கும் போது நீங்கள் இன்னாரின் பினாமி என்று உங்களை இலவசமாக பிரபலப்படுத்துவார்.

கட்சி ஆரம்பித்த பிறகு:

1) மாவட்ட, வட்டத்தலைவர்கள் என்று அவர்களைக் கேட்காமலேயே நீங்களே வெளியிடலாம். உங்கள் அறிக்கையைப் பார்த்த பிறகுதான் சம்பந்தப்படவர்களுக்கே தெரிய வேண்டும்.

2) மாநில மாநாட்டை எந்த கட்சியாவது மாநாடு நடத்தும் நாளில் வைத்தால் பொதுமக்கள் குழம்பி விடுவார்கள்.

3) தியேட்டரில் சினிமா பார்த்து விட்டு வெளியேறும் மக்களை போட்டோ எடுத்து, நல்ல கிராபிக் டிசைனரிடம் சொல்லி நீங்கள் அவர்களைப் பார்த்து கையசைப்பது போன்ற ஆளுயர போட்டோவை இணைக்கச் சொல்லி போஸ்டராக வெளியிட வேண்டும்.

4) உங்கள் தாத்தாவின் பெயரில் நினைவு மண்டபம் வைக்கச் சொல்ல வேண்டும். யாரும் கேட்டால் சுதந்திரத்திற்காக போராடியவர் என்று சும்மா சொல்லி வைக்கலாம்.

5) ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு இலவச செல்போன், இலவச லாப்டாப் கம்ப்யூட்டர் என்று யாரும் சொல்லாததை சொல்லி வைக்க வேண்டும்.

நிதி உதவி பெற:

1) வங்கிகளில் இதற்கான நேரடி வசதிகள் இல்லை. ஆனால் நீங்களே நிதி நிறுவனம் ஆரம்பிக்கலாம்.

2) கட்சி உறுப்பினர்களிடம் கட்சிக்கு முதலீடு செய்தால் ஆட்சிக்கு வந்த பின் 10 மடங்கு லாபத்தொகையுடன் திருப்பித் தரப்படும் என்று சொல்லலாம்.

தற்போதைக்கு இவையே சுலபமான வழிகளாகத் தெரிகின்றன. உங்களுக்கு ஏதாச்சும் ஐடியா இருந்தால் பின்னூட்டத்தில் கொடுத்து உதவுங்களேன்.

Read more...

சந்திரனில் இறங்கிய சந்திரன் நாயர்

Sunday, September 18, 2005

சந்திரனில் முதலில் காலடி வைத்த பெருமை அமெரிக்கா என்று எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அவர்களுக்கு முன்பே இறங்கி காலடி (செருப்படி?) வைத்த பெருமை இந்தியரையேச் சாரும். அத்தோடு நிலவில் டீக்கடை (பாலக்காட்டு நாயர் சாயாக்கடை) வைத்த பெருமையும் நம்மையே சாரும்!!!



நிலவில் இறங்கிய ஆல்ட்ரினும் நீல் ஆம்ஸ்ட்ராங்கும் நீண்ட பயணத்திற்குப் பின் மனித சஞ்சாரமற்ற பிரதேசத்திற்கு வந்திருக்கிறோம் என பெருமிதம் கொண்டிருந்த போது அவர்களிடம் "எந்தா ஆம்ஸ்ட்ராங் சாரே! ஸ்ட்ராங்கா சாயா வாணுமா?" என்று கேட்டு உபசரித்த இந்தியனை எண்ணி பெருமைப் படுவோம்.

புகைப்பட உதவி: சந்திரன் சாயாகடை - அமைதிக்கடல் - சந்திரமண்டலம்

Read more...

சர்தார் ஜோக்ஸ்

Friday, September 16, 2005

சர்தார்: நேற்று ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை.
நண்பர்: ஏன்?
சர்தார்: மேல் பர்த் (Upper Berth) தான் கிடைத்தது
நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாற்றிக் கொண்டிருக்கலாமே?
சர்தார்: செஞ்சிருக்கலாம். ஆனா கீழே யாரும் இல்லே.
***
சர்தார்: (தன் நண்பியிடம்) இரவுக்கு என் வீட்டுக்கு வா. யாரும் இருக்க மாட்டார்கள்.

(நண்பி அவ்வாறே சர்தாரின் விட்டுக்கு இரவு சென்றார். உண்மையில் யாருமே அங்கு இல்லை. சர்தார் உட்பட)
***
டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை
பெற்றெடுக்கிறாள்.

சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.
***
சர்தார்: (பணியாளிடம்) போயி செடிக்கு தண்ணீர் ஊத்து.
பணியாள்: நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது முதலாளி ஜி.
சர்தார்: அதனாலென்ன? குடையை எடுத்துக் கொண்டு போ.
***
சர்தார் இருபது ரூபாய் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். பரிசு ஒரு கோடி விழுந்தது. கடைக்காரர் வரி பிடித்தம் போக 55 இலட்ச ரூபாய் கொடுத்தார். சர்தார் கோபமாக "யாரை ஏமாத்தப் பார்க்கறே?. ஒரு கோடி முழு பரிசையும் தா. இல்லேன்னா என் இருபது ரூபாய மரியாதையா திருப்பிக் கொடு என்றார்.
***
தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.
சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?
***
சர்தாரும் அவர் மணைவியும் விவாகரத்துக்கு மணு கொடுத்தனர்.
நீதிபதி: உங்களிட்ம் மூனு குழந்தைகள் உள்ளனர். இப்போ பிரிஞ்சீங்கன்னா? சிக்கல் வரும்.
சர்தார்: சரி. அப்ப நாங்க அடுத்த வருசம் வர்ரோம் ஐயா.
***
சர்தார் பெருமையாக தன் நண்பரிடம் சொன்னார்." என் தாத்தா சாகும் போது அமைதியாக எந்த சத்தமும் போடாமல் பஸ்சில் தூக்கத்திலிருக்கும்போது செத்தார். ஆனால் அவர் ஓட்டிக்கொண்டிருந்த பஸ் பயனிகள்தான் அலறிக் கொண்டே செத்தார்கள்"
***
சர்தார்: (ஆர்ட் காலெரியில்) ஐய்யோ ரொம்ப கொடூரமாக இருக்கிறது இந்த படம். மாடர்ன் ஆர்ட்டில் இதை எப்படி சொல்வீங்க?
சிப்பந்தி: ஸாரி சார் இது முகம் பார்க்கும் கண்ணாடி
***
இரண்டு சர்தார்கள் ஜாலியாக தனி விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது இரண்டு விமானக்களும் மோதிக் கொண்டு பஞ்சாபிலுள்ள சுடுகாட்டில் விழுந்து இறந்து விட்டனர். உள்ளூர் சர்தார்கள் அவர்களின் சடலங்களை தேடி மண்ணை தோண்டி வருகின்றனர். இதுவரை 500 சடலங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இன்னும் தோண்டிக் கொண்டிருக்கிறார்களாம்.
***
ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க. உங்களூக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு. எதுக்கும் மூன்று மாதம் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார். மூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கேணை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர்
முன் வைத்தார்.

டாக்டர்: என்ன இவை?
சர்தார்: நீங்கதானே மூன்று மாதம் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க.

Read more...

புதிய சினிமாக் கட்சி உதயம்!!!

Tuesday, September 13, 2005

அனைத்து சினிமா நடிகர்களும் கஷ்டப்பட்டுதான் சினிமாவிற்கு வருகிறார்கள். அவர்களில் சிலர் மட்டும் தங்கள் பிரபலத்தை பலமாக்கி வெவ்வேறு அவதாரம் எடுக்கிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு ஒரு நடுநிலை சினிமா+அரசியல் விமர்சனம் :-)

கீழுள்ள செய்திக்கும் இந்த செய்திக்கும் சம்பந்தமுண்டு. தொடர்ந்து படியுங்கள்.

தமிழக அரசியலில் சுருளிராஜனுக்குப்பின் நடிகர்கள் அரசியலில் பிரகாசிக்கவில்லை.

சுருளியுடன் சம காலத்தில் உச்ச நடிகராக இருந்த குண்டுக்கல்யாணம் காங்கிரசை விட்டு விலகி புதிய கட்சி தொடங்கி ஆட்சிக்கு வர ஆசைப் பட்டார். அவர் கனவு ஈடேறவில்லை. அரசியலை விட்டு ஒதுங்கினார்.

சுருளியால் கலையுலக வாரிசு என பிரகடனப்படுத்தபட்ட தவக்களை புது கட்சி தொடங்கி ஜொலிக்கவில்லை. லூஸ் மோகனும் புதுகட்சி கண்டார். பிறகு தி.மு.க.வில் இணைந்தார். இப்போது மீண்டும் விலகி தனியாக கட்சி நடத்துகிறார்.

குண்டுக் கல்யாணத்துக்கு காங்கிரஸ் மூலமும் லூஸ் மோகனுக்கு தி.மு.க. மூலமும் தான் எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகள் கிடைத்தன. தனி கட்சி கண்டு அவர்களால் இப்பதவிகளை பிடிக்க முடிய வில்லை.

வடிவேல் அரசியலுக்கு வருவார் எனபரபரப்பாக பேசப்பட்டது. தி.மு.க.வும் த.மா.கா.வும் கூட்டணி அமைத்த போது அதற்கு ஆதரவு அளித்தார். பின்னர் பா.ம.க. வுக்கும், வடிவேல் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட வடிவேல் அரசியல் களத்துக்கு இழுத்து வரப்பட்டார்.

புது கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்த்த வேளையில் திடீரென்று பா.ம.க. போட்டியிட்ட பாராளுமன்றகு தொகுதிகளில் அக்கட்சிக் எதிராக ரசிகர்களை விட்டு பிரசாரம் செய்ய வைத்தார். வடிவேலின் பேச்சுக்கள் கேசட்டுகளாக தயாரிக்கப்பட்டு அனைத்து தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.அவர் முயற்சி பலிக்க வில்லை. வடிவேல் எதிர்ப்பையும் மீறி பா.ம.க. ஜெயித்தது. இதனால் அவரும் ஒதுங்கினார்.

ஓமக்குச்சி நரசிம்மன் இப்போது அரசியல் களத்தில் குதிக்கிறார். மதுரையில் ரைஸ்மில் நடத்திய இவர் `இனிக்கும் இளமை' படத்தில் வில்லனாக அறிமுகம் ஆனார். `சட்டம் ஒரு இருட்டறை' பிரபலமாக்கியது. ஊமை விழிகள், வைதேகி காத்திருந்தாள், புலன் விசா ரணை, அம்மன் கோவில் கிழக்காலே, போன்ற படங்கள் ஓமக்குச்சியின் `ஸ்டார்'' இமேஜை உயர்த்தின.

அரசியல் ஆசை இவரை திடீரென பற்றவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே இதற்கான வித்து ஊன்றப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் ரசிகர்களை போட்டியிட வைத்து ஆழம்பார்த்தார். பல பஞ்சாயத்துகளில் ஒமக்குச்சி மன்றத்தினர் கவுன்சிலர்களாக உள்ளனர்.

அதன் பிறகே ரசிகர் மன்ற அமைப்பை அரசியல் அமைப்பாக மாற்றும் வேலைகளை ரகசியமாக செய்தார். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி, வக்கீல் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி போன்றவற்றை மாவட்டம் தோறும் உருவாக்கி அவற்றுக் நிர்வாகிகளை நியமனம் செய்தார்.

பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ரசிகர்களுடன் ஆய்வு கூட்டங்கள் நடத்தி இதோ நாளை அரசியல் பிரகடனத்தையும் கட்சி பெயரையும் மதுரை மாநாட்டில் அறிவிக்கிறார். ஓமக்குச்சியின் அரசியல் கட்சி எடுபடுமா என்று சாதக பாதகங்களை அரசியல் விமர்சகர்கள் பேசத் தொடங்கி உள்ளனர்.

ஓமக்குச்சி கட்சியுடன் கூட்டணி அமைக்க பாரதீய ஜனதா விரும்பியது. ஆனால் 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கப் போவதாக ஓமக்குச்சி அறிவித்துள்ளார். தனக்குள்ள செல்வாக்கின் உண்மை நிலையை அறிய இந்த தேர்தலை பயன்படுத்துவது அவர் இலக்காக உள்ளது. தனித்து நிற்கும் பட்சத்தில் குறைந்த பட்சம் 10 தொகுதி களையாவது கைப்பற்ற முடியும் என்று அவர் நம்புகிறார்.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. 7 கட்சிகளுடன் களம் இறங்கும் தி.மு.க.ஆகிய இரு அணிகளின் அசுர பலத்தின் முன்னால் ஓமக்குச்சியால் தாக்கு பிடிக்க முடியுமா? என்று சந்தேகத்தை சிலர் கிளப்புகின்றனர். கடைசி நேரத்தில் பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து 3-வது அணியை ஓமக்குச்சி உருவாக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஓமக்குச்சிக்கு `நடிகர்' என்ற இமேஜில் கூட்டம் கூடலாம். ஆனால் வாக்கு வாங்குவது கடினம் என்கிறார். மக்கள் தமிழ் தேசம் தலைவர் ராஜ கண்ணப்பன்.

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., இ.கம்யூனிஸ்டு, வ.கம்யூனிஸ்டு என ஒவ்வொரு கட்சிக்கும் தொகுதி தோறும் குறிப்பிட்ட சதவீதம் வாக்கு வங்கி உள்ளது. இதுவே 90 சதவீதத்தை எட்டும் மீதி உள்ள 10 சதவீத வாக்கு பொதுமக்களுடையது. அவர்கள் ஓட்டுக்களைத்தான் ஓமக்குச்சி நம்ப வேண்டும். அந்த ஓட்டுகள் கூட எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் விழலாம் என்று அடித்து சொன்னார் ராஜா கண்ணப்பன்.

ஓமக்குச்சி கட்சியில் அரசியல் அனுபவம் உள்ள மூத்த தலைவர்கள் இல்லாதது இன்னொரு குறையாக சொல்லப்படுகிறது. ரசிகர் மன்றத்தில் மாநில பொதுச் செயலாளராக ஓமக்குச்சிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ராமு வசந்தன். இவர் இதுவரை அரசியல் பணிகளில் ஈடுபடாதவர்.

புதியவர்களை வைத்து அரசியல் வியூகத்தை வெற்றிகரமாக வகுப்பது ஓமக்குச்சிக்கு சவாலாகவே இருக்கும் என்றார் சக நடிகர் ஒருவர்.நடிகர் என்பதால் ஓமக்குச்சிக்கு கூட்டம் கூடுவதில் குறை இருக்காது. சுருளி ராஜனைப்போல் சாதிப்பேன் என்று நம்பிக்கை யோடு சொல்கிறார் ஓமக்குச்சி. இதற்கு பக்க துணையாக மாநாட்டு பந்தல் முகப்புக்கு சுருளி ராஜன் பெயரையும் சூட்டி உள்ளார்.

காமராஜர், அண்ணா, காந்தி போன்ற தலைவர்கள் பெயரையும் பந்தலுக்கு சூட்டி துணையாக சேர்த்துக் கொண்டு உள்ளார். தேசிய கட்சி, திராவிட கட்சி, தலைவர்கள் படங்களுடன் அரசியல் பயணம் தொடங்கி உள்ள ஓமக்குச்சியின் அரசியல் வியூகம் புதுமையாகத்தான் இருக்கும் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் உலவுகிறது.

குண்டுக் கல்யாணம் உள்ளிட்ட நடிகர்கள் அரசியலில் பிரகாசிக்க முடியவில்லையே என்று ஓமக்குச்சியிடம் கேட்டபோது சுருளி ராஜன் கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்க வில்லையா? அவரைப் போல் என்னால் வர முடியும் என்று நம்பிக்கை யோடு சொல்கிறார்.

அ.தி.மு.க., தி.மு.க. போன்ற திராவிட கட்சிகளை வெறுப்பவர்களின் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு அரசியலில் குதிக்கிறார். நம்பிக்கை பொய்க்குமாப பலன் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

திருத்தம்: தவறுதலாக பிரபலமான நடிகர்கள் பெயருக்குப் பதில் நகைச்சுவை நடிகர்களின் பெயரைப் போட்டு எழுதி விட்டேன். முடிந்தால் அந்தந்த இடத்தில் சரியான நடிகர்கள் பெயரைப் போட்டு மாற்றி படித்துக் கொள்ளுங்கள்.

Read more...

வெள்ளரசு

Thursday, September 08, 2005


உலகத்துல எங்கு எது நடந்தாலும், அதை அமெரிக்காவோடு ஒப்பிட்டு பேசுவது சிலருக்கு பிடிக்கும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவை மட்டம் தட்டுவதிலும் சிலருக்கு சந்தோசம்.

இனி அமெரிக்காவைத் தலை மேல தூக்கி வைத்து ஆடுபவர்கள், இதைப் படித்த பிறகாவது கொஞ்சம் அடக்கி வாசிப்பார்களாக (எனக்கும் அமெரிக்கா விசா கிடைத்திருந்தால் இது மாதிரி எழுதுவேனா?)

  • Inches of rain in new orleans due to hurricane katrina... 18
  • Inches of rain in mumbai (July 27th).... 37.1
  • Population of new orleans... 484,674
  • Population of mumbai.... 12,622,500
  • Deaths in new orleans within 48 hours of katrina...100
  • Deaths in mumbai within 48hours of rain.. 37.
  • Number of people to be evacuated in new orleans... entirecity..wohh
  • Number of people evacuated in mumbai...10,000
  • Cases of shooting and violence in new orleans...Countless
  • Cases of shooting and violence in mumbai.. NONE.
  • Time taken for US army to reach new orleans... 48hours
  • Time taken for Indian army and navy to reach mumbai...12hours
  • Status 48hours later...new orleans is still waiting for relief,army and electricty
  • Status 48hours later..mumbai is back on its feet and is business isas usual

USA...world's most developed nation!!!

India...third world country???

வாழ்க இந்தியா!!!

Read more...

கலர் கலரா காரணங்கள்

Friday, September 02, 2005

பெரும்பாலும் பலான சமாச்சாரத்தை மறைமுகமாகச் சொல்ல 'நிறங்கள்' (Colors/Colours') ஒரு குறியீடாக இருக்கிறது. நம் வாழ்க்கையில் 'கலர்' ஒரு அலாதியான விசயம். ஒவ்வொரு கலருக்கும் பின்னாடி ஒரு செய்தி இருக்கிறது. சில 'கலர்கள்' எந்தெந்த விசயத்துக்கு பயன் படுத்தப்படுகின்றன என முதலில் பார்ப்போம்.

பலான கலர்கள்

பச்சை (Green) = பலான விசயங்களைப் பேசும்போது குறிப்பிடப்படும். (என்ன இப்படி பச்சை பச்சையா பேசுகிறார் இவர்?)

சிகப்பு (Red) = பலான தொழில்? நடக்கும் இடத்தைக் குறிக்க (மும்பை சிகப்பு விளக்குப்பகுதியில் போலிசார் ரோந்து)

நீலம் (Blue) = பலான சினிமாவைக் குறிக்க பயன்படுத்தப் படுகிறது (பிரபல நீலப்பட மன்னன் நீலகண்டன் கைது)

மஞ்சல் (Yellow) = பலான புத்தகங்களைக் குறிப்பிட (சாந்தி தியேட்டர் அருகே மஞ்சல் புத்தகங்களை விற்ற வாலிபர் பட்டதாரி வாலிபர் கைது)

வர்த்தகம் மற்றும் அலுவலகம்:

வர்த்தக அலுவலக உபயோகங்களில் பெரும்பாலும் சிகப்பு அல்லது பச்சை பயன்படுத்தப் படும். ஆபிஸில் முக்கியமான ஃபைலில் சிகப்பு நாடா இடப்பட்டிருந்தால் 'அவசரம்' என்றும் பச்சை நாடா இடப்பட்டிருந்தால் 'சாதாரணம்' என்றும் அர்த்தம். இம்முறையை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும். தற்போதைய கணினி யுகத்தில் இதுப்போன்ற கலர்க்குரியீடு இருக்கிறதா என்று தெரியவில்லை. பெரும்பாலும் Post it Slip மஞ்சல் கலராக இருக்கும்.

பொருளாதார தேக்க நிலைக்கு Red Tapism என்பார்கள். நிதியமைச்சர் பொதுத்துறை பங்குகளை விற்க பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

டெலிபோன் டைரக்டரியில் மஞ்சல் பக்கங்கள் (Yellow pages) பிரபலம். White pages, Blue Pages, Greean Pages போன்ற சில நிறங்களும் பயன் படுத்தப்படுகின்றன.

பொதுவாக வாகன மற்றும் இதர எச்சரிக்கைகளைக் குறிக்க சிகப்பு, பச்சை, ஆரஞ்சு கலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜோஷியர்களும், வாஸ்து சாஸ்திரிகளும் கொஞ்சம் கலர்கலரா பீலா விட ஆரம்பிச்சுட்டாங்க. (உங்க ராசிக்கு மஞ்சல் சால்வை போடுக்கொண்டால் 40 தொகுதிகளிலும் ஜெயிச்சுடலாம், உங்க வீட்டுக்கு செந்நிற வர்ணம் பூசினால் ஓஹோன்னு இருப்பீங்க! etc)

கன்னியரைக் குறிக்கவும் தற்போது 'கலர்கள்' பயன்படுகின்றன (மச்சி சத்யம் தியேட்டர்ல நேத்து செம கலர்டா!)

இப்படி கலர் நம் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளன. இவையல்லாமல் சில கலர்களின் பின்னனியை இந்த தளம் சொல்லுகிறது. இன்னொரு தளம் கலர் கலரா மனோதத்துவத்தை சொல்லுகிறது. நேரமிருந்தா போய் கலர் பாருங்க!

மறக்காம உங்கள் பின்னூட்டங்களையும் கலர் கலரா விட்டுட்டு போங்க.

Read more...

About This Blog

Lorem Ipsum

Back to TOP