அ.மு. & அ.பி.

Thursday, November 24, 2005

இவை சங்கேத குறியீடுகள் அல்ல. அ.மு=அரசியலுக்கு முன், அ.பி. = அரசியலுக்குப் பின்!

நமது மாண்புமிகு அரசியல்வாதிகள் சாதாரணமாக அரசியல்வாதிகளாகி விடவில்லை. கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள்.

சமீபத்தில் திருச்சியில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய எம்பி எஸ்.எஸ்.சந்திரன் அமைச்சரின் 'கடந்த காலம்' குறித்துப் பேசி அமைச்சர்களை சங்கடத்தில் நெளிய வைத்தார்.

அதிமுகவின் உழவர் பாதுகாப்புத் திட்டம் குறித்து விளக்கவே அந்தக் கூட்டம் நடந்தது. அமைச்சர் ஓ.பி உள்ளிட்ட பல மாண்புமிகுக்கள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் எஸ்.எஸ். சந்திரன் தனது வாயை கோணியபடி பேசியதில் அறிந்து கொண்ட அரிய தகவல்கள்:

1) நான் திமுகவுல இருந்து விலகினபோது இந்த ராதாரவிப் பய என்னை அழைச்சுட்டுப் போயி வைகோகிட்ட விட்டுட்டு ஓடிப் போய்ட்டான். அங்கே சில காலம் இருந்து அவஸ்தைப் பட்ட பிறகு உயிர் தப்பினா போதும்னு வெளியேறி அதிமுகவுல சேர்ந்தேன். (டைக்கல திராவிட முன்னேற்றக் ழகம்!!!)

2) 35 வருசமா கருணாநிதி கூட இருந்து கவுன்சிலர் கூட ஆக முடியலை. ஆனா, அம்மாகிட்ட வந்த சில மாதத்திலேயே எம்பியாகிவிட்டேன். (பலே..பலே..)

3) நான் மட்டுமா?. இதோ மேடையிலே இருக்காரே அமைச்சர் அண்ணாவி. அவர் என்ன செஞ்சுகிட்டு இருந்தார் தெரியுமா?. பஸ்சுல விசில் அடித்து கண்டக்ரடா இருந்தார். இப்ப எவ்வளவு சொகுசா வாழ்றார் தெரியுமா என்றார். (சூப்பர் ஸ்டார் அமைச்சர்?)

4) அப்போது அண்ணாவி ஒரு பக்கம் நெளிய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்னொரு பக்கம் நெளிந்தார். (இவர் பெரியகுளத்தில் டீக் கடை நடத்தியவர், டீ மாஸ்டரும் இவரே).

இதுக்குப் பேருதான் உள்குத்தா? பின்னூட்டம் ப்ளீஸ்...

Read more...

ஈமெயில் கிடைத்ததா? இனி கவலையில்லை!!!

Monday, November 21, 2005

அதிக கொள்ளளவு கொண்ட இணைய மெயில்களை வழங்குவதில் Gmail,Rediffmail மற்றும் Yahoo! ஆகிய தளங்கள் முன்னிலையில் இருக்கின்றன. இவற்றிலெல்லாம் இல்லாத ஒரு வசதியை www.gawab.com என்ற தளம் வழங்குகிறது தெரியுமா!

பொதுவாக நாம் அனுப்பும் ஈமெயில்களை பெறுநர் கிடைக்கப் பெற்றாரா? என்று அறிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் உண்டு. மேலும் சில உதவி கோரும் ஈமெயில்களை பெறுநர் இன்னும் படிக்கவில்லை என்று சொல்லி தட்டிக் கழிப்பர். எல்லாவற்றையும் விட முக்கியமாக வேலைக்கு அப்ளிகேசன் போட்டு விட்டு சம்பந்தப்பட்ட பெறுநர் நம் அப்ளிகேசணை பெற்றுக் கொண்டாரா என்ற கவலையும் இருக்கும்.

இவற்றை எல்லாம் தீர்த்து வைக்க அவுட்லுக் போன்ற இணைய மடல் திரட்டிகள் உதவுகின்றன. ஆனால் பெருநர் "Read Receipt Request!" என்ற அனுப்புனரின் கோரிக்கையை ஏற்றால் மட்டுமே சாத்தியம். www.gawab.com வழங்கும் இணைய மெயில் சேவையில் பெறுநர் உங்கள் மெயிலை திறந்து பார்த்ததும் தானாகவே அனுப்புனருக்கு மேற்கண்ட தகவலை அனுப்பி விடுகிறது.

இது அல்லாமல் உங்களின் ஹாட்மெயில் மடல்களையும் இம்மெயிலுக்கு பார்வர்ட் செய்வதன் மூலம் ஹாட்மெயிலிலிருந்து வரும் அனாவசிய இடநெருக்கடி (Clear Your Inbox!) எச்சரிக்கைகள் தவிர்க்கப்படும். யாஹூ குழுமங்களையும் இணைக்கலாம் என்று சொல்லியுள்ளார்கள். அதிக விபரம் தெரியவில்லை. அனுபவஸ்தர்கள் விசயங்களை பகிர்ந்து கொண்டால் பயணாக இருக்கும்.

(தொடர்ந்து வெட்டியாக இருக்கக் கூடாது என்பதால் காலங்கடந்த ஆனால் பயனுள்ள தகவல் என்று நினைக்கிறேன்!)

Read more...

வரிக்குதிரை என்ன கலர்?

Sunday, November 20, 2005

முந்தைய பதிவுகளில் இரண்டு போட்டோக்களைப் பார்த்து வியந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்தப் பதிவிலும் போட்டோ ஒரு இடம் பெற்றுள்ளது. கவனமாகப் பாருங்கள். ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க விரும்புகிறேன். ரொம்ப ஈசியான கேள்விதான். ஆனால் என்னிடம் பதில் இல்லை. உங்களிடம் இருந்தால் பின்னூட்டமிடுங்கள்.




"வரிக்குதிரையின் உடம்பில் இருக்கும் கோடுகள் கருப்பா? வெள்ளையா?"

பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டமிடுங்கள்; தெரியாதவர்கள் படத்தை பெரிதாக்கி வரிக்குதிரையின் கால் வழியே நுழைந்து வாய் வழியே வெளியேற முயற்சி செய்யுங்கள்!

(அட விளையாட்டுக்குத்தாங்க!)

Read more...

கொடும்பாவி ஆன்லைன்

Saturday, November 19, 2005

கொடும்பாவி எரிப்பது தற்போது புதிய கலாச்சாரமாகி விட்டது. யாரை எப்போது எங்கு கொடும்பாவி எரிப்பாங்கன்னே தெரிய மாட்டேங்குது.



குஷ்புக்கை ஜாக்கெட் பிரபலமாகும் போதே அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு அடிபட்டது. மு.க. ஸ்டாலினுக்கு எதிராக ஆளுங்கட்சியால் களமிறக்கப்படுவார் என்ற நேரத்தில் கற்பு பற்றி வாய்விட்டு சர்ச்சையில் மாட்டிக் கொண்டுள்ளார்.

(குஷ்பு=ஸ்டாலின்? அரசியல் கொடுமையடா! பாவம் தமிழ்நாட்டு மக்கள்!!!)

நம் மக்கள் விரும்பினால் கோவில் கட்டிக் கும்பிடுவார்கள். கோபம் வந்தால் கொடும்பாவியும் எரிக்கத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு குஷ்பு நிகழ்கால உதாரணம். ரஜினி சொல்லித்தான் மக்கள் அதிமுகவை வீட்டுக்கு அனுப்பினார்கள் என்ற மாயையை அடுத்த தேர்தலிலும் படத்திலும் ரஜினியை கிட்டத்தட்ட இமய மலைக்கு நிரந்தரமாக அனுப்பப் போனார்கள். மனுசன் தப்பிச்சுக்கிட்டார்!

குட்டைப்பாவாடை பற்றிய மதகுருமார்களின் கருத்துக்கு சானியா காட்டமாக பதில் சொன்னதாக நேற்று முன் தினம் படித்தேன். மறுநாள் நான் அப்படிச் சொல்லவே இல்லை. பத்திரிக்கைகள் திரித்து எழுதி விட்டன என்றார்.

http://www.deccanherald.com/deccanherald/nov182005/index21153820051117.asp

தன் மானம் குட்டைப்பாவாடை வழியாக காற்றில் பறந்தாலும் பரவாயில்லைன்னு அமெரிக்காவரை சென்று டென்னிஸ் விளையாடிய சானியாவை இந்தியப் பெண்களின் மாடலாகச் சொன்னவர்கள் நேற்று ஆந்திராவில் சானியாவின் கொடும்பாவியைக் கொழுத்தி இருக்கிறார்கள். இந்தியக் கலாச்சாரத்தையும் இந்தியர்களின் உணர்வுகளையும் புண்படுத்தி விட்டாராம். அதனால் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சொல்லி அகில பாரத வித்யார்த்தி பரிசத் கோரியுள்ளது.

Shouting “Down, down Sania” the ABVP protesters in Visakhapatnam slapped the posters with chappals and then burnt them. They demanded that she tender an apology for “hurting Indian tradition” by favouring sex before marriage. “She has hurt the sentiments of Indian people,” a protester said.

தான் குஷ்பு சொன்னதை ஆதரிக்கவில்லை இதையும் பத்திரிக்கைகள் திரித்து எழுதிவிட்டன என்று மறுத்துள்ளார்.

சானியா சொன்னது இதுதான் "Look, whether it's before or after marriage, people should have safe sex. And about pre-marriage sex, you can't stop people and hence the best way is to play it safe."

http://sify.com/news/fullstory.php?id=14012855

அடிப்பாவி குஷ்புவும் கிட்டத்தட்ட இதைத்தானே சொன்னார்(ள்)! ஒன்னுமே புரியலேடா சாமி!

உலக அழகி கிளெபோவாவும், Formula One புகழ் நரேன் கார்த்திக்கேயனும் குஷ்பு சொன்னதை ஆதரித்ததாகவும் சொல்றாங்க. இன்னும் ஓரிரு நாட்களில் இவர்களுக்கும் கொடும்பாவியா என்பது தெளிவாகிவிடும்.

எதுக்கும் யாராச்சும் ஆன்லைன்ல கொடும்பாவி எரிக்க வசதி உண்டாண்னு பார்த்துச் சொல்லுங்க!

Read more...

தத்துவ மழை!

Thursday, November 17, 2005

மழைபெய்வதை பற்றி கருத்துக் கேட்டால், ஒவ்வொருவரும் எப்படி பேசிக் கொள்வார்கள் என முன்பு எங்கோ படித்த ஞாபகம். அத்தோடு என்பங்குக்கு இன்னும் சில கருத்துக்கள்.




தொழிலாளிகள்

டெய்லர்: "கிழி கிழின்னு கிழிச்சிடுச்சு"

பெயிண்டர்: "கலக்கிடுச்சு"

லாண்டரிக்காரர்: "துவைச்சு எடுத்துடுச்சு"

நெசவாளர்: "பின்னி எடுத்துடுச்சு"

போலீஸ்காரர்: "மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டுச்சு"

அரசியல்வாதிகள்

ஓ.பன்னீர் செல்வம்: "அம்மா மனசுபோல வானமும் தாரளமா இருக்கு!"

கருணாநிதி: "காட்டாற்று வெள்ளத்தில் ஆளுங்கட்சியின் அராஜகமும் விரைவில் அடித்துச் செல்லப்படும்"

ஜார்ஜ் புஷ்:" உலகலாவிய தீவிரமழைக்கு எதிரான போரை அமெரிக்கா தொடர்ந்து நடத்திச்செல்லும்"


நடிகர்/நடிகைகள்:


ரஜினி: "மழை எப்போ வரும், என்கு வருமுன்னு யாருக்கும் தெரியாது. ஆனா கண்டிப்பா வரும்"

டி.ஆர்: "வானம் பொழிகிறது; தமிழர் மானம் அழிகிறது. ரோடெல்லாம் வெள்ளம்; சிம்புவுக்கு நல்ல உள்ளம்"

குஷ்பு:"கல்யாணத்துக்கு முன்பு மழையில் நனைந்து ஆட்டம் போடுவது சகஜம். பாதுக்காப்பாக நனைய வேண்டும். தனக்கு வரப்போகும் மணைவி மழையில் நனையாமல் இருக்க வேண்டும் என்று எந்த படித்த ஆண்மகனும் எதிர்பார்க்க மாட்டான். தமிழ்ப் பெண்கள் அனைவரும் மழையில் நனைந்தவர்கள்தான்!"

சுஹாசினி: " குஷ்பு சொன்னதில் தவறு இல்லை. அரசியல்வாதிகளுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு?"

Read more...

ஆட்டைக் கழுதையாக்கிய ஊர்

Tuesday, November 15, 2005

ஆட்டைக் கழுதையாக்கிய ஊர் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? அந்த புண்ணிய பூமியில்தான் அடியேன் அவதறித்தேன். சரி இப்போ அதுக்கு என்னன்னு கேட்காதீங்க. படத்தை நல்லா பாருங்க. ஏதாச்சும் வித்தியாசம் தெரிஞ்சா மறக்காம (கமெண்ட்) பின்னூட்டம் இடுங்க.






வழக்கம்போல சிறந்த/அதிக பின்னூட்டம் இடும் பாக்கியசாலிக்கு ****** உண்டு!!! ஆனால் ஒரு கண்டிசன் முதல் மற்றும் கடைசி பின்னூட்டதாரர்களுக்கு மட்டுமே பகிர்ந்து கொடுக்கப்படும். ஆட்டைக் கழுதையாக்கிய "அதிராம்பட்டினத்தில்" பிறந்தவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள முடியாது?! (ஏற்கனவே கழுதையாக்கியது போதும்!)

இறைநேசன்: ஆஹா, போன தபா ஞானபீடம் முந்திக்கொண்டுவிட்டார். இந்த தபா விடக்கூடாது!

ஞானபீடம்: ஓஹோ..அப்படியா சங்கதி. கீழே போயி பாருங்க ஏற்கனவே நம்ம கமெண்டு வந்துடுச்சு!

Read more...

பாருங்க சார்! மாயமில்லை மந்திரமில்லை

Thursday, November 10, 2005

கீழுள்ள போட்டோவை உங்கள் கம்ப்யூட்டர் அருகே இருந்து நோக்கினால் சடகோபன் (Mr.Angry) வலது பக்கத்திலும் சாந்தா (Mrs.Calm) இடது பக்கத்திலும் தெரிவார்கள்.

அப்படியே 12 அடி தள்ளிப்போய் அதே போட்டோவை நோக்கினால் சடகோபன் இடது பக்கத்திற்கும் சாந்தா வலது பக்கத்திற்கும் போய் விடுவார்கள்.



Dr Aude Oliva (MIT) மற்றும் Dr Philippe Schyns (University of Glasgow) ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவான பொய்த்தோற்ற பிம்பம் (Optical Illusion).

மறக்காமல் பின்னூட்டமிட்டு தமிழ்மணத்தில் இப்பதிவை வாழவையுங்கள்.சிறந்த பின்னூட்டத்திற்கு வழக்கம் போல _____ உண்டு.

பின்னுட்டமிட யோசிப்பவர்: "_____?"

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP