தேசிய விலங்காக கழுதை தேர்வு!

Monday, November 23, 2009

தொடர் தோல்விகளாலும் உட்கட்சிப் பூசல்களாலும் துவண்டுபோயுள்ள சிலருக்கு உருப்படியாக அரசியல் நடத்த எதுவுமில்லை என்பதால் ரொம்ப அவசியமான தேசிய விலங்கு குறித்து கோஷம் போட்டு வருகிறார்கள்.இது ஒருபக்கமிருக்க தேசிய விலங்காக யாரைத் தேர்வு செய்வது என்று மிருகங்களும் தேர்தல் நடத்தினால் எப்படி இருக்கும்? - ஓர் கற்பனை.

நாக்பூர் காட்டில் 'சாது'வான விலங்குகளும் கொடூர விலங்குகளும் தேசிய விலங்காக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு மாநாட்டில் கூடியிருந்தன! காட்டு ராஜா சிங்கம் தனக்கென ஒதுக்கப்பட்ட அரியாசணத்தில் அரைக்கால் டவுசருடன் வீற்றிருந்தார்.இருகுரங்குகள் விசிறியால் வீசிக்கொண்டிருந்தன. மாநாட்டு நேரம் சரியாக நள்ளிரவு 12:00 மணிக்குத் தொடங்கியது.

சிங்கம்: மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எனதருமை மிருகங்களே! நாம் இன்று குழுமியிருக்கும் நோக்கம் நம்மில் யாரை தேசிய விலங்காகத் தேர்வு செய்வது என்று முடிவெடுப்பதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களில் யாரெல்லாம் தேசிய விலங்காகும் தகுதி இருப்பதாகக் கருதுகிறீர்களோ,தயவுசெய்து மேடைக்கு வந்து தங்கள் சிறப்பம்சங்களைச் சொல்லலாம். இறுடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பெரும்பான்மை ஓட்டுகள் பெறுபவர் தேசிய விலங்காக அறிவிக்கப்படுவார் என்று பேசிவிட்டு, தலைமை தேர்தல் அதிகாரி நரியிடம் ஒவ்வொருவராகப் பேச அழைக்கும்படிப் பணித்தது.




நரி: முதலில் பன்றியை மேடைக்குப் பேசவருமாறு அழைக்கிறேன்.

பன்றி: மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தலைவர் சிங்கம் அவர்களே! துணைத்தலைவர் புலி மற்றும் சிறுத்தையாரே! கூடியிருக்கும் மிருகங்களே! எல்லோருக்கும் என் வணக்கம்! மகாவிஷ்ணுவுக்கு பிரியமானதால் தேசிய விலங்காக பன்றிகளே தகுதியானவை. உங்க பொன்னான வாக்குகளை பன்றிக்குச் செலுத்துவீர் என்றுகூறி அமர்கிறேன்.

நரி: (மனதுக்குள்) ம்..இவனுங்கப் பேரைக்கேட்டால் அமெரிக்காகாரன் முதல் ஆண்டிப்பட்டிக்காரன் வரைக்கும் நடுங்குறானுங்க. கெட்டகேட்டுக்கு தேசிய விலங்காம்! அடிசெருப்....) அடுத்து யானையார் என்ன சொல்லப்போகிறீர்கள்?

யானை: அவையோருக்கு என் பணிவான "ஓ"! மாண்புமிகு தேர்தல் அதிகாரி நரி அவர்கள் என்னை 'யானையார்' என்று அழைத்தார். பிள்ளையாரின் 'தல' என்பதால் அவ்வாறு அழைத்திருக்கிறார். சும்மாவா சொன்னார்கள் நரிகள் புத்திசாலிகளென்று!அதனால் ஆனைமுகத்தோனின் 'தல' யானையே தேசிய விலங்காகத் தகுதியுடையது.

நரி: (ஏம்லே.வருசாவருசா ஓம்பேரச்சொல்லி கலாட்டா பண்றது போதாதா?) அடுத்து சிறுபான்மை இனத்தைச் சார்ந்த ஒட்டகம் மேடைக்கு வரவும்.

ஒட்டகம்: அவையோருக்கு என் அன்பான சலாம்! என்னை சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவன் என்று சொன்னதை ஆட்சேபிக்கிறேன்.ராஜஸ்தான் முதல் அரபுநாடுகள் வரை நாங்கள் பரவி இருக்கிறோம்.அகண்ட பாரதம் உருவானால் அப்போது தேசியவிலங்காக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் வருவதைத் தவிர்க்க எங்களையே தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.

நரி:(போடாங் கொய்யால கொசுவும்தான் உலகம் பூரா இருக்கு.அதுக்காக?) நண்பர் குதிரை மேடைக்கு வரவும்.

குதிரை: பண்டைய மன்னர்களின் (அசுவமேத) யாகம் முதல் இன்றைய பாராளுமன்ற எம்பிக்களை விலை பேசுவதுவரை எங்கள் பெயர்(குதிரைபேரம்) அடிபடுகிறது. ஆகவே எங்களையே தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.

நரி: (என்ன இருந்தாலும் உன் முதுகில சவாரி செஞ்சிடுறானுங்களே!) அடுத்து அண்ணன் 'சொரி'நாய் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்.

நாய்: எல்லோருக்கும் ஒரு லொள்ளு! நன்றியுள்ள எங்களைத் தவிர தேசிய விலங்காக இருப்பதற்கு யாருக்குத்தான் தகுதியுள்ளது?எனவே எங்களையே தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.

நரி:(அப்ப ஏம்லே நன்றிகெட்ட நாயேன்னு திட்டுறானுங்க?) அடுத்து குரங்கு மேடைக்கு வரவும்.

குரங்கு: ராமருக்குப் பணிவிடை செய்ததன்மூலம் அரசியலுக்கு வந்தவன் நான். தன்னலமற்ற நீண்டகால அரசியல் பின்னணியை கருத்தில்கொண்டு குரங்கையே தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.

நரி: (நீயி மிருகமா மனுசனா என்று இன்னும் முடிவுக்கு வரலே.அதனால ராமர் ஆட்சி மலர்ந்த பின்னாடி உன்னைப் பற்றி யோசிப்போம்) அடுத்து கரடியை மேடைக்கு அழைக்கிறேன்.

கரடி: ஏய்டண்டனக்கா! ஏய் டண்டனக்கா! உங்கள் கையிலிருப்பது ஓட்டு. அதை எனக்குப் போட்டு! மத்தவங்களுக்கு வைங்க வேட்டு. உடு ஜூட்டு!யக்காவ்..

நரி: (இவன் டயலாக்கைப் பார்த்தா கரடி மாதிரி தெரியலையே?) பூனை மேடைக்கு வரவும்.

பூனை: அவையோருக்கு என் அன்பான மியாவ்! காட்டிலும் நாட்டிலும் 'சாது' வான விலங்காக இருப்பதால் உங்கள் ஓட்டு பூனைக்கே!

நரி: (புலியப் பார்த்து பூனையும் சூடுபோட்டுக் கொண்டதாம். ஏன்டா உனக்கு இந்த ஆசை?) தம்பி எலி ஏதேனும் சொல்ல விரும்பினால் சொல்லலாம்!

எலி: மதமதவென்று பேசிய ஒருவர் ஆனைமுகத்தோன் விநாயகரின் 'தல' என்பதால் தன்னையே தேசிய விலங்காகத் தேர்வு செய்ய வேண்டினார். ஆனை முகத்தோன் விநாயகரின் வாகனமான எலிகளே தேசிய விலங்காகத் தகுதியுள்ளவையென எலிமையாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நரி: (மனுசங்க மொதல்ல விஷம் வச்சுக் கொல்றது உங்களைத்தான்! திருட்டுப்பசங்கடா நீங்க!) பாம்பு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

பாம்பு: சமீபத்தில் முதலமைச்சர் கருணாநிதி படமெடுப்பவர்களின் சொர்க்க பூமியாக தமிழகத்தை மாற்ற விரும்புவதாகச் சொன்னதை நினைவுறுத்தி, சிவபெருமானின் கழுத்தில் மாலையாகத் தொங்கும் பாம்பை விடவும் தேசிய விலங்காகும் தகுதி யாருக்கும் இல்லை என்பதால் பாம்பு உங்கள் சாய்ஸ்!

நரி: (முதல்வர் சினிமாப்படம் எடுப்பதைச் சொன்னாருடா டுபுக்கு) அடுத்து கழுதை என்ன சொல்லப்போறீங்க?

கழுதை: உழைப்பாளர்களின் தோழன் கழுதை.பொறுமையின் சிகரம் கழுதை! தேசிய விலங்காக கழுதையைத் தேர்வு செய்யும்படி கழுதையாகக் கத்திச் சொல்லிக் கொள்கிறேன்.

நரி: (கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசம்?) தங்கள் அருமை பெருமைகளைச் சிறப்பாக விளக்கிய மிருகங்களுக்கு நன்றி. இறுதியாக கூட்டணியிலுள்ள சிறுத்தை மற்றும் இதுவரை அரசியல் நடத்த உதவிய புலிகளும் தங்கள் கருத்தைச் சொல்லி விட்டால் தேர்தலை சுமூகமாக நடத்தி விடலாம்!

சிறுத்தை: சிலர் தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணிக்கு வந்து செல்கிறார்கள். வெற்றி பெற்றதும் அணிமாறுகிறார்கள். தமிழினத்தின் நிரந்தரக் காவலரான சிங்கத்தமிழன் கூட்டனியில் என்றும் ஒட்டிக் கொண்டிருக்கும் சிறுத்தைகளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால் புலிகளுக்குப் பிறகு தேசிய விலங்காக சிறுத்தையை அறிவிக்க மத்திய அரசை வற்புறுத்துமாறு சிங்கராஜாவைக் கேட்டுக் கொள்கிறேன்.

நரி:(அதான் ராஜபக்சேயுடன் பிரியாணி சாப்பிட அழைத்துச் சென்றார்களே?) மேதகு புலிகள் என்ன சொல்லப்போறீங்கன்னு ஒட்டுமொத்தத் தமிழினம் மட்டுமின்றி சிங்களரும் ஆர்வமாக உள்ளனர் என்பதால் உடனடியாக மெளனம் கலைக்கவும்.

புலி: புலிகளை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது. ஆண்டாண்டுகளாக ஆண்டுவந்த தமிழினம் இன்று அடிமைப்பட்டுக் கிடக்கிறது. புலிகளிடையே ஒற்றுமையில்லாததே இந்நிலைக்குத் தள்ளிவிட்டது. விஷமிகள் ஒன்றுகூடி இன்று புலிகளை தமிழ் தேசியத்திலிருந்தும் இந்திய தேசியத்திலிருந்தும் விரட்டியடிக்க முனைகின்றனர். மதவாத,இனவாதச் சக்திகளின் சூழ்ச்சியை மாண்புமிகு தலைவர் உணர்ந்து புலியையே தேசிய விலங்காகத் தொடரச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சிங்கம்: தேசிய விலங்காக விருப்பம் தெரிவித்த அனைவரும் தத்தமது கருத்துக்களைத் தெளிவாகச் சொன்னீர்கள். இன்னார்தான் தேசிய விலங்கு என்று அறிவிக்க நாமொன்றும் சர்வாதிகார அரசாங்கம் நடத்தவில்லை. அமெரிக்கா கைகாட்டும் யாரும் ஐநா சபை பொதுச்செயலாளர் ஆகலாம். இந்தா பிடிச்சுக்கோ என்று தூக்கிக் கொடுக்க இதுஒன்றும் நோபல் பரிசல்ல!

இங்குள்ள மின்னணு வாக்களிப்பு எந்திரத்தில் ஒவ்வொருவராக வந்து தங்கள் வாக்குகளைச் செலுத்துமாறு அழைக்கிறேன்.

எல்லா விலங்குகளும் வரிசையில் நின்று தங்கள் அடையாளஅட்டையைக் காட்டி வாக்களித்தன. சிறுசிறு மிருகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி மற்ற விலங்குகளைக் குழப்பின.மூன்று கட்டமாக நடந்த வாக்குப்பதிவு முடிவுகள் மறுநாள் அறிவிக்கப்படுகிறது.

சிங்கம்:வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. பதிவான வாக்குகளில் கழுதை அதிக வாக்குகள் பெற்றுள்ளது. இன்று முதல் நமது தேசிய விலங்கு கழுதை என்று அறிவிக்கிறேன்" சபை கலையட்டும்! என்று கர்ஜித்தது.

(தேர்தல் முடிவில் திருப்தியடையாத தோல்வியுற்ற விலங்குகள் மின்னணு வாக்களிப்பு எந்திரத்தில் குளறுபடி நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டின. அதை நிரூபிக்கும்படி தேர்தல் ஆணையர் நரி பலமுறை அழைத்தும் யாராலும் நிரூபிக்க முடியவில்லை.

மறுநாள் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கழுதை"கழுதைகளின் கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.வரும் 2015க்குள் நிலவுக்குக் கழுதையை அனுப்புவோம்! வாக்களித்த அனைவருக்கும் நன்றி! என்னைப்பார் யோகம் வரும்! என்று கத்தியது.

Read more...

தொழிலுக்கேற்றப் பெயர் (அல்லது) பெயருக்கேற்ற தொழில்

Wednesday, November 11, 2009

உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி கீழ்கண்ட தொழிற்பெயர்களை செம்மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் பெயரை மாற்றிக்கொள்ளவும் அல்லது பெயருக்கேற்ற தொழில் செய்யவும் வசதியாக இருக்கும். வழக்கம்போல் ஈமெயிலில் வந்தது.

Agriculturist = பச்சயப்பன்
Alcoholic = கள்ளபிரான்
Attentive Driver = பார்த்தசாரதி
Baker = சீனிவாசன்
Barber = கொண்டையப்பன்
Bartender = மதுசூதனன்
Batsman = தாண்டியப்பன்
Beggar = பிச்சை
Bowler = பாலாஜி
Builder = செங்கல்வராயன்
Cardiologist = இருதயராஜ்
Dairy Farmer = பசுபதி
Dentist = பல்லவன் / பல்லவி
Diabetologist = சக்கரபாணி
Doctor = வைத்தியநாதன்
Dog Groomer = நாயகன்
Driver = சாரதி
ENT Specialist = நீலகண்டன்
Exhibitionist = அம்பலவாணன்
Exorcist = மாத்ருபூதம்
Female Spin Bowler = திருப்புரசுந்தரி
Fiction writer = நாவலன்
Financier = தனசேகரன்
Horticulturist = புஷ்பவனம்
Hypnotist = சொக்கலிங்கம்
Javelin Thrower = வேலாயுதம்
Karate Expert = கைலாசம்
Kick Boxer = எத்திராஜ்
Landscaper = பூமிநாதன்
Lawyer = கேஸவன்
Magician = மாயாண்டி
Makeup Man = சிங்காரம்
Marriage Counselor = கல்யாண சுந்தரம்
Mentalist = புத்திசிகாமணி
Meteorologist = கார்மேகம்
Milk Man = பால்ராஜ்
Mountain Climber = மலைச்சாமி
North Indian Lawyer = பஞ்சாபகேஸவன்
Nutritionist = ஆரோக்கியசாமி
Ophthalmologist = கண்ணையன்
Painter = சித்திரகுப்தன்
Pediatrist = குழந்தைசாமி
Polevaulter = தாண்டவராயன்
Psychiatrist = மனோ
Sex Therapist = காமதேவன்
Singer = ராகவன்
Snake Charmer = நாகமூர்த்தி/நாகராஜன்/நாகம்மா
Spin Bowler = திருப்பதி
Stockist = பண்டாரம்
Sumo Wrestler = குண்டுராவ்
Weight Lifter = பலராமன்

Read more...

நோபல் விருதையும் கலைஞருக்கே கொடுத்திருக்கலாமே!

Saturday, October 10, 2009

2009 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் விருது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் ஜார்ஜ்புஷ் அரசினால் நடைமுறைப் படுத்தப்பட்ட பல்வேறு கொள்கைகளை மாற்றி (CHANGE) அமெரிக்கர்கள்மீதான உலகலாவிய வெருப்பை நீக்குவதற்காக புது கொள்கைகளை முன்வைத்த பாராக் ஒபாமா, இதுவரை எந்தமாற்றத்தையும் கொண்டுவந்த மாதிரி தெரியவில்லை.

பின்லாடனை ஆப்கனிலும் பாகிஸ்தானிலும் வலைவீசித் தேடுவதாகச் சொல்லிக்கொண்டு கடந்த பத்து வருடங்களாக அமெரிக்க ராணுவத்தின் அட்டூழியங்களை பதவியேற்று ஓராண்டிற்கு மேலாகியும் அமைதியாகக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக "2009 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் விருது" வழங்கப்பட்டிருக்கிறதாகவே நினைக்க தோன்றுகிறது.

சீனாவில் உய்குர் இனமக்களை சீன ராணுவம் கொன்றொழித்ததையும், இலங்கையில் விடுதலைப்புலிகளை அழிப்பதாகச் சொல்லி அப்பாவிகளைக் கொல்வதை 'அமைதியாக' வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாலும் "2009 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் விருது"ஒபாமாவுக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடும்!

ஒட்டுமொத்த உலகையும் ஓரிரு மணிகளில் மயான அமைதியாக்கும் நாசகார நச்சு ஆயுதங்களையும், அணுகுண்டுகளையும் இருப்பில் வைத்துக் கொண்டு ஈரான் அணுஆயுதம் செய்யக்கூடுமென்று பூச்சாண்டிகாட்டி, இஸ்ரேலின் அணு ஆயுதம் குறித்து எதுவும் சொல்லாமல் மத்திய கிழக்கில் அமைதியைக் கெடுத்ததோடு இந்தியாவுக்கு அணுச்செரிவூட்டலுக்கான எவ்வித உதவியும் வழங்க வேண்டாம் என்று இதர நாடுகளை நிர்ப்பந்தித்து வரும் அமெரிக்க அதிபருக்கு "2009ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் விருதை" வழங்கியதன்மூலம் நோபல் விருதுமீதான நம்பகத் தன்மை குறைந்துள்ளது.

அமைதிக்காக அருந்தொண்டாறி வரும் எத்தனையோபேர் இருக்கும்போது ஒபாமாவே ஆச்சரியப்படும்படியாக "அமைதிக்கான நோபல் விருதை" கொடுத்திருப்பதன் மூலம் நோபல் விருதின் பெருமைக்கு பங்கம் வந்துள்ளது.

கடந்த சிலமாதங்களாக அடுத்தடுத்து விருதுகள் கொடுத்து/பெற்றுவரும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கே இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் விருதையும் வழங்கி இருக்கலாம். இலங்கை விசயத்தில் ஒபாமாவைவிட அமைதியாக இருந்ததால் இவ்விருதுக்கு கலைஞர் கருணாநிதியே தகுதி உடையவராவார்!

பின்குறிப்பு : உலக அமைதிக்கு எதிராக நானும் எதுவும் செய்யவில்லை. அடுத்த வருடம் என்பெயரை நோபல் விருதுக்கு பரிந்துரைத்தால் நான் மறுக்கப்போவதில்லை என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்கவே இப்பதிவு. :-)))

Read more...

என்னைக் கோடீஸ்வரனாக்கச் சதி!

Wednesday, July 08, 2009

அன்பின் நல்ல நண்பன்,

நலம் நலமறிய ஆவல்.வளைகுடாவில் குப்பைகொட்டி கஷ்டஜீவனம் நடத்திக் கொண்டிருக்கும் எனக்கு உமது மின்மடல் வாயிலாக நற்செய்தியைக் கொண்டு வந்துள்ளதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். இந்திய ரூபாய் மதிப்பில் 5.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு சுமார் 278 கோடி ரூபாய்கள் வருகிறது. 60:40 என்ற வகையில் உனக்கு 167,040,000.00 ரூபாயும் எனக்கு 111,360,000.00 ரூபாய்களும் வரும். 111 ஐ நாமம் போடுவதற்கும் சொல்வார்கள்!


எனக்காக கோடிக்கணக்கில் உதவ விரும்பும் நல்ல நண்பனை நிச்சயம் ஏமாற்ற மாட்டேன். மேற்கொண்டு ஆகவேண்டியச் சடங்குகளை தயவு செய்து உடனடியாக அனுப்பி வைக்கவும். இம்மின்மடலை தந்தியாகப் பாவித்து உடனடி பதில் போடவும்.

இப்படிக்கு,
ங்கொய்யால


----- Original Message -----
From: good friend
Sent: Wednesday, July 08, 2009 1:58 மாலை
Subject: Hi


I will like you to help me, in the transfer of fund worth ($5.8Million) into your account, we have to share it 60%to 40% and i believe that you can not cheat me after the transfer, i will send you more detail about this transfer as soon as i hear from you. pls reply to:friend4good@voila.fr


பின்குறிப்பு: நாமும் கோடீஸ்வரனாகலாமே என்ற நப்பாசையில் பின்னூட்டம் கூடப் போடாமல் நல்லநண்பணுக்கு மின்மடல் அனுப்ப முயற்சிப்பதற்குமுன் இந்தப் பதிவையும் வாசித்து விடுங்க.

Read more...

ராஜபக்ஷே மொட்டை அடித்தது ஏன்?

Wednesday, May 20, 2009

தமிழீழத் தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றபோது கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவது பிரபாகரன் அல்ல;கணினி உதவியுடன் செய்யப்பட்ட கிராஃபிக்ஸ்வேலை என்ற கருத்து நிலவுகிறது.



இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே ஐ.நா சபை அரங்கில் மொட்டைத் தலையுடன் வந்து உரையாற்றியபோது எடுத்த புகைப்படம்!


கொஞ்சம் சிரத்தை எடுத்தால் இன்னும் தத்ரூபமாகக் காட்டி ஏமாற்றலாம்.

தப்பிச் செல்லும்போது தன்னுடைய அடையாள அட்டையையும் எடுத்துச் சென்றார் என்பதைக் கேட்கும்போது நம்நாட்டில் பிடிபடும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடையாள அட்டையுடன் பிடிபட்டார்கள் என்று போலீஸ் சொல்வது அநியாயத்துக்கு நினைவில் வந்து தொலைத்தது.

Read more...

டி.ராஜேந்தரை என்ன சொல்லித் திட்டியிருப்பார்கள்?

Sunday, April 26, 2009

சி்ன்னசேலம் ரயில் நிலையத்தில் மனைவி உஷாவை ரயிலில் அனுப்புவதற்காக சென்றபோது லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தரை திட்டி மிரட்டிய தேமுதிகவைச் சேர்ந்த 6பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷாவை சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைத்தார்.


இதற்காக சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு அவர் வந்தார்.பிளாட்பாரத்தில் நடந்து போன போது, திடீரென அங்கு வந்த சின்னசேலம் தேமுதிக ஒன்றியச் செயலாளர் சின்னசாமி, குமார், கோபிநாத், சூரியன், தாமோதரன், அறிவழகன் உள்ளிட்டோர் சரமாரியாக ராஜேந்தரைத் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜேந்தர் சின்னசேலம் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தற்போது, குப்புசாமி மகன் சின்னசாமி, சின்னசேலம் பாண்டியன் மகன் குமார், சின்னப்பன் மகன் கோபிநாத், துரைசாமி மகன் சூரியன், அங்கமுத்து மகன் தாமோதரன், கோவிந்தன் மகன் அறிவழகன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
--------------------------------------------------------------------------------
என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தப் பின்னூட்டம்
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: கோப‌க்கார‌ப‌ய‌புள்ள‌பதிவு செய்தது: 26 Apr 2009 3:58 pm

ம‌னித‌ன் குர‌ங்கிலிருந்து பிற‌ந்தான் என்று விஞ்ஞானிக‌ள் நினைத்துக் கொண்டிருந்த‌ போது, இல்லை இல்லை ம‌னித‌ன் க‌ர‌டியிலிருந்தும் பிற‌ந்திருக்க‌லாம் என்ற‌ ச‌ந்தேக‌த்தை ஏற்ப‌டுத்தி ஒரு புதிய‌ ஆராய்ச்சிக்கு வித்திட்ட‌வ‌ர்.
---------------------------------------------------------------------------------
http://thatstamil.oneindia.in/news/2009/04/26/tn-6-persons-arrested-for-threatening-vijaya-tr.html

---------------------------------------------------------------------------------

டி.ராஜேந்தரை என்ன சொல்லித் திட்டியிருப்பார்கள்? அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம் ;-)))

Read more...

ஏழையின் சின்னம் செருப்பு

Sunday, April 19, 2009

தொண்டர் (1): செருப்பு போடாம தலைவர் பிரச்சாரத்துக்குப் போறாரே! அவ்வளவு எளிமையானவரா?

தொண்டர் (2): அதெல்லாமில்லே! பிரச்சாரதுல எப்படியும் செருப்பு வந்து விழும்ங்கற நம்பிக்கைதான்!

****
தொண்டர் : தலைவரே! பொதுக்கூட்டத்துக்குப் போகாம தவிர்ப்பது நல்லது.

தலைவர் : ஏன் என்னாச்சு?

தொண்டர் : தொகுதி மக்கள் எடைக்குஎடை செருப்பு தரத் திட்டமிட்டிருக்கிறார்களாம்!

****

தொண்டர் (1): தேர்தல்ல தோத்துப்போன நம் தலைவர் இப்ப என்ன செய்றார்?

தொண்டர் (2): செருப்புக்கடை வச்சிருக்கிறார்!

****
தொண்டர் (1): காலில் விழுந்து ஓட்டுக் கேட்கும் நம்தலைவர் ஏன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்?

தொண்டர் (2): தலைவர்மேல செருப்புவீச முயற்சி செஞ்சதைப் பார்த்துட்டார்.

****
தொண்டர் (1): தலைவருக்கு டெப்பாசிட் போனாலும் நஷ்டமில்லே!

தொண்டர் (2): எப்படி?

தொண்டர் (1): அவர்மேல விழுந்த செருப்புக்களை விற்று ஈடுகட்டிடார்!
****

தொண்டர் (1): என்னதான் இருந்தாலும் எதிர்க்கட்சியினர் நம்மத் தலைவரை மிஞ்ச முடியாது!

தொண்டர் (2): எதை வச்சு சொல்றே?
தொண்டர் (1): நம்ம தலைவருக்கு அவங்களைவிட ஒரு செருப்பு அதிகமா விழுந்திருக்காம்!
****

இப்பதிவுக்குச் சம்பந்தமில்லாத செய்தி

Read more...

பகுத்தறிவு - கிலோ என்ன விலை?

Sunday, March 22, 2009


மதவாதி: ஐயா! வெயில் காலத்துல கருப்புச் சட்டை போட்டிருக்கிறீர்களே?

பகுத்தறிவுவாதி: ஆமாங்கய்யா! நான் ஒரு பகுத்தறிவுவாதி!

மதவாதி: BLACKBODY RADIATION தெரியும்தானே?கருப்பு நிறம் வெப்பத்தைத் தக்கவைக்கும் பண்புடையது. வெயில்காலத்தில் கருப்புச்சட்டை உடம்புக்கு நல்லதல்ல என்று உங்கள் பகுத்தறிவிற்குத் தெரியாதா?
************
மதவாதி:ஐயா நீங்க சாமி கும்பிடமாட்டீங்களா?
பகுத்தறிவுவாதி: ஆமா! பகுத்தறிவுவாதிகள் சிலை வணங்கமாட்டோம்!
மதவாதி: அப்ப ஏனுங்கய்யா பெரியார் சிலைக்கும் மாலைபோட்டு பிறந்த/இறந்த தினத்தன்று கும்பிடுறீங்க?
*************
மதவாதி: ஐயா! கடவுளை ஏன் நம்பமாட்டீர்கள்?
பகுத்தறிவுவாதி: கடவுளை யாருமே கண்டதில்லையே ஐயா!
மதவாதி: பகுத்தறிவைக்கூடத்தான் யாரும் கண்டதில்லை! அதுக்காக உங்களுக்கு அறிவில்லை என்று சொல்ல முடியுமா?
பகுத்தறிவுவாதி: ?!
**************
மதவாதி: ஐயா நீங்கள் எப்படி உங்களைப் பகுத்தறிவுவாதி என்று சொல்கிறீர்கள்?
பகுத்தறிவுவாதி: கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று பகுத்தறிந்துள்ளோம் என்பதால் நான் பகுத்தறிவுவாதிதான்!
மதவாதி: ஓஹோ! கடைசியாக என்ன பகுத்தறிந்து முடிவுக்கு வந்தீர்கள்?
பகுத்தறிவுவாதி:கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்!
மதவாதி: ஏன் அப்படி ஒரு முடிவுகு வந்தீர்கள்?
பகுத்தறிவுவாதி: ஏனென்றால் அவரை யாருமே கண்டதில்லை!
மதவாதி: எவரை யாருமே கண்டதில்லை?
பகுத்தறிவுவாதி: அதான் சொன்னேனே. கடவுளை யாருமே கண்டதில்லை என்று!
மதவாதி: இல்லாத ஒன்றை எப்படிக் காணமுடியும்?
பகுத்தறிவுவாதி: அப்ப நீங்களும் கடவுள் இல்லை என்று ஒப்புக் கொள்கிறீர்களா?
மதவாதி: இல்லை என்று 100% நிரூபனமாகும்வரை அப்படி ஒத்துக் கொள்ள மாட்டேன்!
பகுத்தறிவுவாதி: ஏன்?
மதவாதி: 100% நிரூபனமாகததை நம்புவதற்கு என் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை!
பகுத்தறிவுவாதி: அப்ப நீங்களும் பகுத்தறிவுவாதியா?
மதவாதி: ஆமாம்! என் பகுத்தறிவுக்கு எட்டாததையும் நம்புகிறேன்.
பகுத்தறிவுவாதி: அப்படியென்றால் நாங்கள்?
மதவாதி: உங்கள் பகுத்தறிவுக்கு உட்பட்டதை மட்டும் நம்புவதால் அரைகுறை பகுத்தறிவுவாதி என்று சொல்லலாம்!
பகுத்தறிவுவாதி: அப்ப முழு பகுத்தறிவுவாதியாக மாற என்ன செய்ய வேண்டும்?
மதவாதி: பகுத்து அறிந்து சரியானக் கடவுளை நம்புங்கள்

Read more...

15 கோடி தலையில்லா வாக்களர் அடையாள அட்டைகள்!

Saturday, March 21, 2009

பாஜக வேட்பாளாக பிலிபித் தொகுதியில் போட்டியிடும் தருண் S/o மேனகா காந்தேயின் மதவெறிப் பேச்சைத் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.

1) தேர்தல் பிரச்சாரத்தில் மதவெறியைத் தூண்டும்விதமாகப் பேசியதால் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தேர்தல் ஆணையம் தடை விதிக்கலாம்.

2) தருண் பாஜகவின் ஆங்கீகரிக்கப்பட்ட வேட்பாளரோ அல்லது உயர்மட்டத் தலைவரோ அல்ல என்று சொல்லி பாஜகவிலிருந்து கழட்டி விடப்படலாம்.

3) கருத்துரிமை,கற்பழிக்கும் உரிமை, தலைவெட்டும் உரிமை என்று ஏதாவது ஒரு உரிமையாகச் சொல்லப்பட்டு,குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் அரைடவுசர்களால் சரிகாணப்பட்டு, தருண்தான் உண்மையான தேசபக்தன் என்றும் அவரின் வெற்றிக்குப் பாடுபடுவதே உண்மையான தேசபக்தர்களின் கடமை என்று மென்மேலும் மதவெறி ஊக்குவிக்கப்படலாம்.

ஏற்கனவே, நான் அவ்வாறு பேசவில்லை; பத்திரிக்கையாளார்கள் திரித்து விட்டார்கள் என்றார். வீடியோ ஆதாரத்தைக் காட்டியபிறகு தனது பேச்சு ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்று அத்வானி,வாஜ்பாய் பாணியில் விளக்கம் அளித்துள்ளார்.இந்நிலையில் தருண்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கா விட்டாலோ அல்லது தேர்தலில் போட்டியிட தடைவிதிக்காவிட்டாலோ பாஜகவின் (கூட்டணி) வேட்பாளர்களும் இவ்விதம் பிரச்சாரம் செய்யக்கூடும் என்பதோடு தருண் வெற்றி பெற்றால் முஸ்லிம்களின் தலையை வெட்டுவார்!

பாஜக-தருணை தட்டிக்கொடுத்து ஆதரித்தாலோ உட்கட்சி பூசலால் மூழ்கிக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச வாய்ப்பும் பறிபோகும் என்பதோடு,மோடிக்குப் போட்டியாக பாஜகவில் இன்னொருவர் உருவாவதை தடுக்க முடியாது.

மொத்தத்தில் தருணை விட்டு வைத்தால் அ) முஸ்லிம்களின் தலைகள் வெட்டப்படும் ஆ) மோடிக்குப் போட்டியாக வந்து 2014 தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளருக்கு மேலும் ஒருவர் வரக்கூடும்!

தருண் வெற்றிபெற்றால் முஸ்லிம்கள் தலையை இழக்கும் அபாயம் ஒருபக்கம் இருக்க சுமார் 15 கோடி புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் தலையின்றி இருக்கும்!

முஸ்லிம்களின் தலையை தேர்தல் கமிஷன் காப்பாற்றுமா?

Read more...

ராமர் கோவிலுக்குப் பதிலாக மொபைல் போன்!

Sunday, March 15, 2009

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மொபைல்போன் கொடுப்பதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். ஒருவகையில் நாட்டுக்கும் இதனால் நல்லது! தப்பித்தவறி வெற்றிபெற்றால் ராமர்கோவில் வேண்டுமா மொபைல்போன் வேண்டுமா என்றால் சமயச்சார்பின்றி மொபைல்போனே வேண்டுமென்பர்!

பெட்டிப்பாம்பு

தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு இலவசப்பொருட்கள் கொடுப்பதை விதிகளை மீறிவிட்டதாகச் சொல்லித் தண்டிக்கும் தேர்தல் ஆணையம் தேர்தலுக்குப்பின் இதைத் தருவோம் அதைத்தருவோமென வாக்காளர்களை ஆசைகாட்டி ஓட்டு வாங்கும் வாக்குறுதிகளையும் தடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்யா விட்டால் நாட்டிலேயே உச்சஅதிகாரம் கொண்டதாகச் சொல்லப்படும் தேர்தல் ஆணையம், தேர்தலுக்குப் பின் அரசியல்வாதிகளின் அதிகாரத்திற்குட்பட்டு அடங்கி நடப்பதாகிவிடுகிறது! விதிமுறைகள் என்ற பெயரில் அரசியல்வாதிகளை ஆட்டிப்படைத்த ஆணையம்,தேர்தலுக்குப்பின் பெட்டிப்பாம்மாக அடங்கிப்போகக் கூடாது!

திருவிழா பரிசு!

தேர்தல்களை ஜனநாயகத் திருவிழா என்று பெருமையாகச் சொல்கிறோம். உண்மையானத் திருவிழா என்றால் பரிசுகளும் இருக்க வேண்டும்! கடந்த ஐந்தாண்டுகளாக மக்களைச் சுரண்டிய அரசியல்வாதிகளிடமிருந்தும் அடுத்த ஐந்தாண்டுகள் சுரண்டப்போகும் அரசியல்வாதிகளிடமிருந்தும் மக்கள் பயன் அடைவது தேர்தல் காலங்களில் மட்டுமே!.

தேர்தலுக்குமுன் வழங்கப்படும் இலவசங்களால் மக்களுக்கு உடனடிப்பயன் விளைகிறது. தொகுதிப்பக்கம் திரும்பிப் பார்க்காத வேட்பாளர்கள் தண்டமாக தொகுதி மக்களுக்கு வழங்குவதாகக்கருதி இலவச பரிசுப்பொருட்களை தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்!

நாட்டாமை தீர்ப்பை மாத்து!

இதை வெளிப்படையாகக் கொடுத்தால்தான் வேட்பாளருக்குப் பிரச்சினை. ஊர்ப்பஞ்சாயத்துகளில் சிறப்புக் கூட்டம் போட்டு குறிப்பிட்ட தொகையைப் பஞ்சாயத்துக்கு கொடுத்து விட்டால் போதும்! ஊர்மக்கள் அதைப் பிரித்துக் கொண்டு ஊர்த்தலைவர் சொல்லும் கட்சிக்கு வாக்களித்து விடுவார்கள்.

இதனால் அரசியல்வாதிகளுக்கும் ஒருவகையில் நன்மையே. தனித்தனியாக கொடுத்தும் வாக்குகள் விழாமல் போயிருந்தால் தனிப்பட்ட முறையில் காரணம் கேட்கமுடியாது. பஞ்சாயத்துகள் மூலம் கொடுத்தால் எதிர்பார்த்த வாக்குகள் பெறாதபட்சத்தில் தலைவரின் துண்டைப் பிடித்து உரிமையுடன் கேட்க முடியும்!

என்னா நாஞ்சொல்றது!

Read more...

இந்தியாவில் ஒட்டகங்கள் இல்லையா தருமி சார்?

Saturday, February 28, 2009

அதிரை பாருக்கின் எல்லைதாண்டிய இஸ்லாமிய ஈமெயில் படையெடுப்பு குறித்து தருமி பதிவிட்டிருந்தார். நம்ம அதிரைக்காரர்களுக்கு வேறுவேலையே இல்லை. ஆட்டைக்கழுதையாக்கிய பழியிலிருந்தே மீளாதபோது, தருமியை வலுக்கட்டாயமாக சொர்க்கத்துக்கு அனுப்ப முயற்சித்துள்ளார்.

பாவம் பாய், தருமிக்குப் பொதுமன்னிப்பு வழங்கி அவரை உங்கள் மெயிலிங் லிஸ்டிலிருந்து நீக்கிடுங்க அல்லது அற்புத சுகமளிக்கும் மின்மடல் குழுமம் தொடங்கி அதில் UNSUBSCRIBE வசதி கொடுத்துவிட்டால் வேண்டாதவர்கள் UNSUBSCRIBE செய்து கொள்வார்கள்.


தருமிபாவம்! இந்தியாவில் ஒட்டகங்கள் இருப்பதுகூடத் தெரியாத அப்பாவி மனுசர் அவர். பெரிய மனசு பண்ணி விட்டுடுங்க ;-)

//இப்படி சிறப்பு மிக்க ஒட்டகத்தைப் படைத்த இறைவன் அதை அரேபிய நாட்டினருக்கு கொடுத்துவிட்டு நமக்கெல்லாம் வெறும் எருமையையும், பசுமாட்டையும் கொடுத்து ஏமாற்றிவிட்டானே... ச்சே!//


வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்புற நம்ம தருமிசாருக்கு தயவுசெய்து யாராச்சும் எருமையும் பசுவும் பால் கொடுக்கும் என்பதற்கான ஆதாரத்தை அனுப்பி வையுங்க. ஏனென்றால் அரபு நாட்டு ஒட்டகம் மட்டும்தான் பால் கறக்கும் நம்ம பசுவும் எருமையும் 'கோ'கோலா (கவ்ஜல்?)தான் கறக்கும்னு நம்பிக்கிட்டு இருக்கார்.

கைதேர்ந்தப் படைப்பாளன் ஏகஇறைவன் மிக நேர்த்தியாக ஒட்டகத்தை வடிவமைத்தான்// அதன் பால் எத்தகைய உயர்வானது, அதனை உண்டு // அந்தக் காலத்தில் அரேபியர்கள் மிகவும் திடகாத்திரமான உடலமைப்புடன் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் //....

மதமும் வேண்டாம் கடவுளும் வேண்டாமென கரையொதுங்கிய தருமியை 'அடக்கடவுளே" என்று சொல்ல வைத்தது ஆட்டைக் கழுதையாக்கியதைவிட கொடுமை பாய்!எல்லோருமே சொர்க்கத்துக்குப் போயிட்டால் நரகத்துக்கும் ஆள் வேண்டாமா? என்று கேட்ட கழுதைகளும் அதிரையில் உண்டுதானே!

அதனால................. ;-)

Read more...

கொலைமாமணி விருதுகள் அறிவிப்பு

Wednesday, February 25, 2009

கலைச்சேவை புரிந்ததற்காக ஒவ்வொருவருடமும் தமிழக அரசு சிலரைத் தேர்ந்தெடுத்து கலைமாமணி விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது. அவுத்துப் போட்டு ஆடியும் வருமான வரிஏய்ப்பிலும் முதலிடத்தில் வரும் சினிமா நடிகர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் விருது வழங்குவது கடைந்தெடுத்த கயமைத்தனம்.

திரைப்படத்துறையில் இருக்கும் எவரும் தாங்கள் கலைச்சேவை செய்யவே வந்ததாகச்சொல்லாதபோது இத்தகைய விருதுகள் வழங்கப்பட வேண்டுமா? ஆளுங்கட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த திரைப்பட நடிக-நடிகைகளுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதில்லை என்பதிலிருந்து ஆளும்கட்சி அடிவருடிகளுக்கு அரசாங்கம் செய்யும் நன்றிக்கடனாகவே கலைமாமணி விருதுகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

சினிமா பின்னணி கொண்டவர்கள் அரசியலில் இருக்கும்வரை இதுபோன்ற விழாக்களையும் விருதுகளையும் ஒழிக்க முடியாது. அதனால் இதுபோன்ற வெட்டிப்பேச்சுக்களால் பயனில்லை என்பதால் கொலைச்சேவைகளுக்காக கொலைமாமணி விருதுகளுக்கு கீழ்கண்டவர்களைப் பரிந்துரைக்கிறேன்.

ஜார்ஜ் புஷ் (அமெரிக்கா) - நாடுபிடிக்கும் கலை

ஏரியல் ஷரோன் (இஸ்ரேல்) - அகதி முகாம்களைத் தாக்கும்கலை

யஹூத் ஓல்மர்ட் (இஸ்ரேல்) - பாஸ்பரஸ் குண்டுவீசும்கலை

நரேந்திர மோடி (இந்தியா) - இனச்சுத்திகரிப்புக் கலை

L.K.அத்வானி (இந்தியா) - கட்டிட இடிப்புக் கலை

மஹிந்த ராஜபக்சே (இலங்கை) - இனச்சுத்திகரிப்புக் கலை


விடுபட்ட கொலைமாமணிகள் பெயர்களை வலைமாமணிகள் பின்னூட்டம் வாயிலாகவும் பரிந்துரைக்கலாம் ;-)

Read more...

ஆஸ்கார் விருது - அமெரிக்கா வீசிய எலும்புத் துண்டு?

நம்நாட்டு பாஸ்மதிக்கோ அல்லது மஞ்சளுக்கோ அமெரிக்க நிறுவனம் ஒன்று ISO தரச்சான்று வழங்கினால் நமக்குப் பெருமையா? ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்திருப்பதைப் பார்த்து நமது பிரதமர், ஜனாதிபதி, நிதியமைச்சர்,சபாநாயகர்,முதலமைச்சர் என சகலஅரசியல் அதிகார மட்டங்களும் அடித்தட்டு இந்தியனும் ஆஸ்கார் விருது கிடைத்தது குறித்து பெருமைபட்டுக் கொள்கிறார்கள்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, விருது பெற்றது ஒவ்வொரு இந்தியனுக்கும் மகிழ்வைத் தருவதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கூறியுள்ளார்.தமிழக சட்டசபையில் புகழாரம் சூட்டியதோடு, முன்னாள் நிதியமைச்சரான நமது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இவ்விருதுக்கு வரிவிலக்கு அளிக்கவும் பரிந்துரைக்கபடுமென்று சொல்லி தேசப்பற்றையும் அமெரிக்க மோகத்தையும் வெளிக்காட்டியுள்ளார்.

வளரும் நாடுகளில் இதுபோன்ற அமெரிக்க அங்கீகாரங்களைப் பிரதானப் படுத்தி,சர்வதேச அங்கீகாரமாக மக்களை நம்பவைக்கும் முதலாளித்துவ வணிக யுக்திகளின் ஒரு பகுதியே திரைப்படங்களுக்கான ஆஸ்கார் விருது. அழகிப்போட்டிகள் மூலம் அழகையும் பெண்மையையும் சந்தைப்படுத்தி வயிறுவளர்த்தது போதாதென்று இந்திய திரைப்படங்களுக்கு விருது வழங்கி மேலும் சுரண்டலுக்கு அடித்தளமாகவே இந்த ஆஸ்கார் விருது வழங்கும் வைபவம் நிகழ்ந்து வருகிறது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் "சர்வதேசத் திரைப்படங்களுக்கு மத்தியில் ஒரு இந்திய தயாரிப்பு விருது பெற்றதும் அதை ஒரு தமிழனும் மலையாளியும் சாதித்திருப்பது உலகளாவிய அங்கீகாரம்தானே" என்றும் சிலர் கேட்கக்கூடும். நுகர்வுப் பொருட்களுக்கு வழங்கப்படும் தரச்சான்றுகள் போல், திரைப்படங்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க தரச்சான்றே ஆஸ்கர் விருது. அவ்வளவுதான்!

நடிகர் கமலாஹாசன் சொல்வதுபோல்,"இது ஒரு உலகத்தரச்சான்றல்ல; இந்திய தரச்சான்றைப்போல் ஆஸ்கார் என்பது அமெரிக்கத் தரச்சான்று. இந்தி(ய) சினிமா,அமெரிக்கா என்ற ஒரு நாட்டில் தயாராகும் படங்களின் தரத்தை எட்டியுள்ளதற்கான சான்றே தவிர ஓர் உலகளாவியத் தரச்சான்று அல்ல".

அமெரிக்கா தரச்சான்று கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நமது இந்திய தயாரிப்புகள் சர்வதேசத் தரத்திற்கு உயர்ந்து பல ஆண்டுகளாகி விட்டன என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?. ஓரிரு வருடங்களுக்குமுன்பு சக்கைபோடுபோட்ட 'லகான்' படத்திற்கும் ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்கத் திரைப்படத்திற்கு நம்நாட்டு ஃபிலிம்பேர் விருது கிடைத்தால் அமெரிக்கர்கள் பெருமையாகக் கருதுவார்களா? மாட்டார்கள். பிறகு ஏன் நமக்கு வெறும் பெருமை? அமெரிக்காவின் அங்கீகாரத்திற்காக நம் அருமை பெருமைகளை அடகுவைக்கும் கீழ்த்தரமான ஏக்கப் போக்கு மாறவேண்டும். அமெரிக்கா மட்டுமே உலகமா?

அமெரிக்க ஆஸ்கார் விருது கிடைத்தால்தான் அது உலகத்தரமுள்ளதென்ற முதலாளித்துவ மாயை நாட்டின் அடிமட்டக் குடிமகன் முதல் உயர்மட்ட அதிகாரப்பீடம்வரை சினிமா மோகம் வியாபித்திருப்பது உலகிலேயே நமது நாடாகத்தான் இருக்கும்! சந்தடி சாக்கில் ஒபாமாவும் இப்படத்தைக்காண ஆவல் கொண்டிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது நல்ல CHANGE!

விருதுபெற்றதும், "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று விழாமேடையில் A.R.ரஹ்மான் தமிழில் பெருமையாகக் குறிப்பிட்டதன்மூலம் தமிழ் மொழிக்கு தற்போதுதான் அங்கீகாரம் கிடைத்திருப்பதுபோல் மகிழ்வது எத்துணை பேதமை?

எவ்வாறாயினும்,எவ்வளவு புகழின் உச்சிக்குச் சென்றாலும் தன்னைவிட புகழுக்குரிய சக்தி ஒன்று உள்ளது என்று நம்பியதோடு மட்டுமின்றி அதை உலகம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் மேடையில் பேசி, திலீப் குமாராக இருந்து A.R.ரஹ்மானாக இஸ்லாத்தின்பால் தன்னை இணைத்துக் கொண்ட இசையமைப்பாளர் A.R. ரஹ்மானின் தன்னடக்க வெளிப்பாடு நிச்சயம் பாராட்டுக்குரியது.

Read more...

நியாயமான சந்தேகம்?

Saturday, February 21, 2009

1) சென்னை ஹைகோர்ட்டில் சுப்ரமணிய சுவாமிக்கு முட்டை அபிஷேகம்

2) இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் சூடு பிடித்த பின்னர், மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்த பின்னர் முதல் முறையாக மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தமிழகம் வருகிறார்.

3) முட்டைவிலை உயர்வு

மேற்கண்ட மூன்று செய்திகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது.

Play Online egg-attack game

Read more...

2012 இல் ஒபாமாவை எதிர்த்து சரத்குமார் போட்டி?

Sunday, February 15, 2009

உலகிலேயே வெட்கமில்லாத அரசியல்வாதி அனேகமாக சரத்குமார் என்றுதான் நினைக்கிறேன். கடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் எழுநூற்று சொச்சம் ஓட்டு வாங்கிய கட்சியை வைத்துக் கொண்டு கொஞ்சம்கூட வெட்கமின்றி "தேசிய கட்சியுடன் மட்டுமே கூட்டணி" என்று அறிவித்துள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் (பிப்ரவரி 13) தென்காசியில் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு சரத்குமார் அளித்த பேட்டி. அவர் சொல்ல வெட்கப்பட்டவை (அடைப்புக் குறிக்குள்):



"40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுயிட வேண்டும் என்பதுதான் என் முடிவு.(பிரதமர் பதவியை எங்களுக்கு விட்டுக்கொடுக்க முன்வரும் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி அமைக்கத் தயார். அவர்கள் தயாரா? என்பது எனக்குத் தெரியாது.) ஆனால் கட்சி நிர்வாகிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று சொல்லி வருகிறார்கள். (அப்போதான் போஸ்டர் ஒட்டும் செலவுக்காவது பணம் கிடைக்கும்)

இதனால் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது (இறுதி முடிவு எடுக்கும் முழுஅதிகாரத்தை கட்சித் தலைவருக்கு பொதுக்குழு ஏகமனதாக வழங்கி உள்ளது. ராதிகாவின் ஒப்புதலின்றி தலைவர் எந்த முடிவும் எடுக்க மாட்டார். கட்சித் தலைவர் நானேதான் என்பதால்இதில் பிரச்சினை இருக்காது)

மார்ச் 15-ந்தேதி கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிடும். பெரும்பாலும் தேசியக் கட்சியுடன்தான் கூட்டணி இருக்கும்" (அதுவரை எங்கள் கட்சி இருக்குமா என்று தெரியவில்லை) என்றார் சரத்குமார்.

(பொதுவான செயல்திட்டம் அமைத்தே கூட்டணி வைப்போம். எங்கள் செயல் திட்டங்கள் இன்னும் முடிவாகவில்லை. தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெளியாகிய அடுத்த 24 மணி நேரத்திற்குள் எங்கள் தேர்தல் அறிக்கை வெளியாகி விடும்.

திருமங்கலம் இடைத்தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர் இழந்த டெப்பாஸிட்டை விடக்கூடுதலாக 100-ரூபாய் சேர்த்து வேட்பாளருக்குத் திருப்பிக் கொடுத்து விடுவோம். ராதிகா மற்றும் எனக்கான தேர்தல் பிரச்சாரச் செலவை வேட்பாளரிடம் பிறகு வசூலித்துக் கொள்வோம்.

எங்களின் தற்போதைய கவனம் மத்தியில் மட்டுமே இருப்பதால் தமிழக அரசியலில் 2030 க்குப் பிறகே கவனம் செலுத்துவோம். 2012 இல் ஒபாமை எதிர்த்து எங்கள் கட்சி வேட்பாளரை நிறுத்தும். அது நானாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை)

Read more...

ஜார்ஜ் புஷ் = ஒபாமா

Thursday, February 05, 2009

சந்தேகமாக இருந்தால் படத்தைப் பார்த்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்!



பின்குறிப்பு: இப்பதிவுக்கு ஜார்ஜ் புஷ்ஷிடமிருந்தோ அல்லது ஒபாமாவிடம் இருந்தோ மறுப்பு/பின்னூட்டம் வந்தால் அதுவும் வெளியிடப்படும் :-)

Read more...

வந்தேறிக் கழுதை

Sunday, February 01, 2009


எங்கிருந்தோ வந்த கழுதையொன்று விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மேய்ந்தது. கஷ்டப்பட்டு நீர்ப்பாய்ச்சி, உரமிட்டு வளர்த்துப் பாதுகாத்த பயிர்களை திடீரென்று வந்த கழுதை அத்துமீறி நுழைந்து பயிர்களை நாசமாக்குகிறதே என விவசாயி கையைப் பிசைந்து கொண்டு நின்றான்.

கழுதையை விவசாய நிலத்திலிருந்து எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் வீட்டுக்குச் சென்று ஒரு தடி, வெள்ளைக் காகித அட்டை, ஆணியுடன் வந்தான். அந்த அட்டையில் "கழுதையே வெளியேறு!" என்று எழுதி, கழுதை முன்பு காட்டிக் கொண்டு நின்றான்.காலையிலிருந்து மாலை வரையில் கழுதை திரும்பும் பக்கமெல்லாம் காட்டியும் பயனில்லை.கழுதை அவனையோ அல்லது அவனின் எதிர்ப்பையோ கண்டு கொள்ளவில்லை!

களைப்படைந்து சோர்வுடன் வீட்டுக்குத் தூங்கச் சென்றான்.புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. அதிகாலை எழுந்து வீட்டிலுள்ளவர்களையும் அக்கம்பக்கத்திலுள்ள சிலரையும் அழைத்துக்கொண்டு பேரணியாகச் சென்று கழுதையின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தான். கழுதை எதிர்ப்புப் பேரணிக்கு வந்த ஒவ்வொருவரும் கையில் "கழுதையே வெளியேறு!" என்ற அட்டை வைத்திருந்தனர். கழுதை அங்கிருந்தவர்களையோ அல்லது அவர்களது எதிர்ப்பையோ கண்டுகொள்ளாமல் பயிர்களைத் தின்றது.

கழுதையின் கள்ளமெளனம் விவசாயிகளை எரிச்சலடையச் செய்தது. சிலர் "கழுதையே வெளியேறு" அட்டையுடன் "கழுதையைக் கொல்வோம்" என்றும் கோஷமிட்டார்கள். கழுதை வழக்கம்போல் அவர்களைக் கண்டுகொள்ளாமல் பயிர்களை மேய்ந்து கொண்டிருந்தது.மேலும் வெருப்புற்ற விவசாயிகள் "கழுதையே வெளியேறு" போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

வழக்கம்போல் கழுதை அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது மேய்ந்து கொண்டே இருந்தது.விரக்தியின் உச்சத்திற்குவந்த விவசாயிகள் இறுதியில் கழுதையின் கொடும்பாவியை எரிப்பதென முடிவு செய்தார்கள். கழுதையின் மாதிரியை உருவாக்கி,கழுதை மேய்ந்து கொண்டிருந்த நிலத்தருகே சென்று கழுதைக்கு எதிராக முழங்கி, ஆக்ரோஷமாக கழுதையின் கொடும்பாவியை எரித்து, "கழுதை ஒழிந்தது" வெற்றி! மாபெரும் வெற்றி என்று கோஷமிட்டு வாகையுடன் வீடு திரும்பினார்கள்.

கழுதையின் கொடும்பாவி எரிவதைக் கண்ட கழுதை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புண்முறுவலிட்டு வழக்கம்போல் பயிர்களை மேயத் தொடங்கியது. கொடுங்கோல் கழுதை! திமிர்பிடித்த கழுதை விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதாக இல்லை!

எனவே, விவசாயிகள் சிலரை கழுதையுடன் சமரசம் பேச அனுப்பினார்கள்.

"கழுதை அவர்களே! விவசாய நிலத்தின் சொந்தக்காரர்கள் நீங்கள் அவர்கள் நிலத்திலிருந்து வெளியேற வேண்டுமென விரும்புகிறார்கள்!" அவர்களைப் பார்த்த கழுதை,கண்டுகொள்ளாது மேய்வதில் மட்டும் கவனம் செலுத்தியது.

"மதிப்பிற்குறிய கழுதை அவர்களே. நிலச்சொந்தக்காரர்கள் மூன்றில் ஒரு பகுதி நிலத்தை உங்களுக்கு விட்டுத்தர முன்வருகிறார்கள். தயவு செய்து நீங்கள் அவர்களின் விளைநிலத்திலிருந்து உடனடியாக வெளியேறணும்! கழுதை கண்டுகொள்ளாமல் மேய்ந்து கொண்டே இருந்தது. அடுத்தவர், "பொறுமையின் சிகரம் மாண்புமிகு கழுதையாரே! பாதி நிலத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். அருள்கூர்ந்து அவர்களின் விளைநிலத்திலிருந்து வெளியேறுங்கள்!"



வெற்றி! வெற்றி!! கழுதை ஒருவழியாக ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டது. மக்கள் கூட்டத்தை கழுதை ஒருமுறை பார்த்ததுச் சிரித்தது.விவசாயிகள் மகிழ்ச்சியில் கழுதையைப் புகழ்ந்து பாடினார்கள். ஒருவழியாக அங்கு அமைதி திரும்பியது. தனக்கு ஒதுக்கப்பட்ட பாதிப்பகுதியில் கழுதை சுகமாக வாழ்ந்து வந்தது. எல்லாம் ஒருசில நாட்கள் மட்டுமே!

மீண்டும் வழக்கம்போல் கழுதை விவசாய நிலத்தில் புகுந்து விளைச்சலை மேய்ந்தது.விவசாயிகளும் வேறு வழியின்றி கழுதைக்கு எதிரான எதிர்ப்பைக் காட்டினர். போராட்டங்கள் வலுத்த போதும் அவற்றைப் பொருட்படுத்தாது விளைச்சலைக் கொள்ளையிட்டது.

இந்தக் கழுதை வேறுபகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட்க் கழுதையாகும்! கழுதையுடன் பலமுறை போராடி அலுத்துபோன விவசாயிகள் மென்மேலும் போராடத் திராணியற்று அப்பகுதியிலிருந்து வெளியேருவது என்று முடிவு எடுத்தனர்.குடும்பம் குடும்பமாக மக்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறி ஊரின் ஒதுக்குப் புறத்தில் தங்களுத்தேவையான வீடுகளை அமைத்தனர்.

கிட்டத்தட்ட எல்லோருமே அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறினர். கழுதையுடன் சமரசம் பேசியவர்களும்கூட அங்கிருக்க மனமின்றி கூட்டம் கூட்டமாக புதுக்குடியிருப்பிற்கு இடம்பெயர்ந்தனர். கொலைகார ஆக்கிரமிப்பு கழுதையை மக்கள் சபித்தனர். அவர்களிலிருந்து பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் சிறுகல்லை எடுத்து கழுதையை நோக்கி வீசினான். கழுதை அவ்விடத்தை விட்டு வேகமாக ஓடியது!

"நம் எல்லோரையும் இச்சிறுவன் அவமதித்ததோடு நம்மைச் சுற்றியுள்ள மக்கள் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்படி செய்துவிட்டான்" என்று சொல்லி அச்சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கி கொன்று விட்டு, கழுதையை மீண்டும் அழைத்து வந்தனர். தண்டிக்கப்பட்ட சிறுவனைப் புனிதப்போராளி என்று புகழ்ந்தனர்.

இக்கழுதைக்கு தற்போது அமெரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்துமளவுக்குச் செல்வாக்கு இருக்கிறதாம்! ஏனென்றால் அமெரிக்காவில் எந்தக்கட்சி அதிபர் ஆண்டாலும் கழுதைதான் செல்லப்பிராணியாம்!

நீதி: கழுதை கெட்டால் குட்டிச்சுவர் கட்டும்.

Read more...

மும்பை தாக்குதலுக்கு யாருமே காரணமில்லை?!

Wednesday, January 14, 2009


மும்பை தாக்குதல் குறித்து என்னென்ன ஆதாரங்களை இந்தியா சார்பாக பிரனாப் முகர்ஜி கொடுத்திருப்பார் என்று சரிவரத் தெரியவில்லை. அவற்றை வெறும் தகவல்களே என்று பாகிஸ்தான் சொல்லியிருப்பதால் அடுத்த பாராளுமன்றத் தேர்தல்வரை இதைவைத்தே எஞ்சிய நாட்களை காங்கிரஸ் அரசாங்கம் ஓட்டிவிடும் என்பது மட்டும் உறுதி. இதுசம்பந்தமாக பிரனாப் - சர்தாரி என்ன பேசியிருப்பார்களென்று ஒரு கற்பனை உரையாடல். (இது உண்மையாகவே இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ;-)

பிரனாப்: தாக்குதல் இந்தியாவில் நடத்தப்பட்டுள்ளதால் நிச்சயமாக அதைப் பாகிஸ்தானே செய்திருக்கும் என்பதே காலங்காலமாகச் பின்பற்றப்படும் நடைமுறை! நாங்கள் சொல்வதற்கு முன்பே மோடியும் அத்வானியும் இதை உடனடியாக உறுதி செய்து விட்டார்கள்.

சர்தாரி: அப்படியென்றால் எங்கள் நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு இந்தியாதான் காரணம் என்று நாங்களும் பதிலுக்குச் சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா?

பிரனாப்: தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கடல்வழியாக கராச்சியிலிருந்து விரைவுப் படகில் வந்ததை எங்கள் நாட்டு மீனவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

சர்தாரி: இந்தியாவுக்கு ரயில் வழியாக சிரமமின்றி வரமுடியும்போது எதற்கு அவர்கள் படகில் கஷ்டப்பட்டு வரவேண்டும்? கொஞ்சமாவது லாஜிக்காகப் பேசுங்கள் பிரனாப்ஜி.

பிரனாப்: பிடிபட்ட அஜ்மல் கஸாப் பாகிஸ்தானைச் சார்ந்தவன்.

சர்தாரி : நீங்கள் சொன்னதையேதான் எங்கள் நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் குரேஷியும் சொல்லி அநியாயமாகப் பதவி பறிபோனது. அதுபோன்று துரித நடவடிக்கை எடுக்க உங்கள் நாட்டில் யாருமில்லை என்ற தைரியத்தில் பேசுகிறீர்கள்!

பிரனாப்: தாக்குதல் குறித்து விசாரித்த இஸ்ரேல் மற்றும் அமெரிக்க உளவுத் துறையினரும் உங்கள் நாட்டுமீதான எங்கள் குற்றச்சாட்டுகளை உறுதி செய்துள்ளார்கள்.

சர்தாரி: பாகிஸ்தான் சார்பாக அவற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன்.சீனா மற்றும் இங்கிலாந்து புலணாய்வுகள் பாகிஸ்தானுக்கு அதில் தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறார்களே!

பிரனாப் : சீனாவிலிருந்து வெளியானவைகளெல்லாம் 99% டூப்ளிகேட். மசூத் மற்றும் தாவூத் இப்றாஹீமுக்கும் இதில் தொடர்புள்ளதற்கு எங்களிடம் பலமான ஆதாரங்கள் உள்ளன.

சர்தாரி: எதை வைத்துச் சொல்கிறீர்கள். அதற்கான ஆதாரங்களைக் முதலில் கொடுங்களேன்.

பிரனாப் : இருவருமே தற்போது பாகிஸ்தானில் இருக்கிறார்கள். இதைவிட வேறென்ன வேண்டும்?

சர்தாரி: இருக்கலாம்.ஆனால் அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீங்கள் ஏன் பாகிஸ்தானையே குற்றஞ்சாட்டுகிறீர்கள்? அல்கைதா அல்லது தாலிபான்கள்கூட இதைச் செய்திருக்கலாமே?

பிரனாப்: எங்கள் நாட்டில் எது நடந்தாலும் அதற்கு பாகிஸ்தானைத்தான் குறைசொல்ல வேண்டும்.இல்லாவிட்டால் எதிர்கட்சிகள் நாட்டு மக்களிடம் எங்களைப் பற்றி தவறாகச் சித்தரிப்பார்கள்.எங்கள் நிலையை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

சர்தாரி: ஒண்ணு செய்வோம்!.இருநாடுகளுக்குமிடையே புரிந்துணர்வை வளர்க்க 20 x 20 கிரிக்கெட் மேட்ச் நடத்தலாமா?

பிரனாப்: எங்கள் வீரர்கள் இதற்குத் தயாராக இல்லை. ராணுவ வீரர்கள் மட்டுமே தயாராக இருக்கிறார்கள் என்று தளபதி சொன்னார்.

சர்தாரி: பிரனாப்ஜி, உங்கள் நாட்டு ராணுவத்தை எங்கள் நாட்டு எல்லையில் குவிப்பது பதட்டமாக இருக்கிறதே.

பிரனாப்: எப்படியும் இந்தப்பதட்டம் மேலும் 6-7 மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது. பேசாமல் குற்றவாளிகளை எங்களிடம் ஒப்படைத்து நிம்மதியாக இருக்கலாமே.

சர்தாரி : பிரனாப்ஜி, நாங்கள்தான் உங்களது குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொள்ளவில்லையே. பிறகு எப்படி பிரனாப்ஜி ஒப்படைக்க முடியும்?

பிரனாப் (மனதுக்குள்) எவண்டா இவன். நாமளும் அத்வானி மாதிரிப் பேசி அடுத்த பிரதமர் வேட்பாளராகத் தகுதிபடுத்திக் கொள்ளலாம்னு பார்த்தால் விடமாட்டான் போலிருக்கே!

சர்தாரி: புரிந்து கொள்ளலுக்கு மிக்க நன்றி பிரனாப்ஜி. எப்ப நீங்க இலங்கை போகப்போறீங்க?

பிரனாப்: ஹலோ! ஒபாமாவா!! ஓக்கே..! ஆமா! ஆமா! சர்தாரி பக்கத்துலதான் இருக்கார். நான் எப்படியும் உங்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வந்துடுறேன். நீங்களே சர்தாரியிட கேட்டுக் கொள்ளுங்கள். (போனைக் கொடுக்கிறார்)

சர்தாரி: முபாரகோ ஒபாமா. கண்டிப்பா கலந்துக்கறேன். தீவிரவாதத்திற்கு எதிராக வழக்கம்போல் நாங்கள் எப்பவுமே உங்கள் கூட்டாளிதான். நேரில் பேசிக் கொள்வோம். ஓக்கே..பை..பை..ஸீயு..

Read more...

ஜார்ஜ் புஷ்'ஷூ'வுக்கும் டோண்டுவுக்கும் கண்டனம்

Sunday, January 04, 2009

எதற்கெடுத்தாலும் கண்டனம் தெரிவிப்பது சிலரின் வாடிக்கையாகி விட்டது. சமீபத்தில் அஸ்ஸாமில் நடந்தக் குண்டு வெடிப்புக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், ஜனாதிபதி பிரதீபா 'பாட்டி'யும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். புத்தாண்டு,பண்டிகை வாழ்த்துக்கள் சொல்வதைப்போல் இதுவும் ஒப்புக்குச் சொல்லப் படுவதாகவே நினைக்கத் தோன்றுகிறது.

வாய்வார்த்தைக் கண்டனங்களால் தீவிரவாதிகள் வெட்கமோ அல்லது வருத்தமோ படப்போவதில்லை! சட்டங்களையும் இறையாண்மையையும் பொருட்படுத்தாது இயங்குபவர்களை இத்தகையக் கண்டனங்கள் ஒன்றும் செய்துவிடாது என்பதால் கண்டனங்கள் எத்தகைய உயர்மட்டத்திலிருந்து வந்தாலும் அதனால் பயனில்லை! மாறாக, நடத்தப்பட்ட பயங்கரவாதங்கள் நாட்டின் உயர்மட்டம்வரை கவனத்தை ஈர்த்துள்ளதைக் கண்டு மென்மேலும் ஊக்கம் அளிக்கக்கூடும் என்பதால் வெறும் கண்டனங்களைப் மட்டும் பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

அரசியல்வாதிகள் குண்டுவெடிப்புகளால் உயிர்ப்பலி ஏற்பட்டால் மட்டுமே கண்டனம் தெரிவிக்கிறார்கள். இதுவும் வன்மையான கண்டனத்திற்குறியது! கள்ளச்சாராயத்தினால் பலியாகும்போதும் கண்டிக்க முன்வரவேண்டும். உயிர்ப்பலி எந்த ரூபத்திலிருந்தாலும் பாரபட்சமின்றி கண்டிக்க வேண்டும்.

*****

உள்நாட்டு உயிர்ப்பலிகளுக்கு மட்டுமே கண்டனம் தெரிவிக்கும் போக்கும் கண்டனத்திற்குறியது. ஜெயலலிதா அம்மையாரைப்போல் 'எல்லைதாண்டி' கண்டனம் தெரிவிக்கத் தயங்கக்கூடாது. மோடியால் நடத்தப்பட்ட குஜராத் படுகொலைகளைக் கண்டிக்காமல், இஸ்ரேலின் பாலஸ்தீனப்படுகொலைகள் குறித்துக் கண்டனம் தெரிவிப்பதும் கண்டனத்திற்குறியது. படுகொலைகளை ஓல்மர்ட் செய்தாலும் மோடி செய்தாலும் தாட்சன்யமின்றி உடனடியாகக் கண்டிக்கணும்!

பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அத்துமீறலுக்கு எதிராக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஒருபக்கம் இஸ்ரேலுடன் தூதரக உறவை வைத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் பாலஸ்தீனர்களுக்காகப் பரிந்து இரட்டைவேடம் போடுவது கண்டிக்கத் தக்கது! தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிவிடும் நயவஞ்சகப் போக்கு மிகவும் கண்டனத்திற்கு உரியது!


மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு ஒபாமா கண்டனம் தெரிவித்தார். ஆனால், காஸா தாக்குதல் குறித்து மௌனம் காத்து வருகிறார்' என்று அரபுக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஒபாமாவிடம் கேட்டபோது, மும்பை தாக்குதல் பயங்கரவாதம் தொடர்புடையது, "காஸா தாக்குதல் நாடுகள் தொடர்புடையது" என்று பதிலளித்துள்ளார். என்னே வியாக்கியானம்! ஜார்ஜ் புஷ்'ஷூ'க்குக் கிடைத்தமாதிரி ஒபாமாவுக்கும் ஷூஅபிசேகம் கிடைக்காமல் இருக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனத் தீர்மானங்கள் வழக்கம்போல் தோல்வியடைந்துள்ளது! இஸ்ரேலுக்கு எதிரான கண்டனத் தீர்மானங்கள் எதுவும் பலனளிக்காது என்பதும் அப்படி நிறைவேறினாலும், அதை ரத்து செய்யும் வீட்டோ அதிகாரம் அமெரிக்காவிடம் இருக்கும்வரை ஒருபயனும் இல்லை என்பதும் உலகறிந்த உண்மை. ஒன்றுக்கும் உதவாத ஐ.நா சபையில் கண்துடைப்புக் கண்டனத்தீர்மானம் கொண்டுவருவதையும், அதை அமெரிக்கா ஒவ்வொரு முறையும் வீட்டோ கொண்டு ரத்து செய்து விளையாடி மகிழ்வதையும் வன்மையாகக் கண்டனம் செய்கிறேன்.

******************
பின்குறிப்பு: புஷ்ஷூக்குக் கண்டனம் சரி! எதற்கு டோண்டுவையும் கண்டிக்க வேண்டும் என்று யாராவது கேட்டுவிடக்கூடாது என்பதால் கடைசி நான்கு பத்திகளில் டோண்டுவின் அபிமான இஸ்ரேலையும் சேர்த்துள்ளேன்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP